Home Blog Page 18

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

0

இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் “ரஞ்சன்” படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்.கே.சுரேஷ், மோகன்ராம், ஆதிரா, மானஸ்வி, ஆதேஷ்பாலா, சந்தோஷ்பிரபாகர்,மோகன்லால் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் மகன் ஹரியும், நடிகை தேவயானி மகள் பிரியங்காவும் இளம் ஜோடியாக அறிமுகம் ஆகிறார்கள்.

இளைஞர்களுக்கு போக்சோ சட்டத்தின் வீரியத்தை சொல்லும் விதமாக பரபரப்பாக கோர்ட் ஷூட்டிங் நடக்கும் போது கேமராமேன் ரவியாதவ் பிறந்த நாள் சர்ப்ரைஸ் நிகழ்வு நடைபெற்றது.

திடீரென செட்டுக்கு பெரிய கேக் வரவழைக்கப்பட்டு அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞ்ர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

பரபரப்பாக நடைபெறும் இந்த படத்தில் சொல்லப்படும் கருத்து சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாடும் படம் “பெத்தி” – ராம் சரண் !!

0

இந்திய கிராமங்களின் திறமைகளையும், உண்மையான இந்திய ஆன்மாவையும் மிகப்பெரிய திரையில் கொண்டாடும் படம் தான் ‘பெத்தி’ – டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் ராம் சரண் பேச்சு

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள கிராமத்து விளையாட்டு பின்னணியிலான பிரம்மாண்ட திரைப்படம் ‘பெத்தி’ நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ் ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

இப்படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளதுடன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், திவ்யேந்து சர்மா, ஜகபதி பாபு மற்றும் போமன் இரானி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ‘பெத்தி’ படக்குழு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்து வருகிறது. போபாலில் நடைபெற்ற மிகப்பெரிய விழாவிற்கு பிறகு, தற்போது டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து படத்தை பற்றி பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய போமன் இரானி, “இந்திய கிராமங்களில் மறைந்து கிடக்கும் உண்மையான திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படம் தான் ‘பெத்தி’. இந்த படத்தை பார்த்த பிறகு ஒவ்வொரு இளைஞரும் ‘பெத்தி’ போல ஆக வேண்டும் என்ற ஊக்கத்தை பெறுவார்கள். இந்திய விளையாட்டுத் துறையில் மறைந்து கிடக்கும் திறமைகளுக்கு சரியான வாய்ப்புகள், பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த படம் உருவாக்கும்,” என்றார். மேலும், இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றும் கூறினார்.

திவ்யேந்து சர்மா பேசுகையில், “இவ்வளவு திறமையான கலைஞர்களுடன் ஒரே படத்தில் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ராம் சரண் உடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. ‘பெத்தி’ என்பது அடையாளத்திற்கான போராட்டத்தை சொல்லும் உயிர்ப்புடன் கூடிய ஒரு சர்வைவல் கதையாக இருக்கும்,” என்றார்.

தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு, “என் முதல் தயாரிப்பாக இப்படம் உருவாகுவது பெருமையாக உள்ளது. இந்திய கலாச்சார வேர்களை கொண்ட ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அதேசமயம் விறுவிறுப்பான கதையாக ‘பெத்தி’ இருக்கும். குடும்பத்துடன் குழந்தைகளையும் திரையரங்கிற்கு அழைத்து வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

நாயகி ஜான்வி கபூர், டெல்லியின் வெப்பத்தை பற்றி நகைச்சுவையாக பேசிக்கொண்டே, தனது கதாபாத்திரம் இயக்குநர் புச்சி பாபு சனாவின் தனித்துவமான அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டதாக கூறினார். ராம் சரண் இன் அர்ப்பணிப்பு குறித்து பேசுகையில், “கேமரா ஆஃப் ஆனதும் அமைதியாக இருப்பார். ஆனால் ஷாட் ஆரம்பித்தவுடன் திரையே வெடிக்கும் அளவிற்கு ஆற்றலை வெளிப்படுத்துவார்,” என்று பாராட்டினார்.

மேலும், “இந்த படம் இந்தியாவின் புறக்கணிக்கப்பட்ட மக்களின் அடையாளப் போராட்டத்தை பேசும் ஒரு மாஸ் என்டர்டெய்னர். இந்த படம் உண்மையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றும் கூறினார்.

