Home Blog Page 7

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்மன்”

0

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் ‘தர்மன்’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது. படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவருமே கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேல் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழ்பவர்கள். இந்த இருபெரும் நாயகர்களுக்கு இடையேயான நட்பு அரிதானது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பிரியமும் மரியாதையும் அபூர்வமானது. கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படம் இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு நிகழ்வு.

தரமான திரைப்படங்களை ரசிகர்களுக்குத் தரவேண்டும் என்பதில் 46 ஆண்டுகளாக எவ்வித சமரசமும் இன்றி செயல்பட்டு வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைவது இதுவே முதல்முறை.

ஓ மை கடவுளே, டிராகன் போன்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய, இன்றைய ஜென் Z தலைமுறையால் இளமை இயக்குனர் என்று கொண்டாடப்படும் அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்குகிறார். தனது துள்ளல் இசையால் உலகளவில் ரசிகர்களைப் பெற்றிருக்கும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சிம்ரன்; தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ராஷி கன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அதிரடி சண்டைக் காட்சிகளுக்காக தேசிய விருதுகளை வென்ற அன்பரிவ் மாஸ்டர்ஸ், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி, தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் ராஜ்குமார், எடிட்டர் பிரதீப் ஈ. ராகவ், கலை இயக்குனர் அண்ணாதுரை என இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தில் பங்காற்றுகிறார்கள், மேலும் இணை தயாரிப்பாளராக டிஸ்னி இணைந்து தயாரிக்கிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மைல்கல் திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் தொடக்க விழா மற்றும் முதற்கட்ட படப்பிடிப்பு, படக்குழுவினர், தயாரிப்பு குழுவினர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் இன்று சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது.

இந்தத் தொடக்க விழாவில் திரு. கலைப்புலி எஸ். தாணு, திரு. அன்புச்செழியன், திரு. ஆர்.கே. செல்வமணி, திரு. லிங்குசாமி, திரு. கண்ணன் (CTO, சன் நெட்வொர்க்), திரு. செண்பகமூர்த்தி, திரு. தமிழ் குமரன், திரு. கிருஷ்ணன் குட்டி (JIO Star), திரு. பாலசந்திரன் (JIO Star), திரு. பிரதீப் மில்ராய் பீட்டர் (JIO Star), திரு. ஆனந்த் (Saregama) மற்றும் திரு. சரவணன் வினோத் உள்ளிட்ட திரைப்படத் துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்களும் துறை சார்ந்த தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்து பெரும் மகிழ்வான நிகழ்வாக அமைந்தது.

Boonie Bears: The Hidden Protector – விமர்சனம்

0

குழந்தைகள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ள அனிமேஷன் திரைப்படம் Boonie Bears: The Hidden Protector. சாகசம், நகைச்சுவை, உணர்வு மற்றும் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளை இணைத்து, ரசிகர்களுக்கு ஒரு வண்ணமயமான திரை அனுபவத்தை இந்த படம் வழங்குகிறது.

கதையின் மையத்தில் இருக்கும் பிரையர் மற்றும் பிராம்பிள், தங்களது வழக்கமான நகைச்சுவையான வாழ்க்கையிலிருந்து திடீரென ஒரு பெரிய சாகசப் பயணத்திற்குள் இழுக்கப்படுகிறார்கள். மர்மமான சக்திகளைக் கொண்ட சார்லட் என்ற சிறுமியை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அவளைத் தேடி வரும் ஆபத்தான சக்திகளிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில், பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன.

படத்தின் முதல் பாதி வேகமாக நகர்கிறது. கதாபாத்திரங்களின் அறிமுகம், அவர்களுக்கிடையேயான உறவுகள் மற்றும் சாகசப் பயணத்தின் தொடக்கம் ஆகியவை சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளன. இரண்டாம் பாதியில் ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள் அதிகரித்து, கதைக்கு கூடுதல் வலிமையை வழங்குகின்றன.

பிரையர் மற்றும் பிராம்பிளின் நகைச்சுவை கலந்த உரையாடல்கள் படத்தின் முக்கிய பலமாக இருக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் ரசிக்கும் வகையில் பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே சமயம், நட்பு, தியாகம் மற்றும் பிறரை பாதுகாப்பதன் முக்கியத்துவம் போன்ற கருத்துகளும் இயல்பாக சொல்லப்பட்டுள்ளன.

அனிமேஷன் தரம் படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம். காடு, மலைப்பகுதிகள், தொழில்நுட்ப உலகம் என ஒவ்வொரு காட்சியும் நிறங்களால் நிரம்பிய கண்கவர் அனுபவத்தை தருகிறது. கதாபாத்திரங்களின் முகபாவனைகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளின் வடிவமைப்பு சர்வதேச தரத்தில் அமைந்துள்ளது.

பின்னணி இசை மற்றும் ஒலிப்பதிவு காட்சிகளின் தாக்கத்தை அதிகரிக்கின்றன. குறிப்பாக பரபரப்பான தருணங்களில் இசை கதையின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறது. தொழில்நுட்ப ரீதியாகவும் படம் தரமான முயற்சியாக தெரிகிறது.

படத்தில் சில காட்சிகள் வழக்கமான அனிமேஷன் திரைப்படங்களின் பாணியை நினைவுபடுத்தினாலும், அதன் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் அந்த குறையை மறக்கச் செய்கின்றன.

மொத்தத்தில்

Boonie Bears: The Hidden Protector என்பது குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் அனிமேஷன் திரைப்பட ரசிகர்கள் தவறாமல் பார்க்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு திரைப்படம். சிரிப்பு, சாகசம், உணர்வு மற்றும் கண்கவர் காட்சிகள் அனைத்தையும் சமமாக வழங்கும் இந்த படம், Boonie Bears தொடரில் மற்றொரு வெற்றிகரமான அத்தியாயமாக திகழ்கிறது.

ரேட்டிங்: 3.75 / 5 ⭐⭐⭐⭐☆

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

0

ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் விஷால் நடிப்பில் உருவாகும் ‘மகுடம்’ திரைப்படமும் ஒன்று. காரணம், இப்படத்தை விஷால் இயக்கி நடிப்பது தான். இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் தனி பாடலான “லிங்கா…” வெளியான இரண்டு நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் புதிய இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் அறிமுகமாகி தங்களது இசையால் மக்களை கவர்ந்து வரும் நிலையில், இப்பாடலை பாடிய ராப் பாடகர் வினோத் என்கிற V7h “லிங்கா…” பாடல் மூலம் இளசுகளின் பேவரைட் பாடகராக உருவெடுத்துள்ளார்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த வார்த்தைகளை கொண்டு மாஸான ராப் பாடலாக உருவாகியுள்ள இப்பாடல், லிங்கா கதாபாத்திரத்தை விவரிக்கும் விதமாகவும், அந்த கதாபாத்திரத்தின் கெத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. வினோத் எழுதிய இப்பாடலை அவருடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் குமாரும் பாடியிருக்கிறார்.

இப்பாடல் இளைஞர்களிடம் வைரலான நிலையில், பாடல் குறித்தும், தனது இசைப் பயணம் குறித்தும் ராப் பாடகர் வினோத் கூறுகையில் , “நான் 12ம் வகுப்பு படிக்கும் போதே இசை பயின்று வருகிறேன். எனது பொழுதுபோக்கு என எல்லாமே இசை தான். இதுவரை இரண்டு இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறேன், 5 வீடியோ பாடல்களையும் வெளியிட்டிருக்கிறேன். ராப் பாடல் மட்டும் அல்ல அனைத்துவிதமான பாடல்களையும் பாடுவேன். என் முதல் சினிமா வாய்ப்பு ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படம் தான். அந்த படத்தில் ஒரு பாடல் பாடினேன். அதன் பிறகு எனது உணவக தொழிலை கவனிப்பதில் முழு கவனம் செலுத்த வேண்டி இருந்ததால், தொடர்ந்து சினிமாவில் பாட முடியாமல் போய் விட்டது.

