Home Blog Page 9

கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!

0

புஷ்பநாதன் புரடக்சன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் LLPஇணைந்து தயாரித்திருக்கும்  “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது!
மனித மனத்தில் ஒளிந்திருக்கும் கோபம், ஏமாற்றம் மற்றும்பழிவாங்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ள “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
 
“ஒவ்வொருவரின் மனதிற்குள்ளிருக்கும் சாத்தான் வேதம் சொன்னால் என்னவாக இருக்குமென்ற?” சிந்தனையை மையக் கருவாக  உருவாகியுள்ள இந்த பாடல், கோபத்தையும்,வஞ்சத்தையும் நேர்மறை சக்தியாக மாற்றி வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற உன்னத கருத்தை பொட்டில் அடித்தாற் போல் பேசுகிறது. “வாழ்ந்து காட்டி வஞ்சம் தீர்” என்ற மையக் கருத்து, பாடலின் ஒவ்வொரு காட்சியிலும், வரிகளிலும் வலிமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

புஷ்பநாதன் ஆறுமுகம் எழுதி, இயக்கியுள்ள இந்த பாடல், வாழ்க்கையில் சந்திக்கும் அவமானங்களும், வலிகளும், நிராகரிப்புகளும் நம்மை பழிவாங்க இயக்குபவையல்ல. மாறாக, வெற்றி பெற்று வாழ்ந்து காட்டுவதுதான் உண்மையான பதில் என்ற வலுவான கருத்தை எடுத்துரைக்கிறது.

முன்னணி இயக்குநர் நிதிலன் சுவாமிநாதனிடம், மகாராஜா திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய புஷ்பநாதன் ஆறுமுகம், தனது தனிப்படைப்பாக இந்த பாடலை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார். தனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள், போராட்டங்களிலிருந்து பெற்ற புரிதல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படைப்பை உருவாக்கியுள்ளார்.
 
பிரபல இயக்குநரும், நடிகருமான அருண் ராஜா காமராஜ், இந்த பாடலை பாடியிருப்பதுடன், முற்றிலும் மாறுபட்ட “சாத்தான்” வேடத்தில் நடித்துள்ளார். சிவப்பு நிற உடையுடன், சாத்தானை பிரதிபலிக்கும் வித்தியாசமான தோற்றமானது, பாடலை பார்த்து முடித்த பின் நம் மனதுடன் நாமே பேசும் உணர்வை உருவாக்கியுள்ளது, ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாடலின் கருத்துக்கு ஏற்ற துள்ளல்இசையும், துடிப்பான பின்னணி ஒலிகளும் பாடலின் உணர்வை மேலும் உயர்த்தியுள்ளன.
ஒளிப்பதிவை விஷ்ணு மணி வடிவு, படத்தொகுப்பை தின்சா, கலை இயக்கத்தை எஸ்.ஜி. திவாகர் கவனித்துள்ளனர். நடன அமைப்பை சுரேந்திரன் ஜோ மேற்கொண்டுள்ளார். மாங்கோ போஸ்ட் நிறுவனம் கலர் கோர்ப்பு பணியையும், ரேமேக்ஸ் ஸ்டுடியோ மற்றும் பிக் செல் பேக்டரி நிறுவனம் அனிமேசன் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்துள்ளனர். படக்குழுவின் தொழில்நுட்ப பங்களிப்பு பாடலின் உணர்வை உலக தரத்திற்கு உயர்த்தியுள்ளது. ஐஸ்வர்யா ரகுநாத் ஆடை வடிவமைப்பிலும், ரதி ராதிகா சாத்தானாகவே அருண்ராஜா காமராஜை மேக்கப்பின் மூலம் உருவாக்க உழைத்திருப்பது கூடுதல் கவனம் பெறுகிறது.

மொத்தத்தில், “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் பழிவாங்கும் எண்ணத்தை வெற்றியாக மாற்றும் வாழ்க்கைப் பாடத்தை வித்தியாசமான காட்சியமைப்பிலும் சக்திவாய்ந்த இசையிலும், வீரியமிக்க வரிகளிலும் உருவாகியுள்ளது. வெளியான குறுகிய காலத்திலேயே சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த பாடல், இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்ற படைப்பாக மாறியுள்ளது.

🔗https://youtu.be/6cY-B-GDYoo

As AI Reshapes Careers, WPU Goa Advocates a Transdisciplinary Approach to Higher EducationChennai : University leadership highlights the growing need for adaptability, lifelong learning and transdisciplinary education in an era of rapid technological disruption

0

20 June 2026: As artificial intelligence and rapid technological change continue to reshape industries worldwide, universities must move beyond preparing students for their first job and instead equip them to navigate multiple career transitions throughout their lives, according to speakers at the World Peace University (WPU) Goa Open House held on 20 June.


The event brought together prospective students, parents and educators for a discussion on the future of higher education and the changing expectations from universities in an increasingly unpredictable world. Central to the conversation was WPU Goa’s transdisciplinary model of education, which seeks to combine disciplinary depth with the ability to think across domains, adapt to change and address complex real-world challenges.


“WPU Goa is being established around a transdisciplinary approach that encourages faculty and students to engage with perspectives beyond the boundaries of a single discipline. Through immersive learning, industry integration, global exposure, and active learning, the university aims to prepare graduates for a lifetime of learning, adaptation, and leadership, also opening the doors for excellent jobs in the private and public sector, where they can apply what they have learned.” said Vice Chancellor Professor Walter Leal.


“Universities can no longer assume that preparing students for their first job is enough,” said Dr Ashish Bharadwaj, Pro Vice Chancellor of WPU Goa. “The more important question is whether we are preparing students for the multiple changes, transitions and opportunities they will encounter throughout their lives. The future belongs not simply to specialists, but to individuals who can learn continuously, connect ideas across domains and respond to challenges that do not fit neatly into traditional categories.”


The discussion explored how long-held assumptions about higher education are being challenged as industries evolve faster than traditional academic cycles. New professions are emerging, established roles are being transformed, and competition increasingly comes from individuals who can combine expertise from multiple fields rather than operate within a single discipline.


Participants heard how the ability to learn, adapt and work across disciplines may become as important as technical expertise itself. The conversation also examined the growing importance of curiosity, resilience and lifelong learning as essential capabilities for future careers.
Speakers stressed that higher education institutions must increasingly focus on preparing students for opportunities that cannot yet be predicted rather than training them solely for existing professions.