ராம் சரண் பேசுகையில், “கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாங்கள் இந்த படத்திற்காக உண்மையுடன் உழைத்துள்ளோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை திரையரங்கிற்கு அழைத்து வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும். இந்திய மண்ணின் வாசனையுடன் உருவாகும் கதைகளே உலகளவில் கொண்டாடப்படுகின்றன. ‘பெத்தி’ அப்படிப்பட்ட ஒரு கதை,” என்றார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி யை சந்தித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். மேற்கு வங்கத்தை சேர்ந்த முகம்மது என்ற இளைஞர், தனது கிராமத்திலிருந்து மேலும் 80 பேரை இந்தியாவுக்காக விளையாட ஊக்குவித்த சம்பவத்தை பிரதமர் கூறியதாக தெரிவித்தார். “அப்படிப்பட்ட உண்மையான இந்திய ஆன்மாவையும், கிராமத்து மக்களின் உறுதியையும் ‘பெத்தி’ படம் கொண்டாடுகிறது,” என்றார்.

தனது மாறுபட்ட தோற்றங்கள் குறித்து பேசுகையில், “ஒவ்வொரு கதாபாத்திர மாற்றமும் சவாலானதே. குறிப்பாக மல்யுத்த வீரர் தோற்றம் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் நான் கதையின் தேவையை மட்டுமே பின்பற்றினேன்,” என்றார்.

இறுதியாக, “உண்மையான இந்திய ஆன்மாவையும், போராட்ட மனப்பாங்கையும் கொண்ட ‘பெத்தி’ படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து அனுபவிக்க வேண்டும்,” என்று ராம் சரண் அழைப்பு விடுத்தார்.

“பெத்தி” படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது !!

0

சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி ( Venky Atluri) கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.

பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும் சாயி சௌஜன்யா தயாரித்துள்ளனர். டீசர் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

குறிப்பாக, சூர்யா ஒரு குழந்தையுடன் இடம்பெற்றிருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர் சூர்யாவின் பழைய வசீகரமிக்க நடிப்பு பாணியை மீண்டும் நினைவூட்டியதுடன் குடும்ப ரசிகர்களிடையே உடனடி வரவேற்பைப் பெற்றது.

‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் குடும்ப உறவுகள், உணர்ச்சி மிக்க கதை சொல்லல் மற்றும் மனதை கவரும் தருணங்களுடன் ஒரு ஃபீல் குட் எண்டர்டெய்னரை வழங்க உள்ளார்.

இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ள நிலையில், பங்களன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த ஆண்டின் மிகவும் நேசிக்கப்படும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ உருவாகும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் படத்திற்கு வலுவான திரையரங்கு வெளியீடு கிடைக்க உள்ளது.

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் கொண்டாடலாம்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி
தயாரிப்பாளர்கள் : சூர்யதேவர நாக வம்ஷீ & சாயி சௌஜன்யா
இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி
படத்தொகுப்பு : நவீன் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர் : பங்களன்
நிர்வாக தயாரிப்பாளர் : யலமஞ்சிலி கோபால கிருஷ்ணா (நானி)
சண்டை பயிற்சி : V. வெங்கட்
தயாரிப்பு நிறுவனங்கள் : சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
வழங்குபவர் : ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

0

SUN NXT டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியின் ஐந்தாவது எபிஸோடில் அனைவரும் ரவி மோகனின் தன்மையான மற்றும் இனிமையான பழகும் இயல்பைக் கண்டு வியந்தனர், மேலும் ரவி மோகன் அந்த அரங்கில் இருந்த அனைவரின் இதயத்தையும் வென்றுவிட்டார் என்றே சொல்லலாம்.

எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி முதல் பொன்னியின் செல்வன் வரை, ரவி மோகன் பல வேடங்களில் நடித்திருக்கிறார், இப்போது அவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். ஆனால், மனதளவில் தான் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கும் ஒரு திரைப்பட மாணவர் என்றே அவர் குறிப்பிடுகிறார். பள்ளிக்காலத்தில் அவர் முன்வரிசை மாணவராக இருந்திருக்காவிட்டாலும், கல்லூரிக்காலம் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது. “எனக்கு எதன் மீது உண்மையான ஆர்வம் இருக்கிறதோ, அதற்காக நான் எனது முழு உழைப்பையும் அர்ப்பணிப்பேன்; எனக்கு அந்த விஷயம் ‘சினிமா’தான்,” என்று, தன்னைத் தொடர்ந்து இயங்க வைக்கும் உந்துசக்தி குறித்துப் தொகுப்பாளர் ஜகனிடம் பகிர்ந்துகொண்டார்,

