Home Blog Page 19

சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது!!

0

Asia Iconic Studios சார்பில் ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத் கண்ணன், இணை தயாரிப்பாளர்- ஹரிஹரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட களத்தில் சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி சிவானி ஸ்டுடியோ நிறுவனம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் இதுவரை வந்த திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்டு, அம்மாவுக்கும் இரட்டை பெண் குழந்தைகளுக்குமான அன்பும் உறவும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு விபத்தில் தந்தை உயிரிழக்கிறார். அதில் தாயின் முகமும் கடுமையாக சேதமடைகிறது. பிளாஸ்டிக் சர்ஜரிக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பும் தாயின் விநோதமான நடத்தைகள், அவரது இரட்டை பெண் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்க தொடங்குகிறது. இதன் பின்னர் அவர்கள் அந்த மர்மங்களை ஆராய ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் திகில் சம்பவங்களே இப்படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ஒரு காரேஜ் போன்ற இடத்தில் இரட்டை பெண் குழந்தைகள் உயிர் பயத்துடன் கதவை மூட முயல்கின்றனர். கதவின் மறுபுறம் அவர்களது தாய் கோபத்துடன் கதவை திறக்க முற்படுவது போன்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்துகிறது. சுற்றியுள்ள கருவிகள், டயர்கள் மற்றும் எண்ணெய் கறைகள் படத்தின் டார்க் மற்றும் இன்டென்ஸ் மூடினை மேலும் வலுப்படுத்துகின்றன.

இதனைத் தொடர்ந்து வெளியான டிரெய்லரும், அம்மாவுக்கும் இரட்டை குழந்தைகளுக்கும் இடையிலான விநோதமான உறவை திகில் கலந்த திரில் அனுபவமாக வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வித்தியாசமான கதைக்களம், அச்சமூட்டும் காட்சிகள் மற்றும் பரபரப்பான திரைக்கதை காரணமாக “இரட்டையர்” திரைப்படத்தின் மீது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படத்தில் அம்மாவாக அபிநயா நடித்திருக்கிறார். இரட்டை குழந்தைகளாக அனுமிதா மற்றும் அனுஷிதா நடித்துள்ளனர். மேலும் சுப்ரமணிய சிவா, சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திட்டக்குடி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 21 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

ஒரு வித்தியாசமான ஹாரர்-த்ரில்லர் அனுபவத்தை தரவிருக்கும் “இரட்டையர்” திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சிவானி ஸ்டுடியோ நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுகிறது.

தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை & இயக்கம் : ஜெகதீஷ்
தயாரிப்பாளர்கள் : ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன், வினோத் கண்ணன்
வசனம் – பால பாரதி
ஒளிப்பதிவு : முகமது அமீன்
இசையமைப்பாளர் : GKV
படத்தொகுப்பு : ஈஸ்வரா மூர்த்தி
கலை இயக்கம் : பிரபாகரன் ராகுல்
நிர்வாக தயாரிப்பாளர் : பாலச்சந்தர்
தயாரிப்பு மேலாளர் : பிரதீப் மிதுல்
இணை தயாரிப்பாளர் – ஹரிஹரன்
மக்கள் தொடர்பு – மணி மதன்

‘கனவு கண்டேன்… சாதித்தேன்!’ – நரேன் மணியின் சினிமா பயணத்தின் வெற்றிக்கதை

0

தமிழ் திரைப்படத் துறையில் நடிகராக வேண்டும் என்ற கனவுடன் 2009 ஆம் ஆண்டு பயணத்தைத் தொடங்கிய நடிகர் நரேன் மணி, பல ஆண்டுகள் போராட்டங்களையும் சவால்களையும் கடந்து இன்று வெற்றிகரமான நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அவரது பயணம் விடாமுயற்சி, பொறுமை மற்றும் தன்னம்பிக்கையின் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய சூழ்நிலையில், நரேன் மணி தொலைக்காட்சி துறையில் தொழில்நுட்ப நிபுணராகவும், உள்ளடக்க தயாரிப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளான ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ மற்றும் ‘கனெக்ஷன்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பணியாற்றி தனக்கென ஒரு நிலையான இடத்தை உருவாக்கினார். இருப்பினும், நடிகராக வேண்டும் என்ற அவரது கனவு ஒருபோதும் மங்கவில்லை. தொலைக்காட்சி பணிகளுக்கு இடையிலும் தொடர்ந்து ஆடிஷன்களில் பங்கேற்று, நடிப்பு வாய்ப்புகளைத் தேடி அயராது முயன்றார்.

இந்தப் பயணத்தில் பல தடைகள் அவரை சோதித்தன. கொரோனா பெருந்தொற்று, கடுமையான கால் காயம் உள்ளிட்ட சவால்கள் அவரது கனவுப் பாதையில் இடையூறாக இருந்தபோதிலும், அவர் மனம் தளரவில்லை. பல ஆண்டுகால முயற்சிகளுக்குப் பிறகு, 2023 ஆம் ஆண்டு இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கிய ‘பாம்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு அவரது திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்து, மேலும் பல நடிப்பு வாய்ப்புகளுக்குக் கதவுகளைத் திறந்தது.

