இயக்கம்: அஜயன் பாலா
நடிகர்கள் – ஶ்ரீராம் கார்த்திக், கிருஷா க்ரூப் முன்ஷ்காந்த், சிங்கம் புலி
இசை: இளையராஜா
தயாரிப்பு: அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்
ஒருவர் வைல்டு லைப் போட்டோகிராபர் பணி செய்து வருகிறார், அவரது பணிக்காக ஊட்டி செல்கிறார், ஊட்டிக்கு அரிதான பறவையை புகைப்படம் எடுக்க வருகிறார் அங்கு வெகுளித்தனமாக பேசித் திரியும் சாருபெண் மீது காதல் கொள்கிறான். அவளிடம் காதலை சொல்ல முயலும்போது , தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவரிடம் தன்னை சேர்த்து வை’ என்று கேட்கிறாள். இதனை கேட்டு ஷாக் ஆன அவன் தன் காதலை மறைத்துக் கொண்டு அவளது காதலனுடன் சேர்த்து வைக்க முயற்சிக்கிறான் . இதன் பின் என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
இப்படத்தில் நாயகனாக ஶ்ரீராம் கார்த்திக் நடித்துள்ளார், இந்த படத்தின் கதாபாத்திரம் , முரளி மற்றும் விஜயை நியாபகப்படுத்துகிறது, கண்டிப்பாக காதல் படங்களில் அதிக வாய்ப்பு கிடைக்கும். அவருக்கு துணையாக கிருஷா க்ரூப்பின் காதலனுக்கு ஶ்ரீராம் கார்த்திக் ஈ மெயில் மூலம் காதல் தூது அனுப்புவது அந்த கால புறாவிடு தூது டெக்னிக் என பல காட்சிகளில் மிரட்டியுள்ளார்,
நீண்ட நாட்களுக்கு பிறகு இளையராஜாவின் அந்த வயலின் BGM நம்மை ஆழ்த்தியுள்ளது,
90ஸ் காதல் நடக்கும் நிகழ்வுகளை நாம் இன்றும் காண முடியும் என்பதை இப்படம் மூலம் கூறியுள்ளனர், கண்டிப்பாக ஒரு மன நிறைவை கொடுக்கும்.
மொத்ததில் இந்த மைலாஞ்சி நம் மனதை கவரும்.




