Home Blog

திருக்குறள் 2 படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டாமாக துவங்கியது!

0

‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தை சென்ற ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தை A.J. பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.

பத்திரிகைகள் மற்றும் பொதுமக்களின் பாராட்டை பெற்ற திருக்குறள் படம் இணையதளத்தில் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர்ச்சியாக திருக்குறள் படத்தில் இடம்பெறாத மேலும் பல கருத்துக்களை வலியுறுத்தி அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.

ஆங்கிலத்தில் ” Once Upon a Time in Hindustan ” என்ற பெயரில் தயாராகிறது.

திருக்குறள் முதல் பாகத்தில் நடித்த கலைச்சோழன் வள்ளுவனாகவும், வாசுகியாக நடித்த தனலட்சுமியும் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். மற்றும் பல நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்காற்ற உள்ளனர்.

VIT வேந்தர், தலைவர் தமிழியக்கம் DR.G.விசுவநாதன் வழங்க ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கிறது. T.P.இராஜேந்திரனும் இத்திருப்பணியில் இணைகிறார்.

திருக்குறள் முதல் பாகத்திற்கு ஒளிப்பதிவு செய்த எட்வின் சகாய் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

திருக்குறள் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் A. J. பாலகிருஷ்ணன் பகிர்ந்தவை..

அருட்தந்தை G.U.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்புதான் உலகக் கவனம் பெற்றது நம் குறள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள், ரோம் கிரேக்கம் போன்ற மேற்குலக நாடுகளுடனும், சைனா, இந்தோனேசியா போன்ற கிழக்காசிய நாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

இப்படத்தில் திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த மேலும் பல ஆளுமைகள், கலாச்சாரத் தொடர்புகள், வணிகத் தொடர்பு, தமிழர்களின் சங்ககால பண்பட்ட நாகரீகம் படமாக்கப்பட உள்ளது.

சர்வதேசப் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் HOLLYWOOD கலைஞர்களின் பங்களிப்பும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் இப்படத்தில் பயன்படுத்தப்பட உள்ளது.

பெருமை வாய்ந்த நமது தமிழ் பண்பாட்டை திருக்குறள் வாயிலாக உலகுக்கு பறை சாற்றுவதே இப்படத்தின் நோக்கமாகும் என்றார் இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன்.

இன்று பிரமாண்டாமாக பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

V.G.சந்தோஷம் அவர்கள் கிளாப் போர்டு அடித்தும், T. P. ராஜேந்திரன் கேமராவை இயக்கியும் படப்பிடிப்பை துவக்கி வைத்தனர்.

மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்.

ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது ” ஃபீல் மை லவ் “ஹரி பிரகாஷ் எம் இயக்கியுள்ளார்.

0

காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் ‘ஃபீல் மை லவ்’ (Feel My Love) ஆகஸ்டில் திரைக்கு வருகிறது.

பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல ‘பான்-இந்தியா’ (Pan-India) திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் A. N.பாலாஜி முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் ” Feel My Love ” ஃபீல் மை லவ் “

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் M.S. பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ் மற்றும் பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன் ராவ் நடித்துள்ளார்.

ஹவுஸ் மேட்ஸ்’ (House Mates) படத்தின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்த எம்.எஸ். சதீஷ் இப்படத்தின் ஒளிப்பதிவை செய்துவருகிறார்.

திறமையான இசையமைப்பாளர்களான ராஜரவிவர்மா எஸ் மற்றும் பாலசுப்ரமணியன் ஜி ஆகியோர் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.

லவ்’ (LOVE), ‘கொலை சேவல்’ (Kolai Seval) போன்ற படங்கள் மற்றும் பல குறிப்பிடத்தக்க விளம்பரப் படங்களில் பணியாற்றிய அஜய் மனோஜ் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

ஹரி பிரகாஷ் எம் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

“வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம்” என்ற மனதிற்கு இதமான கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுவாரஸ்யமான தருணங்கள், இயல்பான உறவுகள், ஆழமான உணர்ச்சிகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு தனித்துவமான காதல்-நகைச்சுவைத் திரைப்படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர்.

இப்படத்தின் இதமான கதைக்களம் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை, இளைஞர்கள் மற்றும் குடும்பப் பார்வையாளர்கள் என இரு தரப்பினரையும் சமமாக ஈர்க்கும் என்று படக்குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.

சென்னை மற்றும் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மூனார் மலைப்பிரதேசத்தில் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ள இப்படம், இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில் தயாராகி வருகிறது.

இதற்கிடையில் விரைவில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!

0

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ’ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற எளிய பூஜையுடன் படத்தின் டப்பிங் பணியை கதாநாயகன் ஏகன் தொடங்கினார்.

யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்தை, விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர். ஏகன், ஃபெமினா ஜார்ஜ் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இப்படம் நிறைவை நோக்கி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

டப்பிங் பணிகள் தொடங்கியது குறித்து தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து கூறியதாவது, “‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் நேர்மையான உழைப்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. படப்பிடிப்பின் ஒவ்வொரு கட்டமும் திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவடைந்துள்ளது. அதே உற்சாகமும் அர்ப்பணிப்பும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளிலும் தொடரும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ’ஹைக்கூ’ திரைப்படத்தை விரைவில் ரசிகர்களிடம் கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. படத்தை விரைவில் வெளியிடுவதற்காக இரவு பகலாக பணியாற்றி வருகிறோம்” என்றார்.

ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ள இப்படத்திற்கு பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பிரணேஷ் படத்தொகுப்பை கவனிக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார். கலை இயக்குநராக பிரேம் பணியாற்றியுள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடையும் முன்பே, ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் கைப்பற்றியது. இதன் மூலம் இப்படத்தின் கதை மற்றும் உணர்வுப்பூர்வமான களம் மீது அந்நிறுவனம் கொண்டுள்ள நம்பிக்கை தெளிவாகியுள்ளது.
தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!

0

பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளனர். மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் மாஸ் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய வெற்றிப்படமான Aravinda Sametha Veera Raghava (அரவிந்த சமேத வீரராகவா)-க்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் உருவாகுவது இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த படத்தைப் பற்றி என்.டி.ஆர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படத்தின் அறிவிப்பு போஸ்டரில் திரிசூலம் மற்றும் வேல் ஒன்றிணைவதுடன் DNA வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளது. மேலும், “ஒரே வேல்… ஒரே நோக்கம்… ஒரே தெய்வீக தீர்ப்பு” (One Spear, One Purpose… One Divine Reckoning) என்ற டேக்லைன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

புராணக் கதைகளின் தாக்கத்துடன், தெய்வீக கருவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், வலுவான கதைக்களம், ஆழமான உணர்வுகள், அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான உலகக் கட்டமைப்புடன் உருவாகவுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார். அவரது இசை இந்த பிரம்மாண்ட படைப்புக்கு மேலும் ஒரு சிறப்பை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தை ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு) மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் சார்பில் நந்தமூரி கல்யாண் ராம் இணைந்து தயாரிக்கின்றனர். தெலுங்கு சினிமாவின் வெற்றிகரமான நடிகர்–இயக்குநர் கூட்டணியும், இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் இணைவதால், இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான திரைப்படங்களில் ஒன்றாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு அட்டவணை குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.

