Oh Butterfly Review

0

இயக்கம் – விஜய் ரங்கனாதன்
நடிகர்கள் – நிவேதிதா சதிஸ் , சிபி சந்திரன் , அட்டுலும் நாசர்
இசை – வைசாக் சோமனாத்
தயாரிப்பு – அந்தில் சினிமா & பலம்பூர் டால்கிஸ் – வெங்கி , ஆனந்த்

ஒரு பெண் திருமணமாகி சில மாதங்களில் தன் கணவரை இழக்கிறார்,அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதோடு, தன்னை சுற்றியிருப்பவர்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு தான் தான் காரணம் என்று நினைக்கிறார்.இப்படியே நடக்க ஒரு சமயத்தில் தான் இறந்தால் அனைத்தும் சரியாகி விடும் என்ற மனநிலைக்கு வந்து தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகிறார். அப்போது, அவருக்கு ஆலோசனை வழங்கி உண்மையை புரிய வைக்கும் முயற்சியில் ஒரு பெண் ஈடுபடுகிறார். தன் திருமண வாழ்க்கை மற்றும் முதல் காதல் பற்றிய விபரங்களை அந்தப் பெண்ணுடன் பகிர்ந்து கொள்கிறாள்,ஒரு கட்டத்தில் தன் கணவரை தான் தான் கொலை செய்ததாக கூறி அதிர்ச்சியளிக்கிறார். உண்மையிலேயே அவளது கணவர் இறப்பிற்கு காரணம் என்ன ? இதன் பின் என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நிவேதிதா சதிஷ் நடித்திருக்கிறார்,இந்தப் படம் முழுக்க முழுக்க நாயகியை மையமாக வைத்து உருவானது , இந்த சவாலை மிக சாதாரணமாக கையாண்டுள்ளார் . தன் முந்தைய படங்களில் சிரு சிரு கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்திருப்பார் , ஆனல் இந்த படம் முழுக்க தன் நடிப்பு திறனை வெளிக்காட்டியுள்ளார். அதே போல

நிவேதிதாவின் முன்னாள் காதலராக நடித்திருக்கும் சிபி சந்திரன், கணவராக நடித்திருக்கும் அதுல் இருவரும் தங்களது வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள். குறிப்பாக அதுல் அதீதமாக நடிக்க கூடிய வாய்ப்புகள் இருந்தும், அளவாக நடித்திருப்பது பார்வையாளர்களுக்கு பெரும் ஆறுதல் அளித்திருக்கிறது. சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தனது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் படத்திற்கு பெரும் அடையாளமாக நாசர் பயணப்பட்டிருக்கிறார்.

வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் குறைவாக இருந்தது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.அதெ போல் ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன் காட்சிகளை நுட்பமாக கையாண்டுள்ளார், சிறு சிறு சம்பவங்கள் கூட திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை தன் கேமரா மூலம் புரிய வைத்திருக்கிறார்.

ஒரு பெண்ணின் மன உலைச்சல் அந்தப் பெண்ணை எந்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது என்பதே முக்கிய கரு. அவளின் சிந்தனை மாறி மாறி ஒரு சமயத்தில் அனைத்திற்கும் பொறுப்பை அவள் தலையில் போட்டுக் கொள்கிறாள். அனைத்து செயல்களும் தற்செயலாக நடக்கிறதே தவிர அதற்கு யாரும், எந்த வகையிலும் காரணமாக இருக்க முடியாது என்பதை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் விஜய் ரங்கநாதன்.

மொத்தத்தில், இந்த ‘ஓ பட்டர்ஃப்ளை’ நல்ல தத்துவம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here