அதனைத் தொடர்ந்து, இயக்குநர் சர்குணம் மற்றும் படைப்பாளர்களான புஷ்கர் – காயத்ரி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற விரிவான தேர்வு செயல்முறையை வெற்றிகரமாகக் கடந்து, பாராட்டுகளைப் பெற்ற ‘எக்ஸாம்’ வெப் தொடரில் ‘குமரேசன்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த கதாபாத்திரம் அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதுடன், பார்வையாளர்களிடையிலும் கவனத்தை ஈர்த்தது.

தற்போது, நரேன் மணி தனது திரைப்பயணத்தில் தொடர்ந்து முன்னேறி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் பெயரிடப்படாத குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம், இயக்குநர்கள் மதுமிதா மற்றும் சிவா இயக்கும் புதிய படங்கள் உள்ளிட்ட பல முக்கியமான திட்டங்களில் அவர் நடித்து வருகிறார்.

திரைக்குப் பின்னால் உழைத்த தொழில்நுட்ப நிபுணராக இருந்து, இன்று திறமையான நடிகராக அங்கீகாரம் பெறும் வரை நரேன் மணி மேற்கொண்ட பயணம், கனவுகளை நம்பி விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை நிரூபிக்கும் ஊக்கமூட்டும் கதையாக விளங்குகிறது. பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான மனப்பாங்கு இருந்தால் எந்த இலக்கையும் அடைய முடியும் என்பதற்கு அவரது வாழ்க்கைப் பயணம் சிறந்த சான்றாகும்.

இந்திய ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் கேமிங் கவுன்சிலின் (ICMEG) தமிழ்நாடு கிளை தொடங்கப்பட்டது

0

சென்னை:

நாட்டின் படைப்பாற்றல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படும் லாப நோக்கற்ற அமைப்பான இந்திய ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் கேமிங் கவுன்சில் (Indian Council for Media, Entertainment & Gaming – ICMEG) அமைப்பின் தமிழ்நாடு கிளை, சென்னையில் உள்ள ஐஐடிஎம் ரிசர்ச் பார்க்கில் (IITM Research Park) தொடங்கப்பட்டது. ஐசிஎம்ஈஜி சென்னை கிளை தொடக்க விழாவில், தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு சங்கம் (Tamil Nadu AI Association – TNAIA) மற்றும் ஐசிஎம்ஈஜி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தமும் (MoU) கையெழுத்தானது.

இத்துறையின் மிக முக்கிய மையங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் உள்ள படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கான ஒரு முக்கிய மைல்கல்லாக இந்தத் தொடக்க விழா அமைந்தது. தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு சங்கத்துடன் இணைந்து, முன்னணி நிறுவனங்களான புரொடியூசர்பஜார் (ProducerBazaar) மற்றும் ஐபி கிளைம்ப் (IP Climb) ஆகியவற்றின் ஆதரவோடு இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொள்கைசார் ஆதரவு (Policy advocacy), அறிவுசார் சொத்துரிமை (IP) பாதுகாப்பு மற்றும் இத்துறையின் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இணைந்து செயல்படும் நோக்கில், தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழலைத் தமிழ் தயாரிப்பாளர்களும் படைப்பாளிகளும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் நோக்கில், எதிர்காலம் சார்ந்த பல கலந்துரையாடல்கள் இந்நிகழ்வில் நடைபெற்றன. உள்ளடக்கத் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவின் பங்கு, வெர்டிகல் மற்றும் குறு வடிவ (Short-form) உள்ளடக்கங்களின் வளர்ச்சி, அறிவுசார் சொத்துரிமை (IP Rights) & உரிமைகள் மேலாண்மை, மற்றும் புதிய வருவாய் ஈட்டும் வழிகள் (Monetisation pathways) ஆகிய முக்கியத் தலைப்புகளில் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஊடகத் துறை நிபுணர்கள், நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் படைப்பாளிகள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடல்களில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ஈநாடு டெலிவிஷன் பிரைவேட் லிமிடெட் துணைத் தலைவர் திரு. சாய் கிருஷ்ணா; சன் நெக்ஸ்ட் (SUN NXT) உள்ளடக்கத் தலைவர் திரு. சூர்யா என்; ஜீ புல்லட் நிர்வாகத் தயாரிப்பாளர் டாக்டர் அஃப்ரோஸ் பாத்திமா; ஃபாண்டம் மீடியா குரூப் முதன்மை வணிக அதிகாரி (CBO) திரு. ராஜன் எத்திராஜா; வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் ஊடக இயக்குநரும் தயாரிப்பாளருமான செல்வி. கவிதா பாண்டியன்; மற்றும் எம்எஃஐ (MFI) இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. ஜே லட்சுமண் ஆகியோர் இதில் பங்கேற்றனர். தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு சங்க நிறுவனர் திரு. வெங்கடேஷ் ராஜேந்திரன் மற்றும் ஃபிப்செயின் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் (FipChain Technology Pvt Ltd) நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. ஜிகே திருநாவுக்கரசு ஆகியோர் கலந்துரையாடல்களை நெறிப்படுத்தினர்.

