திவ்யா – சினிமா விமர்சனம்

0

இயக்குநர் – ஆர்ஜேபி
நடிகர்கள் – ஆர்ஜேபி, கேத்தி, அனந்த் ராம், சபி, ஜிவி
இசை – சங்கர் ராம்
தயாரிப்பு – ஆர்ஜேபி மீடியா

ஒருவன் சிறு வயதிலே தனது பெற்றோர்களை இழக்கிறான், தன் தாத்தாவினால் வளர்க்கப்படுகிறார். சாவு வீடுகளில் தப்பு அடிப்பது அவர்களின் தொழில். கல்லூரியில் படிக்கும் அவன் தப்பு அடிப்பதையும் தங்கள் பிழைப்புக்காக விடாமல் செய்து வருகிறான். அதே கல்லூரியில் உடன் படிக்கும் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் ஒரு பெண்ணை பார்த்து பிடித்து போகிறது . அந்த பெண் பெற்றோருக்கு ஒரே செல்ல மகள். நாயகன் மீது கொஞ்சம் கொஞ்சமாக காதல் வர, ஒரு கட்டத்தில் இருவரும் உயிருக்கு உயிராய் காதலிக்கிறார்கள். இந்த விஷயம் அவளின் பெற்றோருக்கு தெரிய வர அவசர அவசரமாக வேறு ஒரு திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். இதன் பின் இவர்களது காதல் நிறைவேறியதா ? என்பதே மீதிக்கதை.

இந்தப் படத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞராக, மிகவும் எளிய குடும்பத்து பின்னணியில் இருந்து வந்தவராகவே தன் தோற்றம், உடை, நடத்தை என அத்தனையிலும் அந்த பிரதிபலித்து காட்டியிருக்கிறார் ஆர்ஜேபி, . அடி வாங்கும் காட்சிகளில் தத்ரூபமாக அடி வாங்கியிருக்கிறார்.

அதே போல் நாயகி கேத்தி யதார்த்தமான நடிப்பை தந்திருக்கிறார். தமிழக கிராமங்களில் கல்லூரிக்கு போகும் பெண்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். நாயகியின் அப்பாவாக வரும் அனந்த் ராம் நல்லவரா கெட்டவரா என யோசிக்க வைக்கும் அளவுக்கான ஒரு நடிப்பு. அவரும் அவர் மனைவியாக வரும் கலாவதியும் இந்த சமூகத்தின் சூழ்நிலை கைதிகளாக, பல கிராமங்களின் உயர்சாதி பிடிப்பு கொண்ட குடும்பங்களை இயல்பாக நம் கண் முன் நிறுத்துகிறார்கள். நாயகனின் நண்பர்களாக வரும் சபி, ஜிவி என இருவருமே கதையோட்டத்துக்கு துணை புரிகிறார்கள். வில்லனாக வரும் செந்தில் மனதுக்குள் சாதி பெருமையை வைத்துக் கொண்டு சாதிக்காக எந்த எல்லைக்கும் செல்பவர்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் செல்வக்குமார் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார், சின்ன பட்ஜெட் என்றாலும் நல்ல தரமான ஒளிப்பதிவை தந்திருக்கிறார். சங்கர் ராம் இசையில் பாடல்கள் கேட்கும் வண்ணம் இருந்தது, இரைச்சல் இல்லாமல் காதுகளுக்கு இனிமையானக இருக்கிறது,

இந்தப் படத்தில் இயக்குனர் RJP. மிக மிக யதார்த்தமான உண்மைக்கு மிக நெருக்கமாக ஒரு படத்தை தந்திருக்கிறார். கடந்த காலங்களில் ஆணவக் கொலை பற்றி எவ்வளவோ படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் இந்தப் படம் மக்களின் மனதை நிச்சயம் கவரும் அப்படியான படத்தை இயக்குனர் ஆர்ஜேபி உருவாக்கியுள்ளார், இன்றும் பல இடங்களில் ஜாதி மூலமும் மதத்தினாலும் பல்வேறு ஆணவக் கொலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை நம்மிடம் இப்படி கதை மூலம் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர், நிச்சயம் அவரது முயற்சிக்கு வெற்றிதான்,

மொத்ததில் இந்த ” திவ்யா ” சமூகத்தின் சீர்கேடுகளை எடுத்துரைக்கும் ஒரு பாடம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here