இயக்குனர் – திரவ்
நடிகர்கள் – ஜி கிஷோர் குமார், சுபத்ரா ராபர்ட் , ஜார்ஜ் மர்யன் , ஹரிஷ் உத்தமன்
இசை – ஷங்கர் ரங்கராஜன்
தயாரிப்பு – ஹேஷ்டேக் எஃப் டி எஃப் எஸ் – திரவ்
தனியார் பள்ளியில் ஒருவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார், தனக்கென ஒரு சொந்த வீடு, மனைவி, இரண்டு பிள்ளைகள் என அன்பான குடும்பம், அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார், இந்நிலையில் அவருக்கு பாடகராக வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறாமல் போனதால் சற்று தோல்வி மனநிலையில் வாழ்கிறார். ஆனால், அவரது குரலுக்கு பெரும் ரசிகையாக இருக்கும் அவரது மகள், அவரை பாடகராக மேடை ஏற்ற ஆசைப்படுகிறார். தன் மகளுக்காக பாட முயற்சிக்கும் போது, குடும்பத்தார் மற்றும் சுற்றாரின் ஆதரவு இல்லாததால் மீண்டும் தடுமாற்றம் அடைகிறார். அதன் மூலம், தன்னிடம் இருக்கும் அனைத்தையும் இழந்து போன்ற உணர்வால், விரக்தி மற்றும் தோல்வி மனநிலைக்கு தள்ளப்படுகிறார். இதன் பின் அவரது வாழ்க்கை என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதை.
இந்தப் படத்தில் பெரிய பலம் நடிகர் கிஷோர் குமார் தான், ஏக்கங்களோடு வாழும் ஒரு குடும்ப தலைவரின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொரிந்தியுள்ளார், மேலும் தனது அளவான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்தின் உணர்வை மக்களிடம் வெளீப்படுத்தி விட்டார். மேலும் கிஷோரின் மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட், குடும்ப பாதுகாப்புக்காக அனுசரித்து போகும் மனைவியாக இயல்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.கிஷோரின் மகளாக நடித்திருக்கும் தனன்யா வர்ஷினி மற்றும் மகனாக நடித்திருக்கும் ஜஸ்வந்த் மணிகண்டன், இருவரும் நாம் அன்றாட பார்க்கும் பக்கத்தி வீட்டு குழந்தை போல நடித்துள்ளனர்.
சங்கர் ரங்கராஜின் இசையில் பாடல் வரிகள் ஆழ்ந்த அர்த்தத்துடன் இருந்தது, பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், காட்சிகள் எளிமையாக மக்களின் வாழ்வை போல இருந்தது.
இந்தப் படத்தை தயாரித்து ,எழுதி இயக்கியிருக்கிறார் திரவ், ஒரு சாதரண மனிதன் அவனின் கனவை நோக்கி ஓட முயற்சி செய்யும் போது அவனுக்கு குடும்பமும் சமூகமும் எப்படியான சிக்கலை கொடுக்கிறது என்பதை எழிமையாகவும் மிக அழகாவும் சொல்லியுள்ளார் இயக்குனர்,
மொத்தத்தில், ‘மெல்லிசை’ நம் ஆழ் மனதில் கேட்கும் ஒரு இசை.