ஐசிஎம்ஈஜி தமிழ்நாடு கிளையின் தொடக்க விழாவிற்கு முன்னணி ஊடக நிறுவனங்கள் தங்களது ஆதரவை வழங்கின. ஜீ புல்லட், சன் நெக்ஸ்ட், இடிவி வின் (ETV Win), இடிவி, ஃபாண்டம் எஃப்எக்ஸ் (PhantomFX) மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இம்முயற்சிக்கு ஆதரவளித்தன.

ஐசிஎம்ஈஜி அமைப்பின் தமிழ்நாடு கிளையின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு சங்க (TNAIA) நிறுவனர் வெங்கடேஷ் ராஜேந்திரன் பேசுகையில், “இந்திய ஊடகத் துறையில் தமிழ்நாடு எப்போதும் முன்னணியில் திகழ்கிறது. உலகளாவிய சிறந்த நடைமுறைகள், வலுவான ஐபி (IP) பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் புதிய டிஜிட்டல் வருவாய் வழிகளை உருவாக்குவதற்கான ஒரு கூட்டுத் தளத்தைதமிழ் தயாரிப்பாளர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் வழங்க ஐசிஎம்ஈஜி தமிழ்நாடு கிளை உறுதி பூண்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

ஃபிப்செயின் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜிகே திருநாவுக்கரசு பேசுகையில்: “படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இடையேயான ஒரு வலுவான கூட்டுச் சூழலியலின் தொடக்கத்தை ஐசிஎம்ஈஜி தமிழ்நாடு கிளையின் தொடக்கம் குறிக்கிறது. ஊடகம், பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் ஏஐ சார்ந்த புத்தாக்கங்களை இணைப்பதன் மூலம், தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் அடுத்த தலைமுறை படைப்பாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், அவர்களின் படைப்புரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களை மேம்படுத்தவும் இம்முயற்சி வழிவகுக்கும்,” என்று கூறினார்.

தமிழ் சினிமாவின் உலகளாவிய எல்லைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட எதிர்கால கூட்டுத் திட்டங்கள் குறித்து, தயாரிப்பாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இடையேயான பயனுள்ள கருத்து பரிமாற்றங்களுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

மீசைய முறுக்கு 2 படத்தின் கோவிந்தம்மா பாடல்! 1M அதிகமான பார்வைகளை கடந்து சாதனை!

0

ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள மீசைய முறுக்கு 2 படத்தின் கோவிந்தம்மா பாடல் ரசிகர்களை கவர்ந்து 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, மீசைய முறுக்கு 2 படக்குழுவினர் தற்போது அதன் மூன்றாவது பாடலான கோவிந்தம்மா பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் வெளியான குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடம் இருந்து அமோக வரவேற்பை பெற்று, 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் ரம்யா ரங்கநாதன் நடித்துள்ள இப்பாடல், ஆதியின் வசீகரிக்கும் பழங்கால தோற்றத்துடன் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காட்சி அனுபவத்தை வழங்குகிறது. கிராமிய ஆற்றல், நாட்டுப்புற தாளம் மற்றும் சமகால இசை கூறுகளை அழகாக கலந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த விறுவிறுப்பான பாடல், ரசிகர்களின் உடனடி விருப்பமான பாடலாக மாறியுள்ளது.

ஹிப்ஹாப் தமிழா எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படம், அதன் முதல் பாகம் உருவாக்கிய இசை பாரம்பரியத்தை தொடர்வதோடு மட்டுமல்லாமல், மறக்க முடியாத பாடல்கள் மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சிகளுடன் பொழுதுபோக்கு அம்சத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. கோவிந்தம்மா பாடல் மூலம், அனைத்து தலைமுறை ரசிகர்களையும் கவரும் வகையிலான துள்ளலான மற்றும் கொண்டாடக்கூடிய இசையை உருவாக்கும் தனது திறமையை ஆதி மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த ஆற்றல் மிக்க பாடலை ஹிப்ஹாப் தமிழா, கௌஷிக் கிரிஷ், கானா வினோத், கானா உலகம் தரணி மற்றும் கானா சுதாகர் ஆகியோர் பாடியுள்ளனர். ஹிப்ஹாப் தமிழா எழுதியுள்ள வரிகள் பாடலின் துள்ளலான மற்றும் பண்டிகை கால மனநிலைக்கு மிகக் கச்சிதமாக பொருந்தியுள்ளன.

