சக்தித் திருமகன் – விமர்சனம்

0

‘அருவி’ போன்ற பெண்ணியக் கதைக்களத்தைக் கொடுத்த இயக்குநர் அருண் பிரபு, மீண்டும் சமூக அமைப்பில் அதிருப்தி கொண்ட ஒரு தனி மனிதனின் கதையை கையாண்டுள்ளார். இந்த அரசியல் நாடகமான ‘சக்தித் திருமகன்’, விஜய் ஆண்டனியின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

1989-ல் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பழங்குடிப் பெண் ஒருவர் இறந்து விடுகிறார். இச்சம்பவம் ஒரு கைக்குழந்தையை அநாதையாக்குகிறது. சடலத்தைக் கண்டுபிடித்த ஆய்வாளர் கலக்கமடைகிறார். கிராமவாசிகள் குழப்பத்தில் இருக்க, இந்த தற்கொலைக்குப்பின் பெரிய சக்திகள் இயங்குகின்றன. தொலைபேசி அழைப்புகள், ஒப்பந்தங்கள், தார்மீகச் சீரழிவுகள் என அனைத்தும் அரங்கேற, பெண்னின் மரணத்தை மூடிமறைக்க குழந்தையைக் கைவிடுகிறார்கள். அதன் பின் கதை நிகழ்காலத்திற்கு மாறுகிறது. ஒரு அரசியல் தரகராக அறிமுகமாகிறார் நாயகன். சட்டம் மற்றும் சட்டவிரோதமான இருபுறமும் செயல்படும் ஒரு பாத்திரத்தில் அவர் தோன்றுகிறார். தேவைப்படுபவர்களுக்கு உதவுவதுடன், அதிகாரப் போட்டிகளுக்கும் துணைபோகிறார். ₹6,000 கோடி ஊழல் ஒன்று கதாநாயகனின் வாழ்க்கையை அச்சுறுத்த, அவர் அதிலிருந்து விடுபட முயற்சிக்கிறார். அரசியல் அதிகாரப் போராட்டங்களின் பின்னணியையும் நுணுக்கங்களையும் விரைவாக அமைக்கின்றது.

‘அருவி’ படத்தில் சமூகக் குறைபாடுகளை வெளிப்படுத்திய அதே தைரியத்துடன் கோபத்தைப் பதிவு செய்கிறது. ‘சக்தித் திருமகன்’ ஒரு கோபமான குற்றச்சாட்டாகும். இது பழைய பாணி திரைப்படங்களை நினைவுபடுத்துகிறது. அங்கு அரசியல் பிரச்சினைகள் நேரடியாகக் கையாளப்பட்டு, பொதுமக்கள் அறிவூட்டப்படும் வகையில் தகவல்கள் வழங்கப்படுகின்றன. முதல் பாதி பரபரப்பான கதைக்களத்துடன், கதாநாயகன் ஒரு வலுவான திட்டத்தை வகுப்பதும், அவரது உண்மையான நோக்கங்கள் மறைக்கப்படுவதும் சுவாரஸ்யமாக செல்கிறது.

விஜய் ஆண்டனி தேநீர் விற்பதிலிருந்து அரசியல் தரகராக உயர்ந்த ஒருவராக சிறப்பாக நடித்துள்ளார். கவனமாக செயல்படுத்தப்படும் திட்டங்களை முன்னிலைப்படுத்தும் காட்சிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அரசு அமைப்பால் கைவிடப்பட்ட ஒரு சாதாரண மனிதனின் விரக்தியையும், நம்பிக்கையற்ற தன்மையையும் வெளிப்படுத்த அவர் முயற்சி செய்கிறார். இது சமீப காலங்களில் அவரது சிறந்த நடிப்புகளில் ஒன்றாகும்.

காதல் ஓவியம் கண்ணன் இந்த படத்தில் அயங்கர் கதாபாத்திரத்தில் பல வருடங்கள் கழித்து வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். க்ரிஷ் ஹசன், வாகை சந்திரசேகர், செல் முருகன், ஹீரோயின் திருப்தி ரவீந்திரா போன்றவர்கள் கொடுத்த வேலையை செய்துள்ளனர். விஜய் ஆண்டனியின் இசை படத்திற்கு உற்சாகத்தை சேர்க்கிறது.

அருண் பிரபு புருஷோத்தமன் இந்த படத்தின் மூலம் பெரிய இயக்குநராக ஒரு படி மேலே வந்துள்ளார். படம் எப்படி இருக்கு?: அவரது முந்தைய திரைப்படங்களைப்போல் அல்லாமல், ‘சக்தித் திருமகன்’ புதிய அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் அதிகாரப் பரிமாற்றங்களை மிக நுணுக்கமாக ஆராய்கிறது. அவரது முந்தைய படங்களின் நிதானமான பாணி மாறி, ‘சக்தித் திருமகன்’ திரைப்படம் அதிரடியான, பரந்த அரசியல் விமர்சனத்தை முன்வைக்கிறது. ஒரு ஷங்கர் படத்தைப் போன்ற விழிப்புணர்வுடன், டிக்டாக் மற்றும் ரீல்ஸ் காலத்திற்கு ஏற்ற ஒரு அரசியல் அறிக்கையாக இந்தப் படம் அமைந்துள்ளது. ஊழல் மற்றும் அமைப்புக் குறைபாடுகளை ஒரு அரசியல் தரகரின் கண்ணோட்டத்தில் படம் சித்தரிக்கிறது. அரசு முடிவெடுக்கும் வழிமுறைகள் மற்றும் குடிமை அமைப்புகள் எப்படி சில தனிநபர்கள் மற்றும் முதலாளித்துவ சக்திகளால் கையாளப்படுகின்றன என்பதைப் படம் வெளிப்படுத்துகிறது .

இந்த சக்தி திருமகனை கண்டிப்பாக பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here