Home Blog Page 6

சிங் கீதம் – விமர்சனம்

0

இயக்கம் – சிங்கீதம் சீனிவாச ராவ்
நடிகர்கள் – அயான், கெளரி, அஹல்யா பம்ரூ , ஷாலினி கொண்டேபூடி, நிவேதா பெத்துராஜ்
இசை – தேவி ஸ்ரீ பிரசாத்
தயாரிப்பு – நாக் அஸ்வின்

ஒரு குற்றவாளி தனது தண்டனை காலம் முடிந்த பின் விடுதலையாகிறான் , அவனுக்கு ஒரு இடத்தின் பத்திரம் கிடைக்கிறது அது அவனுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று எண்ணி அந்த இடம் அமைந்துள்ள ஊருக்கு செல்கிறான் அங்கு இரண்டு தங்க சுரங்கம் தோண்டும் பணி நடைபெறுகிறது, ஒரு சமயத்தில் அந்த சுரங்கத்தின் முதலாளிதான் தனது தந்தை என தெரிய வருகிறது. அவரிடமிருந்து கிடைத்த பணத்தை சுருட்டிக்கொண்டு சென்று விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறான், ஆனால் அங்கிருந்து போக முடியாத ஒரு சூழலில் மாட்டுக்கொள்கிறான், அது என்ன சூழல் அங்குள்ள மக்களின் வினோத வாழ்க்கைக்கு என்ன காரணம் என்பதை நகைச்சுவையாக விவரிப்பதே இந்த ‘சிங் கீதம்’ படத்தின் கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அயான், எதார்த்தமான கதாபாத்திரத்தில் ஒரு ஜாலியான இளைஞராக வலம் வருகிறார். எனினும் சென்டிமென்ட் காட்சிகளில் நம் கண்களை கலங்கடிக்கிறார், நாயகியாக நடித்திருக்கும் அஹல்யா பம்ரூ ஒரு கிராமத்து பூ போல நடித்துள்ளார், அவரது நடிப்பு நமக்கு நாம் பார்க்கும் அன்றாட பெண்ணின் குறும்புத்தனம் போல அனைவரையும் ஈர்க்கிறது,

அதே போல தங்க சுரங்கத்தின் உரிமையாளராக ஷாலினி கொண்டேபூடி நடித்துள்ளார் , அழகான முக பாவனை மூலம் ரசிகக்களை கவர்கிறார்.

இந்த படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்களாக நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன், சிவ நாராயணா, பெனர்ஜி மற்றும் வாம்சி தங்களது கதாபாத்திரதை கச்சிதமாக கொடுத்துள்ளனர்,

இந்த படத்தில் கூடுதல் பொறுப்பு இசையமைப்பாளருக்கு தான், படத்தில் பல பாடல்கள் இருந்தால் சற்று தொய்வு அடையும் இந்த காலத்தில் மக்கள் பேசுவதை பாடலாக்கி அதனை ரசிக்கும் படியாகவும் செய்துள்ளார், கண்டிப்பாக இசையமைப்பாளர்கள் தேவி ஸ்ரீ பிரசாத், பெரிதும் பேசப்படுவார், அதே போல் ஒளிப்பதிவாளர் அங்கூர்.சி உண்மை எது, செயற்கை எது என்று கண்டறிய முடியாதபடி காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

பேசும் படம்’ மூலம் சினிமா உலகையே கவர்ந்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இப்படி ஒரு வித்தியாச படைப்பை கொடுத்து மீண்டும் நம்மை பிரம்மிக்க செய்துள்ளார்,
புதிய மற்றும் வித்தியாசமான முயற்சி என்றாலும், அதை சரியான முறையில் திரையில் கொண்டு வந்துள்ளார், இத்தனை வருடங்கள் கடந்தும் அதே உழைப்பை கொடுத்துள்ளது ஆச்சர்யம் தான் ,

மொத்தத்தில், ‘சிங் கீதம்’ கண்டிப்பாக அனைவரையும் வியக்க வைக்கும்.

அந்தரன் – விமர்சனம்

0

இயக்கம் – சந்தோஷ் ராவணன்
நடிகர்கள் – பிரஜின், இவானா வருண் , எம்.கே.சாம்பசிவம், செந்தி குமாரி
இசை – ஹரி.எஸ்.ஆர்
தயாரிப்பு – எம் கே சாம்பாசிவம்

ஒரு பெண்ணை காதலிக்கும் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு பெற்றோர்களின் வற்புறுத்தலால் அந்த பெண்ணுக்கு ஒரு திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒரு வழியாக நிச்சயம் முடிந்த நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். இதையும் கஷ்டபட்டு கடந்து மற்றொரு திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிறது, இந்நிலையில் அந்த மாப்பிள்ளையும் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார். இந்த மரணம் அனைத்துக்கும் காரணம் அந்த குடும்பம் என்கிற ஒரு சந்தேகம் வருகிறது, இதனை ஒரு காவல் அதிகாரி விசாரிக்கிறார், அப்படி அவர் விசாரணை செய்யும்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகிறது , அது என்ன அதன் பின் என்ன ஆனது என்பதே இந்த அந்தரன் படத்தின் மீதிக்கதை.

இந்த படத்தில் ஒரு நேர்மையான மிடிக்கிடும் காவல்துறை அதிகாரியாக பிரஜின் நடித்துள்ளார், ஒரு பக்கம் கம்பீரமான காவல் அதிகாரியாக இருந்தாலும் காதல் காட்சிகளில் கலக்குகிறார், அவருக்கு நிகராக கதாநாயகியாக நடித்திருக்கும் இவானா வருண் தனது நடிப்பை கொடுத்துள்ளார், ரசிகர்களை தனது முக பாவனை கொண்டு கவர்கிறார்,

மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் எம்.கே.சாம்பசிவம், அம்மாவாக நடித்திருக்கும் செந்தி குமாரி, அனுபமா குமார், அதிரன், ரமேஷ்பாபு கீதா, பத்மன், பிரியங்கா செல்வி, ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை புரிந்து நடித்துள்ளனர்,

ஹரி.எஸ்.ஆர் இசையில் பாடல்களை விட பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்கிறது. பாடல்களும் கேட்கும் வண்ணம் இருந்தது, இந்த படத்திற்கு கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், அவரது பணியும் பாராட்டும் வண்ணம் இருந்தது,

இந்த படத்தை சந்தோஷ் ராவணன் எழுதி இயக்கியுள்ளார் , நாம் பல கதைகளில் பார்த்த அதே தொடர் கொலை சாயலை வைத்து ஒரு வித்தியாசமான முறையில் கதை கூறியுள்ளார், ஆரம்பத்தில் இருக்கும் சஸ்பென்சை படம் முடியும் வரை பிடித்து வைத்திருப்பது பாராட்டிற்கு உகந்தது, திரைக்கதையில் இன்னும் வேலை செய்திருந்தால் ராட்சசன் அளவிற்கு வந்திருக்கும் எனினும் ஒரு நல்ல திரில்லர் அனுபவமாக இருக்கிறது.

