Home Blog

Sony Pictures Entertainment India presents EVIL DEAD BURN

0


It was Sam Raimi who created this famous horror thriller franchise that showcased five films! The main plot was basically about the war waged by the principal characters as against the demonic forces that were unleased by some evil powers! The trilogy of films that set the franchise function successfully were Evil Dead (1981), Evil Dead 2 (1987) & Army of Darkness (1992). Evil Dead (2013) was a new reboot which was a new instalment of the Evil Dead franchise! Based on its potential, the franchise was decided to be continued! Evil Dead Rise (2023) came up! Evil Dead Burn (2026) is a standalone sequel to the Evil Dead (2023) & the 6th instalment in the Evil Dead franchise! Watch out for the 7th instalment in 2028!


SYNOPSIS
Touted to be most terrifying horror-ride till date, the screenplay is about a woman who opts to shift to the secluded home of her in-laws following the passing away of her husband! But things are not what she thought of and it turns into a family reunion from Hell…


CREDITS –
Directed by Sebastien Vanicek
Cast –Souheila Yacoub, Tandy Wright, Hunter Doohan, Luciane Buchanan, Errol Shand etc.
Cinematography- Philip Lozano Music –Double Danger

Sony Pictures Entertainment India Release in English, Hindi, Tamil & Telugu

கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!

0

நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் திரைப்படைப்பு ‘அர்ஜுனன் பேர் பத்து’.

இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் யோகி பாபுவுடன் ,அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி ,எம் சௌந்தர்யா சரவணன் ,ரஞ்சன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு டி .இமான் இசையமைத்துள்ளார் .பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல்களை கார்த்திக் நேத்தாவும் வசனத்தை எம் .ஆர் .அருண் சந்தரும் எழுதியுள்ளனர்.கலை இயக்கத்தை B. சேகரும் சண்டைக் காட்சிகளை ஓம் பிரகாஷும் கவனித்துள்ளனர். ஆடியோ லஹரி மியூசிக்.

தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப் பாண்டி எஸ் மற்றும் தங்கப்பாண்டி. D தயாரித்துள்ளனர்.

இணைத் தயாரிப்பு: எல் .சுந்தரபாண்டி

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவிழா பிரசாத் லேப் திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் படக் குழுவினருடன் ஏராளமான சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் கதை நாயகன் யோகி பாபு பேசும் போது,

” எல்லாருக்கும் வணக்கம். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் தங்கபாண்டி சார், கீர்த்திகா மேடம்,இயக்குநர் ராஜ்மோகன் உங்களுக்கு எல்லாம் ரொம்ப நன்றி.
இது எனது 300 ஆவது படம் என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த நம்பருடன் நாமே ஒரு வரையறை வைத்துக் கொள்ளக் கூடாது.
எனவே 300 என்ற எண் எனக்குப் போதாது.ஒரு நடிகராக இருந்து கொண்டு நாமே ஒரு எண்ணிக்கை போட்டுப் பெருமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்த எண்ணிக்கையைக் கடைசி காலத்தில் தான் சொல்ல வேண்டும்.
நாகேஷ் சார், மனோரமா அம்மா போன்ற ஜாம்பவான்கள் நடித்த எண்ணிக்கையைப் போல் நானும் நிறைய படங்கள் நடித்துப் பெரிதாக வளர வேண்டும். அந்த அளவிற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.இந்தப் படத்தில் நடித்த சென்ட்ராயனுக்கு நன்றி.இந்தப் படத்தில் நான் அழுவது போல் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
அடுத்து மைனா உங்களுக்கு ரொம்ப நன்றி. கதாநாயகி அனாமிகாவுக்கு நன்றி.

நான் 2016 லேயே நயன்தாரா கூட நடித்து விட்டேன். இனி யாருடன் நடிக்க வேண்டும் என்கிற கவலை இல்லை.எந்தக் கதாநாயகியுடனும் நடிக்க வேண்டும் என்ற கவலை இல்லை.நமக்குக் கதை தான் முக்கியம் ,கதாநாயகி அல்ல.

இமான் சார் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அவர் என்னைப் பாராட்டிப் பேசினார். ஆனால் நானும் அவரை எப்போதும் பாராட்டிக் கொண்டிருக்கிறேன் .நானும் பிரபு சாலமன் சாரும் ‘மேம்போ’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எப்போதும் அவரைப் பற்றித் தான் பேசுவோம். அவரும் பெருமையாகச் சொல்வார்.
நான் முன்னணிப் பாத்திரத்தில் நடிக்கும் படங்களின் இசையை அவரிடம் தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.கண்டிப்பாக நீங்கள் செய்து தர வேண்டும்.இந்தப் படத்துக்காக அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன், அதைச் செய்து கொடுத்து உதவினார்.ரொம்ப நன்றி சார்.காளி வெங்கட் என் நல்ல நண்பர்.நான் அழைத்ததும் உடனே வந்து விட்டார்.அவர் நாயகனாக நடிக்கும் படங்களில் இரண்டு காட்சிகளுக்குக் கூப்பிட்டால் கூட போய் நடித்துக் கொடுப்பேன். நித்திலன் இங்கே வந்ததற்கு ரொம்ப நன்றி.பாடல் எழுதியிருக்கும் கார்த்திக் நேத்தா சாருக்கும் நன்றி.
மேலும் இங்கே வந்துள்ள
மதன் சார், ரமேஷ் சார், சௌந்தர்யா எல்லாருக்கும் ரொம்ப நன்றி. கேமராமேன் பிரதீப்,உதவி இயக்குநர்கள் எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்மோகன் எனக்கு நீண்ட காலமாக நல்ல பழக்கம்.

ஆற்காடு பக்கத்தில் ஒரு கிராமம் தான் எங்கள் தாத்தாவோட பூர்வீகம். நாங்கள் பிறந்ததெல்லாம் எல்லாமே சென்னைதான்.வெளியூரிலிருந்து வந்தவர்களுக்குத் தான் சினிமா கஷ்டம் என்று கிடையாது .சென்னையில் பிறந்தவர்களுக்கும் சினிமா கஷ்டம் தான்.
சென்னை வாசிதான் நாங்க எல்லாமே. நான் அதை இந்த 24 வருஷம் அனுபவப்பட்டுத் தெரிந்திருக்கிறேன்.

2009 வந்து யோகிதான் உங்களுக்குத் தெரியும். அதுக்கு முன்னாடி நான் லொள்ளுசபா போல எல்லா சேனலிலும் நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறேன்.எல்லார் கூடவும் பணியாற்றி இருக்கிறேன் ஆர்ட் டைரக்டர் இடம் உதவியாளராக வேலை பார்த்துள்ளேன் .இப்படி நிறைய வேலை பார்த்திருக்கிறேன். நாம் வளர வேண்டும் என்றால் அதெல்லாம் செய்துதான் ஆக வேண்டும்.அவை யாவும் என்னுடைய வளர்ச்சிக்கு நான் செய்தவை தான்.