நடிகர்
என்.டி.ஆர்

தொழில்நுட்பக் குழு

தயாரிப்பு நிறுவனங்கள்: ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ், என்.டி.ஆர் ஆர்ட்ஸ்
தயாரிப்பாளர்கள்: எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு), நந்தமூரி கல்யாண் ராம்
கதை, திரைக்கதை, இயக்கம்: திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்
இசை: அனிருத் ரவிச்சந்தர்

விரைவில் வெளியாகும் ‘அரூபி’… தமிழ் பதிப்பின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலம்!

0

மலையாளத்தில் உருவாகியுள்ள ‘அரூபி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்கள் நிறைந்த இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

“சில ரகசியங்கள் ஒருபோதும் மறைந்தே இருக்காது…” என்ற வரியுடன் தொடங்கும் டிரெய்லர், பல்வேறு மர்மங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிறைந்த கதைக்களத்தை முன்னிறுத்துகிறது. விறுவிறுப்பான காட்சிகள், பின்னணி இசை மற்றும் திகில் கலந்த திரைக்கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுக்கு பின் படக்குழு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்

இயக்குநர் அபிலாஷ் வாரியர் பேசியதாவது..,

“முதலில் அனைவருக்கும் நன்றி. எங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படம் மலையாளம் மட்டுமல்ல, எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்காக படப்பிடிப்பின்போதே நிறைய உழைத்திருக்கிறோம்.

படத்தின் புரமோஷன் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் தொழில்நுட்பக் குழு. பின்னணி இசையமைப்பாளர் கோபி சுந்தர் ., ஒளிப்பதிவாளர் ரோபி வர்கீஸ் ராஜ், படத்தொகுப்பாளர் கிஷோர் மோகன் உள்ளிட்ட அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

மீதியை நீங்கள் திரையரங்கில் பார்த்து முடிவு செய்யுங்கள். படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறோம். அனைவருக்கும் மீண்டும் நன்றி.”

தயாரிப்பாளர் பிரதீப் ராஜ் பேசியதாவது:

“இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இன்று திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மகிழ்ச்சியாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும், தனிமையில் இருந்தாலும், மன அழுத்தத்தில் இருந்தாலும், மக்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறார்கள். திரைப்படம் பார்க்க இனி எந்தவொரு விசேஷ நாளும் தேவையில்லை.

சமீபத்தில் கேரள அரசு திரைப்படத் துறையை ஒரு தொழில்துறையாக அறிவித்துள்ளது. அதனால் இன்று நாங்கள் அனைவரும் திரைப்படம் என்ற தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் என்பதில் பெருமை கொள்கிறேன்.

இந்த மேடையில் நின்று சினிமாவை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. இந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பதற்கும், உங்களுடன் இந்த தருணத்தை பகிர்ந்து கொள்வதற்கும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்புக்காக என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றி.

குறிப்பாக இயக்குநர் அபிலாஷ் வாரியருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். என் நண்பரும், இந்தப் படத்தின் நாயகனுமான விஷாக் ரவியுடன் சேர்ந்து அவர் என்னிடம் இந்தக் கதையைச் சொன்னார். நான் சினிமா துறையைச் சேர்ந்தவன் அல்ல; தொழிலதிபர். ஆனால் இந்தக் கதையை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. என் மனைவி மஞ்சுவின் ஆசீர்வாதத்துடன் இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தேன்.

அப்போது அபிலாஷிடம் நான் ஒரு விஷயம் மட்டும் சொன்னேன். ஏற்கனவே பிரபலமான நடிகர்களை மட்டும் நம்பாமல், திறமையான இளம் கலைஞர்களைத் தேடி அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றேன். இந்தியாவில் திறமைக்கு குறைவில்லை. ஆனால் அந்த திறமையை வெளிப்படுத்த சரியான மேடை கிடைக்காமல் பலர் இருக்கிறார்கள். அவர்களை நம்பிக்கையுடன் கொண்டு வந்து, கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்துடன் இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினேன்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கதைதான். படம் முடிந்து வெளியே வரும்போது, ‘இவ்வளவு அருமையான கதையை இதுவரை யாரும் ஏன் படமாக எடுக்கவில்லை?’ என்று நீங்கள் நினைப்பீர்கள். அந்த அளவுக்கு சிறப்பான கதையை அபிலாஷ் மிகுந்த உழைப்புடன் திரையில் கொண்டு வந்துள்ளார். இளம் நடிகர்களையும் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு மக்கள் பேசுவார்கள், விவாதிப்பார்கள், தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதற்காகவே நான் காத்திருக்கிறேன்.

ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. ஒரு திரைப்படத்தின் வெற்றி அல்லது தோல்வியில் ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. நல்ல திரைப்படம் தோல்வியடைவதற்கு காரணம் அது சரியான பார்வையாளர்களை சென்றடையாததுதான். ஒரு படம் அனைவருக்கும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. அது ஒருவரின் ரசனைக்கு ஏற்றதாக இல்லாவிட்டால் அவர் அதை மோசமான படம் என்று கூறலாம். ஆனால் அது மோசமான படம் என்பதற்கான அர்த்தமல்ல.

சரியான பார்வையாளர்களிடம் ஒரு திரைப்படத்தை கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் மிகப்பெரிய பாலமாக இருக்கின்றன. அதனால் இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை. அன்புடனும் மரியாதையுடனும் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறோம். ‘அரூபி’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள். அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்.”

நடிகர் விஷாக் ரவி பேசியதாவது:

“அனைவருக்கும் என்னுடைய அன்பு வணக்கம். முதலில் சமீபத்தில் நம்மை விட்டு பிரிந்த பாரதிராஜா சார் மற்றும் பாக்யராஜ் சாருக்கு என்னுடைய பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன். தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களுக்கு எனது மரியாதை.

இன்று இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. தயாரிப்பாளர் சொன்னது போல, ஒரு படத்தின் வெற்றிக்கு ஊடகங்கள்தான் மிகப்பெரிய பாலமாக இருக்கிறார்கள். உங்கள் ஆதரவு இருந்தால்தான் எங்களைப் போன்ற புதியவர்கள் முன்னேற முடியும்.

இந்தப் படம் உருவான பயணம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. நானும் இயக்குநர் அபிலாஷ் வாரியரும் இணைந்து பல கதைகளை உருவாக்கினோம். எந்தக் கதையை முதலில் படமாக்குவது என்று நீண்ட நாட்கள் யோசித்தோம். இறுதியாக இந்தக் கதையை தேர்வு செய்தோம். அதன் பிறகுதான் தயாரிப்பாளர் பிரதீப் ராஜ் சாரை சந்தித்தோம்.

பிரதீப் ராஜ் சார் எனக்கு ஒரு தயாரிப்பாளர் மட்டுமல்ல, தந்தை போன்றவர். அவர் இல்லையென்றால் இந்தப் படம் உருவாகியிருக்காது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மேடையில் இருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இது ஹீரோவாக எனது முதல் படம். அதனால் உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் ஆதரவும் எனக்கு மிகவும் முக்கியம்.