பல வருடங்களுக்கு முன்பு நான் விஷால் அண்ணாவை சந்தித்தித்தேன், அப்போது அவர் ”தொடர்ந்து சினிமாவில் பாட வேண்டும், அதற்கான அனைத்து தகுதியும் உன்னிடம் இருக்கிறது, விட்டு விடாதே”, என்று கூறினார். இருந்தாலும் எனது தொழிலில் நான் அதிகம் கவனம் செலுத்தியதால் சினிமாவில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. இந்த சமயத்தில் தான் விஷால் அண்ணா என்னை ஒரு நாள் அழைத்து, லிங்கா பாடல் வாய்ப்பு கொடுத்தார். படத்தில் அவர் ஒரு டானாக உருவெடுப்பதை விவரிக்கும் அந்த பாடலின் ஐடியாவை என்னிடம் சொல்லி, உன்னால் முடியும் பண்ணு என்றார். அவர் கொடுத்த ஊக்கத்தினால் பாடல் சிறப்பாக வந்திருக்கிறது. பாடலை கேட்ட அவர், தொடர்ந்து சினிமாவில் பயணிக்க வேண்டும், என்று கூறினார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும் பாராட்டு தெரிவித்து, தொடர்ந்து பணியாற்றலாம், என்று கூறினார்.

சினிமாவை விட்டு நான் ஒதுங்கியிருந்தாலும், இசையை என்றுமே விடவில்லை. தொழிலில் நான் பிஸியாக இருந்தாலும், பல பாடல்களை எழுதி, டியூன் போட்டு உருவாக்கி வைத்திருக்கிறேன், அப்படி என்னிடம் சுமார் 40 பாடல்கள் இருக்கிறது. இந்த பாடல்களை கேட்டுவிட்டு தான் விஷால் அண்ணா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த பாடல்களை வெளியிடும் முயற்சிகளை விரைவில் மேற்கொள்ள இருக்கிறேன். அதேபோல், விஷால் அண்ணா நிறுவனத்திற்காக ஒரு இசை ஆல்பத்தையும் உருவாக்க இருக்கிறேன்.

லிங்கா பாடல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி என்னுடைய திரை இசைப் பயணம் வேகமாகவும், வெற்றிகரமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. இதற்கு காரணமான விஷால் அண்ணாவுக்கு நன்றி.” என்றார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.செளத்ரி வழங்கும் ‘லிங்கா’ படத்தை பி.சுரேஷ், ஆர்.பி.ஜீவன் செளத்ரி, ஜித்தன் ரமேஷ், ஜீவா ஆகியோர் தயாரிக்கின்றனர். ரவி அரசு கதை எழுத, திரைக்கதை எழுதி விஷால் இயக்குகிறார். பொன் பார்த்திபன் மற்றும் விஷால் வசனம் எழுதுகின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு, ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கின்றனர். என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்ய, ஜி.துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். திலீப் சுப்பராயண் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஏகாதசி, விவேக், உமாதேவி, கருணாகரன், V7H ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

‘யெல்லோ’ முதல் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வரை… தொடர்ந்து உயர்ந்து வரும் வைபவ் முருகேசனின் திரைப்பயணம்

0

மூலம் மீண்டும் வருகிறார் வைபவ் முருகேசன்
‘யெல்லோ’ (Yellow) படத்தின் மூலம் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்ற நடிகர் வைபவ் முருகேசன், தனது அடுத்த எதிர்பார்ப்புக்குரிய படைப்பான ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ (Mammatiyaan Stars) மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளார். இயக்குநர் சவிர் சுதாகர் இயக்கியுள்ள இந்த ZEE5 ஒரிஜினல் வெப் தொடர், ஜூன் 26 முதல் ZEE5 தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.

கிரிக்கெட் மீது தீவிர ஆர்வம் கொண்ட ஒரு கிராமத்து இளைஞர்கள் குழு, சென்னை சென்று பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற கனவுடன் பயணத்தைத் தொடங்குகிறது. ஆனால், எதிர்பாராத விதமாக அவர்கள் ஒரு மோசடியில் சிக்கிக் கொள்கிறார்கள். அதன்பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அதிலிருந்து தப்பிக்க அவர்கள் கையாளும் புத்திசாலித்தனமான யுக்திகள் மற்றும் புதிய வழிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஆகியவற்றை நகைச்சுவை, உணர்வு மற்றும் ஊக்கமூட்டும் தருணங்களுடன் சொல்லும் தொடர் தான்
சபீர் சுதாகரின் இயக்கத்தில் உருவாகிய ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’.

இந்த தொடரில் வைபவ் முருகேசனுடன் வெங்கட் பாலமுரளி, ஜகா, லாவண்யா, ஷரத் ரவி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நகைச்சுவை, நட்பு, உணர்வு மற்றும் லட்சியத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த தொடர், அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’, வைபவ் முருகேசனின் தொடர்ந்து வளர்ந்து வரும் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைகிறது. ஒரே இரவில் புகழின் உச்சியை எட்டிய நடிகர் அல்ல அவர். மாறாக, ஒவ்வொரு வாய்ப்பையும் முழு அர்ப்பணிப்புடன் பயன்படுத்தி, கதாபாத்திரம் தோறும் தனது திறமையை நிரூபித்து, படிப்படியாக தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் கலைஞர்.

வைபவின் நடிப்புப் பயணம் மிகவும் இளம் வயதிலேயே தொடங்கியது. 10 வயது முதலே தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்களில் தொடர்ந்து நடித்த அவர், மேடை அனுபவத்தின் மூலம் நடிப்பில் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொண்டார். சிறுவயதில் மைக்கேல் ஜாக்சன் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் நடனங்கள் அவரை ஈர்த்தன. அந்த ஈர்ப்பு பின்னர் நடிப்பின் மீதும், சினிமா கலை மீதும் ஆழமான ஆர்வமாக மாறியது. தனது திறமையை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், தொழில்முறை நடிப்பு பயிற்சிகள் மற்றும் பல்வேறு பட்டறைகளில் பங்கேற்று, வாய்ப்புகள் கிடைப்பதற்கு முன்பே பல ஆண்டுகள் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டார்.

தமிழ் திரைப்படங்களில் அவரது பயணம் ‘பேட்ட’, ‘கோமாளி’, ‘தாராள பிரபு’, ‘நெற்றிக்கண்’ போன்ற படங்களில் சிறிய ஆனால் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்கள் மூலம் தொடங்கியது. குறுகிய திரைநேரம் இருந்தபோதிலும், தனது இயல்பான நடிப்பு மற்றும் திரைநிலையால் கவனம் பெற்றார். பின்னர் ‘கதிர்’ திரைப்படத்தில் நடித்த துணைக் கதாபாத்திரம், குறைந்த காட்சிகளிலேயே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் திறமை அவருக்கு இருப்பதை மீண்டும் நிரூபித்தது.

அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது பாராட்டுகளைப் பெற்ற ‘வதந்தி’ வெப் தொடர். சுமார் 500 பேரை கொண்ட திறந்த ஆடிஷனில் தேர்வாகி, ‘ஜோன்ஸ் துரை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அதன்பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் மற்றும் இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ஹே லீலா’ வெப் தொடரிலும் நடித்ததன் மூலம் தனது ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்தினார்.

சமீபத்தில் இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், பூர்ணிமா ரவி இணைந்து நடித்த ‘யெல்லோ’ திரைப்படத்தில் நாயகனாக நடித்தது அவரது கலைப் பயணத்தில் மற்றொரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இயல்பான, உணர்வுப்பூர்வமான மற்றும் நம்பகத்தன்மை மிக்க அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், எந்த கதாபாத்திரத்திற்கும் உண்மைத்தன்மையை வழங்கும் நடிகராக அவரது அடையாளத்தை மேலும் வலுப்படுத்தியது.

