பெண்களுக்கான அறுவைச்சிகிச்சை முறையில் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தை முன்னெடுத்து, சென்னை கிளெனீகிள்ஸ் மருத்துவமனையின் டாக்டர் பத்மப்பிரியா 500 ‘டா வின்சி’ ரோபோடிக் அறுவைச்சிகிச்சைகளை நிறைவு செய்து சாதனை

0

  • டாக்டர் பத்மப்பிரியா விவேக் 500 ரோபோடிக் மகளிர் நல அறுவைச் சிகிச்சைகளை நிறைவு செய்திருப்பது, பெண்களுக்கான சிறிய துளை அறுவைச் சிகிச்சை முறையில் அவரது மருத்துவ நிபுணத்துவத்தையும் தரமான சிகிச்சை முடிவுகளையும் பிரதிபலிக்கிறது.
  • டா வின்சி (da Vinci) அறுவைச் சிகிச்சை முறையில் அவருக்குள்ள விரிவான அனுபவம், உலக சாதனை அங்கீகாரம் பெற்ற 5 கிலோ கருப்பை நார்த்திசுக் கட்டியை அகற்றும் அறுவைச் சிகிச்சையை உள்ளடக்கியது; இது சிக்கலான மகளிர் நல சவால்களில் இத்தொழில்நுட்பத்தின் துல்லியத்தையும் பாதுகாப்பையும் வெளிப்படுத்துகிறது.
  • இந்த மைல்கல், அறுவைச் சிகிச்சையில் தொழில்நுட்பத்தில் ஒரு பெண்ணாக டாக்டர் பிரியாவின் தலைமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, மற்றவர்களை ஊக்குவிக்கிறது,  மேலும் அவரது நிபுணத்துவத்தின் மூலம் பெண்களுக்கான மேம்பட்ட, நோயாளி மையப்படுத்தப்பட்ட சிகிச்சை விருப்பங்களை விரிவுபடுத்துகிறது.

சென்னை, 04 மார்ச்சு 2026: சென்னை கிளெனீகிள்ஸ் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் நலத்துறை இயக்குநரும், முன்னணி ரோபோடிக் அறுவைச் சிகிச்சை நிபுணருமான டாக்டர் பத்மப்பிரியா விவேக், ‘டா வின்சி’ ரோபோடிக் முறையைப் பயன்படுத்தி 500 மகளிர் நல அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளார். 22 ஜூன் 2023 அன்று இந்த ரோபோடிக் சிகிச்சைத் திட்டத்தைத் தொடங்கியதில் இருந்து, மூன்றாண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். பெண்களுக்கான சிறு துளை அறுவைச் சிகிச்சை (minimally invasive surgery) முறையில் அவரது நீடித்த மருத்துவ அனுபவத்தையும், நோயாளிகளின் பாதுகாப்பையும், தரமான சிகிச்சை முடிவுகளில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் இந்தச் சாதனை உறுதிப்படுத்துகிறது.

டாக்டர் பத்மப்பிரியா விவேக் மேற்கொண்ட இந்த 500 சிகிச்சைகளில் சிக்கலான கருப்பை அகற்றம், தசைக்கட்டி அகற்றம், தீவிர எண்டோமெட்ரியோசிஸ், அதிக ஆபத்துள்ள மகளிர் நல புற்றுநோய் சிகிச்சைகள் எனப் பல்வேறு பிரிவுகள் அடங்கும். இதில் குறிப்பிடத்தக்க சாதனையாக, உலக சாதனை அங்கீகாரம் பெற்ற 5 கிலோ கருப்பை நார்த்திசுக்கட்டியை  ரோபோடிக் முறையில் அவர் அகற்றியது அமைந்தது. மிகவும் சவாலான இத்தகைய சிகிச்சைகளில், நவீன தொழில்நுட்பம் எவ்வாறு துல்லியமாகவும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட உதவும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். ‘டா வின்சி’ ரோபோடிக் முறையில் மேற்கொள்ளப்படும் இந்த அறுவைச் சிகிச்சைகள், குறைந்த இரத்தப்போக்கு, விரைவாக குணமடைதல், மிகக் குறுகிய காலம் மருத்துவமனையில் தங்குதல் போன்ற நன்மைகளை வழங்குகின்றன. இது பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், அவர்களின் நீண்டகால வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்கிறது. இந்த மைல்கல் மற்றும் பெண்களின் அறுவைச் சிகிச்சை பராமரிப்புக்கான அதன் தாக்கங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில், சென்னை கிளெனீகிள்ஸ் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் நலத்துறை இயக்குநரும், முன்னணி ரோபோடிக் அறுவைச் சிகிச்சை நிபுணருமான டாக்டர் பத்மப்பிரியா விவேக் அவர்கள் கூறியதாவது, “500 அறுவைச் சிகிச்சைகளை நிறைவு செய்திருப்பது விலைமதிப்பற்ற மருத்துவ அனுபவத்தை அளித்துள்ளதோடு, பல்வேறு சிக்கலான மகளிர் நலப் பிரச்சினைகளைத் துல்லியமாகவும், கட்டுப்பாட்டுடனும் கையாள உதவுகிறது. குறிப்பாக 5 கிலோ கருப்பை நார்த்திசுக் கட்டியை  அகற்றுதல் போன்ற சிகிச்சைகள், இத்தகைய நுணுக்கமான முறைகளில் ‘டா வின்சி’ தொழில்நுட்பம் வழங்கும் துல்லியத்திற்குச் சான்றாகும். மகளிர் நல மருத்துவத்தில் இது மிகவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here