‘அரூபி’ ஒரு ஹாரர் திரைப்படம். முதலில் இதை மலையாளத்தில் மட்டுமே எடுக்கத் திட்டமிட்டோம். ஆனால் கதையின் வலிமை மீது இருந்த நம்பிக்கையால், தமிழிலும் வெளியிட முடிவு செய்தோம். நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு எல்லா மொழிகளிலும் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

ஒரு ஹாரர் படத்தில் பின்னணி இசையும், ஒலித் தரமும் மிகவும் முக்கியமானவை. அதற்காக கோபி சுந்தர் பின்னணி இசையமைத்துள்ளார். சவுண்ட் டிசைனிலும் தொழில்நுட்பக் குழு சிறப்பாக பணியாற்றியுள்ளது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலங்களில் அதுவும் ஒன்றாக இருக்கும்.

எனது அம்மாவுக்கு இந்த மேடையில் சிறப்பு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவரால்தான் இன்று நான் உங்கள் முன்னால் ஒரு ஹீரோவாக நிற்கிறேன். அவருக்கு என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘அரூபி’ திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. எங்களைப் போன்ற புதிய கலைஞர்களை ஆதரித்து, திரையரங்குகளில் படம் பார்த்து வெற்றி பெறச் செய்யுங்கள். இது எனது முதல் படம் மட்டுமல்ல, இன்னும் பல நல்ல படங்களை செய்ய வேண்டும் என்பதே என் கனவு. உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் அவசியம்.

நடிகை நேஹா சாவ்லா பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். நான் நேஹா சாவ்லா. டெல்லியைச் சேர்ந்தவள். இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த தருணம் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. இந்த கனவை நனவாக்கிய இறைவனுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குநர் அபிலாஷ் வாரியர் மற்றும் புனர்த்தம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு மனமார்ந்த நன்றி. ‘யக்ஷிணி’ கதாபாத்திரத்தில் என்னை தேர்வு செய்து நம்பிக்கை வைத்ததற்கு அவர்களுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இது மிகவும் சவாலான, கடினமான கதாபாத்திரமாக இருந்தது.

இந்தப் படத்திற்காக நாங்கள் அனைவரும் எங்கள் முழு உழைப்பையும், மனதையும் கொடுத்துள்ளோம். எனவே அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்தை பார்த்து எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இது ஒரு ஹாரர் திரைப்படம். அதே நேரத்தில் மர்மமும், சுவாரஸ்யமும் நிறைந்த படமாக இருக்கும். சுமார் 300 ஆண்டுகள் பழமையான ஒரு வீட்டில் இந்தப் படம் படமாக்கப்பட்டது. அந்த மாதிரியான லொகேஷனில், இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பது எந்த நடிகைக்கும் கிடைக்கும் சிறந்த அறிமுகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

கேரளாவில் நடைபெற்ற பேட்டிகள் மற்றும் புரமோஷன்கள் எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தன. இப்போது சென்னை வந்து தமிழ் ரசிகர்களை சந்திப்பதும் எனக்கு இன்னொரு கனவு நனவானது போன்ற உணர்வை தருகிறது.

உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி. அனைவரும் திரையரங்கிற்கு வந்து ‘அரூபி’ திரைப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”

நடிகை சாக்ஷி படாலா பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். இன்று எங்களை இங்கு அழைத்து, உங்கள் முன்னால் நிற்கவும், உங்களிடம் பேசவும் வாய்ப்பு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இது எங்களுக்கு மிகவும் பெரிய வாய்ப்பாகவும், மறக்க முடியாத தருணமாகவும் இருக்கிறது.

மொழி எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. இருந்தாலும் மலையாள சினிமாவில் எனது முதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நன்றியுணர்வையும் அளிக்கிறது. இந்தப் படத்தில் ஒரு அழகான பாடல் இருக்கிறது. அதன் அர்த்தம் முழுமையாக எனக்குப் புரியாவிட்டாலும், அதை கற்றுக்கொண்டு என்னால் முடிந்த சிறந்த முறையில் நடித்திருக்கிறேன்.

இப்போது கொஞ்சம் பதற்றமாக இருக்கிறேன். இருந்தாலும், இந்த வாய்ப்பை எனக்கு வழங்கி, மொழி ஒரு தடையாக இருந்தபோதும் என் மீது முழு நம்பிக்கை வைத்த இயக்குநர் அபிலாஷ் சாருக்கு மனமார்ந்த நன்றி. அவர் வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றியிருப்பேன் என்று நம்புகிறேன். அதேபோல் தயாரிப்பாளர் பிரதீப் சார் மற்றும் படக்குழுவில் உள்ள அனைவரும் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கும் நன்றி.

இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவருக்கும், எங்களை அன்புடன் வரவேற்று, எங்கள் பேச்சைக் கேட்டு ஆதரவு அளித்ததற்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. நன்றி.”

நடிகர் சம்பத் ராம் பேசியதாவது..

“நான் 1998-ஆம் ஆண்டு சினிமாவுக்கு வந்தேன். ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தேன். அதன் பிறகு எனக்கு விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் பல நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. மலையாள இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் எனக்கு மிகப்பெரிய கதாபாத்திரங்களை வழங்கினர்.

அதில் முக்கியமாக ‘மாளிகாப்புரம்’ திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பான படமாக அமைந்தது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழிலும் பல நண்பர்கள் அந்தப் படத்தில் என்னுடைய நடிப்பை பாராட்டி, என்னை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு வரும்படி தயாரிப்பாளர் என்னிடம் கேட்டபோது, என்னுடைய சொந்த படத்தின் பூஜை இருந்தபோதும் அதை முடித்துவிட்டு, இந்தப் படத்திற்காக இங்கு வந்துள்ளேன். அதுவே இந்தப் படத்தின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.

‘அரூபி’ படத்தின் டிரெய்லரை பார்த்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.மேலும், பத்திரிகையாளர்கள் அனைவரும் இந்தப் படக்குழுவிற்கு தங்களது முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.”

இசையமைப்பாளர் இயக்குநர் எஸ் எஸ் குமரன் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். பொதுவாக மலையாள திரைப்படத் துறை இன்று உலகளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக கதைக்களம் சார்ந்த படங்களும், அவற்றின் வணிக வெற்றிகளும் இந்திய சினிமாவில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளன. குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை உருவாக்கி மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று வருவது பாராட்டத்தக்க விஷயம்.

அந்த வரிசையில் ‘அரூபி’ திரைப்படமும் ஒரு முக்கியமான வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் மிகவும் அழகாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. குறிப்பாக சவுண்ட் டிசைன், தொழில்நுட்பத் தரம் மற்றும் படத்தின் க்ராஃப்ட் அனைத்தும் சிறப்பாக இருந்தன. தயாரிப்பாளர் பேசும்போது, சினிமாவைப் பற்றிய தெளிவான புரிதலுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ரசிகர்களின் ரசனையை நன்றாக புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு படத்தை உருவாக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

‘அரூபி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அந்த வெற்றியை நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நன்றி. வணக்கம்.”

