இயக்குனர் – ராஜூ முருகன்
நடிகர்கள் – சசிகுமார், சைத்ரா ஜே ஆச்சார், குரு சோமசுந்தரம், ஆஷா சரத்
இசை – ஷான் ரோல்டன்
தயாரிப்பு : ஒலிம்பியா பிக்சர்ஸ்
கோவில்பட்டி தீபெட்டி கம்பெனியில் வேலை செய்யும் மனைவிக்கு வயிறு வலி ஏற்பட, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார் ஒருவர். அங்கே சரியான சிகிச்சை கிடைக்காததால் தனியார் மருத்துவமனையை நாடுகிறார். அங்கே ஏற்படும் செலவுகளுக்காக வட்டிக்கு பணம் வாங்குகிறார். அதை திரும்ப செலுத்த முடியாமல் தவிக்க, ‘நீயும், உன் மனைவியும் கிட்னியை விற்று கடனை அடையுங்க’ என்று பணம் கொடுத்தவர் மிரட்டுகிறார். அதற்கு பயந்து ஊரை விட்டு ஓட, பட்டாசு தீவிபத்தில் இவர்கள் இறந்துவிட்டதாக போலி சான்றிதழ் தயாரித்து பணம் பெறுகிறார் வட்டி கொடுத்தவர். ‘நாங்க இறக்கவில்லை’ என்று மீண்டும் ஊருக்கு வந்து போராடுகிறார்கள் , இதன் பின் என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
இயக்குனர் ராஜூ முருகன். கிட்னி திருட்டு, சட்ட விரோத கிட்னி விற்பனைதான் படத்தின் மையக்கரு. அதில் பணத்துக்காக, குடும்ப சூழ்நிலைக்காக ‘அப்பாவிகள்’ எப்படி சிக்குகிறார்கள். அவர்களை எப்படி ஒரு கூட்டம் ஏமாற்றுகிறது என்பதை மையமாக சொல்லும் கதை. நம் அடிக்கடி செய்திகளில் படிக்கும் சம்பவங்கள்தான் என்றாலும், அதை கொஞ்சம் கமர்ஷியல், நக்கல், அரசியல் சட்டயர் கலந்து கொடுத்திருப்பதால் மை லார்ட் நிறையவே யோசிக்க வைக்கிறது,
இப்படத்தில் நடிகர் சசிகுமார் ஒரு மேம்பட்ட என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார், பல காட்சிகளில் அவரது நடிப்பு வெகுவாக கவர்ந்தது. முத்து சிற்பி என்ற அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் சசிகுமார் என சொல்லலாம்.
கோவில்பட்டி சுசீலாவாக மாறி, நடிப்பில் மிரட்டியிருக்கிறார் கன்னட நடிகை சைத்ரா. அவரின் உடல் மொழி, உடை, மேக்கப் எல்லாமே கச்சிதம். லோக்கல் நிருபராக வரும் குரு.சோமசுந்தரம் நடிப்பு ஜோக்கர் படம் போலவே இதிலும் கவனம் ஈர்க்கிறது,
இந்த படத்தின் கதையில் அரசை, அரசியல்வாதிகளை ஆங்காங்கே கிண்டல் அடிக்கும் காட்சிகள் உள்ளது. இப்படி பல குறைகள் இருந்தாலும் வள்ளலார் தத்துவத்தை, இன்றைய காலகட்டத்தில் அவர் கருத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை ஆங்காங்கே இயக்குனர் சொல்லியிருக்கிறார்,
மொத்ததில் இந்த ” மை லார்டு ” கண்டிப்பாக உங்களை சிந்திக்க வைக்கும்.




