மாயபிம்பம் – விமர்சனம்

0

இயக்குனர் : கே.ஜெ.சுரேந்தர்,
நடிகர்கள் : ஜானகி, ஆகாஷ்  ஹரி ருத்ரன்,  ராஜேஷ், அருண் குமார்,  மணிமேகலை
இசை : நந்தா
தயாரிப்பு – செல்ஃப் ஸ்டார்ட் – கே.ஜெ.சுரேந்தர்

மருத்துவக் கல்லூரி மாணவன் ஒருவன் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவனுக்கு இரு நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அதில் கேபிள் டிவி வேலை பார்ர்கும் ஹரி பல பெண்களை காதலித்து வருகிறான், இந்நிலையில் பேருந்து பயணத்தின் போது தற்செயலாக நாயகி நாயகனை சந்திக்கிறார். ஒரு சிறு விபத்தில் மருத்துவமனையில் நாயகன் அனுமதிக்கப்பட அங்கு நர்ஸாக வேலை பார்க்கும் நாயகியை பார்க்கிறான். இந்நிலையில் நண்பன் ஹரி கொடுக்கும் தவறான யோசனையால் நாயகி ஜானகியை ஆகாஷ் பிரிக்கிறார். இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா? நாயகன் ஆகாஷ் சிறைக்கு செல்ல காரணம் என்ன? என்பதே ’மாயபிம்பம்’ படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆகாஷ், ஒரு எதார்த்த நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்கிறார். காதலை காமமாக பார்ப்பதால் வாழ்க்கையை தொலைத்த இளைஞராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், குடும்ப பாசம், அண்ணன் குழந்தை மீது காட்டும் அக்கறை , நட்பு என அனைத்திலும் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேலும் நாயகியாக நடித்திருக்கும் ஜானகி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இதில் நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் , நாயகன் குடும்பத்தினராக வருபவர்கள் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் நந்தா ஒளிப்பதிவு செய்துள்ளார், படத்தில் பாடல்கள் அடிக்கடி கேட்கும் வண்ணம் உள்ளது. பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது. அதே போல் எட்வின் சகாயின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

ஒரு காதல் கதையை மைய வைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர், இத்திரைப்படத்தில் தவறான புரிதலால் ஏற்படும் விளைவு ஒரு மனிதனை எந்த சூழலுக்கு கொண்டு செல்கிறது என்பதை மிக நேர்த்தியாக உருவாக்கியுள்ளார், காதல் கமர்ஷியல் இரண்டையும் இணைத்து நல்ல என்டர்டெயின்மென்ட் படத்தை கொடுத்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here