இந்த ராஜ்மோகன் பற்றி இங்கே சொல்ல வேண்டும்.
ஒரு நாள் ராஜ்மோகன் என்னிடம் வந்து ஒரு மாதிரி கதை சொன்னான்.அதன் பிறகு ஆளே காணோம். கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டான்.மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் என் அலுவலகத்தில் இருக்கும்போது ராஜ்மோகன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று நினைவுவந்தது. உடனே அவனுக்குப் போன் செய்தேன்.என்ன செய்கிறாய் என்று கேட்டேன்.இது மாதிரி ஒன்று செய்து கொண்டிருக்கிறேன் என்றான் உடனே வா படம் பண்ணலாம் என்று அழைத்தேன்.அதற்குப் பிறகுதான் சந்தித்தோம்.அப்படித்தான் இந்த படம் ஆரம்பித்தோம்.இது மாதிரி நிறைய உதவி இயக்குநர்களுக்கு நான் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன் நல்ல கதையோடு வாருங்கள்.சரியாகச் செய்யுங்கள்.மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி”. என்றார்.

பேசி முடித்ததும் அவருடன் செய்தியாளர்கள் கலந்துரையாடிய போது அவரிடம் யாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று கேட்ட போது, “கமல் சாருடன் மட்டும் தான் இன்னும் நடிக்கவில்லை. விரைவில் நடிப்பேன் என்று நம்புகிறேன் “என்றார். மேலும் யோகி பாபு பகிர்ந்து கொண்டவை:

“300 படங்கள் வரை வந்துள்ளதற்குத் தெய்வ பக்தி காரணம்.நான் வழங்கும் முருகன்தான் அதற்குக் காரணம். எனக்கு முருகன் மேல் பெரிய நம்பிக்கை உள்ளது.

நான் எந்த பிரேமில் தலை காட்டினாலும் என்னை ஒரு நகைச்சுவை நடிகராகத்தான் பார்க்கிறார்கள்.நகைச்சுவை வேடங்கள் தான் எனக்குச் சோறு போடுகிறது. அதை முதலில் நான் திருப்தி செய்ய வேண்டும்.அதனால் அதை நிறுத்த மாட்டேன்.சில படங்களில் லீடு என்று முன்னணிப் பாத்திரங்களில் என்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அவ்வளவுதான்.மற்றபடி நான் ஒரு நகைச்சுவை நடிகராகத் தான் என் காலத்தை ஓட்டுகிறேன்.என்னை ஆதரித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. அவர்களுக்கு நான் இன்னும் படங்களின் மூலம் கொடுக்க வேண்டும், நிச்சயம் செய்வேன்” இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னதாக தயாரிப்பாளர் தங்கப்பாண்டி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மேலும் விழாவில்சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சுசீந்திரன், நித்திலன், ஷான் ,படத்தின் இயக்குநர் ரா.ராஜ்மோகன், இசையமைப்பாளர் இமான்,ஒளிப்பதிவாளர் பிரதீப் காளி ராஜா, கதாநாயகி அனாமிகா,மைனா நந்தினி, அருள்தாஸ், காளி வெங்கட், லெனின் பாரதி,சுப்பிரமணியம் சிவா, சென்ட்ராயன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவின் நிறைவில் ட்ரெய்லர் பாடல்கள் வெளியிடப்பட்டன.
300 ஆவது படத்தை முன்னிட்டு நாயகன் யோகிபாபுவுக்குத் தயாரிப்பாளர் ஆளுயர மாலை அணிவித்தார். அத்துடன் விழாவில் கேக் வெட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள்.

யோகி பாபுவின் 300 வது படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

“உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது”-நடிகர் பாரத்!

0

யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டும் புதிய தலைமுறை கலைஞர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றனர். அந்த வரிசையில், ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படமும் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு கிளிம்ப்ஸில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நகைச்சுவை ததும்ப, தயாரிப்பாளராக இப்படத்தை அறிமுகப்படுத்திய விதம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் குறித்து நடிகர் பாரத் மற்றும் இயக்குநர் நிரஞ்ஜன் தங்களது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.

ஒரு திரைப்படத்தின் முதல் அடையாளம் அதன் டைட்டில் தான். ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்திற்கு முதலில் ‘மாஸ்டர் பீஸ்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால், அதே தலைப்பில் கன்னடம் மற்றும் தெலுங்கில் திரைப்படங்கள் இருந்ததால் மாற்று தலைப்பாக ‘மிஸ்டர் பாரத்‘ தேர்வு செய்தனர். இந்த தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்தார். அந்த தலைப்பு படக்குழுவினருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. இருப்பினும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றிப் படமான ‘மிஸ்டர் பாரத்’ என்ற தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதில் பொறுப்பும் இருந்தது. அதற்காக ஏ.வி.எம். ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ என்.ஓ.சி. (No Objection Certificate) பெற்ற பிறகு, படத்திற்கு ‘மிஸ்டர் பாரத்’ என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டது.

லோகேஷ் கனகராஜ் வழங்கும் இப்படத்தை சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் ஒரே நேரத்தில் ஆறு புதிய திறமையாளர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறது. நடிகர் பாரத் கதாநாயகனாகவும், சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். இயக்குநராக நிரஞ்ஜன், இசையமைப்பாளராக பிரணவ் முனிராஜ், கலை இயக்குநராக பாவ்னா கோவர்தன், படத்தொகுப்பாளராக திவாகர் டெனிஸ் ஆகியோரும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர்.

இதுகுறித்து நடிகர் பாரத் பகிர்ந்து கொண்டதாவது, “இதற்கு முன்பு ‘பிரின்ஸ்’, ‘லவ் டுடே’ போன்ற படங்களில் கதாநாயகனின் நண்பராக நடித்துள்ளேன். தற்போது முதல் முறையாக கதாநாயகனாக நடிப்பது எனக்கு கனவு நனவான தருணம். அதிலும் புதியவர்கள் நாங்கள் ஆறு பேரும் ஒரே படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகிறோம் என்பது இன்னும் மகிழ்ச்சியான விஷயம். எங்களுக்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தேவை. நான் ஒரு பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் குவாலிட்டி செக் ஆபீசராக, அப்பாவி இளைஞனாக நடித்துள்ளேன். எந்தளவுக்கு அப்பாவியான இளைஞன் என்றால், ஒரு பெண் என்னை காதலிக்கிறாள் என்பதைக்கூட உணர முடியாத அளவுக்கு வெகுளித்தனமானவன். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவன், தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான். தாத்தா கதாபாத்திரத்தில் ஆர். சுந்தர்ராஜன் சார் நடித்துள்ளார். எங்களுக்கிடையேயான உறவில் அவரது பழைய கால நகைச்சுவை பாணியையும் ரசிகர்கள் மீண்டும் ரசிக்க முடியும். அதுவே படத்தின் பலமாக இருக்கும்” என்றார்.

கதாநாயகி சம்யுக்தா விஸ்வநாதன், பொம்மைகளை வடிவமைக்கும் டாய் டிசைனர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், குடும்பத்தில் ஏற்பட்ட மன உளைச்சல்களும் அவரது வாழ்க்கை மற்றும் உறவுகளைப் பற்றிய பார்வையை மாற்றியுள்ளன. அத்தகைய சூழலில், பாரத்தின் தூய்மையான மனமும் அப்பாவித்தனமும் அவரை ஈர்க்க, அதன் பிறகு நடக்கும் உணர்வுப்பூர்வமான தருணங்களே இந்தப் படத்தின் கதை.

இயக்குநர் நிரஞ்ஜன் எழுதி இயக்கியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் நகைச்சுவை, காதல், உணர்வுகள் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. பிரம்மாண்ட காட்சிகளுக்கு பதிலாக, மனதில் நிற்கும் கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான திரைக்கதையையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர்ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் தொடர்பான மேலும் பல முக்கிய அறிவிப்புகளை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.