இப்படத்தின் இசை பயணம் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கேதிகா சர்மா நடிப்பில் வெளியான முதல் பாடலான ஆரா 10/10, 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. சைத்ரா ஜே ஆச்சார் நடித்த இரண்டாவது பாடலான பப்பாளி பழமே பாடலும் நல்ல வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இப்போது, கோவிந்தம்மா பாடலும் சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளதால், மீசைய முறுக்கு 2 மீதான ஆர்வம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் குஷ்பூ சுந்தர் மற்றும் ஏ.சி.எஸ். அருண்குமார் ஆகியோர் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். காதல், நகைச்சுவை, இசை, உணர்வுகள் மற்றும் மாஸ் கூறுகள் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர். மீசைய முறுக்கு 2 படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, கேதிகா சர்மா, சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழுவில் திரையுலகின் முன்னணி திறமையாளர்கள் இடம் பெற்றுள்ளனர். படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க, பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார், கூடுதல் ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் கவனித்துள்ளார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பையும், பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பையும், வி.எஸ்.தினேஷ் குமார் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர். பென்ஸ் மீடியாவின் சிஇஓ ஆர்.மதன் குமார், நிர்வாக தயாரிப்பாளர் ஆனந்திதா சுந்தர் மற்றும் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அஸ்வின் ராம் ஆகியோர் தயாரிப்பு பணிகளை முன்னின்று நடத்தியுள்ளனர். பாபா பாஸ்கர், சந்தோஷ் மற்றும் ரகு தாபா ஆகியோர் நடன கலையையும், ஆக்ஷன் சந்தோஷ் சண்டை காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர்.

ஏற்கனவே மூன்று வெற்றிகரமான பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீசைய முறுக்கு 2 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.

நடிகர்கள்:

ஹிப்ஹாப் தமிழா ஆதி
கேதிகா சர்மா
சைத்ரா ஜே ஆச்சார்
ரம்யா ரங்கநாதன்
நாசர்
கருணாஸ்
ஆடுகளம் நரேன்
கருணாகரன்

தொழில்நுட்பக் குழு

தயாரிப்பு: அவ்னி மூவிஸ், பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பாளர்கள்: குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார்
இசை: ஹிப்ஹாப் தமிழா
படத்தொகுப்பு: ஃபென்னி ஆலிவர்
ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம்
கூடுதல் ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்
பென்ஸ் மீடியா சிஇஓ: ஆர். மதன் குமார்
நிர்வாக தயாரிப்பாளர்: ஆனந்திதா சுந்தர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அஸ்வின் ராம்
ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி
கலை இயக்கம்: வி. எஸ். தினேஷ் குமார்
தயாரிப்பு நிர்வாகி: பி. பாலகோபி
நடனம்: பாபா பாஸ்கர், சந்தோஷ், ரகு தாபா
சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்
டிஜிட்டல் இன்டர்மீடியட்: நாக் ஸ்டுடியோஸ்
கலர்ஃபுல் கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர்
விஎஃப்எக்ஸ்: 85FX, ஹோகஸ் போகஸ்
கூடுதல் வசனங்கள்: கரன் கார்க்கி மற்றும் நித்திஷ் டி
டைட்டில் கார்டு அனிமேஷன்: அஸ்வின் குமார்
மார்க்கெட்டிங்: பாங்க் டிஜிட்டல்
தயாரிப்பு மார்க்கெட்டிங் குழு: பீட்ரூட்
விளம்பர வடிவமைப்பு: ராகவார்ட்ஸ்
முடி மற்றும் ஒப்பனை வடிவமைப்பு: வேல்முருகன்
ஆடை உதவியாளர்: அருண்
ஸ்டில்ஸ்: பி. கே. ராஜா
ஒலி கலவை: கண்ணன் கணபத்
ஒலி வடிவமைப்பு: ஏ. சதீஷ் குமார்
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ஹரி வெங்கட் சி
தயாரிப்பு மேலாளர்: விக்னேஷ் ரத்தினம்
மக்கள் தொடர்பாளர்: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ் (S2 மீடியா)
மியூசிக் லேபிள்: சரிகம இந்தியா லிமிடெட்

100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சர்வதேச அளவில் மெகா ஹிட் அடித்துள்ள ஆரா 10/10!

0

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஹிப்ஹாப் தமிழா கதை- திரைக்கதை-வசனம்- இயக்கத்தில் “மீசைய முறுக்கு-2” படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, பாலிவுட் நடிகை கேட்டிகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், யோகி பாபு, கருணாஸ், ஹர்ஷத் கான் , ‘ஆடுகளம்’ நரேன், நாசர், ரம்யா ரங்கநாதன், ஷா ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம், மாதேஷ் மாணிக்கம் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார்.‌ கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அவ்னி மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ.சி.எஸ் அருண்குமார் மற்றும் குஷ்பூ சுந்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் டைட்டில் டீசர்- ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆரா பத்துக்கு பத்து’ எனும் பாடல் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆகி சர்வதேச ஹிட் அடித்தது. ரேடியோ, ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் என எல்லாவற்றிலும் பெரிய ஹிட் அடித்த ஆரா 10/10 பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து பல்வேறு தரப்பினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள “பப்பாளி பழமே”, “கோவிந்தம்மா” உள்ளிட்ட பாடல்களும் ஹிட் அடித்து இணையத்தை கலக்கி வருகிறது.