WPU Goa currently offers B.Tech. in Computer Science and Engineering (CSE), Bachelor of Management Studies (Hons.), B.Des. in Integrated Product Design, B.Des. in Communication Design, and B.Sc. (Hons.) in Psychology.


At a time when students and parents are seeking clarity about the future of work, the discussions reinforced the need for higher education institutions to focus not only on employability but also on preparing learners to navigate continuous change throughout their professional lives.

About WPU Goa

WPU Goa is a new-age university located in Goa with a vision to reimagine higher education for a rapidly changing world. Built around a transdisciplinary approach to learning, the university seeks to develop graduates who combine disciplinary depth with the ability to think across domains, adapt to change and address complex real-world challenges.

https://wpugoa.edu.in

டார்க் ஜெயன்ட்- விமர்சனம்

0

இயக்கம் – கே.எஸ்.கிஷான்
நடிகர்கள் – ஆதர்ஷ் மதிகாந்த், ஜோவிதா லிவிங்ஸ்டன், மதன் , சோனியா அகர்வால்.
இசை – விக்னேஷ் ராஜா

ஒருவன் தன் மனைவி மற்றும் தங்கையுடன் சென்னையில் வசித்து வருகிறார். கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கும்அவனுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளும் ஒருவர், கோவை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், அவரது தாத்தா இருப்பதாகவும், அவர் தனது சொத்துக்களை தன் பேரன், பேத்திக்கு கொடுக்க விரும்புவதாகவும் சொல்கிறார். சொத்து கிடைத்தால் தனது கடன் பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற எண்ணத்தில், தன் மனைவி மற்றும் தங்கையை அழைத்துக் கொண்டு அந்த கிராமத்துக்கு செல்கிறான், சொத்துக்காக படுத்த படுக்கையாக இருக்கும் தாத்தா உடன் சில நாட்கள் தங்க முடிவு செய்கிறார். அப்போது அந்த வீட்டில் எதிர்பார்க்காத சில பயங்கரமான சம்பவங்கள் நடப்பதோடு, அவர்களை கிராமத்திற்கு வரவைத்த நபரும், படுத்த படுக்கையாக இருந்த அவரது தாத்தாவும், பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டனர் என்ற உண்மை தெரிய வருகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களையும், நாயகனின் குடும்பத்தை கிராமத்திற்கு வர வைத்ததற்கான பின்னணியையும் திகில் கலந்த சுவார்ஸ்யத்துடன் சொல்வதே இந்த ‘டார்க் ஜியண்ட்

திகில் மற்றும் வித்தியாசமான அமானுஷ்ய கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஆதர்ஷ் மதிகாந்த், இந்த முறையும் சுவாரஸ்யமான ஒரு திகில் கதையில் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளார். கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பது, சாத்தான் தன் உடலில் புகுந்த பிறகு தன்நிலை மறந்து நடப்பது, பிறகு தன்நிலை அறிந்து கலங்குவது, என்று பல உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார். அதே போல் நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் ஜோவிதா லிவிங்ஸ்டன், குடும்பபாங்கான கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருக்கிறார். பயமும், பதற்றமும் கலந்த நடிப்பால் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கிறார்.

மேலும் கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் அருவி மதன் மற்றும் சோனியா அகர்வால், குறைவான காட்சிகள் வந்தாலும் பார்வையாளர்கள் மனதில் நிற்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் நடிகை கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். நாயகனின் நண்பராக நடித்திருக்கும் அமுதவாணன், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ரபிக் பாட்ஷா, சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

விக்னேஷ் ராஜாவின் பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் பயங்கரத்தை பார்வையாளர்களிடம் கடத்தில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. சில இடங்களில் சாம் சி எஸ் இசையை நியாபகப்படுத்துகிறது.அதெ போல் ஒளிப்பதிவாளர் சங்கீத் மணிகோபால் திகில் காட்சிகளை அச்சமூட்டும் வகையில் காட்சிப்படுத்தி பார்வையாளர்களை நெஞ்சை படபடக்க வைக்கிறார்.

இந்தப் படத்தை கே.எஸ்.கிஷான் எழுதி இயக்கியிருக்கிறார், திகில் கதைக்களத்தை சரியான முறையில் கையாண்டு பார்வையாளர்களை மிரள வைத்திருக்கிறார். ஒரு வீட்டில் நடக்கும் சம்பவங்கள் என்றாலும் அதை அச்சத்துடன் பார்க்க வைத்து பல காட்சிகளில் சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறார். நம் கணிக்க முடியாத ஒரு கதையை திகில் கலந்து கொடுத்து வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தத்தில், ‘டார்க் ஜியண்ட்’ நல்ல அனுபவம்.

“விஸ்வநாத் & சன்ஸ்” முதல் சிங்கிள் “பட்டாம்பூச்சி” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது !

0

தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ள கூட்டணிகளில் ஒன்றான, சூர்யா நடிப்பிலும் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் உருவாகியுள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம், 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிளான “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” பாடலை படக்குழு வெளியிட்டது. இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் முறை கேட்கும்போதே மனதை கவரும் இனிமையான மெட்டும் புத்துணர்ச்சியூட்டும் உணர்வும் கொண்ட இந்தப் பாடல், இந்த சீசனின் மிகவும் நம்பிக்கைக்குரிய இசை வெளியீடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஆரம்பகட்ட வரவேற்பைப் பார்க்கும்போது, வரும் நாட்களில் இசை ரசிகர்களின் மிகப்பெரிய விருப்பப் பாடலாக இது உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெலடி பாடல்களை சிறப்பாக உருவாக்குவதில் ஜி.வி. பிரகாஷ் குமார் எப்போதும் தவறுவதே இல்லை. இந்த முறையும் அவர் தனது மாயாஜாலமான இசையால் அனைவரையும் கவர்ந்துள்ளார். இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் அவரது வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று, படத்தின் முழு இசை ஆல்பத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

இந்தப் பாடலை பாடியுள்ள சுபலக்ஷினி, சமீபத்திய பிளாக்பஸ்டர் பாடல்களின் வெற்றியால் இன்று மிகவும் பாராட்டப்படும் பாடகிகளில் ஒருவராக திகழ்கிறார். மேலும், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதிய வரிகள் காதலின் அப்பாவித்தனம், உற்சாகம் மற்றும் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.

அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட ஒவ்வொரு புரமோஷனல் அப்டேட்டும் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. பிரம்மாண்டமான அளவில் உருவாகி வரும் இந்த திரைப்படம், குடும்பம், உணர்வுகள் மற்றும் மனதை நெகிழவைக்கும் தருணங்களால் நிறைந்த முழுமையான பொழுதுபோக்கு அனுபவமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தப் படத்தை சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர், சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments)  நிறுவனத்தின் சார்பில் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ( Fortune Four Cinemas )  நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர். ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் (Srikara Studios)  நிறுவனம் படத்தை வழங்குகிறது. வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற வெற்றிப்படங்களை தயாரித்ததன் மூலம் பெரும் பாராட்டுகளை பெற்ற நாக வம்சி, மீண்டும் ஒரு பிரம்மாண்டமான திரையரங்கு கொண்டாட்டத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் கொண்ட சக்திவாய்ந்த கூட்டணியை ஒன்றிணைத்துள்ளார்.

2026 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள மிகப்பெரிய மற்றும் அதிகம் கொண்டாடப்படும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக “விஸ்வநாத் & சன்ஸ்” உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி
தயாரிப்பாளர்கள் :  சூர்யதேவர நாக வம்ஷீ & சாய் சௌஜன்யா
இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி
படத்தொகுப்பு : நவீன் நூலி
கலை இயக்கம் : பங்களன்
நிர்வாக தயாரிப்பாளர் : யலமஞ்சிலி கோபால கிருஷ்ணா (நானி)
சண்டை பயிற்சி : V. வெங்கட்
தயாரிப்பு நிறுவனங்கள் : சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
வழங்குபவர் : ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்

விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

0

சம்கிராந்தி 2027-ஐ குறிவைத்து ஒரு அதிரடி கூட்டணி உருவாகியுள்ளது. விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம் மற்றும் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இணையும் முழுநீள கொண்டாட்ட பொழுதுபோக்கு திரைப்படமான #VenkyAnil5 & #NkrAR2 தற்போது உருவாகி வருகிறது. ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாஹு கரபாட்டி தயாரிக்கும் இந்தப் படத்தை, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், சுமதி. அர்ச்சனா மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் வழங்குகின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

படத்தின் பிரம்மாண்டமான முஹூர்த்த விழா மற்றும் பூஜை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பல சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர், இயக்குநர் அனில் ரவிபுடி மற்றும் தயாரிப்பாளர் சாஹு கரபாட்டியிடம் திரைக்கதையை வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தனர். முஹூர்த்த காட்சிக்காக, விக்டரி வெங்கடேஷ், கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி இடம்பெற்ற முதல் காட்சிக்கு அல்லு அரவிந்த் கிளாப் அடித்தார். சுரேஷ் பாபு கேமராவை இயக்கி வைத்தார். புகழ்பெற்ற இயக்குநர் கே. ராகவேந்திர ராவ் முதல் காட்சியை இயக்கினார்.

VenkyAnil5 & #NkrAR2 திரைப்படம், அனில் ரவிபுடியின் பாணியில் உருவாகும் முழுமையான சங்கராந்தி கொண்டாட்ட திரைப்படமாக இருக்கும். அதிரடியான நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் வெங்கடேஷ் மற்றும் கல்யாண் ராம் இணையும் தனித்துவமான கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே இப்படம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு அனில் ரவிபுடியின் தொடர்ச்சியான வெற்றி சாதனைகள், வித்தியாசமான நட்சத்திர கூட்டணி மற்றும் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் ஆதரவு ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் G.V பிரகாஷ் குமார் இசையமைக்க, சமீர் ரெட்டி ஒளிப்பதிவை கவனிக்கிறார். தம்மிராஜு படத்தொகுப்பாளராகவும், A.S. பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். S. கிருஷ்ணா நிர்வாக தயாரிப்பாளராக செயல்படுகிறார். விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

நடிகர்கள்:
விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டி

தொழில்நுட்பக் குழு:
கதை, இயக்கம்:அனில் ராவிபூடி
தயாரிப்பாளர்:சாஹு காரபாட்டி
வழங்குபவர்கள்: சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா
இசை: G.V பிரகாஷ் குமார்
நிர்வாக தயாரிப்பாளர்: S.கிருஷ்ணா
ஒளிப்பதிவாளர்: சமீர் ரெட்டி
படத்தொகுப்பு: தம்மிராஜு
கலை இயக்குநர்: A.S. பிரகாஷ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா

தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் #D55 “ஓம்” பட தலைப்பு அறிவிப்பு விழா, கோலாகலமாக நடைபெற்றது!

0

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் #D55 திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்திற்கு “ஓம்” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

R Take Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படைப்பாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில்

Wunderbar Films சார்பில் ஷ்ரேயாஸ் பேசியதாவது..,

“முதலில் இயக்குநருக்கும் தனுஷ் சாருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் உங்களிடம் நன்றிக்கடன்பட்டவனாக இருக்கிறேன், சார். இந்த திரைப்படம் திரையுலகில் உருவாகும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாகும். என் திரைப்பயணத்தில் இதுவே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் என்று நான் நினைக்கிறேன். மேலும், R Take Studios நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழில் அவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுதான். இனி பல வெற்றிகரமான கூட்டணிகளுக்கான தொடக்கமாக இது அமையும் என்று நம்புகிறேன். இது மீண்டும் ஒரு பழைய பாணியிலான தனுஷ் சாரின் மாஸ் கமர்ஷியல் திரைப்படம். உங்களின் எதிர்பார்ப்புகளை இந்த படம் நிச்சயமாக பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பிற அப்டேட்கள் அனைத்தும் உங்களை மகிழ்விக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறேன். அனைவரையும் திருப்திப்படுத்தும் படைப்பாக இது அமையும். வரும் அக்டோபர் 16-ஆம் தேதி உங்களை அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்கிறோம். நன்றி!”

R Take Studios சார்பில் ஷ்ரத்தா பேசியதாவது..,

ராஜ்குமார் சார், மிக்க நன்றி. இது உண்மையிலேயே அற்புதமான அனுபவம். வரும் அக்டோபர் 16-ஆம் தேதியை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு அற்புதமான கூட்டணி. அதற்காக உங்களுக்கு எனது மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனுஷ் சாருக்கு நன்றி. இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் நன்றி.