நடிகர் அசோக் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். மொழி என்பது ஒரு தடையல்ல; மனிதர்களை இணைக்கும் ஒரு பாலம். மலையாள மக்களிடம் இருக்கும் ஒற்றுமையும், ஒருவருக்கொருவர் கொடுக்கும் ஆதரவும் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சிறந்த பண்பாகும்.

‘அரூபி’ படத்தின் இயக்குநர் அபிலாஷ் வாரியர் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். தயாரிப்பாளர் பிரதீப் ராஜ் போன்ற உறுதியான ஆதரவு அவருக்கு மிகப்பெரிய பலமாக இருந்துள்ளது.

நானும் சினிமாவில் பூஜ்ஜியத்திலிருந்து என் பயணத்தைத் தொடங்கியவன். ஒவ்வொரு படமும் அடுத்த வாய்ப்புக்கான அடித்தளமாக அமைகிறது. அதுபோல, இந்தப் படமும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும்.

டிரெய்லரைப் பார்த்தபோது, ஒளிப்பதிவு, லைட்டிங், சவுண்ட் டிசைன், பின்னணி இசை உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் மிகவும் கவர்ந்தன. திரையில் மிகச் சிறந்த அனுபவத்தை இந்தப் படம் வழங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மலையாள சினிமா இன்று தரமான கதைகளால் உலகளவில் கவனம் பெற்று வருகிறது. அதே வரிசையில் ‘அரூபி’ திரைப்படமும் ஒரு முக்கியமான வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறேன். ஹீரோ விஷாக் ரவி, நடிகைகள் நேஹா சாவ்லா, சாக்ஷி படாலா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ‘அரூபி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்.”

நடிகர் விண்செண்ட் அசோகன் பேசியதாவது..,

‘அரூபி’ படக்குழுவினருக்கு, ஹீரோ, ஹீரோயின் மற்றும் அனைத்து நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

குறிப்பாக தயாரிப்பாளருக்கு என் பாராட்டுகள். புதிய திறமைகளையும், இளம் கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் மிகவும் உயர்ந்தது. இன்று இங்கே இருக்கும் ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் புதுமுகங்களாகத்தான் இருந்தார்கள். அப்போது யாரோ ஒருவர் வாய்ப்பு கொடுத்ததால்தான் இன்று நாங்கள் இந்த இடத்தில் இருக்கிறோம். எனக்கும் அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் இன்று அறியப்பட்ட நடிகராக இருந்திருக்க முடியாது.

தமிழ் மற்றும் மலையாள திரையுலகிற்கு பல ஆண்டுகளாக வலுவான உறவு இருந்து வருகிறது. அதனால் இந்தப் படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். ‘அரூபி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி.”

விநியோகஸ்தர் ராகவா ராம் பேசியதாவது..,

“‘அரூபி’ திரைப்படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். புதிய திறமைகளை ஒன்றிணைத்து, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் மிகச் சிறந்த முயற்சியை தயாரிப்பாளர் மேற்கொண்டுள்ளார்.

இயக்குநர் இந்தப் படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களது முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர்.

இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது. எனவே பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் ‘அரூபி’ திரைப்படத்திற்கு முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”

‘எக்கோ’ படத்தின் தயாரிப்பாளர் ஜெயராம் பேசியதாவது.,,

“அனைவருக்கும் வணக்கம். விஷாக் ரவி என்னுடைய நீண்ட நாள் நண்பர். ‘அரூபி’ படத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்தே இந்தப் படம் பற்றிய அப்டேட்களை அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டே இருந்தார்.

இந்தப் படத்திற்காக தயாரிப்பாளரும், இயக்குநரும், ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகுந்த உழைப்பை செலுத்தியுள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் நிச்சயமாக நல்ல பலனைத் தரும் என்று நான் நம்புகிறேன்.

‘அரூபி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.”

இப்படத்தில் விஷாக் ரவி, நேஹா சாவ்லா, சாக்ஷி படாலா, ஜாய் மேத்யூ, சிந்து வர்மா, கண்ணன் சாகர், விஜுபால் மற்றும் கிரண் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை அபிலாஷ் வாரியர் இயக்கியுள்ளார். கதை, திரைக்கதை மற்றும் வசனங்களையும் அவரே எழுதியுள்ளார். பிரதீப் ராஜ் தயாரித்துள்ள இப்படத்தை புனர்த்தம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வினீத் வி.டி. படத்தொகுப்பை மேற்கொண்டுள்ள நிலையில், மகேஷ் ஸ்ரீதர் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். பாடல்களை ஹரி நாராயணன் எழுதியுள்ளார்.

மர்மம் மற்றும் த்ரில்லர் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் படம் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஹொம்பாலே பிலிம்ஸ் ( Hombale Films) – ‘The one’ சூர்யா – இயக்குநர் த.செ.ஞானவேல் வலிமையான கூட்டணியில் S-48 திரைப்படம் உருவாகிறது

0

மக்களின் பேராதரவும், ’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில், எல்லா தரப்பு சினிமா ரசிகர்களும் ரசிக்கும் விதமாக அழுத்தமான கதைகளை திரையில் படைக்கும் இயக்குநர் த .செ. ஞானவேல் இயக்கத்தில், இந்திய சினிமா ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கிவரும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், S-48 திரைப்படம் உருவாகிறது.

ஸ்டாராவும், சிறந்த நடிகராகவும் விளங்கும் சூர்யாவுடன் இணைந்து இந்திய அளவில் தாக்கத்தை உருவாக்கிய ‘ஜெய்பீம்’ படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் த.செ. ஞானவேல். எல்லா தரப்பு சினிமா ரசிகர்களின்  கவனத்தையும் பெற்று ஆச்சர்யப்பட வைத்த இவர்கள் மீண்டும் இணையும் திரைப்படத்தை, கே.ஜி.எஃப், காந்தாரா, சலார் போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படங்களைத் தருவதில் புதிய சாதனைகளைப் படைத்து வரும், இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் செய்தி, இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

வெற்றித்திரைப்படங்களின் முகவரியாக விளங்கும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் இத்திரைப்படம் பற்றி கூறும்போது, ’’தமிழ்நாடு, தென்னிந்தியா கடந்து இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர நடிகராக விளங்கும் சூர்யாவை, முப்பது ஆண்டுகளுக்கு மேல் மக்கள் கொண்டாடி வருகின்றனர். வணிக வெற்றியையும், விமர்களின் பாராட்டையும் ஒருசேர பெறுவதில் தனித்து விளங்கும் சூர்யா அவர்களுடன் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறது.