மேலும், திரையுலகில் தனது பயணம் ஒரு ஸ்பாட் பாயாக (spot boy) எவ்வாறு தொடங்கியது என்பதைப் பற்றி ஜெகனிடம் அவர் மனம் திறந்து பேசினார், அத்துடன் தான் வளரக் காரணமான சினிமாவுக்கு ஒரு நெகிழ்ச்சியான அஞ்சலியையும் செலுத்தினார். “என் தந்தை திரைப்படங்களை அவற்றின் சுவையை வைத்தே அடையாளம் காண்பார்,” என்று ரவி மோகன் அன்போடு நினைவுகூர்ந்தார். ரவி மோகன் குறித்து இணையத்தில் எப்போதும் பலவிதமான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. அதிலிருந்து சில கமெண்டுகளுக்கு அவர் அளித்த பதில்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் வாயடைக்க வைத்தது என்றே கூறலாம். அதில் ஒரு கமெண்டுக்கு, “அவனை கொஞ்சம் இங்க வர சொல்லு” என்று ரவி மோகன் கலகலப்பாக கூறினார்.

பின்னர் நிகழ்ச்சியின் ஸ்பைஸியான ‘காரசாரம் சேலஞ்ச்’ செக்மென்ட் வந்தது. அதில் ரவி மோகன் எந்தவித தயக்கமும் இல்லாமல் கலந்துகொண்டது மட்டுமல்லாமல், “எனக்கே கார சாப்பாடா?” என்று குறும்பாக கேட்ட விதம், உனக்கும் எனக்கும் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் நினைவுகூறலாக அமைந்தது. ஆனால் அந்த எபிஸோட், ரவி மோகனால் மட்டுமே பதிலளிக்கக்கூடிய கேள்விகள் பலவற்றால் நிறைந்திருந்தது. ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை (sequel) அவர் ஒருபோதும் உருவாக்காததற்கான ஒரே காரணம் என்ன? தன் படங்களில், இதில் ஏன் நடித்தோம் என்று அவர் வருந்தும் ஒரே படம் எது? மேலும், தான் ஒருபோதும் இணைந்து நடிக்கவே கூடாது என்று அவர் எண்ணும் ஒரே நடிகர் யார்? போன்ற சிக்கவைக்கும் பல கேள்விகளுக்கான பதில்களை அறிய, நீங்கள் அந்த அவசியம் இந்த எபிஸோடைப் பார்த்தே ஆக வேண்டும்.

இறுதியாக, மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்: எந்த ஒரு நடிகரின் நடிப்புத் திறன் அவருக்கு மகிழ்ச்சியையும், அதே சமயம் சற்றும் பொறாமையையும் ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு , ரவி மோகன் ஒரு கணம் கூடத் தயங்காமல் பதிலளித்தார். அந்த நடிகர் வேறு யாருமல்ல; அவருடைய மகனான ஆரவ் ரவிதான். திரையுலகைச் சேர்ந்த நண்பர்களில், அவர் முழுமையாக நம்பும் நண்பர் யார் என்ற கேள்வி எழுந்தபோது, அதற்கான பதிலும் அவரிடம் இருந்து மிக இயல்பாகவே வெளிவந்தது, அவர் வேறு யாருமல்ல, கார்த்திதான். “மேலும், என்னைப் பற்றியும் அவரும் இதே கருத்தைத்தான் கூறுவார் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் புன்னகையுடன் கூறினார்.

இரண்டு பதில்கள், அவை இரண்டும் அவர் மனதில் இருந்து வந்தவை, அப்படியே அவர் அந்த அறையில் இருந்த அனைவரின் இதயத்தையும் மீண்டும் ஒருமுறை உருக வைத்தார். தனது பிரபலமான ஹிப்-ஹாப் பாடலான ‘மக்கமிஷி’யை ஒரு முழுமையான பரதநாட்டிய பெர்பாமென்ஸாக மாற்றி, பின்னர் தொகுப்பாளர் ஜெகனுக்கு அதே ஸ்டெப்களை பொறுமையாகக் கற்றுக் கொடுத்ததோடு, அந்த எபிஸோட் ஒரு இனிமையான தருணத்துடன் நிறைவடைந்தது. இது ரவி மோகனால் மட்டுமே சாத்தியம்.