திரைக்கு வெளியேயும் வைபவின் கலைப் பயணம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. பயிற்சி பெற்ற நடனக் கலைஞர், இசைக்கலைஞர் மற்றும் பாடகரான அவர், குதிரைச் சவாரி மற்றும் சிலம்பம் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இசை மற்றும் கதை சொல்லல் ஆகியவை திரைப்படத்தின் முக்கிய அங்கங்கள் என்ற ஆழமான புரிதலுடன் சினிமாவை அணுகி வருகிறார்.

அவரது உழைப்புக்கு அங்கீகாரமாக, ‘யெல்லோ’ திரைப்படத்தில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பிற்காக 2025 ஆம் ஆண்டின் Anna அண்ணா யுனிவர்சிட்டி டெக்கோ ஃபஸ்ட்-டி விருதில் சிறந்த அறிமுக நாயகன் (Best Debut Hero) என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இது, அவரது திறமையை திரையுலகமும் ரசிகர்களும் தொடர்ந்து அங்கீகரித்து வருவதற்கான முக்கிய சான்றாக அமைந்துள்ளது.

ஜூன் 26 முதல் ZEE5-ல் வெளியாகவுள்ள ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ மூலம், தமிழ் பொழுதுபோக்கு உலகில் தனக்கென ஒரு உறுதியான இடத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருகிறார் வைபவ் முருகேசன். நேர்மையான அணுகுமுறை, விடாமுயற்சி மற்றும் இயல்பான திரைநிலையால், புதிய தலைமுறை திறமையான நடிகர்களில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவராக அவர் உருவெடுத்து வருகிறார்.

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெளியாக காத்திருக்கும் இந்த தருணத்தில், வைபவ் முருகேசனின் பயணம், பொறுமை, விடாமுயற்சி மற்றும் தனது கனவுகள் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவை இணைந்தால்தான் நீடித்த வெற்றியை அடைய முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

நல்ல நெகட்டிவ் ரோல் வந்தால் மீண்டும் செய்வேன்” – அர்ஜுன் தாஸ் பேட்டி

0

தமிழ் சினிமாவின் தனித்துவமான குரலாலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது தனது புதிய திரைப்படமான “கான் சிட்டி” மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார்.

ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் கலந்த படைப்பாக உருவாகியுள்ள கான் சிட்டி, அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அவர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, கான் சிட்டி திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும், தனது திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்ப காலப் போராட்டங்கள் முதல், ரசிகர்கள் அளித்த அன்பு, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய பயணம் மற்றும் எதிர்கால திட்டங்கள் வரை பல்வேறு கேள்விகளுக்கு அவர் மனம் திறந்து பதிலளித்தார். அந்த சந்திப்பின் முக்கிய அம்சங்கள் இங்கே…

“நான் நடித்த ஒவ்வொரு படமும் முடிந்த பிறகும் பத்திரிக்கையாளர்கள் பலர் தனிப்பட்ட முறையில் வந்து தங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். அந்த கருத்துக்கள் எனது அடுத்தடுத்த படத் தேர்வுகளிலும், நடிப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. என்ன மாதிரியான கதைகளில் நடிக்க வேண்டும், எந்த மாதிரியான நடிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை உங்கள் கருத்துகள் மூலமாகவே புரிந்துகொண்டேன்,” என்று அவர் கூறினார்.

மேலும், தனது பெற்றோர்களும் படம் வெளியான பிறகு ஊடகங்கள் என்ன கூறுகின்றன என்பதை ஆர்வமாகக் கேட்பார்கள் என்றும், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் வழங்கிய நேர்மறையான கருத்துகளை அவர்களிடம் பகிர்ந்து வந்ததாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தனது புதிய படமான கான் சிட்டி குறித்து பேசிய அவர், “இது குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான, மகிழ்ச்சியான திரைப்படம். கதையைப் பற்றி அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு குடும்பம், அவர்களது வாழ்க்கை, அதில் நடைபெறும் உணர்வுபூர்வமான தருணங்கள், நகைச்சுவை மற்றும் சந்தோஷமான அனுபவங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்,” என்றார்.

தனது கதாபாத்திரம் குறித்தும் அர்ஜுன் தாஸ் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். “இந்தப் படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகவும் சாதாரணமான, நம்மைச் சுற்றி வாழும் இளைஞனைப் போன்றது. கடன்கள், குடும்பப் பொறுப்புகள், வாழ்க்கைச் சவால்கள் என பலரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கதாபாத்திரம். அதனால் இந்த வேடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து தனது திரைப்பயணம் குறித்து பேசிய அவர், தற்போது பல்வேறு வகையான கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் நடித்து வருவதாக தெரிவித்தார். “நெகட்டிவ் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், நகைச்சுவை, குடும்பம், உணர்வுபூர்வம் என பல விதமான கதைகளில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கின்றன. புதிய இயக்குநர்களுடன் பணியாற்றுவது புதிய அனுபவங்களைத் தருகிறது. அதனால் இந்தப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய தனது திருமணச் செய்திகள் குறித்த கேள்விக்கும் அவர் விளக்கம் அளித்தார். “எங்கிருந்து அந்த செய்தி வந்தது என்று எனக்கே தெரியவில்லை. வீட்டிலிருந்தும், உறவினர்களிடமிருந்தும் தொடர்ந்து அதைப் பற்றி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் உண்மையில் நிச்சயதார்த்தமோ, திருமண ஏற்பாடுகளோ எதுவும் இல்லை,” என்று சிரித்தபடி மறுத்தார்.

ரசிகர்கள் தன்னிடம் அதிகமாக கேட்கும் விஷயம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “திரையரங்குகளுக்கு சென்று நேரடியாக ரசிகர்களை சந்திக்கும் போது குறிப்பாக குடும்ப ரசிகர்களும், மூத்த பெண்களும் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படங்களில் அதிகம் நடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதனால்தான் தற்போது குடும்ப ரசிகர்களை மகிழ்விக்கும் வகையிலான கதைகளையும் அதிகமாகத் தேர்வு செய்து வருகிறேன்,” என்றார்.

கான் சிட்டி படத்தில் தன்னுடன் நடித்த கலைஞர்களைப் பற்றியும் அவர் பாராட்டிப் பேசினார். “படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கலைஞரிடமிருந்தும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள முடிகிறது. அவர்களுடைய அர்ப்பணிப்பு, ஒழுக்கம், காட்சிகளுக்கான தயாரிப்பு ஆகியவை எனக்கு புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தன. அதுவே ஒரு நடிகராக என்னை தொடர்ந்து வளர்ச்சியடையச் செய்கிறது,” என்று கூறினார்.

குறிப்பாக வில்லன் கதாபாத்திரங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இதுவரை தான் நடித்த எதிர்மறை வேடங்கள் அனைத்தும் பார்வையாளர்களால் விரும்பப்பட்டதற்கு முக்கியமான காரணம் அவற்றின் பின்னணியில் இருந்த உணர்வுப்பூர்வமான காரணங்கள்தான் என்றார்.

“நான் நடித்த பல நெகட்டிவ் கதாபாத்திரங்களைப் பார்த்தால், அவர்கள் செய்த செயல்கள் தவறாக இருந்தாலும் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும். ஒருவன் தன் சகோதரனுக்காகச் செய்கிறான், இன்னொருவன் தனது கடந்தகால காயங்களால் அந்த பாதையைத் தேர்ந்தெடுக்கிறான். அதனால் பார்வையாளர்கள் அந்தக் கதாபாத்திரங்களை வெறுப்பதைவிட புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். அதுவே அவர்களுடன் ஒரு இணைப்பை உருவாக்குகிறது,” என்று அவர் கூறினார்.

எதிர்காலத்திலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “ஒரு நல்ல எதிர்மறை கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக செய்வேன். ஆனால் தற்போது அப்படிப்பட்ட எந்த திட்டமும் கைவசம் இல்லை. கதையும், கதாபாத்திரத்தின் ஆழமும் முக்கியம்,” என்று தெரிவித்தார்.