இந்தியா கடந்து உலக அளவில் கவனம் ஈர்த்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் அவர்கள், அழுத்தமான கதைகளத்தில் நட்சத்திர நடிகர்களை வெற்றிகரமாக கையாண்டு வெற்றிகளைத் தரக்கூடியவர். மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை கடந்து செல்லும் சிறந்த வெற்றி திரைப்படங்களை உருவாக்குவதில் ஹொம்பாலே பிலிம்ஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்திய அளவில் பெரும் வெற்றியையும், கவனத்தையும் பெறப்போகும் திரைப்படத்தை தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். The one சூர்யா அவர்களையும், இயக்குநர் த.செ. ஞானவேல் அவர்களையும் ஹொம்பாலே பிலிம்ஸ் குடும்பத்தில் இணைய மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

ஹொம்பாலே பிலிம்ஸ் மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு சிறந்தப்படங்களை தயாரிப்பதிலும், அதை மிகப்பெரிய அளவில் பிரம்மாண்ட வெற்றியடை செய்வதில் ஆர்வமும் கவனமும் செலுத்துகிறது. இந்த  தொலைநோக்கு சிந்தனையோடு உள்ள நடிகர்களையும், இயக்குனர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் இணைப்பதில் எப்போதும் தீவிரம் காட்டி வருகிறது. அதே தொலைநோக்கு சிந்தனை கொண்ட நட்சத்திர நடிகர் சூர்யா அவர்களோடும், இயக்குநர் த.செ. ஞானவேல் அவர்களோடும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிறார் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்.

S-48 திரைப்படத்திற்கு, இளைஞர்களின் இசை ரசனையை தற்போது ஆட்சி செய்கிற சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் மிகவும் கவனம் ஈர்த்த கயாது லோகர் கதாநாயகியாக நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குமரவேல் போன்ற சிறந்த கலைஞர்கள் நடிக்கிறார்கள்.

எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய, கே. கதிர் தயாரிப்பு வடிவமைப்பிலும், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பிலும், பா. கிருத்திகா திரைக்கதையிலும் பங்களிப்பு செய்கிறார்கள். விரைவில் இத்திரைப்படத்தின் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியாகியுள்ளன. ஜூலை மாதம் 22-ம் தேதி முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

சிங் கீதம் – விமர்சனம்

0

இயக்கம் – சிங்கீதம் சீனிவாச ராவ்
நடிகர்கள் – அயான், கெளரி, அஹல்யா பம்ரூ , ஷாலினி கொண்டேபூடி, நிவேதா பெத்துராஜ்
இசை – தேவி ஸ்ரீ பிரசாத்
தயாரிப்பு – நாக் அஸ்வின்

ஒரு குற்றவாளி தனது தண்டனை காலம் முடிந்த பின் விடுதலையாகிறான் , அவனுக்கு ஒரு இடத்தின் பத்திரம் கிடைக்கிறது அது அவனுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று எண்ணி அந்த இடம் அமைந்துள்ள ஊருக்கு செல்கிறான் அங்கு இரண்டு தங்க சுரங்கம் தோண்டும் பணி நடைபெறுகிறது, ஒரு சமயத்தில் அந்த சுரங்கத்தின் முதலாளிதான் தனது தந்தை என தெரிய வருகிறது. அவரிடமிருந்து கிடைத்த பணத்தை சுருட்டிக்கொண்டு சென்று விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறான், ஆனால் அங்கிருந்து போக முடியாத ஒரு சூழலில் மாட்டுக்கொள்கிறான், அது என்ன சூழல் அங்குள்ள மக்களின் வினோத வாழ்க்கைக்கு என்ன காரணம் என்பதை நகைச்சுவையாக விவரிப்பதே இந்த ‘சிங் கீதம்’ படத்தின் கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அயான், எதார்த்தமான கதாபாத்திரத்தில் ஒரு ஜாலியான இளைஞராக வலம் வருகிறார். எனினும் சென்டிமென்ட் காட்சிகளில் நம் கண்களை கலங்கடிக்கிறார், நாயகியாக நடித்திருக்கும் அஹல்யா பம்ரூ ஒரு கிராமத்து பூ போல நடித்துள்ளார், அவரது நடிப்பு நமக்கு நாம் பார்க்கும் அன்றாட பெண்ணின் குறும்புத்தனம் போல அனைவரையும் ஈர்க்கிறது,

அதே போல தங்க சுரங்கத்தின் உரிமையாளராக ஷாலினி கொண்டேபூடி நடித்துள்ளார் , அழகான முக பாவனை மூலம் ரசிகக்களை கவர்கிறார்.

இந்த படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்களாக நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன், சிவ நாராயணா, பெனர்ஜி மற்றும் வாம்சி தங்களது கதாபாத்திரதை கச்சிதமாக கொடுத்துள்ளனர்,

இந்த படத்தில் கூடுதல் பொறுப்பு இசையமைப்பாளருக்கு தான், படத்தில் பல பாடல்கள் இருந்தால் சற்று தொய்வு அடையும் இந்த காலத்தில் மக்கள் பேசுவதை பாடலாக்கி அதனை ரசிக்கும் படியாகவும் செய்துள்ளார், கண்டிப்பாக இசையமைப்பாளர்கள் தேவி ஸ்ரீ பிரசாத், பெரிதும் பேசப்படுவார், அதே போல் ஒளிப்பதிவாளர் அங்கூர்.சி உண்மை எது, செயற்கை எது என்று கண்டறிய முடியாதபடி காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

பேசும் படம்’ மூலம் சினிமா உலகையே கவர்ந்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இப்படி ஒரு வித்தியாச படைப்பை கொடுத்து மீண்டும் நம்மை பிரம்மிக்க செய்துள்ளார்,
புதிய மற்றும் வித்தியாசமான முயற்சி என்றாலும், அதை சரியான முறையில் திரையில் கொண்டு வந்துள்ளார், இத்தனை வருடங்கள் கடந்தும் அதே உழைப்பை கொடுத்துள்ளது ஆச்சர்யம் தான் ,

மொத்தத்தில், ‘சிங் கீதம்’ கண்டிப்பாக அனைவரையும் வியக்க வைக்கும்.

அந்தரன் – விமர்சனம்

0

இயக்கம் – சந்தோஷ் ராவணன்
நடிகர்கள் – பிரஜின், இவானா வருண் , எம்.கே.சாம்பசிவம், செந்தி குமாரி
இசை – ஹரி.எஸ்.ஆர்
தயாரிப்பு – எம் கே சாம்பாசிவம்

ஒரு பெண்ணை காதலிக்கும் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு பெற்றோர்களின் வற்புறுத்தலால் அந்த பெண்ணுக்கு ஒரு திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒரு வழியாக நிச்சயம் முடிந்த நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். இதையும் கஷ்டபட்டு கடந்து மற்றொரு திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிறது, இந்நிலையில் அந்த மாப்பிள்ளையும் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார். இந்த மரணம் அனைத்துக்கும் காரணம் அந்த குடும்பம் என்கிற ஒரு சந்தேகம் வருகிறது, இதனை ஒரு காவல் அதிகாரி விசாரிக்கிறார், அப்படி அவர் விசாரணை செய்யும்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகிறது , அது என்ன அதன் பின் என்ன ஆனது என்பதே இந்த அந்தரன் படத்தின் மீதிக்கதை.