தொழில்நுட்பக் குழு விவரம்:

ஒளிப்பதிவு: ஓம் நாராயண்,
இசை: பிரணவ் முனிராஜ்,
படத்தொகுப்பு: திவாகர் டெனிஸ்,
கலை இயக்கம்: பாவனா கோவர்தன்,
ஆடை வடிவமைப்பு: நவா ரேம்போ ராஜ்குமார்,
ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி. மற்றும் அழகியகூத்தன்,
நடனம்: அசார்,
ஒப்பனை: சையது மாலிக் எஸ்.,
சண்டைப்பயிற்சி: கனல் வி கண்ணன் & கனல் எஸ் குகன்,
இணை நிர்வாக தயாரிப்பாளர்: ஆதவன் சுப்ரமணியன்,
தயாரிப்பு நிர்வாகி: டி.செல்வராஜ், பார்த்திபன் செல்வம், மஞ்சுநாதன்,
கலரிஸ்ட்: கெளஷிக் கே.எஸ்.,
பப்ளிசிட்டி டிசைன்ஸ்: அமுதன் பிரியன்,
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: பிரதீப் பூபதி எம்.,
நிர்வாக தயாரிப்பாளர்: ஆர். உமா மகேஸ்வரன்.

‘டாக்ஸிக்‘ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது !

0

Monster Mind Creations, KVN Productions, மற்றும் Zee Music கம்பெனி இணைந்து, டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் ( ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளன. ஆடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், தற்போது பிரம்மாண்டமான காட்சிகளுடன் ரசிகர்களை மீண்டும் கவர வருகிறது.

டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் (‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘தபாஹி’ பாடலின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆடியோ வெளியானவுடன் உடனடியாக ரசிகர்களின் விருப்பப் பாடலாக மாறிய இந்தப் பாடல், திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை கூட்டாளியான Zee Music கம்பெனி உடன் இணைந்து கண்கவர் காட்சிகளாக ரசிகர்களை சென்றடைந்துள்ளது. இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான டாக்ஸிக் உலகத்தை முதன்முறையாக ரசிகர்கள் காணும் வாய்ப்பையும் இந்த மியூசிக் வீடியோ வழங்குகிறது.

ராக்கிங் ஸ்டார் யாஷ் மற்றும் கியாரா அத்வானி முதல் முறையாக இணைந்து திரையில் தோன்றும் இந்த பாடல், இருவரின் அற்புதமான கெமிஸ்ட்ரி மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் மறக்க முடியாத காதலை கொண்டாடுகிறது. அவர்களைச் சுற்றிய உலகமே மறைந்து போகும் அளவிற்கு, காதலின் தூய்மையான, ஆழமான, முழுமையான வடிவத்தை ‘தபாஹி’ வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான காட்சியமைப்பு, கண்கவர் ஒளிப்பதிவு, உணர்வுகளைத் தூண்டும் கதை சொல்லல், மின்னல் வேக கிட்டார் இசை மற்றும் உயர்தர ஆர்கெஸ்ட்ரா இசை அமைப்பு ஆகியவற்றுடன், டாக்ஸிக் திரைப்படத்தின் மர்மமான மற்றும் தனித்துவமான உலகிற்கான சிறப்பான அறிமுகமாக இந்த மியூசிக் வீடியோ அமைந்துள்ளது.

மியூசிக் வீடியோ வெளியீட்டிற்கு முன்னதாக, ஜூலை 7 அன்று தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்காக சுவாரஸ்யமான உரையாடலை உருவாக்கினர். டாக்ஸிக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கம், “திருடப்பட்ட சில தருணங்களில் மட்டுமே வாழும் தடைசெய்யப்பட்ட காதலை என்னவென்று அழைப்பீர்கள்?” என்று பதிவிட்டு கியாரா அத்வானி-யை குறிப்பிட்டது. அதற்கு கியாரா ஒரு வார்த்தையில் “தபாஹி” என்று பதிலளித்தார். அதைத் தொடர்ந்து ஜீ மியூசிக் கம்பெனி, அவரது பதிலை மேற்கோள் காட்டி “Stay Tuned…” என்று பதிவிட்டது. இந்த சுவாரஸ்யமான சமூக வலைதள பரிமாற்றம், அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா இசையமைத்து, பாடியுள்ள ‘தபாஹி’ பாடலின் இந்தி வரிகளை ராஜ் சேகர் எழுதியுள்ளார். இந்தப் பாடல் இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவின் சிறந்த பாடலாசிரியர்களான யோகராஜ் பட் (கன்னடம்), ராமஜோகைய்யா சாஸ்திரி (தெலுங்கு), விக்னேஷ் சிவன் (தமிழ்), மற்றும் ரஃபீக் அகமது (மலையாளம்) ஆகியோர் தங்களது மொழிகளில் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். இது டாக்ஸிக் திரைப்படத்தின் உண்மையான பான்-இந்திய படைப்பாற்றலை பிரதிபலிக்கிறது. அனைத்து மொழி ரசிகர்களையும் சென்றடையும் நோக்கில், ஜீ மியூசிக் கம்பெனி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை கூட்டாளியாக நாடு முழுவதும் இசை வெளியீட்டை முன்னெடுத்து வருகிறது.

இந்த திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர்.

பாடல் குறித்து இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா கூறியதாவது:

”‘தபாஹி’ என்பது வழக்கமான காதல் பாடல் அல்ல. அது சிதைவாகவும், முழுமையான சரணாகதியாகவும், அனுமதி கேட்காமல் எரியும் நெருப்பாகவும் இருக்கும் காதலின் வடிவம். ‘டாக்ஸிக்’ திரைப்படம் அதே தீவிரத்தை தாங்கும் இசையை வேண்டியது—ஒரே நேரத்தில் பிரம்மாண்டமாகவும், மிகவும் நெருக்கமானதாகவும். யாஷ் பாய் திரையில் வெளிப்படுத்தும் உறுதியை இசையிலும் ஒவ்வொரு ஸ்வரத்திலும் பதிவு செய்ய முயன்றேன். எனக்கு ‘தபாஹி’ என்பது காதலின் வடிகட்டப்படாத, கட்டுப்படுத்த முடியாத துடிப்பைத் தேடும் ஒரு இசைப் பயணம். ஆறுதல் அளிப்பதற்கு முன்பே நம்மை முழுமையாக ஆட்கொள்ளும் காதலின் உணர்வே இந்தப் பாடலின் மையம்.”

யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதை எழுதியுள்ள இந்த திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகளாவிய வெளியீட்டை நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரித்துள்ள டாக்ஸிக், ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !

0

எனர்ஜிடிக் ஸ்டார் ராம் பொதினேனி, தனது 23வது திரைப்படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி எஸ் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் இயக்குநராக எடுக்கும் முதல் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைப்பது, இந்த கூட்டணியை தென்னிந்திய சினிமாவின் மிகவும் பேசப்படும் கூட்டணிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு, கதையின் மனநிலையையும், பரபரப்பையும் இசையின் மூலம் உயிர்ப்பிக்கும் திறன் கொண்ட இசையமைப்பாளர் தேவைப்படும் சூழலில், சாம் சி எஸ் சரியான தேர்வாக பார்க்கப்படுகிறார். திரில்லர், ஆக்ஷன், சஸ்பென்ஸ், ஹாரர் என எந்த ஜானரிலும் தனக்கென ஒரு தனித்துவமான இசை மொழியை உருவாக்கியுள்ள அவர், #RAPO23-க்கும் அதே தரத்தில் ஒரு புதிய இசை அனுபவத்தை வழங்குவார் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், பின்னணி இசைக்காக அதிகம் பாராட்டப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவராக சாம் சி எஸ் திகழ்கிறார். கதையின் உணர்வுகளை இசையின் மூலம் ஆழமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் அவரது திறமை, பல திரைப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக த்ரில்லர் படங்களில் அவர் உருவாக்கும் சவுண்ட் டிசைன் மற்றும் பின்னணி இசை, ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கி வருகிறது.