தனக்கு மிகவும் பிடித்த திரை வில்லன்கள் குறித்து பேசிய அவர், உலக சினிமாவில் ஹீத் லெட்ஜர் நடித்த ஜோக்கர் கதாபாத்திரம் மிகவும் பிடித்தமானது என்றார். தமிழ் சினிமாவில் தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சுவாமி ஏற்றிருந்த சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வில்லன் வேடமாக தன்னை கவர்ந்ததாகவும் கூறினார்.

“ஒரு வில்லன் கதாபாத்திரத்திற்கும் ஒரு வலுவான பின்னணிக் கதை இருக்க வேண்டும். ஏன் அவர் அப்படி நடந்துகொள்கிறார் என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டால் மட்டுமே அந்தக் கதாபாத்திரம் மனதில் நிற்கும். முழுக்க முழுக்க இருண்ட கதாபாத்திரமாக இருந்தாலும், அது கதைக்குள் சரியாக பொருந்த வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.

புதிய முயற்சிகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து பேசும்போது, நல்ல கதைகள் மற்றும் சவாலான கதாபாத்திரங்கள் வந்தால் எந்த வகை வேடமாக இருந்தாலும் ஏற்கத் தயாராக இருப்பதாக அர்ஜுன் தாஸ் தெரிவித்தார்.

மேலும், தற்போது உருவாகி வரும் ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் தலைப்பு குறித்தும் அவர் சுவாரஸ்யமான குறிப்பை பகிர்ந்தார். “படத்திற்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டதற்குப் பின்னால் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அதை இப்போது சொல்ல முடியாது. படம் வெளியாகும்போது ரசிகர்களுக்கே அதற்கான பதில் கிடைக்கும்,” என்று மர்மம் கலந்த புன்னகையுடன் கூறினார்.

எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசும்போது, பல புதிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், அடுத்தடுத்த காலங்களில் வித்தியாசமான கதைகளுடன் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாகவும் அர்ஜுன் தாஸ் தெரிவித்தார்.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் உடன் இணைந்து, அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாக உள்ளது.

சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!

0

புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் “நாகபந்தம்”. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது.

வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிககையாளர் சந்திப்பு இன்று சென்னையில் படக்குழுவினர் மற்றும் பத்திரிககை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டு, படத்தை உருவாக்கிய பயணம், பிரம்மாண்டமான தயாரிப்பு அம்சங்கள், மிதாலஜிக்கல் உலகத்தின் தனித்துவம் மற்றும் ரசிகர்களுக்காக காத்திருக்கும் திரை அனுபவம் குறித்து படக்குழு பகிர்ந்து கொண்டனர்.

கலைப்புலி எஸ். தாணு பேசியதாவது…

“நாகபந்தம் படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது, மிகப்பெரிய பிரம்மாண்டம் கண்ணெதிரே தோன்றியது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதன் உழைப்பையும், தரத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கும் பத்திரிககை, ஊடக நண்பர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

தயாரிப்பாளர் அபிஷேக் நாமா அவர்கள் இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார். அவருடன் எனக்கு நீண்டகால நட்பு உள்ளது. அன்பின் காரணமாகவே என் வேலைகளை ஒதுக்கிவிட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.

ஒரு சிறிய சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் வெளியிட்ட ‘அமுதவல்லி’ திரைப்படத்தின் விளம்பரத்தில், ஒரு நாகப்பாம்பு, ஒரு குழந்தை மற்றும் ‘பாம்பு குழந்தையை கொஞ்ச வருகிறதா ? கொத்த வருகிறதா ?’ என்ற ஒரு வரி வாசகம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அந்த விளம்பரம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

நாகம் என்றாலே மக்களிடையே ஒரு தனி ஈர்ப்பும், நம்பிக்கையும், ஆன்மீகத் தொடர்பும் இருக்கிறது. நாகத்தை மையமாக வைத்து உருவான பல படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நாகக் கன்னிகை, நாக தேவதை கதைகள் முதல் பல படைப்புகள் வரை, நாகத்தின் மீது மக்களுக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு உள்ளது.

அந்த வகையில், ‘நாகபந்தம்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். நன்றி, வணக்கம்.”

தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பேசியதாவது…

“தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில், சினிமாவும் தொடர்ந்து புதிய பரிமாணங்களை நோக்கி பயணித்து வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் மீடியாவின் வருகைக்குப் பிறகு, மக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துள்ளது. ஆனால் சில திரைப்படங்கள் மட்டுமே ‘இதை கண்டிப்பாக திரையரங்கில் பார்த்தால்தான் முழு அனுபவம் கிடைக்கும்’ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் ‘நாகபந்தம்’ திரைப்படம் நிச்சயமாக இருக்கும்.

இந்தப் படத்தின் காட்சிப் பிரம்மாண்டம் மிகப்பெரியது. இதை சிறிய திரையில் பார்ப்பதை விட, பெரிய திரையில் பார்த்தால்தான் அதன் முழு தாக்கத்தையும் உணர முடியும். ‘நாகபந்தம்’ என்ற தலைப்பைப் பார்த்தவுடனேயே எனக்கு திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் மர்ம அறைகள் நினைவுக்கு வந்தன. குறிப்பாக இன்னும் திறக்கப்படாத அந்தப் புகழ்பெற்ற ‘நாகபந்தம்’ அறை குறித்து மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு ஆவலும் மர்மமும் இருந்து வருகிறது. அந்த பெயரே இந்தப் படத்தின் மீது தனி ஆர்வத்தை உருவாக்குகிறது.

இந்தப் படத்தின் முழுக் கதை எனக்கு தெரியாது. ஆனால் டிரெய்லர் மற்றும் காட்சிகளைப் பார்க்கும்போது, வரலாறு, மர்மம் மற்றும் சாகசம் கலந்த ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவமாக இது இருக்கும் என்று தோன்றுகிறது.

தாணு சார் சொன்னது போல, நாகத்தை மையமாகக் கொண்ட பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நாகம், நாகக் கன்னிகை, நாகபந்தம் போன்ற தலைப்புகளுக்கே ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது. அதேபோல் இந்த ‘நாகபந்தம்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இயக்குநர் அபிஷேக் நாமா இந்தப் படத்திற்கு மிகப்பெரிய காட்சிப் பிரம்மாண்டத்தை வழங்கியிருக்கிறார். அவருடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் திரையில் தெளிவாக தெரிகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஹீரோ, ஹீரோயின்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

‘நாகபந்தம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும், பெறும் என்ற நம்பிக்கையுடன் படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”

நடிகர் அஜய் ரத்னம் பேசியதாவது…

“அனைவருக்கும் வணக்கம். ‘நாகபந்தம்’ திரைப்படத்தின் இந்த நிகழ்வில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய ஆளுமைகளான கலைப்புலி எஸ். தாணு சார் மற்றும் ஏ எம் ரத்னம் சார் ஆகியோரின் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயம்.

கலைப்புலி தாணு சார் பகிர்ந்த அனுபவங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. நாகத்தை மையமாகக் கொண்ட கதைகள் மற்றும் திரைப்படங்கள் எப்போதும் மக்களிடம் தனி வரவேற்பைப் பெற்றுள்ளன. சிவபெருமானுடன் தொடர்புடைய நாகம் என்றாலே மக்களிடம் ஒரு தனி ஈர்ப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. அந்த வகையில் ‘நாகபந்தம்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இயக்குநர் அபிஷேக் நாமா பற்றி பேச வேண்டும். அவர் வெறும் இயக்குநர் மட்டுமல்ல. சினிமாவிற்கு முதலில் விநியோகஸ்தராக வந்து, பல இந்திய மற்றும் தெலுங்கு திரைப்படங்களை வெளியிட்டவர். ஒரு படம் ஏன் வெற்றி பெறுகிறது, ஏன் தோல்வியடைகிறது என்பதை ஆழமாக ஆராய்ந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. அதன் பிறகு தயாரிப்பாளராக பல படங்களை உருவாக்கினார். இன்று இயக்குநராக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இத்தனை ஆண்டுகளாக அவர் பெற்ற அனுபவத்தின் மொத்த வெளிப்பாடாகவே ‘நாகபந்தம்’ உருவாகியுள்ளது.