R Take Studios சார்பில் அஸ்மத் பேசியதாவது..,

ஷ்ரேயாஸ் மற்றும் ஷ்ரத்தா கூறியதைத் தவிர புதிதாகச் சொல்ல எதுவும் இல்லை. இந்தத் திரைப்படத்தின் ஒரு பகுதியாக எங்களை இணைத்துக்கொண்டதற்கு ராஜ்குமார் சார், உங்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படைப்பில் இடம் பெற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த பெருமையையும் பணிவையும் அளிக்கிறது. படத்திற்கு எங்களால் முடிந்த அளவு அன்பையும் அர்ப்பணிப்பையும் வழங்குவோம் என்று நம்புகிறோம். மிக்க நன்றி.”

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியதாவது..,

“இந்த திரைப்படம் ‘ஓம்’ என்ற தலைப்புடன் தொடங்கியுள்ளது. தலைப்பு தேர்விலிருந்து நடிகர், நடிகைகள் தேர்வு வரை, தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தைச் சுற்றி நடந்த ஒவ்வொரு விஷயத்தையும், இதில் இணைந்துள்ள ஒவ்வொருவரையும் பார்க்கும்போது, இது அனைவருக்கும் மிகவும் முக்கியமான மற்றும் சிறப்பான பயணமாக அமையும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தப் படத்தில் இணைந்துள்ள அனைவரும் அதே உணர்வோடு பணியாற்றி வருகின்றனர். தனுஷ் சார் முதல், ஷ்ரேயாஸ் மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களும் இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக, மம்முட்டி சார், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன் சார் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். அனைவரின் பங்களிப்பாலும் படம் மிகவும் சிறப்பாக உருவாக வருகிறது.

இந்தப் படத்தின் பின்னணியில் மிகப்பெரிய தொழில்நுட்பக் குழு பணியாற்றி வருகிறது. ஒளிப்பதிவாளர், கேமரா குழு, தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவாளர் எழிலரசு மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பாளராக ‘அமரன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படங்களின் படத்தொகுப்பாளர் கலை பணியாற்றி வருகிறார். இந்த தலைப்பு அறிவிப்பு வீடியோவையும் அவர்தான் தொகுத்துள்ளார்.

இந்த வீடியோவை வெறும் தலைப்பு அறிவிப்பு வீடியோவாக மட்டும் பார்க்கக் கூடாது. ஒரு போஸ்டரை வெளியிடுவதற்கு பதிலாக, தனுஷ் சார் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தும் முயற்சியாக இதை உருவாக்கியுள்ளோம். படத்தின் டீசர், ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்திற்கான அறிமுக டீசர்கள் மற்றும் பிரதான டிரெய்லர் ஆகியவை அடுத்த சில வாரங்களிலும், வரும் மாதங்களிலும் வெளியாகும்.

அக்டோபர் 16 இந்தப் படத்திற்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். அந்த நாளில்தான் படம் வெளியாக உள்ளது. மேலும், படத்திற்கு ‘ஓம்: சேப்டர் 1’ என்று பெயரிட்டுள்ளோம். இது ஆன்மீகமான தலைப்பு மட்டுமல்ல; மிகவும் சிறப்பான, பல அடுக்குகளைக் கொண்ட அர்த்தமுள்ள தலைப்பாகும். இந்த தலைப்பிற்குள் பல சுவாரஸ்யமான அம்சங்களும், பல்வேறு அடுக்குகளும் உள்ளன. அவை படிப்படியாக ரசிகர்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.”

Divo Music நிறுவனம் சார்பில் விஷு பேசியதாவது..,

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இந்தத் திட்டம் தொடங்கிய நாள் முதல், ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.தனுஷ் சார் நடித்த எந்த திரைப்படத்துடனும் இணைந்து பணியாற்றுவது எப்போதும் பெருமைக்குரிய விஷயம். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சாரின் முதல் படைப்பான ‘அமரன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனுஷ் சார் – ராஜ்குமார் சார் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் இணைவது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் எங்களை இசை நிறுவனமாக இணைத்துக்கொண்ட தயாரிப்பாளர்கள், படக்குழுவினர் மற்றும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். ‘ஓம் நமசிவாய’ என்ற தெய்வீக நம்பிக்கையுடன் கூறுகிறேன்; ‘ஓம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. 2026, 2027 மற்றும் அதற்குப் பிறகும் இந்தப் படம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெறும் என நம்புகிறேன். மிக்க நன்றி.”

Warner Music Group – India சார்பில் ஜே மேத்தா பேசியதாவது…

பல மாதங்களுக்கு முன்பு இந்தத் திரைப்படம் குறித்து முதன்முதலாக பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது, எனது முதல் உரையாடல் இந்தக் குழுவுடன்தான் நடைபெற்றது. அதற்கு முன்பு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தனுஷ் சாரை சந்தித்திருந்தோம். அப்போது தொடங்கிய இந்தப் பயணம் இன்று இவ்வளவு பெரிய வடிவத்தை எடுத்திருப்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. இந்தப் படத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு விஷயமும் மிகவும் சிறப்பானது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சார் ஒரு அசாதாரண திறமைசாலி. இந்திய சினிமாவில் மட்டுமல்ல, உலக சினிமாவிலேயே உண்மையான மேதைகள் மிகக் குறைவாகவே உள்ளனர். அந்த வகையில் ராஜ்குமார் சார் ஒரு உண்மையான ஜீனியஸ் என்று நான் நம்புகிறேன்.

தனுஷ் சார் குறித்து பேசுவதற்கு என்னிடம் போதுமான வார்த்தைகள் இல்லை. ‘காதல் கொண்டேன்’ முதல், அவர் நடித்த மிகப்பெரிய இந்தி திரைப்படங்கள் வரை, உலக அளவில் தனது திறமையை நிரூபித்த ஒரு சக்திவாய்ந்த கலைஞராக அவர் திகழ்கிறார். மேலும், ஸ்ரீலீலா, சாய் பல்லவி, மம்முட்டி சார் உள்ளிட்ட மிக வலுவான நட்சத்திர பட்டாளம் இந்தப் படத்தில் இணைந்துள்ளது. இவ்வளவு பெரிய நட்சத்திரக் கூட்டணியை ஒரே திரைப்படத்தில் காண்பது மிகவும் அரிதான விஷயம்.

இந்தத் திரைப்படம் ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக உருவாக தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகளாவிய அளவிலும் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறும் அனைத்து தகுதிகளும் இந்தப் படத்திற்குள் உள்ளன என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனது தனிப்பட்ட நம்பிக்கையின்படி, இது தமிழ்ச் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றாக மட்டுமல்ல, எல்லா காலத்திலும் பேசப்படும் ஒரு முக்கிய படைப்பாக அமையும். படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.”