அதேநேரத்தில், சமீபத்தில் வெளியான “இம்மார்டல்” திரைப்படத்தின் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல், அவரது மெலடி திறமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ஒருபுறம் காதல் பாடல்களில் மனதை வருடும் மெலடியையும், மறுபுறம் திரில்லர் படங்களில் பரபரப்பை கூட்டும் பின்னணி இசையையும் சமமாக கையாளும் இசையமைப்பாளராக சாம் சி எஸ் தொடர்ந்து தனது முத்திரையை பதித்து வருகிறார்.

தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி எஸ், தமிழில் “கராத்தே பாபு”, “சர்தார் 2”, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி படம், “டிமான்டி காலனி 3” உள்ளிட்ட முக்கிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், ராம் போதினேனியின் முதல் இயக்குநர் படமும் அவரது கைவசம் வந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.

இயக்குநராக புதிய பயணத்தை தொடங்கும் ராம் பொதினேனி மற்றும் இசையின் மூலம் கதைக்கு உயிர் கொடுக்கும் சாம் சி எஸ் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி, #RAPO23 திரைப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. கதைக்கு இணையாக இசையும் இப்படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த கூட்டணி, தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் பேசப்படும் முக்கியமான காம்பினேஷனாக மாறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

0

2027 மே 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’, விளையாட்டை வெறும் விளையாடியவராக அல்லாமல், அதை மாற்றியமைத்த மனிதரின் அசாதாரணமான வாழ்க்கைப் பயணத்தைச் சொல்கிறது. திறமையான இளம் கிரிக்கெட் வீரராக தொடங்கி, இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க கேப்டன்களில் ஒருவராக உயர்ந்த சவுரவ் கங்குலியின் பயணத்தை, இப்படம் பதிவு செய்கிறது. இந்திய கிரிக்கெட்டை மறுவரையறை செய்த அவரது உறுதி, விடாமுயற்சி மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டாடுவதோடு, ஒரு தலைமுறையையே ஊக்குவித்த அவரது பாரம்பரியத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது.

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு, ராஜ்குமார் ராவ் நடித்துள்ள ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இந்த நாள் மேலும் சிறப்பானதாக மாறியுள்ளது. இதனுடன், இப்படம் 2027 மே 14-ஆம் தேதி, நீண்ட விடுமுறை வார இறுதியை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்வெஸ்ட் டிராபி வெற்றிக்குப் பிறகு, லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் சவுரவ் கங்குலி தனது ஜெர்சியை சுழற்றி கொண்டாடிய மறக்க முடியாத தருணத்தை, ராஜ்குமார் ராவ் சினிமா மேஜிக்குடன் மீண்டும் உருவாக்கியுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் அச்சமற்ற புதிய யுகத்தின் அடையாளமாகக் கருதப்படும் அந்த கொண்டாட்டம், கங்குலியின் தலைமையில் உருவான தன்னம்பிக்கை, எதிர்ப்பை மீறும் மனப்பாங்கு மற்றும் நம்பிக்கையின் நிலையான சின்னமாக இன்றளவும் நினைவுகூறப்படுகிறது.

‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தை விக்ரமாதித்யா மோத்வானே இயக்கியுள்ளார். லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரித்துள்ள இப்படத்தை, குல்ஷன் குமார், பூஷண் குமார், டி-சீரிஸ் மற்றும் DBL இணைந்து வழங்குகின்றனர். லவ் ஃபிலிம்ஸ் தயாரிப்பாக  ( Luv Films production ) உருவாகியுள்ள இப்படம், 2027 மே 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஏவிஎம் ஸ்டூடியோவில் துவங்கப்பட்ட ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்

0

இந்திய திரைத் தொழிலில் 80 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஏவிஎம் நிறுவனம். 179 திரைப்படங்கள், 55 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு வெப் தொடரை தயாரித்துள்ள எங்கள் நிறுவனம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் திரைப்படங்களை உருவாக்கிய பெருமையை பெற்றுள்ளது. இந்திய திரைப்படத் துறையில் பல முன்னோடி சாதனைகளையும் புதுமைகளையும் நிகழ்த்தியுள்ளோம். பின்னணிப் பாடகர் முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்திய ‘நந்தகுமார்’ (1938), இந்தியத் திரைப்பட உலகில் முதல் மொழிமாற்றுப் படமான ‘ஹரிச்சந்திரா’ (1944), உதட்டசைவுக்கு ஏற்ப பாடலைப் பொருத்தும் post lip synchronisation தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ‘ஸ்ரீ வள்ளி’ (1945), மகாகவி பாரதியார் பாடல்களை உரிமையாளரிடம் ஏவி. மெய்யப்பன் அவர்கள் வாங்கி திரைப் படத்தில் பயன்படுத்தியது ‘நாம் இருவர்’ (1947), அரசின் வேண்டுகோளை ஏற்று தன்னிடம் உள்ள பாரதியார் பாடல்களின் உரிமையை பெருந்தன்மையாக அரசுக்கு நன்கொடையாக ஏவிஎம் வழங்கியது (1949), பாடல்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட படம் ‘அந்த நாள்’ (1954), குழந்தைகளுக்கான திரைப்படத்திற்காக ஜவஹர்லால் நேரு தேசிய தங்கப் பதக்கத்தை வென்ற ‘ஹம் பஞ்சி ஏக் டால் கே’ (1957), எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்த ‘மெல்லத் திறந்தது கதவு’ (1986), ஜனாதிபதியின் தங்கப் பதக்கத்தைப் பெற்ற முழுமையான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட முதல் தமிழ்த் திரைப்படம் – ‘சம்சாரம் அது மின்சாரம்’ (1986), நடிகர்களையும் அனிமேஷனையும் ஒருங்கிணைந்த இந்தியாவின் முதல் திரைப்படமான ‘ராஜா சின்ன ரோஜா’ (1989), பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த ‘சிவாஜி’ (2007), இந்தியாவில் முதன்முதலாக Dolby Atmos தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ‘சிவாஜி 3D ’ (2012) போன்ற பல மைல்கற்களை எங்கள் நிறுவனம் படைத்துள்ளது.