மொத்தத்தில், ‘அந்தரன்’ சஸ்பென்ஸ் கலந்த ஒரு புதிய முயற்சி.

ட்ரெய்லர் பார்க்கும் வரை எனக்குப் படத்தின் மீது நம்பிக்கை இல்லை: எழுத்தாளர் வேல ராமமூர்த்தி பேச்சு!

0

கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம் .எஸ் .ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன் ‘.

நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது.
‘ஐந்து கொலைகள் ஒரே விதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை’ என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை, பரபரப்பூட்டும் திருப்பங்களுடன் படமாகியுள்ளது .

அறிமுக நாயகன் தொலைக்காட்சி புகழ் சித்து, தர்ஷிகா , ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன்.

சித்து பிரதான நாயகனாக நடித்துள்ள இப்படம்
‘எ சித்து இன்வெஸ்டிகேஷன்’என்கிற டேக் லைனுடன் ஜூலை 17 இல் தமிழ், ஆங்கிலம் ,தெலுங்கு ,ஹிந்திமொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது.

விழாவில் ட்ரெய்லர், பாடல்கள் திரையிடப்பட்டன.

விழாவின் தொடக்கத்தில் ஷரண், கோபால், மனோஜ் என மூன்று தயாரிப்பாளர்கள் பேசினார்கள்.

தயாரிப்பாளர் மனோஜ் பேசும்போது,

“இப்போது வரும் சில படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ஓடுவதில்லை. சில படங்கள் ஓடிடியில் ஓடுகின்றன. எல்லா நல்ல படங்களும் ஓடுவதில்லை. இது ஒரு ஆபத்தான சூழ்நிலை இல்லையா? ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி பாதிக்கப்படக்கூடாது என்று சொல்வது போல் ஒரு நல்ல படம் ஓடாமல் இருக்கக் கூடாது .நல்ல படங்களை வரவேற்பதற்கு ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் கொண்டு போய் சேர்க்க வேண்டும் .நிறைய தரமற்ற படங்கள் வருகின்றன .ஆனால் ‘தி டார்க் ஹெவன்’ நிச்சயம் வெற்றி பெறக்கூடிய நம்பிக்கை கொண்ட படமாக இருக்கிறது. இன்று பல தயாரிப்பாளர்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
உப்புமா படங்களால்,
தரமற்ற படங்களால் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல, பலருக்கும் பாதிப்பு.திறமையான இயக்குநர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைக்காமல் இருக்கிறது.திரை உலகிற்குத் தயாரிப்பாளர் மிக முக்கியம். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய கிரைம் திரில்லராக இருக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது ”என்றார்.

இன்னொரு தயாரிப்பாளர் ஷரண் பேசும்போது,

” நான் இந்தப் படத்தில் நடிப்பதற்காகத் தான் வந்தேன் .ஆனால் பாலாஜி இந்தப் படத்திற்காக உழைப்பதையும் போராடுவதையும் நேரில் பார்த்தேன். அவர் சிரமத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று தோன்றியது .எனவே தயாரிப்பில் இணைந்து கொண்டேன்” என்றார்.

தயாரிப்பாளர் கோபால் பேசும் போது,

“இந்தப் படம் தமிழ் சினிமாவில் சிறப்பான படம்.பாலாஜி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநர்.அவர் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு எடுத்த படம் இது. சினிமாவில் அவருக்கான நல்ல இடம் கிடைக்கும்.இந்தப் படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் யாரும் சோடை போகமாட்டார்கள் .இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

நடிகர் அருள் டி சங்கர் பேசும்போது,

“இந்தப் படத்தில் நிறைய வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடந்தன. இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் பாலாஜியுடன் எனக்கு இது நாலாவது படம் .அவர் இயக்கத்தில் இது இரண்டாவது படம் .சில காட்சிகளை ரீஷூட் செய்தார். அவர் நினைத்தது சரியாக வர வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்பார் .இந்தப் படத்தின் போது அவருக்கு தாங்க முடியாத மன அழுத்தம் இருந்தது . அந்த அழுத்தத்தில் அவர் காரை அடித்து அவரது காருக்கு சேதாரம் ஏற்பட்டது. ஆனால் அதை வெளியே மற்றவரிடம் காட்டாமல் படப்பிடிப்பில் பரபரப்பாக இருப்பார்.கிரிக்கெட் டீம் போல் அவரைச் சுற்றி எப்போதும் 11 பேர் கொண்ட ஒரு கூட்டம் இருக்கும்.
இந்தப் படத்தில் என்னுடன் நடித்தவர்கள் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

கேமராமேன் சிரிக்கவே மாட்டார்
காரியத்தில் கண்ணாக இருப்பார் .
இந்தப் படப்பிடிப்பில் எனக்கு உதவியாளராக ஒரு வயதானவரை அமர்த்தியிருந்தார்கள். அவர் செய்யும் காரியங்கள் வேடிக்கையாக இருக்கும்.அவை எல்லாமே சிரிப்பை வரவழைக்கும்” என்றார்.

நடிகர் ஜெயக்குமார் பேசும்போது

“நடந்து போக கூட முடியாத இடத்துக்கெல்லாம் எங்களை அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்தினார். அதுதான் அவர்களின் தனித்தன்மையாக இருந்தது.

ஒவ்வொரு காட்சியையும் மூன்று முறை எடுப்பார். சரியானது வரும் வரை விட மாட்டார். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்தார்.படப்பிடிப்பின் போது எப்போதும் அவருக்கு அவரது மனைவி பெரும் பக்கபலமாக இருந்தார் ‘என்றார்.

நடிகர் ,எழுத்தாளர் வேல ராமமூர்த்தி பேசும் போது,

” இன்று இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்கள் காலமானது ஒரு பெரிய இழப்பு. கடந்த 11 ஆம் தேதி பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின் போது என் அருகில் இருந்தார்.
இப்போது இல்லை.
அந்தத் துயரத்தோடு தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி ஒரு நாள் திருநெல்வேலியில் இருந்து பேசுகிறேன் என்று பேசினார் .வழக்கமாக கதை சொல்லும் இயக்குநர்கள் சொல்வது போல்தான் இருந்தது. போனில் மிகவும் நம்பிக்கையுடன் தான் பேசினார்.நான் சற்று சந்தேகப்பட்டேன். நான் இந்தப் படம் எடுக்க முடியாமல் தோற்று விட்டால் நான் அமெரிக்கா சென்று விடுவேன் என்றார்.அவரது நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்து நான் நடிக்கச் சம்மதித்தேன்.