நடிகர்கள்:

ஹிப்ஹாப் தமிழா ஆதி
கேதிகா சர்மா
சைத்ரா ஜே ஆச்சார்
ரம்யா ரங்கநாதன்
ஹர்ஷத் கான்
நாசர்
கருணாஸ்
யோகி பாபு
ஆடுகளம் நரேன்
கருணாகரன்
ஷா ரா

தொழில்நுட்பக் குழு

தயாரிப்பு: அவ்னி மூவிஸ், பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பாளர்கள்: குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார்
இசை: ஹிப்ஹாப் தமிழா
படத்தொகுப்பு: ஃபென்னி ஆலிவர்
ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம்
கூடுதல் ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்
பென்ஸ் மீடியா சிஇஓ: ஆர். மதன் குமார்
நிர்வாக தயாரிப்பாளர்: ஆனந்திதா சுந்தர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அஸ்வின் ராம்
ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி
கலை இயக்கம்: வி. எஸ். தினேஷ் குமார்
தயாரிப்பு நிர்வாகி: பி. பாலகோபி
நடனம்: பாபா பாஸ்கர், சந்தோஷ், ரகு தாபா
சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்
டிஜிட்டல் இன்டர்மீடியட்: நாக் ஸ்டுடியோஸ்
கலர்ஃபுல் கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர்
விஎஃப்எக்ஸ்: 85FX, ஹோகஸ் போகஸ்
கூடுதல் வசனங்கள்: கரன் கார்க்கி மற்றும் நித்திஷ் டி
டைட்டில் கார்டு அனிமேஷன்: அஸ்வின் குமார்
மார்க்கெட்டிங்: பாங்க் டிஜிட்டல்
தயாரிப்பு மார்க்கெட்டிங் குழு: பீட்ரூட்
விளம்பர வடிவமைப்பு: ராகவார்ட்ஸ்
முடி மற்றும் ஒப்பனை வடிவமைப்பு: வேல்முருகன்
ஆடை உதவியாளர்: அருண்
ஸ்டில்ஸ்: பி. கே. ராஜா
ஒலி கலவை: கண்ணன் கணபத்
ஒலி வடிவமைப்பு: ஏ. சதீஷ் குமார்
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ஹரி வெங்கட் சி
தயாரிப்பு மேலாளர்: விக்னேஷ் ரத்தினம்
மக்கள் தொடர்பாளர்: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ் (S2 மீடியா)
மியூசிக் லேபிள்: சரிகம இந்தியா லிமிடெட்

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் 16வது படமான ‘சமவர்த்தி’ பரபரப்பான ஆக்சன் திரில்லராக தயாராகிறது

0

பல்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஒரு கதாநாயகனாக தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியதற்காக ரசிகர்களால் பாராட்டப்படும் திறமையான இளம் நடிகர் சத்யதேவ் கஞ்சரானா – புதிதாக நடிக்கும் திரைப்படத்திற்கு, ‘சமவர்த்தி’ என பெயரிட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அவரது திரை பயணத்தில் கதாநாயகனாக நடிக்கும் 16ஆவது திரைப்படம் இதுவாகும்.‌

ருத்ரா பிக்சர்ஸ் மற்றும் பஞ்சபூதா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவசரண் ரெட்டி – ஜக்கிடி மற்றும் சசிதர் ரெட்டி படமடி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை அஜய் நாக் வி இயக்குகிறார். ‘சமவர்த்தி’ ஒரு சூழலியல் சார்ந்த ஆக்சன் திரில்லராக உருவாக்கி, தமிழ்- தெலுங்கு- கன்னடம்- மலையாளம்- ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.‌

சமவர்த்தியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் கோடாரிகள் மற்றும் கத்திகளுடன் ஆயுதம் ஏந்திய பல நபர்கள் அவரை நோக்கி பாய்ந்து வரும் போது.. சத்ய தேவ் தனது ஹெட் போனில் அமைதியாக இசையை கேட்டுக் கொண்டிருப்பதை போல் தோன்றுகிறார்.

இயற்கை மற்றும் வனத்தின் சாராம்சம் நிறைந்த ப்ரீ லுக் போஸ்டரை தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பின்னணியில் உள்ள புலி ஆகியவை.. ஆர்வத்தை தூண்டும் வகையில் இயற்கையின் நுட்பமான குறிப்புகளை பிரதிபலிக்கிறது.

இப்படத்தின் தலைப்பும், போஸ்டரும் சத்ய தேவின் திரை வாழ்க்கையில் மிகவும் தீவிரமான – அதிரடியான திரைப்படங்களில் ஒன்றாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளது.

சுற்றுச்சூழல் அதிரடி திரில்லர் என்ற ஜானரில் புதிய உருவாக்கம் என்பதால்.. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

சத்யதேவ் இந்த படத்தின் மூலம் முற்றிலும் புதிய தளத்திற்குள் அடி எடுத்து வைக்கிறார். தனது உடல் வலிமையையும், அதன் தோற்றத்தையும் அதிகரிக்கும் ஒரு முழுமையான அதிரடி ஆக்சன் களத்திற்குள் அவர் திட்டமிட்டு நுழைகிறார்.

