சிங் கீதம் – விமர்சனம்

0

இயக்கம் – சிங்கீதம் சீனிவாச ராவ்
நடிகர்கள் – அயான், கெளரி, அஹல்யா பம்ரூ , ஷாலினி கொண்டேபூடி, நிவேதா பெத்துராஜ்
இசை – தேவி ஸ்ரீ பிரசாத்
தயாரிப்பு – நாக் அஸ்வின்

ஒரு குற்றவாளி தனது தண்டனை காலம் முடிந்த பின் விடுதலையாகிறான் , அவனுக்கு ஒரு இடத்தின் பத்திரம் கிடைக்கிறது அது அவனுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று எண்ணி அந்த இடம் அமைந்துள்ள ஊருக்கு செல்கிறான் அங்கு இரண்டு தங்க சுரங்கம் தோண்டும் பணி நடைபெறுகிறது, ஒரு சமயத்தில் அந்த சுரங்கத்தின் முதலாளிதான் தனது தந்தை என தெரிய வருகிறது. அவரிடமிருந்து கிடைத்த பணத்தை சுருட்டிக்கொண்டு சென்று விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறான், ஆனால் அங்கிருந்து போக முடியாத ஒரு சூழலில் மாட்டுக்கொள்கிறான், அது என்ன சூழல் அங்குள்ள மக்களின் வினோத வாழ்க்கைக்கு என்ன காரணம் என்பதை நகைச்சுவையாக விவரிப்பதே இந்த ‘சிங் கீதம்’ படத்தின் கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அயான், எதார்த்தமான கதாபாத்திரத்தில் ஒரு ஜாலியான இளைஞராக வலம் வருகிறார். எனினும் சென்டிமென்ட் காட்சிகளில் நம் கண்களை கலங்கடிக்கிறார், நாயகியாக நடித்திருக்கும் அஹல்யா பம்ரூ ஒரு கிராமத்து பூ போல நடித்துள்ளார், அவரது நடிப்பு நமக்கு நாம் பார்க்கும் அன்றாட பெண்ணின் குறும்புத்தனம் போல அனைவரையும் ஈர்க்கிறது,

அதே போல தங்க சுரங்கத்தின் உரிமையாளராக ஷாலினி கொண்டேபூடி நடித்துள்ளார் , அழகான முக பாவனை மூலம் ரசிகக்களை கவர்கிறார்.

இந்த படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்களாக நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன், சிவ நாராயணா, பெனர்ஜி மற்றும் வாம்சி தங்களது கதாபாத்திரதை கச்சிதமாக கொடுத்துள்ளனர்,

இந்த படத்தில் கூடுதல் பொறுப்பு இசையமைப்பாளருக்கு தான், படத்தில் பல பாடல்கள் இருந்தால் சற்று தொய்வு அடையும் இந்த காலத்தில் மக்கள் பேசுவதை பாடலாக்கி அதனை ரசிக்கும் படியாகவும் செய்துள்ளார், கண்டிப்பாக இசையமைப்பாளர்கள் தேவி ஸ்ரீ பிரசாத், பெரிதும் பேசப்படுவார், அதே போல் ஒளிப்பதிவாளர் அங்கூர்.சி உண்மை எது, செயற்கை எது என்று கண்டறிய முடியாதபடி காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

பேசும் படம்’ மூலம் சினிமா உலகையே கவர்ந்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இப்படி ஒரு வித்தியாச படைப்பை கொடுத்து மீண்டும் நம்மை பிரம்மிக்க செய்துள்ளார்,
புதிய மற்றும் வித்தியாசமான முயற்சி என்றாலும், அதை சரியான முறையில் திரையில் கொண்டு வந்துள்ளார், இத்தனை வருடங்கள் கடந்தும் அதே உழைப்பை கொடுத்துள்ளது ஆச்சர்யம் தான் ,

மொத்தத்தில், ‘சிங் கீதம்’ கண்டிப்பாக அனைவரையும் வியக்க வைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here