இயக்குநர் – அசோக் குமார் கலைவாணி
நடிகர்கள் – சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி , ஒய்.ஜி.மகேந்திரன், பிரது, நோபல் ஜேம்ஸ், வித்யா, நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம்
இசை – அஸ்வின் ஹேமந்த்
தயாரிப்பு – ஜென் ஸ்டுடியோ – புகழ் & ஈடன்
ஒரு குடும்பம் காதல் திருமணம் என்பது பாவசெயல் என்ற எண்ணத்துடன் இருக்கின்றனர், அந்த குடும்பத்தில் பிறந்த ஒருவன் காதல் மற்றும் காதலர்களுக்கான ஆப் ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறார். இந்நிலையில் ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் ஒரு பெண் குடும்ப வாழ்க்கையை நம்பாமல் தனித்து வாழ விரும்புவதோடு, திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நோக்கி பயணிக்கிறார். இதற்கிடையே காதல் மற்றும் காதலர்களுக்கான செயலியை உருவாக்குவதற்கு, போலியாக ஒரு பெண்ணை காதலித்து அதன் மூலம் காதல் பற்றி தெரிந்துக்கொள்ள நாயகன் முடிவு செய்கிறார். அதே போல் அந்த பக்கம் நாயகியும் காதல் கதை எழுதுவதற்காக போலியாக ஒருவரை காதலிக்க முடிவு செய்கிறார். இப்படி போலியாக காதலிக்க நினைக்கும் இவர்கள் ஒருவரை சந்தித்துக்கொள்கிறார்கள். இவர்களது போலியான காதல் அவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பது தான் இந்த படத்தின் மீதிக்கதை.
இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சுதர்ஷன் கோவிந்த் நல்ல உயரம் கட்டுமஸ்தான உடல் பாவனை என ஆக்சன் ஹீரோ நாயகனாக இருந்தாலும் ஒரு அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் நடித்து தன் நடிப்பாற்றலை காட்டியுள்ளார். ஒருவன் காதலுக்கு முன், காதலுக்குப் பின் இருக்கும் தோற்றத்தில் உள்ள மாறுபாட்டை, காண்பித்திருக்கிறார்,
மேலும் இதில் நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா ரவி, நாயகனுக்கு பொறுத்தமான ஜோடியாக இருக்கிறார். இப்படம் நாயகனுக்கு இணையாக, திரைக்கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருப்பதால் தனது நடிப்பை அழகாக வெளிக்காட்டியுள்ளார்.
அது போக நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் பிரதோஷ் மற்றும் நோபல், வித்யா, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கல் ரவி, எம்.ஜெ.ஸ்ரீராம், ரெதிகா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
அஸ்வின் ஹேமந்தின் இசையில் பாடல்கள் கமர்ஷியல் அம்சங்களோடு திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கேட்ப அளவில் பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ராஜா பட்டர்ஜார்ஜி-யின் பணி காட்சிகளின் தரத்தை அதிகரிக்கச் செய்து காதலர்களின் உணர்வுகளை பார்வையாளர்கள் மனதில் கடத்தியிருக்கிறது. அவரது ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பிளஸ்.
இயக்குநர் அசோக்குமார் கலைவாணி, இந்த படத்தின் திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளை மிக எளிமையாக கையாண்டிருக்கிறார். காதலை மட்டுமே மையப்படுத்திய கதை என்றாலும், அதை குடும்ப உறவுகளின் பின்னணியோடு சொன்ன விதம் சுவாரஸ்யமாக இருந்தது, அதே போல் போலியாக காதலிக்கும் இருவரது மனதில் இருக்கும் உண்மையான காதல் வெளிப்படும் காட்சிகள் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது.
மொத்தத்தில், ‘நீ ஃபாரெவர்’ (Nee Forever) காதலர்களுக்கான ஒரு ட்ரீட்