இயற்கையின் கட்டுக்கடங்காத சக்திகளின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படைப்பு .. சுற்றுச்சூழலுக்கு எதிராக நிகழும் அதிக ஆபத்துக்கள் நிறைந்த விசயங்களுடன் ஆழமாக பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு வகையான சுற்றுச்சூழல் அதிரடி திரில்லராக தயாராகிறது.

தொழில்நுட்பக் குழு :

கலை இயக்குநர் : மன்ட்ரூ ரவிக்குமார்
ஆடை வடிவமைப்பாளர் : பிரியங்கா ரெபாக்கா ஸ்ரீநிவாஸ்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: உல்லாஸ் ஹைதுர்
படத்தொகுப்பு : ஆதித்யா திவாரி
ஒளிப்பதிவு : ஹர்ஷா மல்லிகார்ஜுன் – தேவ் தீப் காந்திகுண்டு
இசை : சிஞ்சித் யெர்மில்லி
கிரியேட்டிவ் புரொடியூசர் : வினய் ரெட்டி மமிடி.
நிர்வாகத் தயாரிப்பு : உஜ்வல் பி. எம்.
தயாரிப்பாளர்கள் : சிவசரண் ரெட்டி – ஜக்கிடி – சசிதர் ரெட்டி படமடி
இயக்கம் : அஜய் நாக் வி
மக்கள் தொடர்பு : யுவராஜ்.

ரொமான்ஸ் கலந்த காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனம் கவனத்தை ஈர்த்துள்ளது !!

0

லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் (LORDS P The international Production) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில், உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார். போஸ்டர் வெளியாகியதுடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

வண்ணக்கலவை நிறைந்த பின்னணியில், கையில் இசை வாத்தியங்களுடன் நடிகர்கள் சிவகுமார், சதீஷ் மற்றும் டேனியல் ஆன்னி போப் ஆகியோர் கையில் இசை வாத்தியங்களுடன் தோன்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக், பார்ப்பவர்களின் முகத்தில் இயல்பாக புன்னகையை வரவழைக்கிறது. கலர்ஃபுல் மற்றும் ஜாலியான டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ரொமான்ஸ் காமெடி என்டர்டெய்னராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் சிவகுமார் மற்றும் ஆன் ஷீத்தல் நாயகன் – நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் சதீஷ், டேனியல் ஆன்னி போப் , பிரதீப் ஜோஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு மற்றும் TM கார்த்திக் முக்கியமான கேமியோ கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மதுமிதா, பிரதீப் ஜோஷ், வழக்கு எண் முத்துராமன் மற்றும் லிஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் எழுதி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை A. குமரன் மேற்கொண்டுள்ளார். லினு.M படத்தொகுப்பை கவனித்துள்ளார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகி வரும் ‘பாதாம்கீர்’, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான ரொமான்டிக் காமெடி அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பாளர் – பிரதீப் ஜோஸ். K
கதை, திரைக்கதை & இயக்கம் – ஜெய் சக்தி பிரகாஷ்
இசையமைப்பாளர் – விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு – A. குமரன்
படத்தொகுப்பு – லினு. M
சவுண்ட் எஃபெக்ட்ஸ் – C. சேது
புரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ் – K. சடகோபன்
கலை இயக்கம் – A. பழனிவேல்
நடன அமைப்பு – கல்யாண்

உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் முக்கிய தளங்களில் வெளியானது

0

இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’, புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில், ஒரு புதிய நவீன வடிவில் வெளியாகி உள்ளது. ஜியோ சாவன், கானா, ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், இன்ஸ்டா ரீல்ஸ், டிக் டாக் போன்ற தளங்களில் மே 20 அன்று இது வெளியிடப்பட்டது. இதன் லிரிக்கல் வீடியோ மே 23 அன்று ராஜ்ஷ்ரி சோல் யூடியூப் சேனலில் வெளியிடப்படும்.

பழம்பெரும் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இப்பாடல், பக்தர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் காலத்தால் அழியாத இடத்தைப் பிடித்துள்ளது. இதன் புதிய வடிவம் அப்பாடலின் புனிதத்தன்மையை மதித்துப் போற்றுவதோடு, புதுமையான இசை அணுகுமுறையின் மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் ஈர்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.

15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரால் இயற்றப்பட்ட சுப்ரபாதத்தின் புதிய பதிப்பிற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்க, ராஜஸ்ரீ சோல் (Rajshri Soul) யுடியூப் சேனலுக்காக சீ ரெக்கார்ட்ஸ் (Sea Records) நிறுவனத்தின் சந்தீப் ரெட்டி தயாரித்துள்ளார். மே 23, 2026 அன்று வெளியாகவுள்ள இந்த பாடல், மூலப் பாடலின் பக்தி ஆழத்தைப் போற்றுவதோடு, நவீன ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற சமகால இசை வடிவத்தில் அதை வழங்கவும் முயல்கிறது.