உங்களுக்குப் பிடித்தமான பிரபலங்களான ரவி மோகன், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, ஹரிஷ் கல்யாண், ஐஸ்வர்யா ராஜேஷ், டிஎஸ்பி ஆகியோரை SUN NXT-ல் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ எபிஸோட்களில் காணுங்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும், SUN NXTஇல் மட்டும் இதன் புதிய எபிஸோட்கள் வெளியாகின்றன.

SUN NXT பற்றி…

SUN NXT என்பது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய பொழுதுபோக்கு தளவாகும். இது ஏழுக்கும் மேற்பட்ட மொழிகளில் நாலாயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களையும், 44க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களையும் வழங்குகிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், லைவ் டிவி மற்றும் டிவிக்கு முன்பே பார்க்கும் வசதி கொண்ட நிகழ்ச்சிகள் என பல்வேறு வகையான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள SUN NXT, உயர்தரமான தென்னிந்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தாயகமாக திகழ்கிறது.

Apollo Hospitals Chennai Performs World’s First Robotic Cancer Surgery for Lymph Node Removal Using Hugo RAS Platform via Lateral Approach 

0
  • The uniqueness of performing the surgery lies in the lateral approach, which accesses the operative field from the side of the thigh rather than the middle.
  • With the addition of this VEIL procedure for lymph node removal, the hospital has now completed the full spectrum of robotic uro-oncology procedures using the Hugo RAS System.

Chennai, 27 May 2026: Apollo Hospitals Chennai, a leader in robotic-assisted cancer care, has performed the world’s first Video Endoscopic Inguinal Lymphadenectomy (VEIL) using the Hugo Robotic-Assisted Surgery (RAS) system through a lateral approach, a minimally invasive technique that accesses the groin lymph nodes from the side of the thigh rather than the middle. The patient, a 40-year-old man diagnosed with penile cancer, made an excellent recovery following the surgery, with no major post-operative complications.

Inguinal lymph node removal is a well-established procedure performed when cancers such as penile, vulval, and vaginal cancer spread to the lymph nodes in the groin. Traditionally, the surgery is carried out through an open approach involving large incisions in the groin, which can sometimes damage the skin and lymphatic channels, leading to wound-healing complications and leakage of lymph fluid after surgery.

However, outcomes are often improved when the procedure is performed using the minimally invasive, camera-guided VEIL technique on robotic platforms. In robotic VEIL surgery, surgeons operate through very small incisions using precise robotic instruments and enhanced visual control, resulting in less disturbance to the skin and surrounding tissues. The approach also significantly reduces post-operative lymph leakage compared to conventional open surgery.

Apollo Hospitals has been using the Hugo RAS System to perform a wide range of robotic uro-oncology surgeries involving the prostate, kidney, and bladder. With the addition of this VEIL procedure for lymph node removal, the hospital has now completed the full spectrum of robotic uro-oncology procedures using the system.

Speaking about the milestone, Dr. Ilankumaran Kaliamoorthy, CEO, Apollo Hospitals, Chennai Region Apollo’s commitment to advanced medical technology and innovation continues to reach new heights every day. I am truly happy and grateful to be part of a progressive healthcare institution that remains dedicated to clinical excellence and improving patients’ quality of life through worldclass care.”

Dr. N Ragavan, Senior Consultant – Urologist, Uro-Oncologist and Robotic Surgeon, Apollo Hospitals Chennai, said: “This achievement is the result of months of meticulous planning, clinical precision, and collaborative teamwork. Performing the world’s first robotic VEIL surgery using the Hugo RAS platform through the lateral approach was both challenging and rewarding. Every milestone in advanced robotic surgery comes with continuous learning, dedication, and the collective effort of highly skilled teams committed to pushing the boundaries of medical excellence. We are proud that this success will help improve patient outcomes and further strengthen the future of minimally invasive cancer care.”