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

‘அமரன்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இந்த முறை புதுமையான திரைக்கதையுடன், ரசிகர்களை கவரும் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி முதல் முறையாக இணையும் இந்த கூட்டணி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்திற்கு இளம் தலைமுறையின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் அடுத்தகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் தலைப்பு ஓம் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் படப்பிடிப்பு தொடர்பான தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, மம்முட்டி ஆகியோரின் பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.

இப்படம் வரும் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

டி. கோபிசந்த், சங்கல்ப் ரெட்டி, ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் ‘பாரதவர்ஷா’!

0

மாச்சோ ஸ்டார் டி. கோபிசந்த் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட வரலாற்று ஆக்ஷன் திரைப்படம் ‘பாரதவர்ஷா’. இந்தப் படத்தை இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்க, ஸ்ரீனிவாசா சித்தூரி தனது ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தின் சார்பில் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார். மேலும், பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார். கோபிசந்தின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் படக்குழு வெளியிட்ட டைட்டில் கிளிம்ப்ஸ்க்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இன்று படத்தின் முதல் பாடலான ‘வீர ஜெயதீரா’ வெளியிடப்பட்டுள்ளது. அனுதீப் தேவ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை தீபக் ப்ளூ மற்றும் லட்சுமி மேகனா பாடியுள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற பாடலாசிரியர் சந்திரபோஸ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலின் காட்சிகள் அழகுடனும் பிரம்மாண்டத்துடனும் அமைந்துள்ளன.

முன்னதாக வெளியான டைட்டில் கிளிம்ப்ஸில், நீண்ட தலைமுடி, அடர்ந்த தாடி மற்றும் கம்பீரமான தோற்றத்துடன் ஒரு போர்வீரராக டி. கோபிசந்தின் தோற்றம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல், அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

புதுமையான கதை சொல்லும் முறையிலும் தொழில்நுட்ப திறமையிலும் பெயர் பெற்ற சங்கல்ப் ரெட்டி, இந்திய வரலாற்றில் அதிகம் பேசப்படாத ஒரு முக்கியமான அத்தியாயத்தை திரையில் கொண்டு வருகிறார். உணர்வுப்பூர்வமான கதையம்சத்துடன் கண்ணைக் கவரும் பிரமாண்ட காட்சிகளும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும், தனது திரைப்பயணத்தில் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் டி. கோபிசந்த் நடித்து, தனது திறமையையும் அர்ப்பணிப்பையும் மீண்டும் நிரூபிக்கிறார்.

நடிகர்கள்: டி. கோபிசந்த், ரிது வர்மா மற்றும் பலர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

இயக்குநர்: சங்கல்ப் ரெட்டி,
தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்தூரி,
தயாரிப்பு நிறுவனம்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,
வழங்குபவர்: பவன் குமார்,
இசை: அனுதீப் தேவ்,
ஒளிப்பதிவு: சௌந்தர் ராஜன்,
படத்தொகுப்பு: சோட்டா கே. பிரசாத்,
சண்டைப் பயிற்சி இயக்குநர்கள்: வெங்கட், ப்ருத்வி, ரியல் சதீஷ்,
நடன இயக்குநர்கள்: சங்கர், விஜய் போலங்கி

இந்தியாவின் விருப்பமான சூப்பர் ஹீரோ ஜூலை 30-அன்று பிரம்மாண்டமான மறுவருகைக்குத் தயாராகிவிட்டார்!

0

‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) டிரெய்லருடன் புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கிறார் டாம் ஹாலண்ட்; இம்முறை சவால்கள் மிக அதிகம்!

நான்கு வருடக் காத்திருப்புக்குப் பிறகு, டாம் ஹாலண்டின் புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை மீண்டும் களமிறக்கும் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் மிகுந்த ஆரவாரத்துடன் வெளியிடப்பட்ட இந்த டிரெய்லர், பீட்டர் பார்க்கரின் பயணத்தின் அடுத்த கட்டத்தை ரசிகர்கள் இதுவரை காணாத வகையில் மிகவும் விறுவிறுப்பாகக் காட்டுகிறது.

டிரெய்லரைப் பார்க்க: https://youtu.be/hGSZPc9AA1g

‘ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம்’ (Spider-Man: No Way Home) படத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், ஹாலண்ட் மீண்டும் அந்தச் சிறப்பான ஸ்பைடர்-மேன் உடையில் தோன்றுவதை இந்த டிரெய்லர் காட்டுகிறது. பீட்டர் பார்க்கரின் அடையாளத்தை உலகம் மறந்துவிட்ட நிலையில், தனது பகுதியைத் தொடர்ந்து பாதுகாத்துக்கொண்டே, புதிய யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளும் சூப்பர் ஹீரோவை இந்த டிரெய்லர் சுட்டிக்காட்டுகிறது. மேலும், ஜெண்டயா (Zendaya) ஏற்று நடித்துள்ள MJ கதாபாத்திரத்துடனான அவரது சிக்கலான உறவையும் இது ஒரு சிறு காட்சியில் வெளிப்படுத்துகிறது.

‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படம் பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகள், ஆபத்தான புதிய வில்லன்கள் மற்றும் பீட்டர் இதுவரை எதிர்கொண்டிராத சவால்களை உறுதியளிக்கிறது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான இப்படம் உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது; இதில் இந்தியாவும் இப்படத்தின் வலுவான சந்தைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒரு நாள் முன்னதாக மாற்றப்பட்டதாக சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் அறிவித்தபோது ரசிகர்களிடையே உற்சாகம் உச்சத்தை எட்டியது.

பீட்டர் பார்க்கருக்கு இது ஒரு ‘புதிய நாள்’ (Brand New Day). தன்னை நினைவில் கொள்ளாத உலகில் முழுநேர ஸ்பைடர்-மேனாகக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவது மற்றும் தன்னை விட்டுவிட்டுத் தங்கள் வாழ்க்கையைத் தொடரும் பழைய நண்பர்களைப் பார்ப்பதால் ஏற்படும் அழுத்தம் ஆகியவை பீட்டரிடம் ஒரு மாற்றத்தை உருவாக்குகின்றன; அந்த மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி அவரிடம் இல்லாமல் போகலாம். ஆனால், அந்த மாற்றமே நகரத்திற்கும் அவர் நேசிப்பவர்களுக்கும் ஏற்படவிருக்கும் அதிர்ச்சிகரமான புதிய அச்சுறுத்தலைத் தடுப்பதற்கான ஒரே வழியாகவும் அமையலாம் – அது யாராலும் பார்க்க முடியாத ஒரு சக்திவாய்ந்த வில்லன். உலகம் பீட்டர் பார்க்கரை மறந்திருக்கலாம், ஆனால் அவர் அவர்களை மறக்கவில்லை.