இப்புதிய வடிவத்தின் முக்கிய அம்சாகத் திகழும் உத்தரா உன்னிகிருஷ்ணன், கர்நாடக இசையிலும், திரைப்படப் பின்னணிப் பாடல்களிலும், ‘ஃபியூஷன்’ (Fusion) இசை வடிவங்களிலும் தனது பன்முகத்தன்மைக்காக அறியப்படும் பாடகி ஆவார். ஆறு வயதிலிருந்தே டாக்டர் சுதா ராஜாவிடம் முறையாகப் பயிற்சி பெற்ற இவர், பின்னர் தனது தந்தையும் புகழ்பெற்ற பாடகருமான பி. உன்னிகிருஷ்ணனின் வழிகாட்டுதலோடு இத்துறையில் வளர்ந்தார். பண்டிட் நாகராஜ் ராவ் ஹவால்தர் மற்றும் கௌஷிக் ஐதல் போன்ற தலைசிறந்த கலைஞர்களின் வழிகாட்டுதலோடு, கர்நாடக மற்றும் இந்துஸ்தானி ஆகிய இரு இசை மரபுகளிலும் திறமை கொண்டவராக உத்தரா திகழ்கிறார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த ‘சைவம்’ (2014) திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அழகே அழகே’ பாடல் மூலம், திரைப்பட பின்னணிப் பாடகியாக உத்தரா மிகச் சிறப்பான அறிமுகத்தைப் பெற்றார். இப்பாடலுக்காக அவருக்கு ‘சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருது’ கிடைத்தது; இதன் மூலம், தனது முதல் திரைப்படப் பாடலுக்கே இவ்விருதைப் பெறும் மிக இளைய பாடகி என்ற பெருமையையும் அவர் பெற்றார். தொடர்ந்து அரோல் கோரல்லி இசையமைத்த ‘பிசாசு’ திரைப்படத்தின் ‘நதி போகும் கூழாங்கற்கள்’ பாடல் மூலமும் அவர் பரவலான பாராட்டைப் பெற்றார். தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது, ஃபிலிம்பேர் விருது (தெற்கு), SIIMA விருது, விஜய் விருது மற்றும் மிர்ச்சி இசை விருது ஆகியவை இவரது விருது பட்டியலில் அடங்கும். மேலும், சண்முகானந்தா சபா மற்றும் பாரத் கலாச்சார் போன்ற பல்வேறு கலாச்சார அமைப்புகளும் இவரைச் கெளரவித்துள்ளன. குறிப்பாக, பாரத் கலாச்சார் இவருக்கு “யுவ கலா பாரதி” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 2025ம் ஆண்டிற்கான ரிலையன்ஸ் அறக்கட்டளையின் “Unstoppable 21” இளம் சாதனையாளர்களில் ஒருவராகவும் இவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

“ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தின்” இந்தப் புதிய வடிவத்தின் மூலம், மரபு இசைக்கும் சமகால இசைக்கும் இடையே ஒரு பாலமாகத் திகழும் தனது கலைப் பயணத்தை உத்தரா உன்னிகிருஷ்ணன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறார். காலத்தால் அழியாத இப்பாடலின் சாரத்தை இம்முயற்சி அப்படியே பாதுகாப்பதோடு, நிகழ்கால மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் இது பொருத்தமானதாகவும் நெஞ்சில் ஆழப் பதியக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யும் ஒரு பக்திப் படைப்பாக விளங்குகிறது.

பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், கபீர் சிங், சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘காட்டாளன்’ வனத்தில் நடக்கும் கடத்தல் சம்பவங்களை விறுவிறுப்புடன் விவரிக்கிறது

0


2024-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மார்கோ’ திரைப்படத்தை தொடர்ந்து கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஷெரீப் முகம்மது தயாரித்துள்ள படமான ‘காட்டாளன்’ உலகமெங்கும் மே 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் லெனின் தமிழகமெங்கும் மே 28ம் தேதி வெளியிடுகிறார்

பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காட்டாளன்’ பெயருக்கேற்றார் போல் காட்டில் நடக்கும் பரபரப்பு கடத்தல் சம்பவங்களை திரையில் காட்டுகிறது. “பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக சென்று ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும், அடுத்தது என்ன என்று பார்வையாளர்களை ஒவ்வொரு நிமிடமும் பரவசத்தில் ஆழ்த்தும்,” என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

‘காட்டாளன்’ திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், கபீர் சிங், சுனில், சித்திக், பர்த் திவாரி, ராஜ் திரன்தாசு, ஹரிஷங்கர் நாராயணன், ஆன்சன் பால் மற்றும் சந்தீப் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், பெப்ஸி மற்றும் எகசெட் ஆகிய இரண்டு யானைகள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளன. உரிய அனுமதி பெற்று, விலங்குகளை துன்புறுத்தாமல் நிஜ யானைகள் இப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

‘கேஜிஎப்’ திரைப்படத்தை தனது இசையால் அதிர வைத்த ரவி பஸ்ரூர் ‘காட்டாளன்’ படத்திற்கு இசையமைக்க, ரேனா திவே ஒளிப்பதிவு மேற்கொள்ள. ஷமீர் முகம்மது படத்தொகுப்பை கையாண்டுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் நேரடியாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது.