மேலும், ஆறு முதலமைச்சர்கள் எங்கள் திரைப்படங்களில் பணியாற்றிய பெருமையையும் பெற்றுள்ளோம். அறிஞர் சி. என். அண்ணாதுரை ‘ஓர் இரவு’ (1951), Dr. கலைஞர் மு. கருணாநிதி ‘பராசக்தி’ (1952), Dr. எம். ஜி. இராமச்சந்திரன் ‘அன்பே வா’ (1966), Dr. என். டி. ராமாராவ், ஐந்து திரைப்படங்கள் (1954-1970), Dr. செல்வி ஜெ. ஜெயலலிதா, நான்கு திரைப்படங்கள் (1962-1970) மற்றும் திரு. சி. ஜோசப் விஜய் ‘வேட்டைக்காரன்’ (2009) ஆகிய திரைப்படங்கள் மூலம் எங்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

சினிமா வரலாறு மற்றும் பெருமையை கொண்டாடும் விதமாக 2023ஆம் ஆண்டு, “ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்”-ஐ நாங்கள் தொடங்கினோம். அதில் கவனமாக பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள், உபகரணங்கள், திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட ஹெரிடேஜ் கார்கள் மற்றும் அரிதான இயந்திர சாதனங்கள் என இந்த மியூசியம் பார்வையாளர்களுக்கு பெருமை வாய்ந்த வரலாற்றை உணரும் வாய்ப்பை கொடுக்கும்.

அடுத்த முயற்சியாக “ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்” என்ற அரங்கத்தை தொடங்கி உள்ளோம். பல்வகை நிகழ்ச்சிகளை நடத்த வசதியாகவும் தாராளமான பார்க்கிங் வசதியுடனும், பிரம்மாண்ட மேடை அமைப்புடனும் அமைத்து உள்ளோம்.

பொருட்காட்சிகள், சிறப்பு நிகழ்ச்சிகள், பெருநிறுவன அரங்க கூட்டங்கள், திரையுலக இசை வெளியீடு நிகழ்ச்சிகள், திருமண நிச்சயதார்தங்கள், திருமணம், திருமண வரவேற்பு போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு இந்த சிறப்பு மிகுந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற அரங்கங்களில் இல்லாத வசதியாக, அனைத்து மக்களும் பயன் பெரும் வகையில் சைவ மற்றும் அசைவ சமையலுக்கான தனி தனி அடுப்பறைகள் உள்ளன.

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!

0

சமீபத்தில் வெளியிடப்பட்ட ’சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் கதைக்களத்தை மேலும் வெளிப்படுத்தும் வகையில் இன்னும் இரண்டு புதிய போஸ்டர்களை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது. தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி பேனரின் கீழ் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தை வழங்குகிறார். மேலும், நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தயாரிப்பதில் ஆர்வமுள்ள ரெடாக்டட் ஸ்டுடியோஸின் ஷான்ஜன் ஜி, இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.

புதுமையான கதைகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் கே.எஸ். சினிஷ். இயக்குநராக ‘பலூன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் தயாரிப்பாளராக ‘டிக்கிலோனா’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ போன்ற படங்களை தயாரித்துள்ளார். இந்த வரிசையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் பொழுதுபோக்கு திரைப்படமாக ‘சூப்பர் ஹீரோ’ உருவாகியுள்ளது.

வில்லனாக நடிப்பில் மிரட்டி, தற்போது கதாநாயகனாகவும் வெற்றி ஈட்டி வரும் அர்ஜுன் தாஸ், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, தனது சிறப்பான நடிப்பால் கவனம் பெற்றுவரும் தேஜு அஷ்வினி நடித்துள்ளார். மேலும், ’சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தில் வில்லனாக சாண்டி மாஸ்டர் நடித்துள்ளார். ‘லோகா – சாப்டர் ஒன்’, சமீபத்தில் வெளியான ‘பரிமளா & கோ’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்ற சாண்டி மாஸ்டர் மற்றும் அர்ஜுன் தாஸ் காம்பினேஷன் படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் ஒன்று.

இந்த திரைப்படத்தின் மூலம் விக்னேஷ் வேணுகோபால் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர், ‘பலூன்’ திரைப்படத்தில் கே.எஸ். சினிஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். கதையின் மீதான நம்பிக்கை, தெளிவான திட்டமிடல் என விக்னேஷின் அணுகுமுறை படக்குழுவினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. புதிய திறமைகளை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வரும் கே.எஸ். சினிஷ், இதற்கு முன்பு ‘டிக்கிலோனா’ மூலம் கார்த்திக் யோகியையும், தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படம் மூலம் இயக்குநர் ராமையும் இயக்குநர்களாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். தெலுங்கில் ‘குஷி’, மலையாளத்தில் ‘ஹிருதயம்’, தமிழில் ‘ஒன்ஸ் மோர்’ உள்ளிட்ட படங்களில் மனதை வருடும் இசை கொடுத்த ஹிஷாம் அப்துல் வஹாப் இந்தப் படத்திற்கும் இசையமைத்திருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

“இதயம் முரளி” பட முன் வெளியீட்டு விழா !!

0

Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடவுள்ளது.

பட வெளியீட்டை ஒட்டி படக்குழு படத்தின் விளம்பர பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தனியார் மாலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் படத்தின் முன் வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு, படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராக முன்னணி இயக்குநர் அட்லீ கலந்துகொண்டு சிறப்பித்தோடு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வினில்

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசியதாவது..,

இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது. இயக்குநர் ஆகாஷ் இந்தக் கதையை 2018-ஆம் ஆண்டிலேயே என்னிடம் கூறினார். அப்போது அவர் ஒரு இளம் படைப்பாளிக்கான கனவுகளோடு இருந்தார். பொதுவாக சினிமா வட்டாரத்தில், “பணம் இருப்பவர்களால் மட்டுமே படம் எடுக்க முடியும்; அம்பானி போன்றவர்களுக்குத்தான் அது சாத்தியம்” என்று பேசுவோம். ஆனால் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது பணம் மட்டுமல்ல. ஏராளமான தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரு திட்டத்தை முழுமையாக உருவாக்குவது மிகப் பெரிய சவாலான வேலை.

அந்தப் பயணத்திற்காக ஆகாஷ் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். ஒவ்வொரு ஆண்டும் என்னைச் சந்தித்து, “ஸ்கிரிப்ட்டில் இதைச் சேர்த்திருக்கிறோம், அதை மேம்படுத்தியிருக்கிறோம்” என்று உற்சாகமாகப் பகிர்ந்து கொள்வார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படம் தயாரிப்பு நிலைக்கு வந்து, இன்று அவரது மிகப்பெரிய கனவு நனவாகியுள்ளது. அதற்காக அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அதர்வாவை மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அவருக்கு ஒரு தனித்துவமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது; அதை இங்கே நேரில் பார்க்க முடிகிறது. ப்ரீத்தி, கயாது உள்ளிட்ட அனைத்து நடிகைகளும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் வண்ணமயமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்.

கார்த்திக், தமன் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள். நானும் தமனும் எங்கள் முதல் படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மொத்தப் படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் காட்சியமைப்பு, இசை மட்டுமல்லாமல், ஆழமான உணர்வுகளையும் கொண்ட ஒரு திரைப்படம். அதற்கு மேல் எதையும் இப்போது சொல்ல விரும்பவில்லை. திரையரங்குகளில் சந்திப்போம். நன்றி.

தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் ராஜ்குமார் பேசியதாவது..,

முதலில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் பயணத்தில் நானும் அவருடன் இணைந்து பயணித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

நீண்ட காலத்திற்குப் பிறகு, தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் வகையிலான அழகிய காதல் திரைப்படமாக ‘இதயம் முரளி’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தை மக்கள் நிச்சயம் ரசித்து வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தில் அதர்வா உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளம் இடம்பெற்றுள்ளது. அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் மிகுந்த பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யும், மனநிறைவு தரக்கூடிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இது இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நன்றி.