டெஸ்டின் டேனியல் கிரெட்டன் (Destin Daniel Cretton) இயக்கியுள்ள இப்படத்தில், பீட்டர் பார்க்கர்/ஸ்பைடர்-மேனாக டாம் ஹாலண்ட் நடிக்க, அவருடன் ஜெண்டயா, ஜேக்கப் பட்டலோன், ஜான் பெர்ன்தால் மற்றும் சேடி சிங்க் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம், ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில், ஜூலை 30 அன்று 2D, 4DX 3D, 3D SCREEN X, DOLBY CINEMA 3D, ICE 3D, DOLBY CINEMA 2D, MX4D 3D, 3D, P[XL] மற்றும் BIGPIX ஆகிய வடிவங்களில் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

இந்தியாவில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) படத்திற்கான முன்பதிவு தொடங்கியது; ரசிகர்கள் பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் (Premium Large Format) படத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்

0

‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்திற்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது! டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 30 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாகிறது.

நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது! இந்தியா முழுவதும் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்திற்கான முன்பதிவு இப்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாம் ஹாலண்ட் நடித்த இப்படத்தை, சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம் ஜூலை 30 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடுகிறது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்டமான வெளியீடான ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’, மறக்க முடியாத ஒரு பெரிய திரை சாகச அனுபவத்தை உறுதியளிக்கிறது. இந்த அனுபவத்தை முன்னெப்போதையும் விட பிரம்மாண்டமாகவும், சிறப்பானதாகவும் மற்றும் முழுமையான ஈடுபாட்டைத் தரும் வகையிலும் மாற்ற, சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா இப்படத்தை பல்வேறு பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் (Premium Large Formats) வெளியிடுகிறது. இதன் மூலம் ரசிகர்கள் ஒவ்வொரு ‘ஸ்விங்’ (swing) அசைவு, சண்டைக்காட்சி மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளைப் பெரிய அளவில் அனுபவிக்க முடியும்.

P[XL], Big Pix, Screen X, ICE, 4DX மற்றும் MX4D உள்ளிட்ட பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறந்த திரையரங்கு அனுபவத்தை வழங்கும் திரைகளில் இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பை அளிக்கிறது.

வெளியீட்டை உறுதிப்படுத்தும் வகையில், சோனி பிக்சர்ஸ் ரிலீசிங் இன்டர்நேஷனல் (SPRI) இந்தியாவின் பொது மேலாளரும் தலைவருமான ஷோனி பஞ்சிகரன் பேசுகையில், ஸ்பைடர்-மேனின் பெரிய திரை வருகையை ஒரு பிரம்மாண்டமான நிகழ்வாக மாற்றவே இந்த பிரீமியம் பெரிய திரை வடிவ வெளியீடு மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார். “இந்திய ரசிகர்களின் இதயங்களில் ஸ்பைடர்-மேன் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார்; ஒவ்வொரு புதிய பாகமும் பல தலைமுறை ரசிகர்களுக்கு ஒரு கூட்டு கொண்டாட்டமாக அமைகிறது. ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்தின் மூலம், அந்த உற்சாகத்திற்கு ஈடு இணையான மிகச்சிறந்த திரையரங்கு அனுபவத்தை வழங்க விரும்பினோம். அதே வேளையில், ரசிகர்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, படத்தின் அதிரடி, உணர்ச்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளைப் பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் அனுபவிக்கும் வாய்ப்பையும் நாங்கள் வழங்குகிறோம்,” என்று அவர் கூறினார். “‘Spider-Man: Brand New Day’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள உற்சாகம், இன்றைய காலக்கட்டத்தில் ரசிகர்கள் பிரம்மாண்டமான திரைப்படங்களை (blockbuster cinema) எவ்வாறு அனுபவிக்க விரும்புகிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது. மிகப்பெரிய திரைப்படங்கள் மக்களை ஒன்றிணைக்கும் கலாச்சார நிகழ்வுகளாக மாறியுள்ளன; இது திரையரங்க அனுபவத்தை முன்னெப்போதையும் விட மிக முக்கியமானதாக மாற்றியுள்ளது. ‘Spider-Man’ உலகின் மிகவும் விரும்பப்படும் திரைப்படத் தொடர்களில் ஒன்றாகும், மேலும் இதன் ஒவ்வொரு புதிய பாகத்தையும் பல தலைமுறை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் பட வெளியீட்டிற்காக ‘Sony Pictures Entertainment India’-வுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ரசிகர்கள் இந்தப் படத்தை அதற்கென உருவாக்கப்பட்ட சூழலில் – அதாவது பெரிய திரையில், சக ரசிகர்களுடன் இணைந்து – அனுபவிக்க ‘PVR INOX’ திரையரங்குகளுக்கு வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்; அங்கு ஒவ்வொரு தருணமும் பிரம்மாண்டமாகவும், ஆழ்ந்த அனுபவத்தைத் தருவதாகவும், உண்மையிலேயே மறக்க முடியாததாகவும் அமையும்,” என்று ‘PVR INOX Limited’-ன் வருவாய் மற்றும் செயல்பாட்டுப் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி (CEO) திரு. கௌதம் தத்தா கூறுகிறார்.

டெஸ்டின் டேனியல் கிரெட்டன் (Destin Daniel Cretton) இயக்கும் ‘Spider-Man: Brand New Day’ திரைப்படத்தில், பீட்டர் பார்க்கர்/ஸ்பைடர்-மேனாக டாம் ஹாலண்ட் (Tom Holland) நடிக்கிறார்; இவருடன் ஜெண்டயா (Zendaya), ஜேக்கப் பட்டலோன் (Jacob Batalon), ஜான் பெர்ன்தால் (Jon Bernthal) மற்றும் சேடி சிங்க் (Sadie Sink) ஆகியோரும் நடிக்கின்றனர்.

‘Sony Pictures Entertainment India’ நிறுவனம் ‘Spider-Man: Brand New Day’ திரைப்படத்தை 2026 ஜூலை 30 அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறது. இப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில், 2D மற்றும் 3D வடிவங்களிலும், அனைத்து பிரீமியம் பெரிய திரை வடிவங்களிலும் (premium large formats) வெளியிடப்படும்.

