ஒரு பிரபலமான வழக்கறிஞர் லஞ்சம் கொடுத்து தன் வழக்குகளில் வெற்றி பெறுவதோடு, நீதிமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அங்கு கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து சட்டவிரோதமான வேலைகளையும் செய்கிறார் , அவரை மீறி நீதிமன்றத்தில் எதுவும் செய்ய முடியாது, என்ற கட்டமைப்பை உருவாக்குகிறார். இதனால், நீதிக்காக போராடுபவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க, அவர்களின் அழுகுரல் கேட்டு அந்த நீதிமன்றத்தில் இருக்கும் கருப்புசாமி , நேரில் வந்து எதிர்க்கிறார் வந்திருப்பது கடவுள் என்று தெரிந்தாலும், இங்கே எல்லாமே இப்படி தான், இதை யாராலும் மாற்ற முடியாது. முடிந்தால் நீங்க கடவுளாக அல்லாமல் சராசரி மனிதராக மாற்றிக் காட்டுங்கள், என்று கருப்புசாமியிடம் சவால் விடுகிறார். அவரது சவாலை ஏற்றுக்கொள்ளும் கருப்புசாமி மனிதனாக மாறி இதனை சரி செய்ய முயற்சிக்கிறார். அந்த முயற்சி என்ன ஆனது என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.
இந்தப் படத்தில் கருப்பசாமியாகாவும் அதே சமயம் மதுரை வழக்கறிஞர் சரவணன் கதாபாத்திரத்திலும் உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படத்தை தேர்வு செய்து அதனை சிறப்பாக செய்துள்ளார், அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.
அவருக்கு அடுத்து நிகராக காட்சிகளில் பேபி கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார் , மாஸாக அறிமுகமாகி, மிரட்டலான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
அதே போல வழக்கறிஞராக நடித்திருக்கும் திரிஷா, சில காட்சிகளில் மட்டும் வருகிறார். பல முக்கிய காட்சிகளில் நடித்து படம் முழுவதும் பயணிப்பது போல காட்டியுள்ளார், நீதிபதியாக நடித்திருக்கும் நட்டி, திருட்டு போன தன் தங்க நகைகளை மீட்க போராடும் கேரளத்தவராக நடித்திருக்கும் இந்திரன்ஸ், சுவாசிகா, சிவதா ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பின் மூலம் கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமையுள்ளார், டூட் படத்திற்கு பிறகு மிகவும் எதிர்பார்ப்பில் இருந்தது இவரது இசை, மொத்த படத்தையும் தாங்கி பிடித்துள்ளார் என்றுதான் கூற வேண்டும், படத்தில் இசை ஒரு பெரிய தூணாக இருக்கிறது. சாய் அபயங்கருக்கு நிச்சயம் பாராட்டுக்கள். அதே போல ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியுள்ளார் ,
இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, நீதித்துறையில் நடக்கும் அநீதிகளுக்கு கருப்புசாமி மூலம் பதிலடி கொடுக்க முயற்சித்திருக்கிறார். மக்களின் கடைசி நம்பிக்கையாகவும், ஜனநாயகத்தின் முக்கியத் தூணாகவும் விளங்கும் நீதிமன்றங்கள், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதிலும் எப்படி செயல்படுகிறது என்பதையும், நீதித்துறையில் நிலவும் ஊழல் மற்றும் விலைபோகும் நீதியரசர்கள், நீதிமன்றத்தின் எழுதப்படாத விதிமுறைகள் அதனால் பாதிக்கப்படும் சாமானிய மக்கள் என்று பல விசயங்களை மிக தைரியமாக எடுத்துரைத்துள்ளார். நிச்சயம் அவருக்கு பாராட்டுக்கள் .
மொத்தத்தில், ‘கருப்பு’ அனைவரையும் கவரும்.