நாயகன் விராட் கர்ணா இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். அவருடைய கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் திரையில் தெளிவாக தெரிகிறது. சினிமாவில் உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது. இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன்.

நபா நடேஷ் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். ஜெகபதி பாபு சார், சரண்யா மேடம் மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளனர். ஒளிப்பதிவாளர் சௌந்தர் ராஜன் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இன்று இந்திய சினிமாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தொழில்நுட்பக் கலைஞர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவது பெருமைக்குரிய விஷயம். இந்திய சினிமாவின் வளர்ச்சியில் தமிழ் சினிமாவின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக ‘நாகபந்தம்’ ஒரு மிகச் சிறந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இறைவனின் அருளால், குறிப்பாக முருகப்பெருமானின் அருளால், இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கிறேன். நன்றி.

நடிகர் ஜான் கொக்கேன் பேசியதாவது…

“அனைவருக்கும் வணக்கம். புராணக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களை நாம் ஏற்கனவே நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால் மிகப்பெரிய பொருட்செலவில், உலகத் தரத்தில், பான்-இந்தியா அளவில் உருவாகியுள்ள புராணப் பின்னணியிலான திரைப்படமாக ‘நாகபந்தம்’ அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் அபிஷேக் நாமா அவர்களுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் தயாரிப்பாளர்கள் நிஷிதா மேம் மற்றும் கிஷோர் சார் ஆகியோருக்கும் என் நன்றிகள். குறிப்பாக கிஷோர் சாருக்கு இந்தப் படம் குறித்து மிகப்பெரிய கனவும் தெளிவான பார்வையும் இருந்தது. அந்தப் பார்வையின் வெளிப்பாட்டை நீங்கள் டிரெய்லரிலேயே பார்த்திருப்பீர்கள்.

‘நாகபந்தம்’ ஒரு மிகப்பெரிய காட்சிப் பிரம்மாண்டம் கொண்ட திரைப்படம். தற்போது ஓடிடி காலகட்டமாக இருந்தாலும், இப்படிப்பட்ட திரைப்படங்களை சிறிய திரையில் முழுமையாக ரசிக்க முடியாது. இந்தப் படத்தை கட்டாயம் திரையரங்கின் பெரிய திரையில் பார்த்தால்தான் அதன் உண்மையான அனுபவத்தை உணர முடியும்.

டிரெய்லரில் நீங்கள் பார்த்ததுபோல, நாகபந்தம், பிரம்மகமலம் மற்றும் அதனைச் சுற்றிய மர்மங்கள் கதையின் மையமாக இருக்கின்றன. நாயகன் விராட் கர்ணா அந்த மர்மத்தைத் தேடும் பயணத்தில் செல்லும்போது, பார்வையாளர்களும் அவருடன் இணைந்து அந்தப் பயணத்தை அனுபவிப்பார்கள். படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் அந்தத் தேடலின் ஒரு பகுதியாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. பிரம்மாண்டமான செட்கள், மிகப்பெரிய தயாரிப்பு மதிப்பு மற்றும் திறமையான கலைஞர்கள் கொண்ட குழுவுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. நாபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், அனசுயா, ஜான் விஜய், சரண்யா மேடம் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இது ஒரு அர்ப்பணிப்பான குழுவின் கடின உழைப்பில் உருவான மிகப்பெரிய திரைப்படம். வரும் ஜூலை 3ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று ‘நாகபந்தம்’ திரைப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

விநியோகஸ்தர் சிவ பிரசாத் பேசியதாவது…

“அனைவருக்கும் எனது வணக்கங்கள். நேரில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததற்கு மன்னிக்கவும். பயணக் காரணங்களால் வர இயலவில்லை. இருப்பினும், என் மனம் முழுவதும் இந்த நிகழ்வுடனும், ‘நாகபந்தம்’ படக்குழுவுடனும் இருக்கிறது.

‘நாகபந்தம்’ திரைப்படம் உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியையும், மறக்க முடியாத திரையரங்கு அனுபவத்தையும் தரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு ஃப்ரேமிலும் எங்கள் குழுவின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், அன்பும் நிறைந்திருக்கிறது.

இந்தப் படத்தை உருவாக்கிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அதேபோல் எப்போதும் ஆதரவளித்து வரும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘நாகபந்தம்’ திரைப்படத்திற்கு உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

நடிகை நபா நடேஷ் பேசியதாவது…

“அனைவருக்கும் வணக்கம். முதலில் கலைப்புலி எஸ். தாணு சார் மற்றும் ஏ எம் ரத்னம் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை.

‘நாகபந்தம்’ திரைப்படம் வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது சாதாரணமான திரைப்படம் அல்ல. நமது வரலாறு, மர்மம், சாகசம், ஆக்சன், திரில்லர் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவம்.

இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. படத்தின் கதையும், உருவாக்கப்பட்ட உலகமும் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும். டிரெய்லருக்கு நீங்கள் அளித்த வரவேற்பைப் பார்த்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.

டிரெய்லர் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? அதேபோல் படம் முழுவதும் உங்களை கவரும் என்று நம்புகிறேன். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து ‘நாகபந்தம்’ திரைப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.”

நடிகர் விராட் கர்ணா பேசியதாவது…

“அனைவருக்கும் வணக்கம். இன்று ‘நாகபந்தம்’ திரைப்படத்தின் புரமோஷனுக்காக இங்கு வந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஊடக நண்பர்கள், படக்குழுவினர் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி. குறிப்பாக எங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இந்தப் படத்தை உருவாக்கிய அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆன்மிகம் மற்றும் பக்தி சார்ந்த விஷயங்களில் அதிகமாக ஈடுபட ஊக்குவித்து வருகிறார்கள். ஏனெனில் அது மனதிற்கும் உடலுக்கும் அமைதியையும் சக்தியையும் அளிக்கிறது. ‘நாகபந்தம்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவமும் எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை முடித்த பிறகு நான் ஆன்மிக ரீதியாகவும், மனதளவிலும் மிகவும் வலிமையாக உணர்கிறேன்.

இந்தப் படம் இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், தைரியம், கோவில்களின் மரபு மற்றும் நமது தொன்மையான நாகரீகத்தின் பல அம்சங்களை பேசுகிறது. நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்தப் படம் இருக்கும்.

‘நாகபந்தம்’ திரைப்படத்தில் நான் ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு அறிமுக நடிகராக இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கதாபாத்திரத்திற்காக நான் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளேன். டிரெய்லருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

வரும் ஜூலை 3 ஆம் தேதி திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. டிரெய்லருக்கு நீங்கள் கொடுத்த அதே அன்பையும் ஆதரவையும் படத்திற்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

நான் கொஞ்சம் பதட்டமாக இருப்பதால் ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். சென்னை மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தமிழக விநியோகஸ்தர் முருகன் பேசியதாவது..,

“கலைஞர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எங்கள் ‘நாகபந்தம்’ திரைப்படத்திற்கு நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி, நன்றி, நன்றி.

இப்படத்தில் நாபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ். அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அபே இசையமைத்துள்ளார். கல்யாண் சக்ரவர்த்தி வசனம் எழுதியுள்ள நிலையில், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநர் அசோக் குமார் பிரம்மாண்டமான செட் வடிவமைப்புகளை உருவாக்கியுள்ளார். மேலும் தாய்லாந்தைச் சேர்ந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கெச்சா காம்பக்டீ ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரிப்பில் உருவாகியுள்ள “நாகபந்தம்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.

இப்படம் வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளொல் வெளியாகிறது.