ஒளிப்பதிவாளர் சாய் பேசியதாவது..,

இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது. இந்தப் பயணத்தைப் பற்றி நாங்கள் சுமார் பத்து ஆண்டுகளாகப் பேசிக் கொண்டே இருந்தோம். கல்லூரி நாட்களிலிருந்தே நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம். இன்று அந்தக் கனவு நனவாகி, ஜூலை 10-ஆம் தேதி படம் வெளியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஆகாஷ் முதலில் ஒரு இயக்குநராக அறிமுகமாக வேண்டும் என்பதுதான் அவரது கனவு. ஆனால் அவர் தயாரித்த திரைப்படம்தான் முதலில் வெளியாகிவிட்டது. அதில் எந்த வருத்தமும் இல்லை. நல்ல விஷயங்கள் நடைபெற சிறிது காலம் எடுக்கும் என்பார்கள். அதுபோல இந்தப் படமும் சரியான நேரத்தில் ரசிகர்களைச் சென்றடைகிறது ‘இதயம் முரளி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, பிளாக்பஸ்டர் படமாக மாறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆகாஷ் மற்றும் படக்குழுவில் உள்ள மூவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் டிராவிட் பேசியதாவது..,

முதலில் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். யூடியூபில் இருந்த என்னை நம்பி, இந்தக் கதாபாத்திரத்தை என்னால் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் வாய்ப்பு வழங்கியதற்கு அவருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியும் எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. நடிப்பைத் தாண்டி, ஒரு திரைப்படம் எவ்வாறு உருவாகிறது, ஒரு கதாபாத்திரத்தை எப்படி அணுக வேண்டும் என்பதையும் ஆகாஷ் எனக்குக் கற்றுக் கொடுத்தார். நடிகராக மட்டுமல்ல, சினிமாவை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள இந்தப் படம் எனக்கு உதவியது.

‘இதயம் முரளி’ திரைப்படம் ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்களே பார்த்து ரசிப்பார்கள். ஆனால், இந்தப் படத்தின் மூலம் கிடைத்த நட்பைப் பற்றி மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். இந்தப் படத்தில் நண்பர்களாக நாங்கள் நடித்தது இல்லை; இந்தப் படமே எங்களை உண்மையான நண்பர்களாக மாற்றிவிட்டது. இன்றும் நாங்கள் அனைவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்து, ஒருவருக்கொருவர் என்ன செய்கிறோம் என்பதைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு இந்தப் படம் எங்களை இணைத்துள்ளது.

அதர்வா மிகவும் அன்பான மனிதர். திரையில் எவ்வளவு கவர்ச்சியாகத் தோன்றுகிறாரோ, நிஜ வாழ்க்கையிலும் அதே அளவுக்கு அழகான குணம் கொண்டவர். ப்ரீத்தி முகுந்தன், கயாது உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் சுதாகர் அண்ணாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் அவரை ஒரு புதிய கோணத்தில் இந்தப் படத்தில் பார்க்கப் போகிறார்கள்.

யூடியூபில் இருந்து திரைப்பட உலகிற்கு நான் வந்த பயணத்தில், ‘இதயம் முரளி’ மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய ஆகாஷ் பாஸ்கரனுக்கும், படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகை ஏஞ்சலின் பேசியதாவது..,

இந்த மேடையில் நிற்பதை மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆசீர்வாதமாகவும் உணர்கிறேன். பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்திருக்கிறேன். ஆனால் இன்று ‘இதயம் முரளி’ படக்குழுவின் ஒருவராக இந்த மேடையில் நிற்பது மிகவும் பெருமையாக உள்ளது.

ஒரு விஷயத்தை இதுவரை பெரிதாக எங்கும் பகிர்ந்ததில்லை. என் ஊடகப் பயணத்தில் நான் எடுத்த முதல் பிரபலத்தின் நேர்காணல் அதர்வாவுடன்தான். இன்று அவருடனேயே என் முதல் திரைப்படத்தில் நடித்திருப்பது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருக்கிறது.

இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. காரணம், இதில் கிடைத்த நட்புதான். இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் எங்களுக்கு நல்ல நண்பர்களாக மாறிவிட்டனர். படப்பிடிப்பு முழுவதும் நாங்கள் ஒரு அழகான பிணைப்பை உருவாக்கிக் கொண்டோம். பல இடங்களுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். ஒவ்வொரு காட்சியும் மிகவும் அழகாகவும் இயல்பாகவும் உருவாகியுள்ளது. குறிப்பாக, திரையில் எங்களுக்குள் இருக்கும் நட்பின் உணர்வு மிகவும் உண்மையாக வெளிப்பட்டிருப்பதை ரசிகர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

என் திரைப்பயணத்தைத் தொடங்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்க முடியாது என்று நான் உணர்கிறேன். இந்தப் படம் ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் உங்களுக்குப் பிடித்த பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனைவரும் திரையரங்குகளில் படத்தைப் பார்த்து உங்கள் அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

நடன இயக்குநர் அனுஷா பேசியதாவது:

முதலில் இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

திங்க் மியூசிக்குடன் எனக்கு நல்ல பயணம் அமைந்துள்ளது. ‘கட்சி சேரா’ பாடலின் வெற்றிக்குப் பிறகு, ஒரு வாரத்திலேயே நான் ஒப்பந்தமான முதல் திரைப்படம் ‘இதயம் முரளி’. அப்போது நான் யார், என் பணி என்ன என்பது கூட பலருக்குத் தெரியாது. இருந்தாலும் என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய Dawn Pictures மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் சாருக்கு நன்றி. படத்தின் ஒளிப்பதிவாளர்கள் சிறப்பான காட்சிகளை உருவாக்கியுள்ளனர். அதர்வா, ப்ரீத்தி, கயாது, ரக்ஷன், டிராவிட், ஏஞ்சலின் உள்ளிட்ட ஒட்டுமொத்த நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுக்கும் நான் நடன அமைப்பு செய்துள்ளேன். என் மீது முழு நம்பிக்கை வைத்து அந்தப் பொறுப்பை வழங்கிய படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் என் திரைப்பயணத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு முக்கியமான படைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நன்றி.

நடிகர் ரக்‌ஷன் பேசியதாவது..,

‘இதயம் முரளி’ திரைப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. நான் இதுவரை நடித்த ஒவ்வொரு படமும் எனக்கு ஏதோ ஒரு வகையில் நெருக்கமானதாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புவேன். அப்படிப்பட்ட உணர்வு இல்லாத படங்களில் நான் நடிப்பதில்லை. அந்த வகையில், இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது.