இந்த படத்தில் ஒரு நேர்மையான மிடிக்கிடும் காவல்துறை அதிகாரியாக பிரஜின் நடித்துள்ளார், ஒரு பக்கம் கம்பீரமான காவல் அதிகாரியாக இருந்தாலும் காதல் காட்சிகளில் கலக்குகிறார், அவருக்கு நிகராக கதாநாயகியாக நடித்திருக்கும் இவானா வருண் தனது நடிப்பை கொடுத்துள்ளார், ரசிகர்களை தனது முக பாவனை கொண்டு கவர்கிறார்,

மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் எம்.கே.சாம்பசிவம், அம்மாவாக நடித்திருக்கும் செந்தி குமாரி, அனுபமா குமார், அதிரன், ரமேஷ்பாபு கீதா, பத்மன், பிரியங்கா செல்வி, ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை புரிந்து நடித்துள்ளனர்,

ஹரி.எஸ்.ஆர் இசையில் பாடல்களை விட பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்கிறது. பாடல்களும் கேட்கும் வண்ணம் இருந்தது, இந்த படத்திற்கு கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், அவரது பணியும் பாராட்டும் வண்ணம் இருந்தது,

இந்த படத்தை சந்தோஷ் ராவணன் எழுதி இயக்கியுள்ளார் , நாம் பல கதைகளில் பார்த்த அதே தொடர் கொலை சாயலை வைத்து ஒரு வித்தியாசமான முறையில் கதை கூறியுள்ளார், ஆரம்பத்தில் இருக்கும் சஸ்பென்சை படம் முடியும் வரை பிடித்து வைத்திருப்பது பாராட்டிற்கு உகந்தது, திரைக்கதையில் இன்னும் வேலை செய்திருந்தால் ராட்சசன் அளவிற்கு வந்திருக்கும் எனினும் ஒரு நல்ல திரில்லர் அனுபவமாக இருக்கிறது.

மொத்தத்தில், ‘அந்தரன்’ சஸ்பென்ஸ் கலந்த ஒரு புதிய முயற்சி.

ட்ரெய்லர் பார்க்கும் வரை எனக்குப் படத்தின் மீது நம்பிக்கை இல்லை: எழுத்தாளர் வேல ராமமூர்த்தி பேச்சு!

0

கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம் .எஸ் .ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன் ‘.

நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது.
‘ஐந்து கொலைகள் ஒரே விதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை’ என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை, பரபரப்பூட்டும் திருப்பங்களுடன் படமாகியுள்ளது .

அறிமுக நாயகன் தொலைக்காட்சி புகழ் சித்து, தர்ஷிகா , ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன்.

சித்து பிரதான நாயகனாக நடித்துள்ள இப்படம்
‘எ சித்து இன்வெஸ்டிகேஷன்’என்கிற டேக் லைனுடன் ஜூலை 17 இல் தமிழ், ஆங்கிலம் ,தெலுங்கு ,ஹிந்திமொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது.

விழாவில் ட்ரெய்லர், பாடல்கள் திரையிடப்பட்டன.

விழாவின் தொடக்கத்தில் ஷரண், கோபால், மனோஜ் என மூன்று தயாரிப்பாளர்கள் பேசினார்கள்.

தயாரிப்பாளர் மனோஜ் பேசும்போது,

“இப்போது வரும் சில படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ஓடுவதில்லை. சில படங்கள் ஓடிடியில் ஓடுகின்றன. எல்லா நல்ல படங்களும் ஓடுவதில்லை. இது ஒரு ஆபத்தான சூழ்நிலை இல்லையா? ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி பாதிக்கப்படக்கூடாது என்று சொல்வது போல் ஒரு நல்ல படம் ஓடாமல் இருக்கக் கூடாது .நல்ல படங்களை வரவேற்பதற்கு ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் கொண்டு போய் சேர்க்க வேண்டும் .நிறைய தரமற்ற படங்கள் வருகின்றன .ஆனால் ‘தி டார்க் ஹெவன்’ நிச்சயம் வெற்றி பெறக்கூடிய நம்பிக்கை கொண்ட படமாக இருக்கிறது. இன்று பல தயாரிப்பாளர்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
உப்புமா படங்களால்,
தரமற்ற படங்களால் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல, பலருக்கும் பாதிப்பு.திறமையான இயக்குநர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைக்காமல் இருக்கிறது.திரை உலகிற்குத் தயாரிப்பாளர் மிக முக்கியம். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய கிரைம் திரில்லராக இருக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது ”என்றார்.

இன்னொரு தயாரிப்பாளர் ஷரண் பேசும்போது,

” நான் இந்தப் படத்தில் நடிப்பதற்காகத் தான் வந்தேன் .ஆனால் பாலாஜி இந்தப் படத்திற்காக உழைப்பதையும் போராடுவதையும் நேரில் பார்த்தேன். அவர் சிரமத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று தோன்றியது .எனவே தயாரிப்பில் இணைந்து கொண்டேன்” என்றார்.

தயாரிப்பாளர் கோபால் பேசும் போது,

“இந்தப் படம் தமிழ் சினிமாவில் சிறப்பான படம்.பாலாஜி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநர்.அவர் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு எடுத்த படம் இது. சினிமாவில் அவருக்கான நல்ல இடம் கிடைக்கும்.இந்தப் படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் யாரும் சோடை போகமாட்டார்கள் .இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

நடிகர் அருள் டி சங்கர் பேசும்போது,

“இந்தப் படத்தில் நிறைய வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடந்தன. இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் பாலாஜியுடன் எனக்கு இது நாலாவது படம் .அவர் இயக்கத்தில் இது இரண்டாவது படம் .சில காட்சிகளை ரீஷூட் செய்தார். அவர் நினைத்தது சரியாக வர வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்பார் .இந்தப் படத்தின் போது அவருக்கு தாங்க முடியாத மன அழுத்தம் இருந்தது . அந்த அழுத்தத்தில் அவர் காரை அடித்து அவரது காருக்கு சேதாரம் ஏற்பட்டது. ஆனால் அதை வெளியே மற்றவரிடம் காட்டாமல் படப்பிடிப்பில் பரபரப்பாக இருப்பார்.கிரிக்கெட் டீம் போல் அவரைச் சுற்றி எப்போதும் 11 பேர் கொண்ட ஒரு கூட்டம் இருக்கும்.
இந்தப் படத்தில் என்னுடன் நடித்தவர்கள் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

கேமராமேன் சிரிக்கவே மாட்டார்
காரியத்தில் கண்ணாக இருப்பார் .
இந்தப் படப்பிடிப்பில் எனக்கு உதவியாளராக ஒரு வயதானவரை அமர்த்தியிருந்தார்கள். அவர் செய்யும் காரியங்கள் வேடிக்கையாக இருக்கும்.அவை எல்லாமே சிரிப்பை வரவழைக்கும்” என்றார்.

நடிகர் ஜெயக்குமார் பேசும்போது

“நடந்து போக கூட முடியாத இடத்துக்கெல்லாம் எங்களை அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்தினார். அதுதான் அவர்களின் தனித்தன்மையாக இருந்தது.

