ராவ் பகதூர் – விமர்சனம்

0

இயக்குனர் – வெங்கடேஷ் மஹா

நடிகர்கள் – சத்ய தேவ், தீபா தாமஸ் , விகாஸ்

இசை – ஸ்மரன் சாய்

தயாரிப்பு – அனுராக் ரெட்டி, சரத் சந்திரா

ஒரு வயதான செல்வந்தர் இறக்கும் தருவாயில் இருக்கிறார் எனினும் நடமாடிக் கொண்டிருக்கிறார், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொள்கிறார், ஏதோ ஒரு காரணத்திற்காக தன் உயிரை கையில் பிடித்து கொண்டுள்ளார் என்பது தெரிகிறது . அவரது மனைவி ஒரு அறையில் தன்னை பூட்டிக்கொண்டு வெளியே வராமல் இருக்கின்றார், இந்த குடும்பத்திற்கு உதவியாக ஒரு மருத்துவர் இருக்கிறார், அவர்தான் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார், அந்த வயதானவர் மனதில் நினைத்துக் கொண்டிருப்பது என்ன , அந்த வீட்டில் இருக்கும் மர்மங்களும் அதன் பின்னணியும் என்ன என்பது தான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தில் நாயகனாக சத்ய தேவ் நடித்துள்ளார், அவரது தோற்றதுக்காக மிகவும் சிரமப்பட்டுள்ளார் எனது நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது, என்னதான் ப்ராஸ்தெடிக் மேக்கப் போட்டிருந்தாலும் அவருடைய நடிப்பு அந்த மேக்கப்பை தாண்டி நன்றாக தெரிகிறது. அவரது கேரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்.

முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் சம்பந்தம் இல்லாமல் ஒரு சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். அதே போல் நாயகியாக தீபா தாமஸ் நடித்துள்ளார், நர்ஸ் ரேணுகாவாக அவர் அறிமுக காட்சியிலேயே நம்மை ஈர்க்கிறார். அதே போல் ஃபிளாஸ்பேக் காட்சியில் இளம் பெண்ணாக நர்ஸாக வரும் காட்சிகளில் நம்மை கவர்கிறார்.

மருத்துவர் ஆச்சாரியாக வரும் விகாஸ் அளவான தேர்ந்தெடுத்த நடிப்பால் கதைக்கு மேலும் மெருகூட்டுகிறார். இந்த படத்தை நாயகனுக்கு இணையாக அவர் படம் முழுக்க பயணிக்கிறார். பாலா பராசர் , ஜகந்தாதன் , ஆனந்த், ப்ரணய் வகா, குணால் கௌஷிக், ஆகியோர் திரைக்கதை நகர்வுக்கு தங்களது பங்களிப்பை கொடுத்துள்ளனர்,

இந்தப்படத்திற்கு ஸ்மரன் சாய் இசையமைத்துள்ளார், அவரது இசையில் வரும் பாடல்கள் அவ்வளவு அழகாக இருந்தது, மீண்டும் மீண்டும் கேட்கும் வண்ணம் இசையமைத்துள்ளார். பாடல்களை தாண்டி பின்னணி இசையிலும் தனது திறமையை காட்டியுள்ளார். இந்த படத்திற்கு கார்த்திக் பர்மர் ஒளிப்பதிவு செய்துள்ளார், படம் முழுக்க ஒரே சூழலில் நடந்தாலும் தனது ஒளிப்பதிவின் மூலம் சலிப்படையாமல் காட்சிகளை பதிவிட்டுள்ளார்,

இந்த படத்தை இயக்குனர் வெங்கடேஷ் மஹா இயக்கியுள்ளார், அவரது படத்திற்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர், ஒரு சாதாரண முன் கதையை வைத்துக் கொண்டு அதற்கு சிறப்பான ஃப்ளாஷ்பேக் சொல்லி நம்மை ஆட்கொண்டுள்ளார், ஆங்காங்கே சில இடங்களில் நமக்கு புரியாமல் இருந்தாலும் இறுதியில் அனைத்திற்கும் பதில் சொல்லியுள்ளார், அதை சொன்ன விதத்திற்கு பாராட்டுகள். நிச்சயம் அவரது படங்களில் இது ஒரு முக்கிய இடம் வகிக்கும்,

இந்த “ராவ் பகதூர்” நம்மை கவரும் ஒரு உலக சினிமா .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here