இன்று நிகழ்ச்சிக்கு வரும்போது, ஒரு முக்கியமான நபரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் ஒரு புதியதாக ஒன்றை செய்யப்போவதைப் பற்றி பேசினார். அதற்குக் காரணம் ‘இதயம் முரளி’ படத்தின் டீசர்தான் என்று கூறியபோது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இந்தப் படத்தின் மையக்கரு காதல்தான். வாழ்க்கையில் காதல் அனைவருக்கும் வரும். ஆனால், பலருடைய வாழ்க்கையிலும் ஒரு தலைக்காதல் இருக்கும். சிறு வயதிலிருந்தே நமக்குப் பிடித்த விஷயங்களையோ, நமக்குப் பிடித்தவர்களையோ மனதில் ரசித்திருப்போம். ஆனால் அந்த உணர்வுகளை வெளிப்படுத்தவும், புரியவைக்கவும் பல நேரங்களில் தயங்கியிருப்போம். அந்த ஒரு தலைக்காதலின் உணர்வை மிகவும் அழகாக இந்தப் படம் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தப் படம் ரசிகர்களின் மனதை நிச்சயம் கவரும். ‘இதயம் முரளி’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆகாஷ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

நடிகை மோனிஷா பேசியதாவது:

இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் என்ன பேச வேண்டும் என்று நினைத்திருந்ததையே மறந்துவிட்டேன். இங்கே இருக்கும் 90-களின் ரசிகர்களுக்கு ‘கனா காணும் காலங்கள்’ முதல் சீசன் நிச்சயம் நினைவில் இருக்கும். அந்தத் தொடரின் மூலம் என்னை அறிந்த பலரை இன்று மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளேன். அந்த மீள்வரவை ‘இதயம் முரளி’ போன்ற ஒரு அழகான திரைப்படத்தின் மூலம் தொடங்கியிருப்பது எனக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அட்லீ சார் இங்கு இருப்பதும் எனக்கு மிகவும் சிறப்பான தருணம். ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் எனக்குப் பிறகு அவரது மனைவி பிரியா இணைந்தார். அதுவும் எனக்கு ஒரு இனிய நினைவாக உள்ளது.

‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நீங்கள் ரசித்த நட்பு, நினைவுகள் மற்றும் உணர்வுகளை விட பல மடங்கு அதிகமான நட்பு, காதல், குடும்ப பாசம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளையும் இந்தப் படத்தில் நீங்கள் காண முடியும். இந்தப் படத்தின் மூலம் எனக்கும் நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர்.

வரும் ஜூலை 10-ஆம் தேதி ‘இதயம் முரளி’ திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து இந்தச் சிறப்பான திரைப்படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியதாவது…,

நீங்கள் எங்கள் மீது காட்டும் அன்பு,  இதயத்தை திணற வைக்கிறது. நன்றி. அட்லீ சாருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை. குறிப்பாக ‘ராஜா ராணி’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. இன்று அவர் எங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து நடித்த அதர்வா, கயாது, ஏஞ்சலின், ரக்‌ஷன், டிராவிட் உள்ளிட்ட அனைத்து சக நடிகர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசையமைப்பாளர் தமன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருடனும் இணைந்து பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது.

இந்தத் திரைப்படத்தின் மூலம் எனக்கு மிகவும் நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர். இந்தப் பயணம் எனக்கு மறக்க முடியாத நினைவுகளையும், அழகான நட்புகளையும் கொடுத்துள்ளது. அதற்காக ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் சாய் ஆகியோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அனைவரையும் அழகாக காட்டியுள்ளார்கள்.  ‘இதயம் முரளி’ திரைப்படம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் பெறும் என்று நம்புகிறேன். நன்றி.

நடிகை கயாது லோகர் பேசியதாவது:

முதலில் இவ்வளவு நேரம் காத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் என்மீது காட்டும் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. இந்த அன்பைப் பெறுவது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதமாக நான் கருதுகிறேன். எங்கள் நிகழ்ச்சிக்கு வந்துள்ள அட்லீ சாருக்கு நன்றி.

இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றி. ‘இதயம் முரளி’ திரைப்படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் இது ஒரு அழகான அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அதர்வாவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படம் ரசிகர்களின் இதயங்களை வெல்லும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

ப்ரீத்தி எப்போதும் எனக்கு நல்ல நண்பராக இருந்து வருகிறார். இப்போது அவருடன் இணைந்து ஒரே படத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ரக்‌ஷன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

‘இதயம் முரளி’ திரைப்படம் ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து உங்கள் அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

நடிகர் அதர்வா பேசியதாவது:

முதலில் எங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அட்லீ சாருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வந்திருப்பது எங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. இந்தப் படத்தின் பயணம் முழுவதும் நீங்கள் எங்களுக்கு அளித்த ஆதரவை என்றும் மறக்க முடியாது.

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்தின் பயணம் மிகவும் அழகாக அமைந்தது. இளம் தலைமுறையினரின் ஆற்றலுடன் கூடிய ஒரு அருமையான குழுவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.

ரக்‌ஷன், டிராவிட் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுடனும் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ப்ரீத்தி, கயாது, ஏஞ்சலின் உள்ளிட்ட அனைவரும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். பாடல்கள், நடனங்கள், காட்சியமைப்பு என படத்தின் ஒவ்வொரு அம்சமும் சிறப்பாக உருவாகியுள்ளது. அனைவரின் நடிப்பும் ரசிகர்களை நிச்சயம் கவரும்.

இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. தயாரிப்பாளராக ஆகாஷ் ஏற்கனவே பல படங்களை வழங்கியிருந்தாலும், இயக்குநராக அவர் உருவாக்கிய முதல் திரைப்படம் என்பதால் இது அவருக்கும் மிகவும் முக்கியமான படைப்பு. அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பகத் பாசில், தமன் என சர்ப்ரைஸ் நடிகர் பட்டாளம் படத்தில் உள்ளது அதற்கு காரணம் ஆகாஷ் தான்.

இறுதியாக, இது அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு மனநிறைவு தரும் திரைப்படமாக உருவாகியுள்ளது. ‘இதயம் முரளி’ ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இயக்குநர் அட்லீ பேசியதாவது:

ஆகாஷ் எனக்கு தம்பி போன்றவர். எனக்காக அவர் பல உதவிகளைச் செய்திருக்கிறார். இந்தக் கதையை நானே தயாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இறுதியில் அவரே தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார். அவர் செய்திருக்கும் பணி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்தத் திரைப்படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. இது அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று நம்புகிறேன்.

அதர்வாவின் மிகப்பெரிய ரசிகர்களில் நானும் ஒருவன். ‘இதயம் முரளி’ திரைப்படத்தை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வருகிறேன். இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பும், நடனமும் மிகவும் சிறப்பாக இருந்தது. அவரது அர்ப்பணிப்பும், எளிமையான அணுகுமுறையும் பாராட்டுக்குரியது. தொடர்ந்து இதே உற்சாகத்துடன் சிறப்பாகப் பயணிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள். அதேபோல், கயாது மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் நடிகையாக உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. படத்தில் நடித்துள்ள மற்ற அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் வாழ்த்துகள்.

ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் சாய் ஆகியோர் படத்திற்கு அற்புதமான காட்சியமைப்பை வழங்கியுள்ளனர். அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒருதலைக் காதலை மையமாகக் கொண்ட இந்தப் படம் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும். இந்தத் திரைப்படம் படக்குழுவில் உள்ள அனைவரின் வாழ்க்கையிலும் புதிய வெற்றிகளையும், மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது:

‘இதயம் முரளி’ திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காதலைக் கொண்டாடும் ஒரு அழகான திரைப்படமாக ‘இதயம் முரளி’ உருவாகியுள்ளது. இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கவரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

எங்கள் படத்திற்குத் தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்கி வரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

“இதயம் முரளி” திரைப்படம் காதல், நட்பு மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு அழகிய படைப்பாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க, பகத் பாசில், கயாது லோகர், ப்ரீத்தி முகுந்தன், ரக்‌ஷன், ஏஞ்சலின், சுதாகர், டிராவிட், தமன், மோனிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ள இப்படம், இளைஞர்களின் உணர்வுகளையும் காதலின் பல பரிமாணங்களையும் மனதைத் தொடும் வகையில் சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது!

