இயக்குனர் – அஸ்வின் சந்திரசேகர்
நடிகர்கள் – சந்தோஷ் சோபன், மனசா வாரணாசி, யோகி பாபு
இசை – ஆதித்யா ரவீந்திரன்
தயாரிப்பு – அஜய் குமார் ராஜு – யூ வி கிரியேஷன்
சொந்த ஊரை விட்டு தன் கனவு தொழிலான இன்டீரியர் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு ஒருவன் வருகிறான், ஆனால் அதற்கான வாய்ப்பு ஏதும் கிடைக்காமல் பைக் டாக்சி ஓட்டி வருகிறான், அதே போல ஒரு பெண்ணும் ஐடி துறையில் பணியாற்றி முன்னேறும் கனவோடு, சென்னையில் வேலை தேடி அலைகிறார். இந்த இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் சந்தித்துக் கொள்வதோடு, ஒரு இக்கட்டான சூழ்நிலையால் ஒரே வீட்டில் தங்கி ஒன்றாக பயணிக்கிறார்கள். அந்தப் பெண்ணை பார்த்ததும் அவனது கனவு நினைவாகிறது. அவர் நினைத்தபடி அவரது துறையில் ஒரு நல்ல இடத்தை பிடிக்கிறார். இப்படி இருவரும் தங்களது கனவு வாழ்க்கை நிஜமான மகிழ்ச்சியோடும், காதலோடும் பயணிக்கும் போது, ஒரு சிக்கல் ஏற்படுகிறது, அந்த சிக்கல் அவர்களது காதலை உடைத்ததா? அவர்கள் சேர்ந்து அதை சரி செய்தார்களா என்பதே இப்படத்தின் கதை.
இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் சோபன் ஒரு மலையாள நடிகர், தமிழுக்கு புதிய முகம் என்றாலும், தன் நடிப்பு மூலம் அந்த அடையாளத்தை மறைத்து பார்வையாளர்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுகிறார். சென்னையில் நாம் அன்றாட பார்க்கும் ஓர் இளைஞனை போல எளிமையான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்,
அதே போல நாயகியாக நடித்திருக்கும் மானசா வாரணாசி அழகான நடிப்பை கொடுத்துள்ளார், அனைத்து விதமான உணர்வுகளையும் ரசிகர்களிடம் கடத்தி விடுகிறார், கண்டிப்பாக இவரது நடிப்பு பேசப்படும் , படத்தில் யோகி பாபு வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவரது வழக்கமான டைமிங் வசனங்கள் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது. அதே போல மற்ற நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தினை புரிந்து கொண்டு சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்கள்,
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனின் இசையமைத்துள்ளார், அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் வண்ணம் உள்ளது.பின்னணி இசை கூடுதல் சிறப்பு. ஒளிப்பதிவாளர் தினேஷ் புருசோத்தமன் அற்புதமாக தனது பணியை செய்துள்ளார்,
இந்தப் படத்தை இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர் எழுதி இயக்கியுள்ளார் , இந்தப் படம் ஒரு காதல் கதை என்றாலும், அதனுடன் முன்னேற துடிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் பற்றி பேசும் படம், படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை மிக இயல்பாக பயணித்து பார்வையாளர்களை திரையோடு கட்டிப்போட்டு மிக சிறப்பான காதல் உணர்வையும், நம்பிக்கையையும் கொடுக்கும், நீண்ட கழித்து ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைத்திருக்கிறது.
மொத்தத்தில், இந்த ‘கஃபுல் பிரண்ட்லி’ நிச்சயம் நம் மனதில் இடம் பிடிக்கும்.