படப்பிடிப்பில் எல்லாரும் குடும்பம் போல் பழகினார்கள். பாலாஜியின் உழைப்புக்காகவே இந்தப் படம் ஓட வேண்டும். பெரிய பெரிய படங்களுக்குக் கூட இவ்வளவு லொகேஷன்களில் எடுத்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்குத் தேடித் தேடி எடுத்தார்கள். நான் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ட்ரெய்லர் பார்க்கிற வரை எனக்கு இந்தப் படத்தின் மீது நம்பிக்கை இல்லை .இப்போது சொல்கிறேன் .இந்தப் படம் தோற்காது.அவர் அமெரிக்கா எல்லாம் செல்ல வேண்டியதில்லை” என்றார்.

இயக்குநர் மித்ரன் பேசும் போது ,

“இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இவர்களின் கடின உழைப்பு ட்ரெய்லரில் தெரிகிறது. சினிமாவுக்கு எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு சினிமா திருப்பிக் கொடுக்கும்.இது மாதிரி திரைப்படங்களுக்கு ஊடகங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.

நடிகர் புகழ் பேசும்போது,

” இந்தப் படத்தின் நாயகன் சித்து எனக்கு ஒரு மாதமாகப் பழக்கம்.எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார் .என்னை டார்லிங் என்று தான் கூப்பிடுவார். இந்தப் படத்தின் கான்செப்ட் பார்க்கும் போது அழகாக இருக்கிறது.இந்த படத்தில் பங்கெடுத்துள்ளவர்கள் பலரும் எனது நண்பர்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள் “என்றார்.

இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பேசும்போது,

” நான் இதற்கு முன்பு இசை அமைத்த உடன்பால் ,ஜாக்கி என்ற இரண்டு படங்களுக்குப் பிறகு இசையமைக்கும் மூன்றாவது படம் இந்தப் படம் இது.
வேல ராமமூர்த்தி சார் போன்று நான் வியந்து பார்த்தவர்கள் என் படத்தில் இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல பெருமையாகவும் இருக்கிறது. இந்தப் படத்தில் நான்கு பாடல்கள். நான்குமே சூழலுடன் தான் இருக்கிறது. என்னைச் சந்திக்க இயக்குநர் பாலாஜி வரும்போது எப்போதும் பத்து பேருடன் தான் வருவார். அந்த அளவிற்கு அந்த படக் குழு ஒற்றுமையோடு இணைந்திருந்தார்கள்” என்றார்.

நடிகர் ரித்விகா பேசும்போது,

” இவ்வளவு தூரம் இந்தப் படம் வருமா என்று இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு 70% படத்தை எடுத்துவிட்டு வேண்டாம் என்று தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் அதே படத்தை அதே லொகேஷன்களில் எடுத்து ரிலீஸ் வரை கொண்டு வந்து இருக்கிறதே ஒரு சாதனைதான் .ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு இவர்களது விடாமுயற்சி தான் காரணம். படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் தினசரி ஏதாவது பிரச்சினை வரும்.புரிந்து கொள்வதில் சிக்கல் வரும்.மழை பெய்ய வேண்டும் என்று பார்த்தால் அன்று மழை வராது.மழை வேண்டாம் என்றால் மழை வரும்.

எப்படி இருந்தாலும் இயக்குநர் பாலாஜி ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருந்தார்.
அவர் இந்த வேலைகளை எல்லாம் பார்ப்பதற்கு மேனேஜர் வைத்துக் கொள்ள வேண்டும்.ஒருவரே எல்லா வேலையும் பார்த்துக் கொண்டு சிரமப்படக்கூடாது.

கதைகளை மட்டுமே நம்பி இன்று ஹபீபி ,நூறு சாமி போன்ற படங்கள் ஓடுகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் ஓடும் ஆதரவு கொடுங்கள்” என்றார்.

நடிகர் மைம் கோபி பேசும்போது,

” தம்பி சித்து இந்த அளவிற்கு இங்கே வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் நடித்திருப்பவர்கள் பலரும் எனக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், தம்பிகள்,தங்கைகள் .சினிமா ஒரு அழகான துறை. சினிமாவில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.நம் நாட்டில் 140 கோடி பேர் இருக்கிறார்கள். எத்தனை பேரை கேமரா பதிவு செய்கிறது?சினிமாவில் நடிக்கும் இந்த குறைந்த அளவு மக்களைத்தான் பதிவு செய்கிறது .அப்படிப்பட்ட பெருமைக்குரியவர்கள் சினிமாவில் இருப்பவர்கள்.

சினிமா எல்லாரையும் மாற்றி விடும். ஏற்கும் பாத்திரத்தில் நல்லவனாக மட்டுமல்ல கெட்டவனாகவும் மாறி மாறி நடிக்கிறோம்.
எல்லா திறமைசாலிகளுக்கும் இடம் தருவது சினிமா தான். நீங்கள் எப்போதும் சந்தோஷத்தை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். துக்கத்தைத் தள்ளி வையுங்கள். மகிழ்ச்சியாக வாழலாம் “என்றார்.

இயக்குநர் பாலாஜி பேசும்போது,

” இயக்குநர் பாக்யராஜ் சார் காலமானது வருத்தமாக இருக்கிறது. சினிமாவுக்கு வந்து நான் முதலில் அவரிடம் தான் கதை சொன்னேன்.

இந்தப் படத்தில் தயாரிப்பாளர் ஷரண் இஷ்டப்பட்டு வந்தார் .அவர் இல்லாவிட்டால் இந்தப் படம் இந்த அளவிற்கு வந்திருக்காது. அதேபோல் கோபால் அவர்கள், என் தம்பி மனோஜ் ஆகியோர் பெரிதும் பக்கபலமாக நின்றார்கள்.அது போல இந்தப் படத்திற்கு நிறைய பேர் எனக்குத் துணையாக நின்று இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் நன்றி. சித்து ஒரு சிறப்பான இடத்திற்கு இந்தப் படத்தின் மூலம் செல்வார். நான் திருநெல்வேலிக்காரன்,சென்னையைச் சேர்ந்தவன் அல்ல.என் படத்தில்
தமிழ் பேசும் நாயகியாக தர்ஷிகா வந்ததில் பெரிய மகிழ்ச்சி . அடுத்து ரித்விகா போன்று ஒவ்வொருவராக இந்தப் படத்திற்குள் வந்த பிறகு படம் வேறு மாதிரியாக மாறிவிட்டது .நான் சீன் பேப்பரைக் கொடுத்து விட்டால் அவர்கள் தானாக எல்லாம் செய்து விடுவார்கள் என்கிற அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.எல்லாரையும் நான் மிகவும் சிரமப்படுத்தி இருக்கிறேன். இந்தப் படத்தின் மீதும் என் மீதும் சிலருக்குச் சந்தேகம் இருந்தது .சந்தேகப்பட்டார்கள் .ஆனாலும் நான் இந்தப் படத்தை முடித்து விட்டேன்.மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறேன். “
என்றார்.