Dr Madhav Tiwari, Consultant – Urologist, Uro-Oncologist and Robotic Surgeon, Apollo Speciality Hospitals, Teynampet, Chennai, added: “Patient recovery shows the potential of this approach and its effectiveness. While cancers requiring inguinal lymph node removal, such as penile cancer, are relatively rare, they often require highly specialised surgical intervention. Advanced robotic-assisted procedures like VEIL are helping improve recovery outcomes significantly by reducing complications, minimising surgical trauma, and enabling faster healing. Increased awareness and timely diagnosis remain essential for achieving better treatment outcomes.”

The surgery was successfully carried out by a multidisciplinary team led by Dr N Ragavan and Dr Madhav Tiwari, with anaesthesia support led by Dr Pradeep Chiruvar. The patient made an excellent recovery following the procedure. The successful treatment is another step toward the future of precision-driven and technologically assisted cancer care.

About Apollo Hospitals: Apollo revolutionised healthcare when Dr. Prathap Reddy opened the first hospital in Chennai in 1983. Today, Apollo is the world’s largest integrated healthcare platform with over 10,400 beds across 76 hospitals, 6,600+ pharmacies, 264 clinics, 2,182 diagnostic centres, and 800+ telemedicine centres. It is one of the world’s leading cardiac centers, having performed over 3,00,000 angioplasties and 2,00,000 surgeries. Apollo continues to invest in research and innovation to bring the most cutting-edge technologies, equipment, and treatment protocols to ensure patients have access to the best care in the world. Apollo’s 1,20,000 family members are dedicated to delivering exceptional care and leaving the world better than we found it.

Media Contact: Apollo Hospitals | Ms. Suganthy @ 98417 14433

Burson India |

தீபாவளி வெளியீட்டிற்காக விறுவிறுப்புடன் தயாராகும் சிலம்பரசன் TR ன் ‘அரசன்’

0

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் – எதிர்வரும் தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்காக படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன் TR, பிரியங்கா மோகன் , இயக்குநர்களும் நடிகர்களுமான அமீர்- சமுத்திரக்கனி, கிஷோர், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வெற்றி மாறனின் வடசென்னை யுனிவர்ஸிலிருந்து புதிய கேரக்டர்களுடன் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது. தற்போது இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று, விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த படப்பிடிப்பில் சிலம்பரசன் TR- பிரியங்கா மோகன் – சமுத்திரக்கனி – ஆண்ட்ரியா மற்றும் கிஷோர் ஆகியோர் கதையின் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையின் புறநகர் பகுதியான கிழக்கு கடற்கரை சாலி ஒட்டிய கிராமப் பகுதி ஒன்றில் பிரம்மாண்டமான திறந்த வெளி அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அரங்கம்- வடசென்னையை அப்படியே முழுவதுமாக ரீகிரியேட் செய்து தத்துரூபமாக வடிவமைத்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்திற்காக அமைக்கப்பட்ட ‘தாராவி’ அரங்கத்தை விட நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த அரங்கத்தை பார்த்தவர்கள் சிலாகித்து பேச ஆரம்பித்துள்ளனர்.. இந்த அரங்கம் பிரம்மாண்டமான பொருட்செலவில் அமைக்கப்பட்டிருக்கிறது..

மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ள விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார். வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்த அமீர் மற்றும் சந்திராவாக நடித்த ஆண்ட்ரியாவும் கலந்து கொள்கிறார்.‌

இன்னும் மூன்று மாதத்திற்குள் படப்பிடிப்பை முழுவதுமாக நிறைவு பெறும் வகையில் படப்பிடிப்பு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இந்த திரைப்படம் எதிர்வரும் தீபாவளி திருநாளன்று வெளியிடுவதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே பிரம்மாண்டமான பொருட்செலவில் தமிழ் சினிமாவில் தயாராகி வரும் திரைப்படம் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ என்பதும், இப்படத்தின் பிரத்யேக ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது என்பதும், தீபாவளி போன்ற திருவிழா தருணத்தில் ‘அரசன்’ திரைப்படம் வெளியானால்.. வணிக ரீதியான பெரும் வெற்றியை பெற கூடும் என சிலம்பரசனின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக வணிகர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதும் , இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைத்துறையினர் ஒன்று கூடிய பிரம்மாண்ட விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு!

