இயக்கம் – சந்தோஷ் ராவணன்
நடிகர்கள் – பிரஜின், இவானா வருண் , எம்.கே.சாம்பசிவம், செந்தி குமாரி
இசை – ஹரி.எஸ்.ஆர்
தயாரிப்பு – எம் கே சாம்பாசிவம்
ஒரு பெண்ணை காதலிக்கும் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு பெற்றோர்களின் வற்புறுத்தலால் அந்த பெண்ணுக்கு ஒரு திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒரு வழியாக நிச்சயம் முடிந்த நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். இதையும் கஷ்டபட்டு கடந்து மற்றொரு திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிறது, இந்நிலையில் அந்த மாப்பிள்ளையும் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார். இந்த மரணம் அனைத்துக்கும் காரணம் அந்த குடும்பம் என்கிற ஒரு சந்தேகம் வருகிறது, இதனை ஒரு காவல் அதிகாரி விசாரிக்கிறார், அப்படி அவர் விசாரணை செய்யும்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகிறது , அது என்ன அதன் பின் என்ன ஆனது என்பதே இந்த அந்தரன் படத்தின் மீதிக்கதை.
இந்த படத்தில் ஒரு நேர்மையான மிடிக்கிடும் காவல்துறை அதிகாரியாக பிரஜின் நடித்துள்ளார், ஒரு பக்கம் கம்பீரமான காவல் அதிகாரியாக இருந்தாலும் காதல் காட்சிகளில் கலக்குகிறார், அவருக்கு நிகராக கதாநாயகியாக நடித்திருக்கும் இவானா வருண் தனது நடிப்பை கொடுத்துள்ளார், ரசிகர்களை தனது முக பாவனை கொண்டு கவர்கிறார்,
மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் எம்.கே.சாம்பசிவம், அம்மாவாக நடித்திருக்கும் செந்தி குமாரி, அனுபமா குமார், அதிரன், ரமேஷ்பாபு கீதா, பத்மன், பிரியங்கா செல்வி, ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை புரிந்து நடித்துள்ளனர்,
ஹரி.எஸ்.ஆர் இசையில் பாடல்களை விட பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்கிறது. பாடல்களும் கேட்கும் வண்ணம் இருந்தது, இந்த படத்திற்கு கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், அவரது பணியும் பாராட்டும் வண்ணம் இருந்தது,
இந்த படத்தை சந்தோஷ் ராவணன் எழுதி இயக்கியுள்ளார் , நாம் பல கதைகளில் பார்த்த அதே தொடர் கொலை சாயலை வைத்து ஒரு வித்தியாசமான முறையில் கதை கூறியுள்ளார், ஆரம்பத்தில் இருக்கும் சஸ்பென்சை படம் முடியும் வரை பிடித்து வைத்திருப்பது பாராட்டிற்கு உகந்தது, திரைக்கதையில் இன்னும் வேலை செய்திருந்தால் ராட்சசன் அளவிற்கு வந்திருக்கும் எனினும் ஒரு நல்ல திரில்லர் அனுபவமாக இருக்கிறது.
மொத்தத்தில், ‘அந்தரன்’ சஸ்பென்ஸ் கலந்த ஒரு புதிய முயற்சி.




