இயக்கம் – ப்ரவீன் சரவணன்
நடிகர்கள் – சதிஸ் , சுரேஷ் ரவி , மோனிகா
இசை – எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட்
தயாரிப்பு – தி மாபோகோஸ் கம்பேனி – பிரதீப் மஹாதேவன்
சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சி பணிபுரியும் ஒருவன், ஒரு டாக்டர் பெண்ணை காதலித்து வருகிறார். இவர்களின் காதலை அவர்களது வீட்டில் தெரிவிக்கின்றனர், இரண்டு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கின்ற்னர், இந்த சமயத்தில் நாயகன் வேறு ஒரு பெண்ணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகிறது. நண்பர் மூலம் இந்த தகவலை அறிந்துக் கொள்ளும் அவன், இந்த விஷயம் காதலிக்கு தெரிந்தால் திருமணம் நின்றுவிடும் என்ற பயத்தில்,யாருக்கும் தெரியாமல் திருமணத்திற்கு முன்பாக எப்படியாவது அந்த வீடியோவை நீக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த வீடியோவில் அவருடன் இருப்பது யார் , அவருக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் இருதியில் திருமனம் நடந்ததா இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை’
நகைச்சுவை நாயகனாக வளர்ந்து வரும் சதிஸ் இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார், காதலை காப்பாற்ற பொய், அந்த பொய்யினால் ஏற்பட்ட பிரிவு, பிரிவை சரி செய்யும் முயற்சி, அதையடுத்து திருமண சமயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனை, அதை சரி செய்ய எதிர்கொள்ளும் போராட்டங்கள் என் இந்த கால இலைஞன் எப்படி பிரச்சினைகளை கையாள்வானோ அதே போல் படத்தில் நடித்துள்ளார்,
நாயகி மோனிக்கா படம் முழுக்க நடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார், மேலும் இப்படத்தில் சதீஷின் நண்பராக சுரேஷ் ரவி நடித்துள்ளார், படம் முழுவதும் வரும் சுரேஷ் ரவி, சதிஷுக்கு இணையான வேடம் மட்டும் இன்றி, அவருக்கு இணையாக காமெடி காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அவரது இருப்பு காட்சிக்கு பலமாக அமைந்துள்ளது. அதைத்தவிர நாயகர்களின் நண்பராக நடித்திருக்கும் கருணாகரன், வழக்கம் போல் தனது டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைப்பவர், படத்தின் முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார். மேலும் சுரேஷ் ரவிக்கு ஜோடியாக மானசா செளத்ரி னடித்துள்ளார்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பார்ட்டி இசை நடனம் ஆடும் வண்ணம் இருந்தது , அதே போல மற்ற பா பாடல்களும் நன்றாக இருந்தது, பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. மேலும் ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவ்ய் செய்துள்ளார், படம் முழுவதும் கலர்புல்லாக இருந்தது.
எதிர் பாராத ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் நாயகன், தனது நண்பர்களின் உதவியோடு அந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான போராட்டத்தை நகைச்சுவை கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பிரவீன் சரவணன். முதல் பாதியில் காமெடியாக தொடங்கி இறுதி வரை ஒரு பதட்டம் கலந்த காமெடி கொடுத்து நம்மை ரசிக்க செய்துள்ளார்
மொத்தத்தில், ‘முஸ்தபா முஸ்தபா’ ஒரு காமெடி கலாட்டா.



