தாய் கிழவி – விமர்சனம்

இயக்கம் – சிவக்குமார்
நடிகர்கள் – ராதிகா, சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த்
இசை – நிவாஸ் கே பிரசன்னா
தயாரிப்பு – பேசன் ஸ்டுடியோ & சிவகார்த்திகேயன்

தன் கணவனை இழந்த மூதாட்டி ஒருவர் தனது கடின உழைப்பால் சுயமாக சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, அதை தனது பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தான் உயிருடன் இருக்கும் வரை தானே அனுபவிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார், ஒரு நாள் திடீரென்று ராதிகா உடல்நிலை பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்து விடுகிறார். இதனால், ஊர் மக்களும், அவரது சொந்த மக்களும் அவரது இறப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க, யாருக்கும் தெரியாமல் ஒரு செயலை செய்து விடுகிறார், அதை எதிர்பாராத அவரது பிள்ளைகள் அந்த கிழவியின் இறப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது அவரது மூன்று மகன்கள், அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் நினைத்தது போல் அந்த கிழவி பிழைத்தாரா?, அவர் என்னசெய்தார் என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தில் பவுனுத்தாயி என்ற கதாபாத்திரத்தில் ஒரு மூதாட்டியாக நடித்துள்ளார் நடிகை ராதிகா. தைரியம், திமீர், தன்னம்பிக்கை ஆகியவற்றை தனது அதீதமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார், நாம் கிராமத்தில் பார்க்கும் பல கிழவியின் சாயல் இதில் தோன்றும்.

மேலும் ராதிகாவின் மகன்களாக நடித்திருக்கும் சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், மகளாக நடித்திருக்கும் ரைச்சல் ரபேக்கா, மருமகனாக நடித்திருக்கும் முத்துக்குமார், உறவினராக நடித்திருக்கும் முனீஷ்காந்த், நகைக்கடை முதலாளியாக நடித்திருக்கும் இளவரசு ஆகியோர் தங்களது வழக்கமான நடிப்பின் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் பலமாக இருந்தது. மேலும் ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார், தன் கேமரா மூலம் தென் தமிழக கிராமத்து மண்ணையும், மண் சார்ந்த மக்களையும் திரையில் கொண்டு வர அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். அவரது மெனக்கெடல் கண்டிப்பாக பலன் அளித்துள்ளது,

இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கியுள்ளார் இதில் அவர் சொல்ல வந்தது பெண்கள் சுயமாகவும், தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ வேண்டும் என்பது தான், அதை ஒரு காமெடி ஜானரில் சொல்லியுள்ளார்.

மொத்ததில் இந்த தாய் கிழவி நம்மை கண்டிப்பாக சிரிக்க வைத்து சிந்திக்கவும் செய்து விட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *