இயக்கம் – நலன் குமாரசாமி
நடிகர்கள் – கார்த்தி , ராஜ்கிரண் , சத்யராஜ், ஷில்பா மஞ்சுநாத் , கீர்த்தி ஷெட்டி
இசை – சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு – ஸ்டுடியோ க்ரீன் – ஞானவேல்ராஜா
ஒருவர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக இருக்கிறார். எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் போதே அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி வருகிறது. அதிர்ச்சியுடன் அந்த இடத்திலிருந்து வெளியே வரும்போது, அவருக்கு பேரனாக ஒருவர் பிறக்கிறார்.பேரன் பிறந்ததால், “இவன்தான் அடுத்த எம்.ஜி.ஆர்” என்ற நம்பிக்கையுடன் அவனை நேர்மையான மனிதனாக வளர வேண்டும் என நினைக்கிறார். ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் மாதிரியான நல்ல பழக்கங்களுடன் வளர்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் நம்பியார் இன்ஸ்பிரேஷனில், தவறான வேலைகளில் ஈடுபட்டு போலீசாக மாறுகிறார்.இதற்கிடையில், “மஞ்சள்முகம்” என்ற ஹாக்கர் கும்பல் அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக மாறுகிறது. அவர்களை பிடித்தால் நல்ல பணம் கிடைக்கும் என்று நினைத்து அந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்கிறார். அதே நேரத்தில், பேரனின் ஊழல் தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
கார்த்தி முற்றிலும் மாறு பட்ட ஒரு சிறப்பான நடிப்பை இந்தப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார், ஒரு பக்கம் நல்லவராகவும் மற்றொரு பக்கம் வில்லனாகவும் மாறி மாறி தனது நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார், கண்டிப்பாக அவரது நடிப்பு பலராலும் பேசப்படும்
இந்தப் படத்தின் முதல் பாதி, நாயகன் தனது தாத்தாவுக்கு தெரியாமல் பல கோல்மால் வேலைகள் செய்து பணம் சம்பாதிப்பதை மையமாக கொண்டு நகர்கிறது. அந்த உண்மை தெரிந்த பிறகு அவர் இறப்பதும், அதன் பின்னர் “எம்.ஜி.ஆர் மீண்டும் வருகிறார்” என்ற கான்செப்ட் படத்திற்கு முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது.
இந்தப் படத்தில் கார்த்தியை தவிர, படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களை நன்றாக செய்துள்ளனர். அதே போல் கீர்த்தி ஷெட்டி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார். அதுபோல், சத்யராஜ், ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் தங்களது வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் வழக்கமாக இருக்கும் ஒன்-லைனர் காமெடி இந்த படத்திலும் சிறப்பாக வந்துள்ளது . குறிப்பாக இரவு நேரங்களில் எம்.ஜி.ஆர் வந்து கார்த்தியின் தவறுகளை தட்டி கேட்கும் காட்சிகள் சிறப்பாக இருந்தது. இரண்டாம் பாதியில் மக்களுக்காக பாடுபடும் காட்சிகள் அனைவரையும் கவர வைக்கிறது.
படத்தில் ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளன. குறிப்பாக சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை 60-களின் இசையை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் வழங்கியுள்ளது. எம்.ஜி.ஆர் பாடல்களின் ரீமிக்ஸ் அவரின் பங்கிற்கு சிறப்பாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் இந்த ” வா வாத்தியார் ” கண்டிப்பாக குடும்பத்துடன் ரசிக்க வைக்கும் ஒரு சினிமா.