படத்தின் கதாநாயகன் சித்து பேசும்போது,

” எனக்குக் குருநாதர் போல இருப்பவர் மைம் கோபி அண்ணன். அவர் ஒரு நடிப்பு பயிற்சிப்பள்ளி வைத்திருக்கிறார் .அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எனக்குப் பலரின் அறிமுகங்கள் கிடைத்தது அவரால்தான்.

இன்றைய காலகட்டத்தில் நாமே நம்மைப் பற்றி சொல்ல வேண்டும். மற்றவர்களிடம் நம்மை நாமே முன் வைக்க வேண்டும் .அப்படிப்பட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். ‘திருமணம்’ தொடரில் நடித்ததற்குப் பிறகு வந்துள்ள ஒரு பெரிய வாய்ப்பாக இந்தப் படத்தைப் பார்க்கிறேன். இந்த படத்தின் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.
இந்தப் படத்தில் நடித்தவர்கள் மூலமும் நிறைய கற்றுக் கொண்டேன். உதாரணத்திற்கு இரவு மூன்று நான்கு மணிக்கு படப்பிடிப்பில் இருந்தால் கூட ஜெயக்குமார் சார் வந்து எங்களிடம் பேசி சிரிக்க வைப்பார் .எப்படி அவரால் முடிகிறது என்று நினைப்பேன்.இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று கற்றுக் கொண்டேன்.இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கம் வந்து பார்த்து ஆதரிக்க வேண்டுகிறேன் “என்றார்.

‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

கான் சிட்டி – விமர்சனம்

0

இயக்கம் – ஹரிஸ் துரைராஜ்
நடிகர்கள் – அர்ஜுன் தாஸ், அன்ன பென் வடிவுக்கரசி, யோகி பாபு
இசை – ஷான் ரோல்டன்
தயாரிப்பு – ஹரிஸ் துரைராஜ்

எந்தவித தொடர்பும் இல்லாத நான்கு பேர் பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களது நிலையை மாற்றுவதற்காக கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மோசடி மூலம் பணம் சம்பாதிக்க தொடங்குகிறார்கள். அந்த பணத்தை வைத்து குறுகிய காலத்தில் அதிக வருமானம் ஈட்டும் முயற்சியில் ஈடுபடும் போது அவர்கள் அனைவரும் ஏமாற்றப்படுகிறார்கள். தங்களது பணத்துடன், மக்களின் பணத்தையும் இழந்து விட்ட அவர்களை போலீஸ் கைது செய்ய, அங்கிருந்து தப்பித்துச் செல்பவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு குடும்பமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள். இதற்கிடையே அவர்கள் இருக்கும் இடத்தை கண்டிபிடிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், அவர்களை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார். அவரது மிரட்டலுக்கு அடிபணிபவர்கள், மீண்டும் சென்னைக்கு திரும்பி பெரும் மோசடி மூலம் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார்கள். அவர்களின் திட்டம் வெற்றி பெற்றதா ?, இல்லை அந்த போலீஸ் காரரின் மூலம் மீண்டும் ஜெயிலுக்கு சென்றாரா என்பது தான் மீதிக்கதை.

இதில் நாயகனாக அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார், தனது இறுக்கமான கதாபாத்திர கட்டமைப்பில் இருந்து விலகி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யும் விதத்திலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களம் என்பதால் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, தன்னால் கமர்ஷியல் நாயகனாகவும் பயணிக்க முடியும் என்பதை படம் முழுவதும் நிரூபித்திருக்கிறார். நிச்சயம் அவரது மதிப்பு முற்றிலுமாக மாறியுள்ளது என்பதை பார்க்க முடிகிறது.

மலையாளத்தில் முக்கிய நாயகியாக இருக்கும் அன்னா பென் மோசடியால் ஏமாற்றப்பட்டு, அதே மோசடி மூலம் தனது நிலையை மாற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அளவான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார் என்பது உண்மை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றாலும், யோகி பாபு தனது பாணியை கைவிட்டுவிட்டு புதிதாக சில விஷயம் முயற்சித்திருக்கிறார். தனது வழக்கமான உடல்கேலி வசனங்களை முற்றிலும் தவிர்த்திருப்பவர், தனது சோகமான முகம் மற்றும் நடிப்பு மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். யோகி பாபுவின் அம்மாவாக நடித்திருக்கும் வடிவுக்கரசி, பிளாக் காமெடி காட்சிகளுக்கு ஏற்ப கச்சிதமான எக்ஸ்பிரஷனோடு சிரிக்க வைக்கிறார். குறிப்பாக யோகி பாபு உடனான அவரது காட்சிகளும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் அவருக்கு புதிய அடையாளத்தை கொடுப்பதோடு, பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறது.இதன் மூலமாக அவருக்கு மீண்டும் பல வாய்ப்புகள் வரும் .

அகிலன், நந்தகோபால், விடிவி கணேஷ், தீப ராமானுஜம், ராதாரவி, அருள்தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன், ராகு எசக்கி, சதானந்த் ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

வழக்கம் போல ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் இணைந்தும் மீண்டும் மீண்டும் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்யும் விதத்தில் பயணித்திருக்கிறது. அதே போல ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாத் காட்சிகளை தரமாக படமாக்கியுள்ளார் .

இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஹரிஸ் துரைராஜ், புத்திசாலித்தனம் அல்லது தந்திரமான திட்டங்கள் மூலம் நடத்தப்படும் மோசடிகளை, நகைச்சுவை பின்னணியோடு சொல்ல முயற்சித்திருக்கிறார். முதன்மை கதாபாத்திரங்களின் முகத்தில் சிரிப்பை வெளிக்காட்டாமல் காட்சிகளை கையாண்டிருப்பது புதிதாக இருக்கிறது. இந்த முயற்சி வெற்றியும் கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில், ‘கான் சிட்டி’ உண்மையை காமெடி கலந்து சொல்லும் ஒரு நகைச்சுவை படம்.