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

0

நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

பாடலாசிரியர் யுகபாரதி, “உதவி இயக்குநராக இருந்தபோதிருந்தே மீரா கதிரவனை எனக்கு தெரியும். தனிப்பட்ட முறையில் இப்படியான வெற்றிக்குதான் இத்தனை வருடங்களாக அவர் கடுமையாக உழைத்தார். இதனை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, கஸ்தூரி ராஜா அவர்களை நடிகராக பார்ப்பது மகிழ்ச்சி. இனி வரும் வெற்றிப் படங்களில் எல்லாம் கஸ்தூரி ராஜாதான் அப்பாவாக தப்பாமல் இருப்பார். இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவில் வரவில்லை எனும் சொல்லுமளவுக்கு இஸ்லாமியர்கள் வாழ்வியலை இந்தப் படத்தில் மீரா கதிரவன் பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் எண்பதுகளுக்கு பிறகு இஸ்லாமியர்களை ஏன் தீவிரவாதிகளாக காட்டுகிறார்கள் என்ற விவாதம் நடந்தது. அப்பொழுது தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்கள் அனைவரும், இஸ்லாமியர்கள் வாழ்வை நெருக்கமாக தெரிந்தவர்கள் தான் அவர்கள் குறித்த உண்மையான படம் எடுக்க முடியும். அதனால், மீரா கதிரவனை படம் எடுக்கச் சொன்னார்கள். அப்போது அவர் சம்மதம் தெரிவித்து மனதில் தாங்கிய கதையே ‘ஹபீபி!’ ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இது படமாக வெளிவந்து வெற்றி பெற்றிருப்பது நிறைவாக உள்ளது” என்றார்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, ” எந்த ஒரு கருத்தையும் வலியுறுத்தாமல் நேரில் பார்த்து, அனுபவித்த வாழ்கையை திரைப்படமாக்கி இருக்கிறார் மீரா கதிரவன். இந்தப் படம் எல்லோருக்கும் தேவை என்பதை உணர்ந்தே அண்ணன் திரைக்கதை எழுதி இருக்கிறார். வன்முறையை கொண்டாடக்கூடிய, அதை நம் இயல்பாக கூடிய, பேரின்பம் அடையும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதற்கிடையில் நம் அனைவரையும் ஆற்றுப்படுத்தும் படமாக ‘ஹபீபி’ வந்திருக்கிறது. வசூலிலும் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும் போது தான் அடுத்தடுத்து இது போன்ற படங்கள் நிறைய வரும். நிச்சயம் பார்க்காதவர்கள் திரையரங்குகளில் சென்று பாருங்கள்”.

எடிட்டர் மதி, ” என்னுடைய இரண்டாவது படமே வரலாற்று சிறப்புமிக்க படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

கலை இயக்குநர் அப்புன்னி சாஜன், ” இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததில் மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகை அனுஸ்ரேயா ராஜன், “இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் ஆதரவு நிறைவாக உள்ளது. அனைவருக்கும் நன்றி”.

நடிகை மாளவிகா மனோஜ், “என்னுடைய முதல் படம் இது. இத்தனை வருடங்களுக்கு பின்பு வெளியாகி, இத்தனை பேரின் அன்பை சம்பாதித்திருப்பது நிறைவாக உள்ளது. நன்றி”.

நடிகர் ஈசா, “இந்தப் படம் வெளியான பிறகு பலரும் என்னை அடையாளம் கண்டு வாழ்த்துகிறார்கள். தங்கள் வீட்டு பிள்ளைபோல அன்பு காட்டுகிறார்கள். வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்த ஊடகத்திற்கும், படத்தில் என்னுடன் நடித்த நடிகர்களுக்கும் நன்றி” என்றார்.

சவுண்டு மிக்ஸிங் உதயகுமார், “இந்தப் படத்தின் சவுண்ட் மிக்ஸிங் கிரெடிட் அனைத்தும் இயக்குநரையே சேரும். ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு ஒலி வேண்டும் என்பதை அவரே முடிவு செய்தார். இதற்கு சாம் சி எஸ்ஸின் பின்னணி இசையும் பலமாக இருந்தது நன்றி”.

நடிகை ஜெயஸ்ரீ, ” இந்தப் படத்தில் இவ்வளவு பெரிய கதாபாத்திரம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. வாய்ப்புக்கு நன்றி”.

நடிகை மலர், “இந்த கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்த இயக்குநர் மீரா கதிரவனுக்கு நன்றி. நான் ஒரு யூடியூபர். படத்தில் என்னை பார்த்து அடையாளம் கண்டுவிட்டு பலரும் பாராட்டுகளை தெரிவித்தார்கள். நீங்களும் படத்தை இன்னும் நிறைய பேருக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். நன்றி!”.

நடிகர் கெளஷிக், ” இது என்னுடைய முதல் படம். வாய்ப்பு கொடுத்த மீரா கதிரவன் அவர்களுக்கும் ஒத்துழைப்பு தந்த படக்குழுவினருக்கும் நன்றி”.

நடிகர் சன் சாகுல், “ஊடகத்துறையும் சினிமாவும் எனக்கு குடும்பம் போல! இது என் மண் சார்ந்த கதை என்பதால் தான் இந்த படத்திற்கு உள்ளே வந்தேன். மண் சார்ந்த படம் என்பதை தாண்டி இஸ்லாமிய வாழ்வியலை சொல்லக்கூடிய படம் இது எனலாம். உறவுமுறை, சுகம், துக்கம் என அனைத்தையும் இந்த படம் பேசி இருப்பதால் உலகமே இதை கொண்டாடுகிறது. வாய்ப்புக்கு நன்றி”.

சித்த மருத்துவர் சிவராமன், “இயக்குநர் ராம் தான் இந்த படத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். படம் பார்த்துவிட்டு குடும்பத்தோடு வந்த போது மனம் கனத்து விட்டது. எனக்கு திருநெல்வேலி சொந்த ஊர். கடையநல்லூர் வாழ்க்கை முறையை பற்றி தெரியும். அத்தனை இஸ்லாமிய நண்பர்கள் எனக்கு உண்டு. ஆனால், இப்போது வரும் திரைப்படங்களில் இஸ்லாமியர்களை இப்படி காட்டுகிறார்கள் என்ற வருத்தத்திற்கு இந்தப் படம் விடுதலை கொடுத்துள்ளது. இது போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற வேண்டும்”.

இயக்குநர் தமிழ், “முழு நீள இஸ்லாமியர் படம் தமிழ் சினிமாவில் வருவதற்கு 100 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. எந்தவொரு புனைவும் இல்லாமல் உண்மையான வாழ்க்கை முறையை திரையில் காட்டியதற்கு தைரியம் வேண்டும். நடிகர்கள் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ராஜூமுருகன், “மீரா எனக்கு பல வருட நண்பர். தமிழில் அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் முக்கியமானவை. நல்ல சினிமாவுக்கும் வியாபாரத்திற்கும் இடையில் அவர் போராடிக் கொண்டே இருக்கிறார். அவருக்கு முழுமையான வெற்றியை ஹபீபி தேடி தந்திருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமியர்களுக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு. சீறாப்புராணத்தில் தொடங்கி தோப்பில் முகமது மீரான் வரை பெரிய வரலாறு உண்டு. தமிழக அரசியல் வரலாற்றிலும் இஸ்லாமியர்கள் பங்கு உண்டு. ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் அது நடக்காமல் போய்விட்டது என்ற வருத்தம் உண்டு. மனிதர்களாக அவர்களை காட்டுவதும், அவர்களது வாழ்க்கை முறை உணர்வுகளை அப்படியே திரையில் பிரதிபலிப்பதும் தான் என்னை பொறுத்தவரை உண்மையான தலித் சினிமா, இஸ்லாமிய சினிமா. தமிழ் சினிமாவின் தொடக்கமாக ‘மெட்ராஸ்’ படத்தை பார்க்கிறேன். அது போல தான் இஸ்லாமிய சினிமாவின் தொடக்கமாக இந்த ‘ஹபீபி’ உள்ளது. இவ்வளவு இரைச்சல்களுக்கு மத்தியில் இந்த படம் வெற்றி பெற்றிருப்பதை மிகப்பெரிய நம்பிக்கையாக பார்க்கிறேன். நூறு வருடங்களுக்குப் பிறகு இந்த படம் மிகப்பெரிய திறப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து நிறைய சமூக சினிமாக்கள் வரட்டும். இந்த படத்தில் கஸ்தூரி ராஜா சார் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுபோல நிறைய படைப்புகள் மீரா தர வேண்டும்”.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “கஸ்தூரிராஜா சாரை இயக்குநராக எனக்கு தெரியும். அவரை இந்த படத்தில் நடிகராக பார்த்து பிரம்மித்து விட்டேன். நல்ல படங்களை நிச்சயம் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள். சினிமா மீது மக்களுக்கு பெரும் நம்பிக்கை உண்டு. அதை புரிந்து கொண்டு சமூக பொறுப்போடு படம் எடுப்பது நமது கடமை. இதை இஸ்லாமிய படமாக பார்க்கத் தேவையில்லை. தமிழ் சமூகத்தில் இன்னொரு மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட ஒரு இனத்துடைய படம் தான் இது. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததில் சினிமாவிற்கு பெரும் பங்கு உண்டு. அந்த வருத்தத்தை போக்க இந்த படத்தை பெரும் வெற்றி பெற செய்ய வேண்டும்”.