0

கோயம்புத்தூர்: இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான கோபாலசாமி துரைசாமி நாயுடு அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர், கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. பாரம்பரியம், புதுமை, ஆட்டோமொபைல் உலகம் மற்றும் சினிமா என அனைத்தையும் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வு வித்தியாசமான திரைப்பட புரோமோஷன்களில் ஒன்றாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் ஆர். மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ளார். இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் ஃபிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.

ஜி.டி. மியூசியத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய விண்டேஜ் கார்களில் தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் வருகை தர நிகழ்ச்சி தொடங்கியது. ஜி.டி. நாயுடுவின் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கான பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்த அணிவகுப்பு அமைந்திருந்தது. இதனுடன், நவீன சொகுசு அதிவேக கார்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஜி.டி. நாயுடுவின் காலத்தைத் தாண்டிய கண்டுபிடிப்புகளையும், இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் இணைக்கும் விதமாகவும் இது அமைந்தது.

மணிக்கு சுமார் 190 கிலோமீட்டர் வேகம் வரை சென்ற அதிநவீன சூப்பர் காரில் நடிகர் ஆர். மாதவன், முன்னணி ஊடகங்களின் பத்திரிகையாளர்களை கரி மோட்டார் ஸ்பீட்வேயை சுற்றி அழைத்துச் சென்றது நிகழ்வின் முக்கிய அம்சங்களில் ஒன்று. சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த அதிவேக பயணம், ஜி.டி. நாயுடுவின் ஆட்டோமொபைல் மற்றும் பொறியியல் மீதான பேரார்வத்தை உணர்த்தும் வகையில் அமைந்தது. சூரியன் மறையும் மாலை நேரத்தில், சுமார் மூன்று நிமிடங்கள் ஓடும் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டபோது, பார்வையாளர்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர்.

கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் கொண்ட டிரைய்லர் பார்வையாளர்களின் உற்சாகத்துடன் அவர்களுக்கு திரையிடப்பட்டது. அந்தக் காலகட்டத்தின் நுணுக்கமான விவரங்கள் மற்றும் பிரம்மாண்டமான திரையனுபவத்துடன் கூடிய இந்த டிரெய்லர் ‘இந்தியாவின் எடிசன்’ என்று கொண்டாடப்பட்ட ஜி.டி. நாயுடுவின் விடாமுயற்சி, கண்டுபிடிப்பு ஆர்வம், தேசப்பற்று மற்றும் அவரது வரலாற்று சாதனைகளை கண்முன் காட்டியது. ஜி.டி. நாயுடுவாக ஆர். மாதவனின் தோற்றம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும், தந்தை பெரியார் மற்றும் அடால்ஃப் ஹிட்லர் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களின் காட்சிகளும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ஆர். மாதவன் பகிர்ந்து கொண்டதாவது, “ஜி.டி. நாயுடு ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டுமல்ல. அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர், அசாதாரண சாதனையாளர், அதைவிட மிக முக்கியமாக தேசபக்தி கொண்டவர். பல துறைகளில் அவரது பங்களிப்பு அளப்பரியது. ஆனால், அவரது ஆட்டோமொபைல் மீதான பேரார்வத்தை மட்டுமே நாம் கொண்டாடுகிறோம். அவரது வாழ்க்கை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அறியப்பட வேண்டியது அவசியம். அதுவே இந்த திரைப்படத்தை உருவாக்க எங்களுக்கு ஊக்கமாக அமைந்தது” என்றார்.

நடிகை துஷாரா விஜயன் பகிர்ந்து கொண்டதாவது, “பள்ளி நாட்களில் ஜி.டி. மியூசியத்திற்கு வந்திருக்கிறேன். அப்போது, பின்னாளில் ஜி.டி. நாயுடுவின் மனைவியாக திரையில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. பல தலைமுறைகள் அவரது சாதனைகளைப் பாராட்டி வருகின்றன. ஆனால், ‘ஜி.டி.என்’ திரைப்படம் அவரது கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால் இருந்த அன்பும் மனிதநேயமும் நிறைந்த மனிதரை உலகிற்கு அறிமுகப்படுத்தும்” என்றார்.

இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு புத்தகக் கண்காட்சியில் ஜி.டி. நாயுடு பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கிப் படித்த நாள்தான் இந்த திரைப்படத்திற்கான ஆரம்பப்புள்ளி. அவரது சாதனைகள், போராட்டங்கள், யாருக்கும் தெரியாத வாழ்க்கை அத்தியாயங்கள் என்னை ஆழமாக பாதித்தன. இப்படிப்பட்ட வாழ்க்கை வரலாறு பெரிய திரைக்கும் கொண்டு வரவேண்டும் என்று தோன்றியது” என்றார்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் வர்கீஸ் மூலன், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் நம்பி நாராயணன், ஜி.டி. ராஜ்குமார், மறைந்த ஜி.டி. நாயுடுவின் மகன் ஜி.டி. கோபால், திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் மற்றும் ஊடகத்தினர் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தில் ஆர். மாதவன் உடன் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, நந்தலால், டிஜே அருணாசலம், ஷீலா, கருணாகரன், முரளிதரன், அதிதி பாலன், மோகன் ராமன், கனிகா, ரமேஷ் திலக், கார்ல் ஆண்ட்ரூ ஹார்டே, ரிச்சர்ட் பக்தி கிளைன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் தயாரித்துள்ளனர். திரைக்கதையை கிருஷ்ணகுமார் ராமகுமார் மற்றும் ஆர். மாதவன் இணைந்து எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு மற்றும் கிரியேட்டிவ் புரொட்யூசராக அரவிந்த் கமலநாதன், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, படத்தொகுப்பாளராக பிஜித் பாலா, நிர்வாகத் தயாரிப்பாளராக முரளிதரன், தயாரிப்பு மேலாளராக ஹக்கீம் சுலைமான், வசனகர்த்தாவாக முகில், கலை இயக்குநராக சிரில் குருவில்லா, ஆடை வடிவமைப்பாளராக ஜிஷாத் ஷம்சுதீன், ஒலி வடிவமைப்பாளராக சித்தார்த் சதாசிவ், ஒப்பனை கலைஞராக ரஞ்சித் அம்பாடி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

தேசிய விருது பெற்ற ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்திற்குப் பிறகு, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் ஃபிலிம்ஸ் மீண்டும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.

’இந்தியாவின் எடிசன்’, ’வெல்த் கிரியேட்டர் ஆப் கோயம்புத்தூர்’ எனப் போற்றப்படுபவர் கோபாலசாமி துரைசாமி நாயுடு (1893–1974). சுயமாகக் கற்றறிந்த கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் மற்றும் கல்விசார் கொடையாளர். தென்னிந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு தொழில்துறை வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தவர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்மோட்டார், ராசண்ட் ரேசர், வாக்குப் பதிவு இயந்திரம், 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரு இருக்கை பெட்ரோல் கார் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளார். அவரது சாதனைகள் சர் சி.வி. ராமன், சர் எம். விஸ்வேஸ்வரய்யா, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் உள்ளிட்ட பலரால் பாராட்டப்பட்டன. 1967 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது. உணர்வுபூர்வமான டிரெய்லர், உயர்தர தயாரிப்பு தரம் மற்றும் இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரின் வாழ்க்கையை கொண்டாடும் கதையுடன், ’ஜி.டி.என்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.