‘Spider-Man: Brand New Day’ பற்றிய குறிப்பு: பீட்டர் பார்க்கருக்கு இது ஒரு முற்றிலும் புதிய நாள் (Brand New Day). தன்னை நினைவில் கொள்ளாத உலகில் ஸ்பைடர்-மேனாக முழுநேரமும் குற்றங்களுக்கு எதிராகப் போராடுவது மற்றும் தன்னை விட்டுவிட்டுத் தங்கள் வாழ்க்கையைத் தொடரும் பழைய நண்பர்களைப் பார்க்கும் சூழல் ஆகியவை பீட்டரிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன; அந்த மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அவனிடம் இல்லாமல் போகலாம். ஆனால், அந்த மாற்றமே நகரத்திற்கும் அவன் நேசிப்பவர்களுக்கும் ஏற்படவிருக்கும் அதிர்ச்சியூட்டும் புதிய அச்சுறுத்தலைத் தடுப்பதற்கான ஒரே வழியாகவும் அமையலாம் – அந்த அச்சுறுத்தல் யாராலும் பார்க்க முடியாத ஒரு சக்திவாய்ந்த வில்லனிடமிருந்து வருகிறது. உலகம் பீட்டர் பார்க்கரை மறந்திருக்கலாம், ஆனால் அவன் அவர்களை மறக்கவில்லை.

Sony Pictures Entertainment பற்றிய குறிப்பு: ‘Sony Pictures Entertainment’ (SPE) என்பது டோக்கியோவை மையமாகக் கொண்ட ‘Sony Group Corporation’-ன் துணை நிறுவனமாகும். SPE-யின் உலகளாவிய செயல்பாடுகளில் திரைப்படத் தயாரிப்பு, கையகப்படுத்தல் மற்றும் விநியோகம்; தொலைக்காட்சித் தயாரிப்பு, கையகப்படுத்தல் மற்றும் விநியோகம்; தொலைக்காட்சி நெட்வொர்க்குகள்; டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் விநியோகம்; ஸ்டுடியோ வசதிகளை நிர்வகித்தல்; மற்றும் புதிய பொழுதுபோக்கு தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களின் மேம்பாடு ஆகியவை அடங்கும். ‘Sony Pictures Television’ உலகம் முழுவதும் டஜன் கணக்கான முழு உரிமையுள்ள அல்லது கூட்டு முயற்சியிலான தயாரிப்பு நிறுவனங்களை இயக்கி வருகிறது. SPE-யின் மோஷன் பிக்சர் குழுமத்தின் (Motion Picture Group) தயாரிப்பு நிறுவனங்களில் Columbia Pictures, Screen Gems, TriStar Pictures, 3000 Pictures, Sony Pictures Animation, Stage 6 Films, AFFIRM Films, Sony Pictures International Productions மற்றும் Sony Pictures Classics ஆகியவை அடங்கும். கூடுதல் தகவல்களுக்கு, http://www.sonypictures.com/corp/divisions.html என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

எங்களைப் பின்தொடரவும்
X: https://x.com/SonyPicsIndia
LinkedIn: https://www.linkedin.com/company/pvr-limited
Instagram: https://www.instagram.com/sonypicturesin/
Facebook: https://www.facebook.com/sonypicturesofindia/

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

0

டிரைடன்ட் ஆர்ட்ஸ் R. Ravindran மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் நடிகர் சனந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி , வாட்ஸப் மணி , டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை துரைராஜ் கவனித்திருக்கிறார்.

ஜூன் 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

பாடலாசிரியர் சாரதி பேசுகையில், ” ‘அயோத்தி’ படத்திற்குப் பிறகு அதே நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறேன். இரண்டுமே துள்ளலான பாடல்கள். வாய்ப்பளித்த இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. கடவுளை மறந்தாலும் காதலை மறக்காமல் இருக்க ஒரு மனம் வேண்டும் என்பதை நோக்கிய பயணம் தான் இப்படத்தின் கதை,” என்றார் .

நடிகர் வாட்ஸப் மணி பேசுகையில், ”இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. கல்லூரியில் படித்து முடித்த பிறகு 2014 -15களில் கிஷோர் குறும்படங்களை உருவாக்கும் போது எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் என்னுடைய பயணமும் தொடர்ந்தது. அதன் பிறகு இணைய தொடர், மியூசிக் ஆல்பம் ஆகியவற்றை இயக்கினார். தற்போது அவர் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நானும் நடித்து நடிகராக அறிமுகமாகிறேன். இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தின் கதையை எமோஷனலாக கிஷோர் நன்றாக எழுதியிருக்கிறார். இந்தப் படம் ஒரு பீல் குட் மூவியாக இருக்கும். ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்,” என்றார்.

நடிகை டெப்னிதா கர் பேசுகையில், ”என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தை 26ம் தேதி முதல் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் வர்கீஸ் மேத்யூ பேசுகையில், ”இந்தப் படத்தில் காவல்துறை சீருடையில் நடிக்கவில்லை என்றாலும், பணக்கார அப்பாவாக நடித்திருக்கிறேன். ஆனால் அதிலும் சில சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன. ஊறுகாயும், வத்தலையும் பார்சல் செய்து அனுப்புகிற அப்பாவாக நடித்திருக்கிறேன். இது எனக்கு வித்தியாசமானதாக இருந்தது, ரசிகர்களுக்கும் பிடிக்கும்,” என்றார்.

படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் பேசுகையில், ”ஹார்ட்டின் என்னுடைய ஃபேவரிட் படங்களில் ஒன்று. நான் இதில் பணியாற்றியதால் இப்படி சொல்லவில்லை. கடந்த வாரம் தான் நானும், இயக்குநரும் படத்தை முழுவதுமாக பார்த்தோம். ரேஸியான ஃபிலிமாக மட்டும் இல்லாமல், ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கக்கூடிய படமாக இருக்கிறது. இந்த படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குநர் எழுதி இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அழுத்தமும்.. தனித்துவமும் இருக்கிறது. அதிலும்  கதையில் இருக்கும் பெண் கதாபாத்திரங்களுக்கான எழுத்து ஆழமாக இருக்கிறது. இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்கள் இருக்கின்றன. அதனை ஒளிப்பதிவாளர் முகேஷ்அற்புதமாக வித்தியாசப்படுத்தி காட்சிப்படுத்தி இருக்கிறார். இதனுடன் ராஜேஷ் முருகேசனின் இசையும் இணையும் போது ஒரு மேஜிக் நடந்துள்ளது. இந்த மேஜிக்கை திரையரங்குகளில் பார்க்கலாம்,” என்றார்.