அங்கீகாரம் – விமர்சனம்

0

இயக்கம் – தென்பாதியான்
நடிகர்கள் – கே.ஜெ.ஆர், விஜி வெங்கடேஷ்,  இசபெல்லா, வசுந்தரா,  ரமா
இசை – ஜிப்ரான் வைபோதா
தயாரிப்பு – பிரசாந்த், அஜித் பாஸ்கர்

குடிசையில் வாழும் ஒருவன் சிறு வயதில் இருந்தே தடகள விளையாட்டில் ஈடுபாடு காட்டி வருகிறார். ஓட்டப்பந்தய விளையாட்டில் அதீத ஈடுபாடு காட்டி வரும் அவனுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்றாலும், தேசிய அளவிலான போட்டியில் சாதனை புள்ளிகளோடு சாம்பியன் பட்டம் வென்று காமன்வெல்த் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுகிறார். ஆனால் தேசிய தடகளச் சங்கம் அவரது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைப் போடுகிறது. எப்படியாவது சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதிக்க துடிக்கும் அவர் மாநில விளையாட்டுத் துறை, விளையாட்டுத்துறை அமைச்சர் என்று பல இடங்களில் முறையிட்டாலும், பயன் இல்லாமல் போகிறது. விளையாட்டுத் துறையில் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை பெற முயற்சிக்கிறார். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லைய ?, என்பதை பல உண்மை மனிதர்கள் வாழ்வின் வலிகளை சேர்ந்து சொல்வதே இந்த ‘அங்கீகாரம்’ படத்தின் மீதிக்கதை.

இதில் நாயகனாக நடித்திருக்கும் திரைப்பட தயாரிப்பாளர் கே.ஜெ.ஆர், தடகள வீரருக்கான உடல்மாற்றத்தை வியக்கும்படி மேற்கொண்டிருக்கிறார். அதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சியை செய்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.  இந்த படத்துக்கு தனது பெரும் உழைப்பை கொடுத்துள்ளார் .

அதே போல அரசு வழக்கறிஞராக நடித்திருக்கும் விஜி வெங்கடேஷ், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் இசபெல்லா, தடகள விளையாட்டுப் பயிற்சியாளராக நடித்திருக்கும் வசுந்தரா, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா, நாயகனின் தோழியாக தடக வீராங்கனையாக நடித்திருக்கும் சிந்தூரி, தேசிய தடகள சங்கத்தின் தலைவராக நடித்திருக்கும் ஷான், மாநில விளையாட்டுத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அருள் டி.சங்கர், விளையாடுத்துறை அமைச்சராக நடித்திருக்கும் மன்சூர் அலிகான், என அனைவரும் கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளனர் ,  குறிப்பாக நீதிபதிகளாக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே மற்றும் மோகன் ராமன்   திரைக்கதையின் ஓட்டத்திற்கு உறுதுணையாக பயணித்திருக்கிறார்கள்.

இந்த படத்த ஜிப்ரான் வைபோதா இசை படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.  Athe போல் ஒளிப்பதிவாளர் ஏ.விஸ்வநாத், சென்னையின் குடிசைப் பகுதிகளில் நேரடியாக காட்சிகளை படமாக்கியிருக்கிறார். தடகள போட்டியையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கும் தென்பாதியான், தமிழகத்தில் மட்டும் அல்ல இந்திய அளவில் விளையாடுத்துறையில் நடக்கும் மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டிருப்பதோடு, கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்கு கிடைப்பதில்லை ஏன் ? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். மற்ற துறை விளையாட்டு வீரர்கள் மனதில் ஏற்படும் ஏக்கங்களையும் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வீரர்களில் வேதனையும் நம்மிடம் கடத்தியதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், ’அங்கீகாரம்’ படத்திற்கு மக்கள் மத்தியில் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும்.

ஹார்ட்டின் விமர்சனம்

0

இயக்கம் – கிஷோர் குமார்
நடிகர்கள் – சனத் , இமயா , மடோனா செபாஸ்டின்
இசை – ராஜேஷ் முருகேசன்
தயாரிப்பு – ஸ்டெப் ஒன் ஸ்டுடியோ – ரவீந்திரன்

ஜெய்ப்பூரில் உள்ள தனது நண்பரின் உணவகத்தில் பணியாற்றும் நாயகனும், ஐடி துறையில் பணியாற்றும் ஒரு தமிழ் பெண்ணும்  நண்பர்களாக பழகுகிறார்கள். அந்த பெண் மீது அவனுக்கு காதல் மலர்கிறது. ஆனால், அவளது காதலை அவன் ஏற்க மறுக்கிறார். அதற்கான காரணமாக தனது முதல் காதல் பிரிவால் ஏற்பட்ட வலியை மீண்டும் அனுபவிக்கும் சக்தி தனக்கு இல்லை என்கிறார். அவரது முன்னாள் காதல் பற்றி அறிந்துக் கொண்ட பிறகும் அவர் மீது காதலோடு இருக்கும்  அந்த பெண்ணை அவனும் காதலிக்கிறார்.  காதல் மூலம் மீண்டும் தனது மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு திரும்பிய அவனுக்கு விபத்து ஒன்றின் மூலம் தலையில் அடிபட்டு, தனது 6 வருட நினைவுகளை இழந்து விடுகிறார். இதனால், அவன் தனது காதலை மறந்துவிடுவதோடு, காதலை முறித்துகொண்டு தன்னைவிட்டு பிரிந்து சென்ற முன்னாள் காதலியின் பிரிவு சம்பவத்தையும் மறந்துவிடுபவர், பழைய நினைவுகளோடு தனது முன்னாள் காதலியை சந்திக்க செல்கிறார். இதன் பின் என்ன ஆனது அவன் யாரை மீண்டும் காதலித்தான் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறான் என்பதே காதல் கலந்த நகைச்சுவையுடன் சொல்வதே இந்த ஹார்ட்டின் படத்தின் மீதிக்கதை.

இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சனத், இரண்டு நாயகிகள் இருந்தாலும் டூயட் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் இன்றி, ஒரு கதாபாத்திரமாகவே வலம் வந்திருக்கிறார். முதல் காதலியை உருகி உருகி காதலிப்பவர், அவரது பிரிவால் இறுக்கமான மனநிலையில் இருப்பதும், இமயா உடனான காதலுக்குப் பிறகு மகிழ்ச்சியான மனநிலைக்கு மாறுவது என்று நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.  பழைய நிகழ்வுகள் ஏதும் நியாபகம் இல்லாமல் இருக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்,

அதே போல் அறிமுக நடிகை இமயா, புதுமுகம் என்ற அடையாளமே தெரியாதபடி தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் நடித்திருக்கிறார். அவரது திரை இருப்பு மற்றும் நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. மடோனா செபாஸ்டியன், காதலருக்கு இணையாக தன்னால் காதலில் நேர்மையாக இருக்க முடியாத நிலையை எண்ணி வருந்தும் காட்சியிலும், தான் நிராகரித்த காதல் மீண்டும் தன்னை தேடி வரும்போது, தடுமாறும் காட்சியிலும் எதார்த்தமாக நடித்து கவனம் ஈர்க்கிறார். நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வாட்ஸ்-அப் மணி குணச்சித்திர வேடத்துடன் நகைச்சுவையாகவும் நடித்து சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் டெப்னிதா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் மெலோடி ரகம். பின்னணி இசை படத்திற்கு மேலும் பலத்தை அளிக்கிறது. ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.வி, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டியை அழகியலோடு காட்சிப்படுத்தி கண்களுக்கு காட்சி விருந்து படைத்திருக்கிறார். படம் கலர்புல்லகாக இருந்தது.