நடிகை தனஸ்ரீ, ” படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி!”

இயக்குநர், நடிகர் கஸ்தூரி ராஜா, ” இந்தப் படத்தில் என்னை சுதந்திரமாக நடிக்க அனுமதித்த என் மனைவிக்கு முதல் நன்றி. என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களின் ஒத்துழைப்பிற்கும் நன்றி. படம் வெளியானதும் என் மகன்கள், மகள்கள், பேரன் பேத்திகள் என அனைவரோடும் பார்த்தேன். என் மகள் விமல கீதா அழுதுவிட்டார். தனுஷ் படம் பார்த்துவிட்டு எனக்கு கௌரவமான ஒரு படத்தில் நடித்துள்ளீர்கள் என்றார். இந்தப் பெயரை வாங்கித் தந்த மீரா கதிரவனுக்கு நன்றி. இந்த படமும் யூசுப் கதாபாத்திரமும் எனக்கு இன்னொரு பிறவி. இஸ்லாமியராக நான் நிஜத்திலும் மாறிவிட்டேனோ என எனக்கு தோன்றும். இயக்குநராக கஸ்தூரிராஜா என்ற பெயரும் நடிகருக்கு யூசுப் என்ற பெயரும் வைக்கலாமோ எனவும் அடிக்கடி தோன்றும். மீரா கதிரவனுக்குப் பின்னால் இந்த படம் உருவாவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. பல விருதுகள் இந்தப் படம் வாங்கி குவிக்கும்”.

தயாரிப்பாளர் கருப்பசாமி, “‘பறந்து போ’ படம் வெற்றி பெற்றது. அதற்கடுத்து ‘ஹபீபி’யும் எங்களுக்கு வெற்றி படமாக அமைந்துள்ளது. இதற்கு பின்னால் உழைத்த அனைவருக்கும் நன்றி”.

தயாரிப்பாளர் இப்ராஹிம், ” மக்களிடத்தில் இந்த படத்தை கொண்டு போய் சேர்த்து வெற்றி படமாக மாற்றிய அனைத்து ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி!”.

இயக்குநர் மீரா கதிரவன், ” 110 வருட தமிழ் சினிமாவில் இது என்னுடைய முதல் படமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பிரசாத் லேப் மேடை எனக்கு பழசு. ஆனால், இந்த உணர்வு புதிதாக உள்ளது. ஏனெனில், இது என் முதல் நன்றி தெரிவிக்கும் விழா. கஸ்தூரி ராஜா போன்ற பெரியவர்கள் என்னை குரு என்று சொல்வது எனக்கு கூச்சமாக உள்ளது. இது எனக்கு முதல் முறை. என்னை சினிமாவிற்கு அனுமதித்த என் குடும்பத்திற்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்குமே நன்றி. நெருக்கடியான தருணத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்திற்கு பணம் தந்து உதவினார். இயக்குநர் ராம் இந்த படத்தை தோளில் தூக்கி சுமந்த பிறகு தான் இதற்கு வெளிச்சம் கிடைத்தது. நண்பர் என்பதால் ராம் இதனை எனக்கு செய்யவில்லை. எல்லா நல்ல படங்களுக்கும் அவர் செய்வார். இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததில் சினிமாவுக்கு மிகப் பெரும் பங்கு உண்டு. அதை மாற்ற வேண்டும் என்றால் நாம் தான் முன்வர வேண்டும். இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்த படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன் அனைவருக்கும் நன்றி”.

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

0

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக ஹாரர் ஜானர் திரைப்படங்களில் சிலவற்றிற்க்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. உலகளவில் புகழ்பெற்ற ’தி கான்ஜூரிங்’ மற்றும் ’ஈவில் டெட்’ போன்ற திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்களை உதாரணமாக சொல்லலாம்.

இந்திய சினிமாவிலும் மிகச்சில திரைப்படங்களின் அடுத்தடு்த்த பாகங்களுக்கே இத்தகைய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த வரிசையில், தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் திகில் சீக்வல்தான் ’டிமான்டி காலனி’. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தத் திரைப்படமும் அதன் சீக்வலும் இன்றும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

திகில் ரசிகர்களுக்கு செப்டம்பர் 11 மறக்க முடியாத நாளாக மாற உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் ’டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படத்தின் சீக்வலில் இருண்ட மற்றும் மர்மமான உலகிற்குள் மீண்டும் பார்வையாளர்கள் செல்ல இருக்கிறார்கள். அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் அஜய் ஞானமுத்து கதையை இன்னும் விரிவுபடுத்தியுள்ளார். சில கதைகள் ஒருபோதும் முடிவடைவதில்லை.

சுதன் சுந்தரம், மனிஷ் சிங்கால் மற்றும் துர்காராம் சௌத்ரி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து எழுதி இயக்கியுள்ளார். படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மற்றும் திரையுலகிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் வெளியீட்டு தேதி படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் அஜய் ஞானமுத்து இணைத்த விதம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு திரைப்படத்தின் சீக்வலும் வெற்றி பெறுவது எளிதல்ல. ஆனால், ‘டிமான்டி காலனி 2’ மூலம் இயக்குநர் அதை சாத்தியப்படுத்தினார். படம் வெளியான பிறகு, ஒரு ரசிகர் என்னிடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ‘தி ஷைனிங்’ பட அனுபவத்தை ‘டாக்டர் ஸ்லீப்’ எவ்வாறு தொடர்ந்ததோ, அதைப் போலவே இந்த அனுபவம் இருந்தது என்று அவர் கூறினார். அத்தகைய கருத்துகளை கேட்கும்போது, இந்த சீக்வலின் அங்கமாக நானும் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் மேலும் அதிகரித்தது. இன்று ‘டிமான்டி காலனி 3’ படத்தின் ஃபைனல் வெர்ஷன் பார்த்த பிறகு, இந்தப் படத்தில் இணைந்திருப்பதை பெருமையாக உணர்கிறேன். ரசிகர்களுக்காக பல ஆச்சரியங்கள் இந்தப் படத்தில் உள்ளது. அருள்நிதி, அஜய் ஞானமுத்து மற்றும் முழு குழுவும் இந்தப் படத்தை மிகுந்த பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். விரைவில் படத்தின் விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் பணிகளை தொடங்கவுள்ளோம்” என்றார்.

ஆர்டிஎக்ஸ் மீடியா மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகியவற்றுடன் இணைந்து, பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் டங்கல் டிவி ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு படம் வழங்கப்படுகிறது.

