இயக்குனர் – நிசாம் பஷீர்
நடிகர்கள் – பிரித்விராஜ், பார்வதி திருவோத்து ,ஹக்கிம் ஷாஜகான், அசோகன், விஜயராகவன், டி.சங்கர் ராமகிருஷ்ணன்,
இசை – ஜேக்ஸ் பிஜாய்
தயாரிப்பு – சுப்ரியா மேனன்
ஒரு ஊரில் உள்ள வங்கி ஒன்றில் ஒரு மூவர் கொள்ளையடிக்கின்றனர், அங்கு வந்திருந்த ஒருவரை பிணைக்கதியாக வைத்து கொண்டு அங்கிருந்து தப்பி விடுகின்றனர், அப்படி தப்பிக்கும்போது மூவரில் ஒருவனது அடையாளம் அந்த பிணைக்கைதி இடம் சிக்கிக் கொள்கிறது , அந்த மூன்று திருடர்களும் இறந்து விடுகின்றனர், அந்த ஆதாரத்தை வைத்து காவல்துறை விசாரணை செய்கின்றனர், ஆனால் அந்த பிணைக்கைதிக்கு அந்த வங்கியில் எந்த கணக்கும் இல்லை , அவன் சம்பந்தப்பட்ட யாருக்கும் கணக்கு இல்லை , இது விசாரணைக்கு குழப்பமாக இருக்கிறது , ஒரு சமயம் பார்வை அனைத்தும் அந்த நபரின் மீதும் அந்த குடும்பத்தின் மீதும் திரும்ப இது அவருக்கு பெரிய பிரச்சனையாக அமைகிறது, இதிலிருந்து அவர் தப்பித்தாரா , எதற்காக அந்த வங்கிக்கு சென்றார் என்பதை பல திருப்பங்களுடன் சொல்வதே இந்த ‘ஐ , நோபடி’ .
இந்த படத்திற்கு நாயகனாக பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ளார், மொத்த படத்தை அவர் தாங்கி பிடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். பல காட்சிகளில் தனது மெளனத்தின் மூலமாகவே அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறார். நாளுக்கு நாள் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிப்பவர், இந்த முறையும் அதையே செய்துள்ளாளார், அதற்கு தான் நடிப்பால் தீனி போட்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதே போல் நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் பார்வதி திருவோத்து, கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவராக, இயல்பான நடிப்பை கொடுத்து ரசிகர்களிடம் இடம் பிடித்துள்ளார், காவலர் கதாபாத்திரத்தில் கொள்ளை பணத்தை தேடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹக்கிம் ஷாஜகானின் அமைதியான முகமும், தேடல் மிக்க நடிப்பும் கதாபாத்திரத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்த்திருக்கிறது.ஜேக்கப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அசோகன், முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜயராகவன், டி.எஸ்.பியாக நடித்திருக்கும் சங்கர் ராமகிருஷ்ணன், வங்கி கொள்ளை வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு அதிகாரியாக நடித்திருக்கும் மதுபால், பிரித்விராஜின் மூத்த மகளாக நடித்திருக்கும் ஜியா மற்றும் இளைய மகளாக நடித்திருக்கும் சிறுமி அனைவரும் திரைக்கதையின் பதட்டத்தை அதிகரிக்கும் வகையில் சிறப்பாக நடித்துள்ளனர்,
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார், அவரது இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை என்றாலும் பின்னணி இசை படத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும், அதே போல் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், பிரம்மாண்ட காட்சிகளை சிறப்பாக தத்ரூபமாக காட்சி படுத்தியுள்ளார், நம்மை இருக்கை நுனியில் அமரும் வண்ணம் அவர் ஒளிப்பதிவு இருந்தது என்றுதான் கூற வேண்டும்.
என்னதான் கதையின் மையக்கரு வங்கி கொள்ளை சம்பவம் என்றாலும் , கொள்ளையடித்தவர்களை தவிர்த்துவிட்டு, அதற்கு சம்மந்தமே இல்லாத ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு, காட்சிக்கு காட்சி திருப்பம் கொடுத்து நம்மை இயக்குனர் கவர்ந்துள்ளார், நிச்சயம் எழுதாளருக்கும் பெரிய பாராட்டுகள் மொத்த குழுவும் சேர்ந்து படத்தை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு செய்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில், ‘ஐ , நோபடி’ அனைவரையும் மிரள வைக்கும்.