இதனை எழுதி இயக்கியிருக்கும் கிஷோர் குமார், காதல் கதை மூலமாக பார்வையாளர்களை உருக வைப்பதற்கு பதிலாக, நினைவுகளை இழந்த நாயகனின் காதல் கதைகளை காமெடியாக சொல்லி ரசிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். பார்வையாளர்களை கவர்வதோடு, அவர்களது ஆழ் மனதில் இருக்கும் காதல் நினைவுகளை தட்டி எழுப்புவதற்கு முயற்சித்திருக்கிறார்.  முன்னாள் காதல் மற்றும் இன்னாள் காதல் என்று ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளுடன் பயணிக்கும் நாயகனின் செயலும், இறுதியில் யாருடன் அவர் இணைவார் ? என்ற கேள்வியும் படத்தை சற்று சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.

மொத்தத்தில் ‘ஹார்ட்டின்’ கண்டிப்பாக ஒரு வித்தியாசமான காதல் கதை.

 ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’  வெப் சீரிஸ்  – விமர்சனம்

0

இயக்கம் – சவிர் சுதாகர்
நடிகர்கள் – வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக்
இசை – பரத் தனசேகன்
தயாரிப்பு – Zee 5

ஓர் கிராமத்தில் சில நண்பர்கள் கொண்ட குழு கிரிக்கெட் விளையாடி வருகின்றன, அவர்கள் இணைந்து மம்மட்டியான் ஸ்டார்ஸ் என்ற ஒரு அணியை நடத்தி வருகின்றனர், அதில் மூன்று நண்பர்கள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனியின்  தீவிர ரசிகர்களாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களது சொந்த கிராமத்தில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் அவர்களது அணி பங்கேற்று விளையாடி வருகிறது பரிசு தொகையாக 50 ஆயிரம் அறிவிக்க படுகிறது, அந்த தொகையை வைத்து சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். திடீரென ஏற்பட்ட ஒரு சம்பவத்தால் போட்டி நடத்தப்படாமல் நின்று விடுகிறது. போட்டி பரிசுத் தொகை பணத்தை திருடி கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்குகின்றனர் . போட்டியை நேரில் பார்க்கப்போகும் போது தங்களிடம் இருக்கும் டிக்கெட் போலி என்று தெரிந்ததும் பேரதிர்ச்சியடைகிறார்கள். அதன் பின் அந்த போட்டியை அவர்கள் பார்த்தார்களா ? இல்லையா ? என்பதை சொல்வது தான் இந்த ‘மம்மட்டியான் பாய்ஸ்’ தொடரின் கதை.

இந்த தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர், உண்மையான நண்பர்கள் போலவே தொடர் முழுவதும் வலம் வருகிறார்கள். அந்த அந்த கதாபாத்திரங்களாகவே நம் மனதில் பதிந்து விடுகிறார்கள். நாயகனின் முன்னாள் காதலியாக நடித்திருக்கும் லாவண்யா அன்பழகன் ஆண்களால் எப்படி கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதை தனது இயல்பான நடிப்பின் மூலம் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்.  நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்,

இந்த தொடருக்கு பரத் தனசேகன் இசையமைத்துள்ளார் அவரது பின்னணி காட்சிக்கு கவனம் ஈர்க்கிறது. அதே போல ஒளிப்பதிவும் திறம்பட கையாளப்பட்டுள்ளது ஒளிப்பதிவாளர் பி.எம்.ராஜ்குமார் கிராமம் மற்றும் நகரத்தின் வித்தியாசங்களையும் கதாபாத்திரங்களிடமும் வேறுபாட்டை காண்பிக்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். நிச்சயம் பாராட்டுக்கள்.

இந்த தொடரின் கதை ,  திரைக்கதை எழுதி அதனை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சவிர் சுதாகர்,  பிரபலங்களை கொண்டாடும் இளைஞர்கள் அவர்களை பின் தொடரலாம், ஆனால் அவர்கள் மீது பித்துப்பிடித்து அலையக்கூடாது, என்ற கருத்தை நகைச்சுவையோடு சேர்த்து சொல்லியிருக்கிறார், கிரிக்கெட்டால் நடக்கும் சூதை உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறது இந்த குழு .

மொத்தத்தில், ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ ரசிகனின் மாண்பை எப்படி கடை பிடிக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

ரக்ஷிசிதா மஹாலட்சுமி, யாஷிகா ஆனந்த், இளமை துள்ளலுடன் ‘லாலி பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி ‘பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்

0

Kaviya Productions மற்றும் S2 Movies இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் பூஜை விழா இன்று (ஜூன் 26) கோலாகலமாக நடைபெற்றது.

யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், YGM மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். பி. மஞ்சுநாத் தயாரிக்கும் இப்படத்தை S2 Movies இணைந்து தயாரிக்கிறது. அச்சு ராஜாமணி இசையமைக்க, ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.பி. அகமது படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ரெம்பன் பால்ராஜ் கலை இயக்குநராகவும், ஜாக்கி பிரபு சண்டைப் பயிற்சி இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். நிர்வாக தயாரிப்பாளராக சேலம் சரவணன் செயல்படுகிறார்.

பட விழாவில் இயக்குனர் கே.ஆர் செந்தில்நாதன் பேசியது.

அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது வணக்கம். இன்று முதல் நாளாகவே எங்கள் படத்தின் பூஜை விழாவுடன் படப்பிடிப்பைத் தொடங்கியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்தை தயாரிப்பாளர் திரு. மஞ்சுநாத் தயாரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ரச்சிதா மேடம், யாஷிகா மேடம் மற்றும் இங்கு வருகை தந்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி. அனைவரின் ஆதரவுடன் இந்தப் படம் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.

இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி. உதயகுமார், நடிகையும் அரசியல்வாதியுமான YGM மதுவந்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் மெல்வின் பேசியதாவது..,

“இந்தப் படம் விளையாட்டை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகிறது. இயக்குநர் கதையை சொன்னபோதே அதற்காக நாங்கள் தயாராக ஆரம்பித்துவிட்டோம். கண்டிப்பாக இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். படம் வெளியான பிறகு மற்ற விஷயங்களை விரிவாகப் பேசலாம். நன்றி.

நடிகர் அமித் பார்கவ் பேசியதாவது..

“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். ஒரு திரைப்படம் உருவாவது என்பது மிகவும் நீண்ட பயணம். ஒரு கதை எழுதுவதிலிருந்து அதை திரைப்படமாக உருவாக்கி, மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரை எத்தனையோ சவால்களையும், தடைகளையும் கடக்க வேண்டியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரைப் பார்த்தாலே அந்தப் பயணத்தின் அருமை புரியும். ஒரு கதையை உருவாக்கி, போட்டோஷூட் நடத்தி, இன்று பூஜை விழா வரை கொண்டு வந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. இதுவே ஒரு திரைப்படத்தின் மிக முக்கியமான கட்டமாக நான் கருதுகிறேன்.