“ஒரு பான் இந்தியா படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள ‘காட்டாளன்’ திரைப்படம் இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவரும்,” என படக்குழுவினர் மேலும் கூறினர்.

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

0

இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் மோகன்லாலின் நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திரைப்பட பயணத்தை அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களுடன் கொண்டாடுகிறது ஜியோஹாட்ஸ்டார்.

கொச்சி, மே 2026: லெஜெண்ட்ரி நடிகர் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மோகன்லால்- தி கம்ப்ளீட் ஆக்டர்’ என்ற சிறப்பு திரைப்பட விழாவை மே 20 முதல் 30 வரை ஜியோஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்கிறது. மோகன்லாலின் நாற்பது ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது 115 முக்கியமான படங்கள் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

மறக்க முடியாத கிளாசிக் படங்கள், அவரது திரை வாழ்க்கையை மாற்றிய சிறந்த படங்கள், பிளாக்பஸ்டர் ஹிட்கள், திரில்லர்கள், நகைச்சுவை படங்கள் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் என மோகன்லாலின் பல்வேறு முகங்களை ரசிகர்களுக்கு நெருக்கமாக கொண்டு வரும் வகையில் இந்த தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதில் த்ரிஷ்யம், மணிச்சித்திரதாழு, வானபிரஸ்தம், பாரதம், சன்மனசுள்ளவர்கு சமாதானம், துடரும், ஹ்ருதயபூர்வம், புலிமுருகன், வந்தனம், தூவனதும்பிகள், நேரு, செங்கோல், ஒப்பம், காலாபாணி, ஜனதா கேரேஜ், தன்மாத்ரா, தென்மாவின் கொம்பத், எல்2: எம்புரான், ரன் பேபி ரன், ஏய் ஆட்டோ, சித்திரம், ப்ரோ டாடி, மின்னாரம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, ஆறாம் தம்புரான், கமலதாளம், கிலுக்கம், கிரீடம், தாழ்வாரம், பரோஸ் – கார்டியன் ஆஃப் டிரெஷர், 12த் மேன் மற்றும் 1971 பியாண்ட் பார்டர்ஸ் மற்றும் பல படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘மோகன்லால் கல்ட் கிளாசிக்ஸ்’, ‘தி கம்ப்ளீட் லாலேட்டன் ஸ்வாக்’, ‘லாலேட்டன் LOL யுனிவர்ஸ்’, ‘பெஸ்ட் மோகன்லால் திரில்லர்’ மற்றும் ‘மோகன்லால் ஹார்ட் & ஹோம்’ போன்ற சிறப்பு தொகுப்புகளையும் உருவாக்கியுள்ளது. இத்தொகுப்புகள் மூலம் அசத்தலான நடிப்பு, உணர்ச்சிகரமான கதைகள், நகைச்சுவை, மாஸ் தருணங்கள் மற்றும் காலத்தால் அழியாத குடும்பப் படங்கள் என மோகன்லாலின் அபாரமான நடிப்பை ரசிகர்கள் மீண்டும் கொண்டாடலாம்.

இந்த கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்க, ஜியோஹாட்ஸ்டார் மோகன்லால் சூப்பர் ஃபேன் போட்டியையும் நடத்துகிறது. இந்த போட்டியின் ஒரு பகுதியாக, மோகன்லாலின் ஐகானிக் திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளுக்கு ரசிகர்கள் பதிலளித்து, அவரே கையொப்பமிட்ட பிரத்யேக டி-ஷர்ட்களை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம். ரசிகர்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போட்டி, மோகன்லாலை இந்திய சினிமாவின் மிகவும் நேசிக்கப்படும் நட்சத்திரங்களில் ஒருவராக மாற்றிய மறக்க முடியாத தருணங்கள், கதாபாத்திரங்கள் மற்றும் நடிப்பை கொண்டாடுகிறது. போட்டியில் பங்கேற்பது தொடர்பான விவரங்கள், தகுதிகள் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் ஜியோஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ தளங்களில் வெளியாகியுள்ளன.

பல மொழிகளிலும் தலைமுறைகள் தாண்டிய ரசிகர்களை கவர்ந்திருக்கும் அசாதாரண திரைப்படப் பயணத்தின் மூலம், மோகன்லால் இந்திய திரைத்துறையின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளார். அவரது பிறந்தநாள் மூலம், ஜியோஹாட்ஸ்டார் ரசிகர்களுக்கு மோகன்லாலின் சிறந்த படங்களைப் பார்த்து கொண்டாடும் வாய்ப்பை வழங்குகிறது.

ஜியோஹாட்ஸ்டார் பற்றி:

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.