0

2025ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான 18வது ஆண்டு எடிசன் திரைப்பட விருதுகள் 2026 விழா, நேற்று (மே 24, 2026) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. திரைப்படத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்த நாற்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் பல்வேறு பிரிவுகளில் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த பிரம்மாண்ட விழாவில் மலேசிய துணை அமைச்சர் ராமராஜ், ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் தூதர்கள், தொழிலதிபர்கள் ஏ2பி சீனிவாசன், லீமா ரோஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் புதிய விருது பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. எடிசன் விருதுகளின் சேர்மன் செல்வகுமார் அறிவித்ததாவது, அடுத்த ஆண்டு முதல் விஜய் பெயரில் ஒரு சிறப்பு விருது அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டு எடிசன் திரைப்பட விருதுகளில் வழங்கப்படும் என்றார்.

மேலும் இந்த நிகழ்வின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் ‘எடிசன் மில்லியனரி கிளப் ‘ அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பேசிய எடிசன் விருதுகள் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி செல்வகுமார், உலகின் பல நாடுகளில் எடிசன் விருதுகளை விரிவுபடுத்துவதற்கும், உலகம் முழுவதிலும் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் பிசினஸ் செயவர்களை ஒன்றிணைப்பதற்குமான தளமாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவை உலக அரங்கில் உயர்த்தும் நோக்கம் கொண்டுள்ளதாகவும் மேலும் சர்வதேச தொடர்புகள் துறைக்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் முக்கிய விருதுகளில், ‘பைசன்’ திரைப்படத்திற்காக துருவ் விக்ரம் சிறந்த நடிகர் விருதையும், அதே படத்திற்காக மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர் விருதையும் பெற்றனர். ‘ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படத்திற்காக ரியோ ராஜ் இந்த வருடத்தின் சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான விருது பெற்றார். பின்னணிப் பாடகர்களில், டிராகன் திரைப்படத்தின் ‘வழித்துணையே…’ பாடலுக்காக சஞ்சனா கல்மன்ஜே சிறந்த பெண் பின்னணிப் பாடகி விருதையும், மதராசி திரைப்படத்தின் ‘தங்கப்பூவே…’ பாடலுக்காக ரவி ஜி சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் விருதையும் பெற்றனர்.

‘மாமன்’ திரைப்படத்திற்காக ஸ்வாசிகா சிறந்த கதாபாத்திர நடிகை விருதைப் பெற்றார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக விஜய் வேலுக்குட்டி சிறந்த எடிட்டர் விருதையும், அர்ஜுன் தாஸ் சிறந்த வில்லன் நடிகர் விருதையும் வென்றனர். இளம் நடிகர்களில், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்திற்காக பவிஷ் நாராயண் சிறந்த அறிமுக நடிகர் விருதையும், ‘சிறை’ திரைப்படத்திற்காக அனிஷ்மா அனில்குமார் சிறந்த அறிமுக நடிகை விருதையும் பெற்றனர்.

ஜூரி விருதுகள் பிரிவில் இந்திய திரைப்பட உலகின் பல முக்கிய கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். நடிகர் டத்தோ ராதாரவி ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்றார். நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், ‘பீனிக்ஸ்’ மற்றும் ‘தி வெர்டிக்ட்’ திரைப்படங்களுக்காக டைனமிக் பெர்ஃபார்மர் விருது பெற்றார். இந்த விருதை அவரது தாய் சாயா பெற்றுக்கொண்டார்.

பாடகி சைந்தவி ‘தி வாய்ஸ் பியாண்ட் பவுண்டரிஸ்’ விருது பெற்றார். நாட்டுப்புறப் பாடகர் அந்தோணி தாசன் ‘வாய்ஸ் ஆஃப் டிரெடிஷன்’ விருது பெற்றார். மூத்த நடிகர் தம்பி ராமையா, ‘முதல் பக்கம்’ திரைப்படத்திற்காக ‘வெட்ரன் பர்ஃபாமெர் அவார்ட்’ பெற்றார்.

எடிசன் விருதுகள் தலைவர் செல்வகுமார் மற்றும் நடுவர் குழுவினருக்கு விருது பெற்ற பலரும் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர். இந்த அங்கீகாரம் தங்களது கலைப் பயணத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும், தொடர்ந்து திரைப்படத் திறமைகளை கௌரவித்து வரும் எடிசன் விருதுகள் மீது பெருமை கொள்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

இந்த ஆண்டின் எடிசன் திரைப்பட விருதுகள், தமிழ் சினிமாவின் சிறப்பை மீண்டும் ஒருமுறை உலகிற்கு எடுத்துக்காட்டியதுடன், அதன் சாதனைகளை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல புதிய வாயில்களையும் திறந்து வைத்துள்ளது.

டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில்திரு கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசைஆல்பம் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது

0

இயக்குனர், பாடலாசிரியர் திரு கங்கை அமரன் இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன்,
தவசீலிதன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்…

இவ்விழாவில்
திரு கங்கை அமரன் அவர்கள் பேசியதாவது…

தயாரிப்பாளர் கிளாடி ஜெராடு அவர்களைப் பற்றி பேசும் பொழுது…அவரின் நல்ல எண்ணம் தான் இப்படத்தின் தொகுப்பு என்றும்… அருமையான சமூக உறவுகளை..ஏஐ தொழில்நுட்பத்துடன் நடிகர்களை நடிக்க வைத்து ஒரு கதையினை கொடுத்துள்ளார்..எங்கள் அண்ணா இசைஞானி யின் வாசிப்பில் தான் நாங்கள் பல பேர் வளர்ந்திருக்கோம்…எங்கள் குழந்தைகளை அண்ணனிடம் தான் சாரீரம் கற்று கொள்ள அனுப்புவோம்… அப்படிப்பட்ட குருக்களு டன் வளர்ந்த பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது.. இந்த காலத்து குழந்தைகளுக்கு கிடைத்துள்ளதா?இல்லையா? என்பது தெரியவில்லை… முன்பெல்லாம் ஒரு பாடலை தொடரலை யாக பாடுவோம்… இப்பொழுது ஒவ்வொரு வரிகளாக பாடுகின்றோம்..AI இல் பீட் (feed) பண்ணி பாடுகின்றோம்… அதற்கு நாம் எப்படி நம்மளை பெருமைபடுத்தி கொள்வது?…உண்மை யை சொல்ல வேண்டுமென்றால் Ai தொழில்நுட்பம் நம்மளை கெடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நான் உறுதியாக சொல்கிறேன். அதை நம்பி நம் வேலை செய்தோமானால் பிற்காலத்தில் மூளை வேலை செய்யாது… ஒரு தீம் ஐ AI இல் கொடு த்துவிட்டால், அதுவே பாட்டெழுதிவிடுகிறது…. இதில் எப்படி நம்ம பேரை போட்டுக் கொள்வது.. எதற்கு சொல்கிறேன் என்றால் வருங்கால குழந்தைகள் தன்னால் சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும், எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.. வருங்கால குழந்தைகள் தன்னிடம் இருக்கின்ற சுயரூபங்களை வெளியில் கொண்டு வர வேண்டும் என்பது என் மனமார்ந்த ஆசை.. 50 வருட வாழ்க்கையை இசைத்துறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்களை நேசித்து அழைத்துச் செல்லுங்கள்… கனவோ நினைவோ இசையே எங்கள் மூச்சு… என்று கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்

ராம் சரணுக்கு தேசிய விருது வாங்கித்தரும் படமாக உருவாகும் “ பெத்தி ” – சிவராஜ்குமார் நம்பிக்கை!!

0

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பெத்தி” திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கிராமத்து ஆக்ஷன் திரைப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது.

இந்த படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், இப்படத்தின் கதை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது கதாபாத்திரத்திற்கு தெளிவான நோக்கம் மற்றும் வலுவான உணர்வுப்பூர்வமான பின்னணி இருப்பதால், இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும், பெத்தி மற்றும் கௌர்நாயுடு இடையிலான பாசமும் உணர்ச்சி பந்தமும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ராம் சரண் நடித்த விதம் குறித்து அவர் மிகவும் பெருமையாக பேசியுள்ளார். இந்த படத்திற்காக ராம் சரண் தேசிய விருது வெல்வார் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகவும், அவரது உடல் மாற்றம் மற்றும் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது என்றும் கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக முழுமையான ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்றும், மிக நேர்மையாக நடித்துள்ளார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் புச்சி பாபு சனா பற்றி பேசுகையில், கதைக்கு தேவையான அனைத்தையும் மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளார் என்றும், அவரது கதை சொல்லும் பாணி மற்றும் மேக்கிங் தரம் அசத்தலாக இருப்பதாகவும் சிவராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜகபதி பாபு உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு உருவாக்கிய காட்சிகள் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