இயக்குநர் செந்தில்நாதன் சாரின் பார்வையும், இந்தப் படத்தின் கதையும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று நம்புகிறேன். அனைவரும் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”

வழக்கறிஞர் சிவராமகிருஷ்ணன் பேசியதாவது..,

“இந்த நிகழ்வில் என்னை அழைத்த இயக்குநர் கே.ஆர். செந்தில்நாதன் அவர்களுக்கும், தயாரிப்பாளர் மஞ்சுநாத் அவர்களுக்கும், சரவணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்த ஒரு திரைப்படமும் வெற்றி பெறுவதற்கு பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. சகோதரர்களாகிய நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆதரவையும் இந்தப் படத்திற்கு வழங்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படம் அனைவரிடமும் சென்று சேர உங்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

ஒரு திரைப்படத்தைத் தொடங்கி, அதை உருவாக்கி, திரையரங்குகளுக்கு கொண்டு வருவது எவ்வளவு கடினமான பயணம் என்பதை ஒரு தயாரிப்பாளராக நானும் நன்கு அறிவேன். அந்தப் பெரிய முயற்சியை மேற்கொண்டுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு தங்களது முழு ஆதரவை வழங்க வேண்டும். ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ மாபெரும் வெற்றி பெற்று, நூறாவது நாள் வெற்றி விழாவைக் கொண்டாட என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி. வணக்கம்.”

இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி பேசியதாவது..,

“இங்கு கலந்து கொண்டுள்ள அனைத்து கலைஞர்களுக்கும், விஜயரத்னம் சாருக்கும், செந்தில் சாருக்கும் எனது வாழ்த்துகள். செந்தில் சாரை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். அவருடைய அர்ப்பணிப்பும், உழைப்பும் எனக்கு நன்றாகத் தெரியும். இந்தப் படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அனைவருக்கும் நன்றி.”

நடிகை மதுவந்தி பேசியதாவது.., “அனைவருக்கும் வணக்கம். மேடையில் அமர்ந்திருக்கும் தயாரிப்பாளர் மஞ்சுநாத் சார், இயக்குநர் செந்தில்நாதன் சார், இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி மற்றும் இந்தப் படத்தின் அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்தப் படத்தில் நானும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகிறேன். போஸ்டரில் என் புகைப்படம் இல்லையே என்று யாரும் கேட்க வேண்டாம், ஆனால் இந்தப் படத்தில் நான் இருப்பது உறுதி.இது வித்தியாசமான களத்தில் உருவாகும் ஒரு திரைப்படம். குறிப்பாக, இன்றைய தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவையான விளையாட்டை மையமாகக் கொண்ட ஆரோக்கியமான கதைக்களத்துடன் இந்தப் படம் உருவாகி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ள படக்குழுவினருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

இந்தப் பூஜை விழாவோடு மட்டும் இல்லாமல், இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று இதே உற்சாகத்துடன் வெற்றி விழாவையும் கொண்டாடுவோம் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”

நடிகை அஸ்மிதா பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமாகவும், அனைவரையும் கவரக்கூடியதாகவும் இருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் செந்தில்நாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

மேலும், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் கதையும், என்னுடைய கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”

நடிகை யாஷிகாஆனந்த் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குநர் செந்தில்நாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை அளித்ததற்காக தயாரிப்பாளருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘டி.டி. நெக்ஸ்ட் லெவல்’ படத்திற்குப் பிறகு, ஒரு நல்ல கதைக்காக காத்திருந்தேன். அப்போது இந்தக் கதை என்னிடம் வந்தது. இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எங்களை வாழ்த்த வந்துள்ள சக நடிகர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இந்தப் படத்தை விரைவில் திரையரங்குகளில் உங்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். விரைவில் திரையரங்குகளில் அனைவரையும் சந்திப்போம். நன்றி.”

நடிகை ரச்சிதா பேசியதாவது..,

“பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம். இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி. ஏற்கனவே பலரும் கூறியதுபோல், ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது மிகவும் கடினமான பயணம். ஒரு கதையை உருவாக்கும் கட்டத்திலிருந்தே பல சவால்கள் தொடங்கிவிடுகின்றன. இயக்குநர் செந்தில்நாதன் சாருடன் கதையைப் பற்றி பேசும்போதெல்லாம், இரண்டு வாரங்களுக்கு முன் பேசிய விஷயங்கள் மீண்டும் மாறியிருக்கும். கதை இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல மாற்றங்கள், விவாதங்கள் நடைபெறும்.

இந்தப் படம் செந்தில்நாதன் சாரின் கனவுப் படைப்பு என்று சொல்லலாம். ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு கனவுத் திரைப்படம் இருக்கும்; அதுபோல இந்தப் படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. அந்தக் கனவு முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறது. திரைப்படம் உருவாகும் பயணத்தில் பல சிரமங்களும், எதிர்பாராத சவால்களும் வந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து இன்று இந்தப் படத்தின் பூஜை விழா நடைபெறுகிறது. இனி இந்தப் படம் எந்தத் தடையும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் என்பதே என்னுடைய மனமார்ந்த விருப்பம்.

போஸ்டரைப் பார்த்தவுடன் நான் ‘பி.டி. மாஸ்டர்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதை படத்தில் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். அனைவருக்கும் நன்றி.”

இயக்குநர் சங்கம் சார்பில் R V உதயகுமார் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமாகவும், வண்ணமயமாகவும் இருக்கிறது. இந்த மேடையைப் பார்த்தாலே அந்த உற்சாகம் தெரிகிறது. இன்று இங்கு வந்தவுடன் எனது அத்தனை சோர்வும் மறைந்துவிட்டது.

இயக்குநர் செந்தில்நாதன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இன்றைய தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவையான விளையாட்டை மையமாகக் கொண்ட ஒரு படத்தை உருவாக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர் அச்சு, தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு விருந்தாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தை இவ்வளவு பிரமாண்டமாக பூஜையுடன் தொடங்குவதே பெரிய விஷயம். ஒரு திரைப்படத்தை ஆரம்பிப்பதில் இருந்து அதை முடித்து, திரையரங்குகளுக்கு கொண்டு வரும் வரை எண்ணற்ற போராட்டங்களும் சவால்களும் இருக்கின்றன. படப்பிடிப்பில் வரும் சவால்களைவிட, அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. ஒரு திரைப்படத்தின் வெற்றியை அதன் கதை, நடிகர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு அல்லது இசை மட்டுமே தீர்மானிப்பதில்லை. அந்தப் படத்தை சரியான முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதும் மிக முக்கியம். அதற்கு நல்ல உள்ளடக்கம் (Content) மட்டுமல்ல, நல்ல நேரமும் (Timing) அவசியம்.

