இயக்குனர் – தயாள் பத்மநாபன்
நடிகர்கள் – வெற்றி, பிரிகிடா சாகா, ரங்கராஜ் பாண்டே
இசை – தர்புகா சிவா
தயாரிப்பு – சபரீஷ்
நன்கு பட்டபடிப்பு படித்த ஒருவன் பல இடங்களில் வேலைக்காக தேடி அலைகிறான், என்னதான் நன்கு படித்திருந்தாலும் அதற்கேற்ற வேலை இல்லாததால் வறுமையில் வாடுகிறான், அதனால் திருடுகிறார். ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை அதையே தொழிலாக செய்கிறார், இந்நிலையில் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை குற்றவாளியாகிறார். வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதிக்கிறது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தன் குற்றத்திற்கான தண்டனையாக இருந்தாலும், அதனை எதிர்த்து போராடுகிறார், இதன் பின் என்ன ஆனது? அவர் விடுதலையானரா , இல்லை அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதா என்பதே படத்தின் மீதிக்கதை.
எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் வெற்றி அதே பாணியை இந்த படத்திலும் செய்துள்ளார், வழக்கமான அவரது அளவான நடிப்பு அவரது கதாபாத்திரத்துக்கு பெரிதும் நியாயம் சேர்த்துள்ளது, படம் முழுவதும் பேசினாலும் நம்மை கவரும் வண்ணம் அதற்கேற்ற திரைக்கதையை இயக்குனர் கொடுத்துள்ளார்,
அதே போல நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகாவும் தனது கிராமத்து கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார்.மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறைச்சாலை அதிகாரியாக நடித்திருக்கிறார் ரங்கராஜ் பாண்டே,
நேர் கொண்ட பார்வை படத்தில் வாதாடும் கதாபாத்திரம் போல நாயகனின் வாதத்திற்கு எதிர்வாதம் செய்யும்போது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதைக்கு பெரிதும் உதவியுள்ளனர்.
இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார், அர்த்தமுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் பெரிதும் கவர்ந்துள்ளார் ,அதே போல ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது, , எதார்த்தமான வாதாடும் காட்சிகளை கூட ரசிக்கும் காட்சியாக படமாக்கியிருப்பது பார்வையாளர்களையும் கதையுடன் பயணிக்க வைக்கிறது.
இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கும் தயாள் பத்மநாபன் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் மரண தண்டனையும் ஒரு கொலை தான், என்ற வாதத்தை முன் வைக்கிறார், அதற்கேற்ப திரைக்கதையை உருவாக்கி நம்மை கவர்ந்துள்ளார், படத்தின் தலைப்பு 1944 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த சி.என். லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கிறக்கான பின்னணி இருந்தாலும் அதற்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவரின் சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் குற்ற பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு நீதி வழங்க வேண்டும் என்பதை அனைவருக்கும் புரியும் வண்ணம் கூறியுள்ளார் ,
மொத்தத்தில், ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ நல்ல சமூக கருத்துள்ள ஒரு படம்.