ஒவ்வொரு காட்சியையும் மூன்று முறை எடுப்பார். சரியானது வரும் வரை விட மாட்டார். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்தார்.படப்பிடிப்பின் போது எப்போதும் அவருக்கு அவரது மனைவி பெரும் பக்கபலமாக இருந்தார் ‘என்றார்.

நடிகர் ,எழுத்தாளர் வேல ராமமூர்த்தி பேசும் போது,

” இன்று இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்கள் காலமானது ஒரு பெரிய இழப்பு. கடந்த 11 ஆம் தேதி பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின் போது என் அருகில் இருந்தார்.
இப்போது இல்லை.
அந்தத் துயரத்தோடு தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி ஒரு நாள் திருநெல்வேலியில் இருந்து பேசுகிறேன் என்று பேசினார் .வழக்கமாக கதை சொல்லும் இயக்குநர்கள் சொல்வது போல்தான் இருந்தது. போனில் மிகவும் நம்பிக்கையுடன் தான் பேசினார்.நான் சற்று சந்தேகப்பட்டேன். நான் இந்தப் படம் எடுக்க முடியாமல் தோற்று விட்டால் நான் அமெரிக்கா சென்று விடுவேன் என்றார்.அவரது நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்து நான் நடிக்கச் சம்மதித்தேன்.

படப்பிடிப்பில் எல்லாரும் குடும்பம் போல் பழகினார்கள். பாலாஜியின் உழைப்புக்காகவே இந்தப் படம் ஓட வேண்டும். பெரிய பெரிய படங்களுக்குக் கூட இவ்வளவு லொகேஷன்களில் எடுத்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்குத் தேடித் தேடி எடுத்தார்கள். நான் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ட்ரெய்லர் பார்க்கிற வரை எனக்கு இந்தப் படத்தின் மீது நம்பிக்கை இல்லை .இப்போது சொல்கிறேன் .இந்தப் படம் தோற்காது.அவர் அமெரிக்கா எல்லாம் செல்ல வேண்டியதில்லை” என்றார்.

இயக்குநர் மித்ரன் பேசும் போது ,

“இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இவர்களின் கடின உழைப்பு ட்ரெய்லரில் தெரிகிறது. சினிமாவுக்கு எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு சினிமா திருப்பிக் கொடுக்கும்.இது மாதிரி திரைப்படங்களுக்கு ஊடகங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.

நடிகர் புகழ் பேசும்போது,

” இந்தப் படத்தின் நாயகன் சித்து எனக்கு ஒரு மாதமாகப் பழக்கம்.எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார் .என்னை டார்லிங் என்று தான் கூப்பிடுவார். இந்தப் படத்தின் கான்செப்ட் பார்க்கும் போது அழகாக இருக்கிறது.இந்த படத்தில் பங்கெடுத்துள்ளவர்கள் பலரும் எனது நண்பர்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள் “என்றார்.

இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பேசும்போது,

” நான் இதற்கு முன்பு இசை அமைத்த உடன்பால் ,ஜாக்கி என்ற இரண்டு படங்களுக்குப் பிறகு இசையமைக்கும் மூன்றாவது படம் இந்தப் படம் இது.
வேல ராமமூர்த்தி சார் போன்று நான் வியந்து பார்த்தவர்கள் என் படத்தில் இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல பெருமையாகவும் இருக்கிறது. இந்தப் படத்தில் நான்கு பாடல்கள். நான்குமே சூழலுடன் தான் இருக்கிறது. என்னைச் சந்திக்க இயக்குநர் பாலாஜி வரும்போது எப்போதும் பத்து பேருடன் தான் வருவார். அந்த அளவிற்கு அந்த படக் குழு ஒற்றுமையோடு இணைந்திருந்தார்கள்” என்றார்.

நடிகர் ரித்விகா பேசும்போது,

” இவ்வளவு தூரம் இந்தப் படம் வருமா என்று இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு 70% படத்தை எடுத்துவிட்டு வேண்டாம் என்று தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் அதே படத்தை அதே லொகேஷன்களில் எடுத்து ரிலீஸ் வரை கொண்டு வந்து இருக்கிறதே ஒரு சாதனைதான் .ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு இவர்களது விடாமுயற்சி தான் காரணம். படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் தினசரி ஏதாவது பிரச்சினை வரும்.புரிந்து கொள்வதில் சிக்கல் வரும்.மழை பெய்ய வேண்டும் என்று பார்த்தால் அன்று மழை வராது.மழை வேண்டாம் என்றால் மழை வரும்.

எப்படி இருந்தாலும் இயக்குநர் பாலாஜி ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருந்தார்.
அவர் இந்த வேலைகளை எல்லாம் பார்ப்பதற்கு மேனேஜர் வைத்துக் கொள்ள வேண்டும்.ஒருவரே எல்லா வேலையும் பார்த்துக் கொண்டு சிரமப்படக்கூடாது.

கதைகளை மட்டுமே நம்பி இன்று ஹபீபி ,நூறு சாமி போன்ற படங்கள் ஓடுகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் ஓடும் ஆதரவு கொடுங்கள்” என்றார்.

நடிகர் மைம் கோபி பேசும்போது,

” தம்பி சித்து இந்த அளவிற்கு இங்கே வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் நடித்திருப்பவர்கள் பலரும் எனக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், தம்பிகள்,தங்கைகள் .சினிமா ஒரு அழகான துறை. சினிமாவில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.நம் நாட்டில் 140 கோடி பேர் இருக்கிறார்கள். எத்தனை பேரை கேமரா பதிவு செய்கிறது?சினிமாவில் நடிக்கும் இந்த குறைந்த அளவு மக்களைத்தான் பதிவு செய்கிறது .அப்படிப்பட்ட பெருமைக்குரியவர்கள் சினிமாவில் இருப்பவர்கள்.

சினிமா எல்லாரையும் மாற்றி விடும். ஏற்கும் பாத்திரத்தில் நல்லவனாக மட்டுமல்ல கெட்டவனாகவும் மாறி மாறி நடிக்கிறோம்.
எல்லா திறமைசாலிகளுக்கும் இடம் தருவது சினிமா தான். நீங்கள் எப்போதும் சந்தோஷத்தை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். துக்கத்தைத் தள்ளி வையுங்கள். மகிழ்ச்சியாக வாழலாம் “என்றார்.

இயக்குநர் பாலாஜி பேசும்போது,

” இயக்குநர் பாக்யராஜ் சார் காலமானது வருத்தமாக இருக்கிறது. சினிமாவுக்கு வந்து நான் முதலில் அவரிடம் தான் கதை சொன்னேன்.