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில், ”இந்த மேடையில் நிற்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.‌ இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் அதிக சுதந்திரமாக பணியாற்றிய படம் இது. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. இவற்றை பாடலாசிரியர்கள் சாரதி, விவேக், மோகன் ராஜன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். இந்தப் படம் இளமையான படம். இதனை தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்து கொண்டாடுங்கள்,” என்றார்.

நடிகை இமயா டி பேசுகையில், ” இது என்னுடைய முதல் படம். முதல் படம் என்பதாலேயே இது எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்தப் படத்தில் எனக்கும் என்னைப் போன்ற பல புது முகங்களுக்கும் நடிக்க வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு நன்றி. இந்தப் படம் அழகானது. அனைவருடனும் எளிதாக தொடர்பு கொள்ளும் இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கும் ஏதேனும் ஒரு விஷயம் உங்களை கவர்ந்து விடும்.  

இந்தப் படத்தின் மூலம் சனந்த் ஹீரோவாக அறிமுகமாகிறார். பக்கத்து வீட்டு பையன் போன்ற கேரக்டரில் நன்றாக நடித்திருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்,” என்றார்.

நடிகை மடோனா செபாஸ்டியன் பேசுகையில், ”இந்த கதையை கேட்டு மிகவும் பிடித்து போய் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது ஒரு லவ் ஸ்டோரி. ஏராளமான காதல் கதைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் இதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அதை நீங்கள் ஃபீல் செய்வீர்கள் என்று நம்புகிறேன். ‘ஹார்ட்டின்’ படத்தை இதயப்பூர்வமாக 26ம் தேதியன்று தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்,” என்றார்.

கிரியேட்டிவ் கன்சல்டன்ட் மணிமேகலை பேசுகையில், ”இப்படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்தக் குழுவினரும் கிரியேட்டர்கள் தான். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. ஒருத்தரை லவ் பண்ணனுமா, அல்லது இரண்டு பேரை லவ் பண்ணனுமா, அல்லது இரண்டு பேர்ல் ஒருவரை மட்டும் லவ் பண்ணனுமா அப்படிங்கிற ஒரு சாய்ஸ் இல்லாமல்… லவ் பண்ணனுமா  என்ற ஒரு சாய்ஸ் இந்தப் படத்தைப் பார்த்தால் வரும் என்று நினைக்கிறேன். இதுதான் இந்த படத்தை பார்க்கும்போது தோன்றியது. இந்தப் படத்தை இதயத்தின் மூலமாக பார்க்க வேண்டும். அப்போதுதான் புரியும், பிடிக்கும்,” என்றார்.

இயக்குநர் கிஷோர் குமார் பேசுகையில், ”இது என்னுடைய முதல் மேடை. இப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. ஒவ்வொரு பாடலையும் இசையமைப்பாளர் ராஜேஷ் உணர்வுப்பூர்வமாகவும், இதயப்பூர்வமாகவும், ஜீவனுள்ளதாகவும்.. இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்களை காண்பித்திருக்கிறோம். அதனை இரண்டு மணி நேரத்திற்கு காட்சிப்படுத்தி இருக்கிறோம்.

என்னுடன் குறும்படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய முதல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் அஜித் கோஷி, வர்கீஸ் மேத்யூ போன்றவர்களை சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிகை இமயாவின் பங்களிப்பு அதிகம். இப்படத்தில் பெண் கதாபாத்திரங்கள் சிக்கலானதாகவும் உணர்வுப்பூர்வமானதாகவும் இருப்பதற்கு அவர்களின் பங்களிப்பும் ஒரு காரணம்.

‘காதலும் கடந்து போகும்’ படத்தை பார்த்தவுடன் மடோனா செபஸ்டியனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இப்படத்தின் கதையை அவர்களிடம் ஒரு நாற்பது நிமிடம் விவரித்தேன். அவர்களுக்கு நான் சொன்ன ஐடியா பிடித்திருந்தது. அவருடைய திரையுலக பயணத்தில் நினைவில் நிற்கத்தக்க அளவிற்கு ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரசிகர்களாகிய உங்களுக்கும் பிடிக்கும்.

இந்தப் படத்தில் சனந்த் கேரக்டருக்கு ரெண்டு வெவ்வேறு வடிவங்கள் இருக்கிறது. இதனை அவருடைய அற்புதமான நடிப்பு திறனால் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். இந்தப் படத்தை அவர் தன்னுடைய தோளில் சுமந்திருக்கிறார்.‌

இன்றைய சூழலில் காதலில் சுச்சுவேஷன்சிப், வெக்கேஷன்ஷிப் என எத்தனையோ ‘டேர்ம்ஸ்’ வருகிறது. ஆனால் லவ் என்ற ஒரு எமோஷன் எப்போதும் மாறாது. அந்த எமோஷன் எப்போதும் எவர்கிரீனாக இருக்கும். இதற்கு முன் எத்தனையோ காதல் கதைகள் வந்திருந்தாலும் ஹார்ட்டின் இவை எல்லாவற்றிலிருந்தும் தனித்து இருக்கும்,” என்றார்.

நடிகர் சனந்த் பேசுகையில், ” ஹார்ட்டின்… பெயருக்கு ஏற்றார் போல் க்யூட்டான பிரீஸியான படம். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது நானும் இது ஒரு வழக்கமான காதல் கதை என்று தான் நினைத்தேன். ஆனால் அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்த கதையில் பல அடுக்குகள் உள்ளதை பார்த்தேன். அதில் ஆழமான உணர்வுகள் இருந்தது. படத்தை பார்க்கும்போது ஒரு ஆழமான உணர்வு ஏற்பட்டது.

இந்தப் படத்தின் ஹீரோ டெக்னீஷியன்ஸ் தான். அதிலும் ஒளிப்பதிவாளர் முகேஷ்அற்புதமான விஷூவல்களை வழங்கி இருக்கிறார். ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என்பதால் ஒரு ஹீரோயின் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு இரண்டு ஹீரோயின். படத்தில் இரண்டு ஹீரோயினையும் நேசித்திருக்கிறேன். படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கும் இது பிரதிபலிக்கும். இந்தப் படம் நிஜமாகவே ஆத்மார்த்தமாக இருக்கும்,” என்றார்.