இயக்குனர் – மகேஷ் ராஜேந்திரன்
நடிகர்கள் – பவீஷ் , நாக துரகா, கே.எஸ்.ரவிக்குமார், செல்வராகவன்
இசை – பாக்ஸன்
தயாரிப்பு – தினேஷ் ராஜ் தனஞ்செயன்
ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவன் ஒரு நல்ல வேலையில் இருக்கிறான், தனது சம்பளம் முழுவதையும் அப்பாவிடம் கொடுத்து விட்டு தனக்கென எந்த செலவும் செய்யாமல் வாழ்கிறான், தனக்கென ஒரு பைக் கூட இல்லாமல் இருக்கேன், இந்நிலையில் அவனுக்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது, அந்த காதல் அவனை மிகப்பெரிய கடனுக்குள் சிக்க வைத்து , அவனது வேலையையும் பரி போகும் நிலைக்கு கொண்டு வந்து விடுகிறது, இந்நிலையில் அந்த பெண்ணை மறந்து விட முடிவு செய்கிறார். ஆனால் அந்த பெண் நாயகனை தான் திருமணம் செய்வேன் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார், இதன் பின் என்ன ஆனது, இருவரும் இணைந்தனரா இல்லை பிரிந்தார்களா என்பதை நகைச்சுவையாகவும், நாகரீகமாகவும் சொல்வதே படத்தின் மீதிக்கதை.
இந்த படத்தில் தனுஷின் இயக்கத்தில் வெளிவந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த பவிஷ் தான் இதிலும் நடித்துள்ளார், முதல் படத்தில் தனுஷின் அறிவுரையில் சில நுணுக்கங்களை தேர்ந்து நடித்திருப்பார் , இந்த படத்தில் மேலும் அவரது நடிப்பு மெருகேறியுள்ளது என்றுதான் கூற வேண்டும், எளிமையாக இருப்பது அவரது கதாபாத்திரத்தை நம்முடன் ஒன்ற செய்துள்ளது, தன் கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு சிறப்பாக செய்துள்ளார் ,
கதாநாயகியாக புதுமுக நடிகை நாக துரகா நடித்துள்ளார், அவரும் ஒரு நாயகி போன்ற தோற்றம் இல்லாமல் பக்கத்து வீட்டுப் பெண் போல் எளிமையாக இருப்பதால் அவரும் நம்மிடம் ஒன்றி விடுகிறார், மேலும் இதில் நாயகனின் தந்தையாக கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளார், மற்றொரு கதாபாத்திரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக செல்வராகவன் நடித்துள்ளார்,
இந்த படத்திற்கு பாக்ஸன் இசையமைத்துள்ளார், அவரது இசையில் பாடல்களை விட பின்னணி இசை ஒரு படி மேல் என்றுதான் சொல்ல வேண்டும். அதே போல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தி கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
ஜெயம் ரவி – ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் உதவி இயக்குநராக இருந்த மகேஷ் ராஜேந்திரன் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார் ,ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான அனைத்தும் இந்த படத்தில் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார், காதல் மகிழ்ச்சி மட்டுமல்ல எதிர்பார்க்காத வலிகளையும் கொடுக்கும் அதை நாம் சரியான முறையில் கையாள வேண்டும் என்பதை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்,
மொத்தத்தில், ‘லவ் ஓ லவ்’ ஒரு நாகரீகமான காதல் .