இந்த இரண்டும் சிறப்பாக அமையும்போது தான் ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெறும். ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படமும் அந்த வெற்றியைப் பெற்று ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.”

வழக்கறிஞர் தெய்வ சிகாமணி பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் செந்தில்நாதன் சாரை எனக்கு பல காலமாக தெரியும். அவர் பல வெற்றிப் படங்களில் பணியாற்றியிருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக அவர் எடுத்த முயற்சியும், ஓடிய ஓட்டமும், பட்ட கஷ்டங்களும் எனக்கு நன்றாகத் தெரியும்.

இந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் அவருடைய கனவுத் திரைப்படம். அந்தக் கனவை நனவாக்க அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகள் ஓடியவர், இந்தப் படத்தின் மூலம் வெற்றியாளராக மாறி, பல வெற்றிகளையும் விருதுகளையும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் தங்களது முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”

தயாரிப்பாளர், நடிகர் மஞ்சுநாத் பேசியதாவது..,

இந்த விழாவிற்கு வருகை தந்து, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து, அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி

விளையாட்டு பின்னணியில் நகைச்சுவையும், குடும்ப பொழுதுபோக்கும் கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ள ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் குறித்து விரைவில் மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் தெய்வ சிகாமணி பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் செந்தில்நாதன் சாரை எனக்கு பல காலமாக தெரியும். அவர் பல வெற்றிப் படங்களில் பணியாற்றியிருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக அவர் எடுத்த முயற்சியும், ஓடிய ஓட்டமும், பட்ட கஷ்டங்களும் எனக்கு நன்றாகத் தெரியும்.

இந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் அவருடைய கனவுத் திரைப்படம். அந்தக் கனவை நனவாக்க அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகள் ஓடியவர், இந்தப் படத்தின் மூலம் வெற்றியாளராக மாறி, பல வெற்றிகளையும் விருதுகளையும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் தங்களது முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”

விளையாட்டு பின்னணியில் நகைச்சுவையும், குடும்ப பொழுதுபோக்கும் கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ள ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் குறித்து விரைவில் மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

அனந்தன் காடு விமர்சனம்

0

இயக்கம் – ஜியென் கிருஷ்ணகுமார்
நடிகர்கள் – ஆர்யா, முரளி கோபி, தேவ், சுனில்மோகன், இந்திரன்ஸ்.
இசை – பி.அஜனீஸ் லோக்நாத்
தயாரிப்பு – கோகுலம் கோபாலன்.

தமிழீழப் போராளியான ஒருவன் இலங்கை ராணுவத்துடனான மோதலுக்குப் பிறகு தப்பித்து கேரளாவில் தஞ்சம் அடைகிறார். அங்கிருக்கும் குடிசைப்பகுதியில் வாழும் குற்றப் பின்னணி கொண்ட சிலர் அவருக்கு அடைக்கலம் கொடுக்கின்றனர். இதற்கிடையே, தனது அரசியல் எதிரிகளை அழிப்பதற்காக, காவல்துறை உயர் அதிகாரி மூலம், குற்றப் பின்னணி கொண்ட கும்பலை பயன்படுத்தும் கேரள மாநில முதல்வர், அவர்கள் மூலம் தமிழகத்தின் தென் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவரை கொலை செய்ய திட்டம் போடுகிறார். அந்த கும்பல் முதல்வரின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாக, அவர்கள் அடைக்கலம் கொடுத்த அந்த போராளி அந்த நபரை கொடூரமாக கொலை செய்கிறார். அந்த கொலை சம்பவத்திற்குப் பிறகு அவர்களது வாழ்க்கை என்ன ஆனது என்பதை பல உள்கதைகளை கொண்டு விவரிப்பதே இந்த அனந்தன் காடு.

இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆர்யா தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்து கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருப்பவர் அளவாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் குற்றப் பின்னணி கொண்ட நால்வர் குழுவினராக நடித்திருக்கும் முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ் மற்றும் அப்பானி சரத் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மேலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கேரள மாநில காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் சுனில், கேரள முதல்வராக நடித்திருக்கும் விஜயராகவன், சாந்தி பாலச்சந்திரன், ரெஜினா கசாண்டரா, ஜெயின் பவுல், நிகிலா விமல், அச்யூத் குமார் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

பி.அஜனீஸ் லோக்நாத்தின் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவிட்டாலும் அவரது பின்னணி இசை அழுத்தமான காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா 90-காலக்கட்டத்தையும், சம்பவங்களையும் தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார், கண்டிப்பாக அவருக்கு பாராட்டுக்கள் அதே போல கலை இயக்குனருக்கும் பாராட்டுக்கள்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தையும் எழுதியிருக்கிரார். அதனை ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார், அவரது இயக்கத்தில் படம் விறுவிறுபாகவும், வேகமாகவும் பயணிக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்த விதம், நடிகர்களிடம் வேலை வாங்கியது மற்றும் மேக்கிங் ஆகியவை, ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் ஆக்‌ஷன் படமாக இருக்கிறது . எனினும் ஆங்காங்கே சில கருத்து வேறுபாடுகள் படத்தில் உள்ளன. எனினும் அதை இயக்குனர் சாதுர்யமாக கையாண்டுள்ளார்.

மொத்தத்தில், ‘அனந்தன் காடு’ கண்டிப்பாக சஸ்பென்ஸ் கலந்த ஆக்ஷன் விருந்து

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!

0

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பாளர் ராகுல் அவர்களின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

தங்க மார்க்கெட் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லர் படைப்பாக உருவாக உள்ளது. சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்புகளை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர் தேர்வு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் விக்ரம் பிரபு, தனது தனித்துவமான கதைத்தேர்வுகள் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார். குறிப்பாக டாணாக்காரன் மற்றும் சிறை போன்ற படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அவர் தேர்வு செய்யும் கதைகளின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் உருவாகும் இந்த புதிய திரைப்படம், விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் 26வது படமாக அமைந்துள்ளது. வித்தியாசமான களத்தில் உருவாகும் இந்த படம் அவரது திரை வாழ்க்கையில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தரமான திரைப்படங்களை தயாரித்தும், வெற்றிகரமாக விநியோகம் செய்தும் வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இந்த புதிய படத்தையும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கவுள்ளது. தரமான தொழில்நுட்பம் மற்றும் வலுவான கதையம்சத்துடன் உருவாகும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை கார்த்திக் ஷராஜ் கவனிக்க, படத்தொகுப்பை அருள் மோசஸ் மேற்கொள்கிறார்.

மேலும், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவி மோகன் நடிப்பில் ஒரு படமும், ஆகாஷ் முரளி நடிப்பில் மற்றொரு படமும், தற்போது தயாரிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.