பல விளையாட்டுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், ஒவ்வொரு விளையாட்டும் கதையுடன் நெருக்கமாக இணைந்திருப்பதாகவும், குறிப்பாக கிளைமாக்ஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பெத்தியின் பயணம் மிகவும் விசேஷமானது; அதை திரையரங்கில் அனுபவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் சதீஷ் குறித்து பேசுகையில், மிகுந்த ஆர்வத்துடன் உயர்ந்த தயாரிப்பு தரத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் பாராட்டியுள்ளார். தற்போது ஜெயிலர் 2 மற்றும் “கும்மடி நரசய்யா ” உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதாக தெரிவித்த சிவராஜ்குமார், நல்ல கதைகள் கிடைத்தால் மேலும் தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பெத்தி படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்துள்ளது.

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் #DQ41 படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது!!

0

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் ( SLV Cinemas ) தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான #DQ41, #SLV10 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்தது. கவர்ச்சிகரமான படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது !

பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தற்போது தனது புதிய திரைப்படமான #DQ41 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்குகிறார். வெற்றி தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தலைமையிலான எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படம், அந்த நிறுவனத்தின் 10வது தயாரிப்பாக #SLV10 என உருவாகி வருகிறது. தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மனித உணர்வுகளும் காதலும் கலந்த இனிமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

பனிமூட்டம் சூழ்ந்த மலைப்பகுதிகளில் நடைபெற்ற முக்கியமான  படப்பிடிப்பின் ஒரு கட்டத்தை  படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அங்கிருந்து வெளியான புகைப்படங்கள் மனதை கவரும் விதமாக அமைந்துள்ளன. குளிர்கால உடைகளில் தோன்றும் துல்கர் சல்மான் தனது இயல்பான கவர்ச்சியால் அனைவரையும் ஈர்க்க, ஹாட் லுக்  உடைகளில் அழகாக தோன்றும் பூஜா ஹெக்டே தனது இயல்பான ஸ்டைலில் கவனம் பெற்றுள்ளார்.

வெளியான புகைப்படங்கள் வழக்கமான போஸ் ஸ்டில்களாக இல்லாமல், படப்பிடிப்பு தளத்தின் இயல்பான தருணங்களை பதிவு செய்கின்றன. ஒரு புகைப்படத்தில், மழைத்தூறலில் குடைகளை பிடித்தபடி சுற்றியுள்ள படக்குழுவினருடன் இணைந்து சிரித்துக்கொண்டிருக்கும் துல்கர் மற்றும் பூஜா காணப்படுகின்றனர். மற்றொரு புகைப்படத்தில் பயணப் பைகள், தொலைவில் தெரியும் கயிற்று பாலம் மற்றும் காற்றில் பறக்கும் மலைப்பகுதி பிரார்த்தனை கொடிகள் சேர்ந்து ஒரு பயணத்தின் உணர்வை தருகின்றன. மேலும், அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள கோவிலின் முன் முழு படக்குழுவும் ஒன்றாக நிற்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதல் முறையாக இணைந்து நடிக்கும் நிலையில், இருவருக்குமிடையேயான இயல்பான நெருக்கம் படத்தின் உணர்வை ஏற்கனவே வெளிப்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் அனய் ஓம் கோஸ்வாமி இயற்கை வெளிச்சத்தை அழகாக பதிவு செய்துள்ளதுடன், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையும், அவினாஷ் கொல்லா உருவாக்கிய காட்சியமைப்பும் சேர்ந்து நெருக்கமான, அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு உலகத்தை உருவாக்குகின்றன.

பிரம்மாண்டமான பான் இந்தியா வெளியீடாக உருவாகும் இந்த திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர்கள்
துல்கர் சல்மான்
பூஜா ஹெக்டே

தொழில்நுட்பக் குழு

கதை, இயக்கம் – ரவி நேலகுதிடி
தயாரிப்பு –சுதாகர் செருகூரி
தயாரிப்பு நிறுவனம் – எஸ்எல்வி சினிமாஸ்
இணை தயாரிப்பாளர் – கோபிச்சந்த் இன்னமூரி
தலைமை நிர்வாக அதிகாரி – விஜய் குமார் சாகண்டி
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு – அனய் ஓம் கோஸ்வாமி
தயாரிப்பு வடிவமைப்பு – அவினாஷ் கொல்லா
மக்கள் தொடர்பு – யுவராஜ்