இந்தப் படத்தில் தயாரிப்பாளர் ஷரண் இஷ்டப்பட்டு வந்தார் .அவர் இல்லாவிட்டால் இந்தப் படம் இந்த அளவிற்கு வந்திருக்காது. அதேபோல் கோபால் அவர்கள், என் தம்பி மனோஜ் ஆகியோர் பெரிதும் பக்கபலமாக நின்றார்கள்.அது போல இந்தப் படத்திற்கு நிறைய பேர் எனக்குத் துணையாக நின்று இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் நன்றி. சித்து ஒரு சிறப்பான இடத்திற்கு இந்தப் படத்தின் மூலம் செல்வார். நான் திருநெல்வேலிக்காரன்,சென்னையைச் சேர்ந்தவன் அல்ல.என் படத்தில்
தமிழ் பேசும் நாயகியாக தர்ஷிகா வந்ததில் பெரிய மகிழ்ச்சி . அடுத்து ரித்விகா போன்று ஒவ்வொருவராக இந்தப் படத்திற்குள் வந்த பிறகு படம் வேறு மாதிரியாக மாறிவிட்டது .நான் சீன் பேப்பரைக் கொடுத்து விட்டால் அவர்கள் தானாக எல்லாம் செய்து விடுவார்கள் என்கிற அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.எல்லாரையும் நான் மிகவும் சிரமப்படுத்தி இருக்கிறேன். இந்தப் படத்தின் மீதும் என் மீதும் சிலருக்குச் சந்தேகம் இருந்தது .சந்தேகப்பட்டார்கள் .ஆனாலும் நான் இந்தப் படத்தை முடித்து விட்டேன்.மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறேன். “
என்றார்.

படத்தின் கதாநாயகன் சித்து பேசும்போது,

” எனக்குக் குருநாதர் போல இருப்பவர் மைம் கோபி அண்ணன். அவர் ஒரு நடிப்பு பயிற்சிப்பள்ளி வைத்திருக்கிறார் .அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எனக்குப் பலரின் அறிமுகங்கள் கிடைத்தது அவரால்தான்.

இன்றைய காலகட்டத்தில் நாமே நம்மைப் பற்றி சொல்ல வேண்டும். மற்றவர்களிடம் நம்மை நாமே முன் வைக்க வேண்டும் .அப்படிப்பட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். ‘திருமணம்’ தொடரில் நடித்ததற்குப் பிறகு வந்துள்ள ஒரு பெரிய வாய்ப்பாக இந்தப் படத்தைப் பார்க்கிறேன். இந்த படத்தின் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.
இந்தப் படத்தில் நடித்தவர்கள் மூலமும் நிறைய கற்றுக் கொண்டேன். உதாரணத்திற்கு இரவு மூன்று நான்கு மணிக்கு படப்பிடிப்பில் இருந்தால் கூட ஜெயக்குமார் சார் வந்து எங்களிடம் பேசி சிரிக்க வைப்பார் .எப்படி அவரால் முடிகிறது என்று நினைப்பேன்.இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று கற்றுக் கொண்டேன்.இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கம் வந்து பார்த்து ஆதரிக்க வேண்டுகிறேன் “என்றார்.

‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

கான் சிட்டி – விமர்சனம்

0

இயக்கம் – ஹரிஸ் துரைராஜ்
நடிகர்கள் – அர்ஜுன் தாஸ், அன்ன பென் வடிவுக்கரசி, யோகி பாபு
இசை – ஷான் ரோல்டன்
தயாரிப்பு – ஹரிஸ் துரைராஜ்

எந்தவித தொடர்பும் இல்லாத நான்கு பேர் பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களது நிலையை மாற்றுவதற்காக கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மோசடி மூலம் பணம் சம்பாதிக்க தொடங்குகிறார்கள். அந்த பணத்தை வைத்து குறுகிய காலத்தில் அதிக வருமானம் ஈட்டும் முயற்சியில் ஈடுபடும் போது அவர்கள் அனைவரும் ஏமாற்றப்படுகிறார்கள். தங்களது பணத்துடன், மக்களின் பணத்தையும் இழந்து விட்ட அவர்களை போலீஸ் கைது செய்ய, அங்கிருந்து தப்பித்துச் செல்பவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு குடும்பமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள். இதற்கிடையே அவர்கள் இருக்கும் இடத்தை கண்டிபிடிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், அவர்களை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார். அவரது மிரட்டலுக்கு அடிபணிபவர்கள், மீண்டும் சென்னைக்கு திரும்பி பெரும் மோசடி மூலம் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார்கள். அவர்களின் திட்டம் வெற்றி பெற்றதா ?, இல்லை அந்த போலீஸ் காரரின் மூலம் மீண்டும் ஜெயிலுக்கு சென்றாரா என்பது தான் மீதிக்கதை.

இதில் நாயகனாக அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார், தனது இறுக்கமான கதாபாத்திர கட்டமைப்பில் இருந்து விலகி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யும் விதத்திலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களம் என்பதால் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, தன்னால் கமர்ஷியல் நாயகனாகவும் பயணிக்க முடியும் என்பதை படம் முழுவதும் நிரூபித்திருக்கிறார். நிச்சயம் அவரது மதிப்பு முற்றிலுமாக மாறியுள்ளது என்பதை பார்க்க முடிகிறது.

மலையாளத்தில் முக்கிய நாயகியாக இருக்கும் அன்னா பென் மோசடியால் ஏமாற்றப்பட்டு, அதே மோசடி மூலம் தனது நிலையை மாற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அளவான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார் என்பது உண்மை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றாலும், யோகி பாபு தனது பாணியை கைவிட்டுவிட்டு புதிதாக சில விஷயம் முயற்சித்திருக்கிறார். தனது வழக்கமான உடல்கேலி வசனங்களை முற்றிலும் தவிர்த்திருப்பவர், தனது சோகமான முகம் மற்றும் நடிப்பு மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். யோகி பாபுவின் அம்மாவாக நடித்திருக்கும் வடிவுக்கரசி, பிளாக் காமெடி காட்சிகளுக்கு ஏற்ப கச்சிதமான எக்ஸ்பிரஷனோடு சிரிக்க வைக்கிறார். குறிப்பாக யோகி பாபு உடனான அவரது காட்சிகளும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் அவருக்கு புதிய அடையாளத்தை கொடுப்பதோடு, பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறது.இதன் மூலமாக அவருக்கு மீண்டும் பல வாய்ப்புகள் வரும் .

அகிலன், நந்தகோபால், விடிவி கணேஷ், தீப ராமானுஜம், ராதாரவி, அருள்தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன், ராகு எசக்கி, சதானந்த் ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

வழக்கம் போல ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் இணைந்தும் மீண்டும் மீண்டும் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்யும் விதத்தில் பயணித்திருக்கிறது. அதே போல ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாத் காட்சிகளை தரமாக படமாக்கியுள்ளார் .

இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஹரிஸ் துரைராஜ், புத்திசாலித்தனம் அல்லது தந்திரமான திட்டங்கள் மூலம் நடத்தப்படும் மோசடிகளை, நகைச்சுவை பின்னணியோடு சொல்ல முயற்சித்திருக்கிறார். முதன்மை கதாபாத்திரங்களின் முகத்தில் சிரிப்பை வெளிக்காட்டாமல் காட்சிகளை கையாண்டிருப்பது புதிதாக இருக்கிறது. இந்த முயற்சி வெற்றியும் கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில், ‘கான் சிட்டி’ உண்மையை காமெடி கலந்து சொல்லும் ஒரு நகைச்சுவை படம்.