நடிகர்கள்: அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஆண்டி ஜாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜி.எம். குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹூசைன், சர்ஜனோ காலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை: ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்,
எழுத்து, இயக்கம்: அஜய் ஆர். ஞானமுத்து,
இசை: சாம் சி.எஸ்.,
ஒளிப்பதிவு: சிவக்குமார் விஜயன்,
படத்தொகுப்பு: குமரேஷ்.டி

சாம் சி எஸ் இசையில் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கும் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு!

0

இசையமைப்பாளர் Sam C. S. தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது AK Film Factory சார்பில் Arunkumar Dhanasekaran தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகும் ‘இம்மார்டல்’ (Immortal) திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைத்துள்ள சாம் சி எஸ், இந்தப் பாடலில் தனது தனித்துவமான இசை பாணியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். கேட்டவுடன் மனதில் பதியும் மெலடி, டார்க் தீமில் வடிவமைக்கப்பட்ட இசை அமைப்பு மற்றும் புதுமையான சவுண்ட் டிசைன் ஆகியவை பாடலுக்கு தனி அடையாளத்தை வழங்குகின்றன.

இந்தப் பாடலை சாம் சி எஸ் மற்றும் Reshma Shyam இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை Shali C எழுதியுள்ளார். காதலியை ஒரு “காட்டேரி”யாக கற்பனை செய்து வர்ணிக்கும் இந்தப் பாடல், வழக்கமான காதல் பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்குகிறது.

சிவப்பு நிற பின்னணியில், டார்க் விஷுவல் டோனில், அழகான நடன அசைவுகளுடன் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இசை, காட்சிகள், நடனம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று கலந்த விதம் பாடலின் ஈர்ப்பை மேலும் அதிகரிக்கிறது. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், வெளியான குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

இசை என்பது கதையின் உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் மொழி என்பதை பலமுறை நிரூபித்துள்ள சாம் சி எஸ், இந்தப் பாடலிலும் புதுமையான மெலடி மற்றும் நவீன இசை அமைப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். பாடல் முடிந்த பிறகும் அதன் தாளம் மற்றும் மெலடி மனதில் நீடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

🔗https://youtu.be/-vlnhbtkyhw?si=X-_vwXntJsEkWFP5

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

0

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் அசைக்க முடியாத ஆர்வத்தை கொண்டாடும் மனதை வருடும் விளையாட்டு நாடகத் தொடர்.

இந்தியா, 23 ஜூன் 2026: இந்தியாவின் முன்னணி உள்நாட்டு ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, மம்மட்டியான் ஸ்டார்ஸ் என்ற உணர்வுப்பூர்வமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த விளையாட்டு நாடகத் தொடரை ஜூன் 26 முதல் பார்வையாளர்களுக்கு வழங்கவுள்ளது. சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த ஆறு அத்தியாயங்கள் கொண்ட தமிழ் ஒரிஜினல் தொடர், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அவர்கள் நேசிக்கும் விளையாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் அசாதாரண முயற்சிகளுக்கும் செலுத்தப்படும் மனமார்ந்த அஞ்சலியாக உருவாகியுள்ளது.

சவிர் சுதாகர், நவீன் ராஜ்குமார், கலை செல்வன் மற்றும் வினு கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள இந்த தொடரில் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி.எம். ராஜ்குமார் ஒளிப்பதிவு, பவித்ரன் படத்தொகுப்பு மற்றும் தமிழ்செல்வன் BFA கலை இயக்கத்தில் உருவாகியுள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், தமிழ்நாட்டின் கிரிக்கெட் கலாச்சாரத்தை வரையறுக்கும் உற்சாகம், உணர்வு மற்றும் தோழமையை அழகாகப் பதிவு செய்கிறது.

மம்மட்டியான் ஸ்டார்ஸ், ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் குழுவை மையமாகக் கொண்டு நகர்கிறது. அவர்கள் தங்கள் ஹீரோவின் கடைசி போட்டியை நேரில் காண சென்னை நோக்கி மறக்க முடியாத ஒரு பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஒரு கனவுப் பயணமாக தொடங்கும் இந்த அனுபவம், விரைவில் நட்பு, உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பிய சாகசமாக மாறுகிறது. அந்தப் பயணத்தில், அவர்களின் உறுதியை சோதிக்கும் பல சவால்களை அவர்கள் எதிர்கொள்வதோடு, இலக்கை விட பயணமே மறக்க முடியாததாக மாறக்கூடும் என்பதை உணர்கிறார்கள். நம்பிக்கை, சேர்ந்திருக்கும் உணர்வு மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் கிரிக்கெட் இணைக்கும் வலிமையான பிணைப்பை கொண்டாடுவதே மம்மட்டியான் ஸ்டார்ஸ் தொடரின் மையக்கருவாகும்.

ZEE5 தமிழ் & மலையாளத்தின் மார்க்கெட்டிங் – தென்னகத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் வணிகத் தலைவர் லாயிட் சேவியர் கூறுகையில், “இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டை விட மிகப் பெரிய உணர்வு; அது தலைமுறைகள், சமூகங்கள் மற்றும் எண்ணற்ற நினைவுகளை இணைக்கிறது. மம்மட்டியான் ஸ்டார்ஸ், ரசிகர்களின் ஆர்வத்தையும், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அந்த தருணத்தை அனுபவிக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் அழகாகப் பதிவு செய்கிறது. தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள், மனதைத் தொடும் உணர்வுகள் மற்றும் ரசிகத்தனத்தின் இயல்பான சித்தரிப்பை மையமாகக் கொண்ட இந்த தொடர், தமிழ்நாடு மட்டுமின்றி அதற்கு அப்பாலும் உள்ள பார்வையாளர்களின் மனதில் ஒலிக்கும் ஒரு கதையாக இருக்கும்” என்றார்.

மம்மட்டியான் ஸ்டார்ஸ் இயக்குநர் சவிர் சுதாகர் கூறுகையில், “தங்களின் ஹீரோக்கள் விளையாடுவதை நேரில் பார்க்க வேண்டும் என்று கனவு கண்ட ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகருக்கும் இந்த தொடர் ஒரு அஞ்சலி. கிரிக்கெட் இந்தக் கதையின் பின்னணியாக இருந்தாலும், மம்மட்டியான் ஸ்டார்ஸ் தொடரின் இதயம் நட்பு, லட்சியங்கள் மற்றும் வாழ்க்கைப் பயணத்தில் நம்மை வடிவமைக்கும் மறக்க முடியாத அனுபவங்களில்தான் உள்ளது. நேர்மையான, உணர்வுப்பூர்வமான மற்றும் கொண்டாட்டம் நிறைந்த ஒரு கதையை சொல்ல வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இந்த பயணத்தில் ZEE5 மூலம் பார்வையாளர்களும் இணையவிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.

நட்பு, உணர்வுகள், சாகசம் மற்றும் கிரிக்கெட் ஆகியவை ஒன்றிணையும் மறக்க முடியாத பயணமான மம்மட்டியான் ஸ்டார்ஸ், ஜூன் 26 முதல் ZEE5-ல் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது.

ZEE5 பற்றி:

ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகவும், கோடிக்கணக்கான பொழுதுபோக்கு ரசிகர்களுக்கான பன்மொழி கதை சொல்லியாகவும் திகழ்கிறது. உலகளாவிய உள்ளடக்க சக்திமிக்க நிறுவனமான ZEE Entertainment Enterprises Limited (ZEEL)-இன் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, வீடியோ ஆன்-டிமாண்ட் தளங்களில் முன்னணி தேர்வாக விளங்குகிறது. பல இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் ஒரிஜினல்கள், இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கும் அதிகமான ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான மற்றும் பல்வகை நூலகத்தை இது வழங்குகிறது.

🔗 https://youtu.be/ZKqU9H8r17c?si=ztgg1ZjLj_XcRWIr