இயக்கம் : சுரேஷ்கிருஷ்ணா
நடிப்பு : ஜெகபதிபாபு, ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, சுகாசினி,
இசை : தேவா
தயாரிப்பு : கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி
ஐந்து பக்தர்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் வண்ணம் உருவாகியுள்ளது இந்தப் படம்.
ஒரு தொழிலதிபர் பிஸினஸ், பணம் ஓய்வில்லாமல் உழைப்பு என இருக்கிறார். அப்போது அவர் பகவான் அருளால் உண்மையான பக்தி பாதைக்கு மாறுகிறார். வாழ்க்கையின் அர்த்தத்தை அறிந்து கொண்டு, ஒரு கொள்ளை முயற்சியில் ஈடுபடும் சிலரை எப்படி மாற்றுகிறார் என்பது ஒரு கதை. இரண்டாவது கதையில் , தனது மனைவி திடீரென இறக்க, கடவுள் மீது அதிருப்தி அடைகிறார். அப்போது அவருக்கு மனைவியின் மறைவு குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வர, அவர் எப்படி சாய்பாபாவை போற்றுகிறார். அதன் பின் நடன கலைஞரான அபிராமி வெங்கடாசலத்துக்கு டான்ஸ் நிகழ்ச்சி நடக்கும் சிறிது நேரத்துக்கு முன்பு காலில் பிரச்னை ஏற்பட்டு, அவரால் டான்ஸ் ஆட முடியாத நிலை. அவர் தந்தை தலைவாசல் விஜய் கடவுளை திட்ட, அபிராமி புட்டபர்த்தி நோக்கி பிரார்த்தனை செய்ய என்ன நடக்கிறது என்று வேறொரு கதை. தனது ஒரே மகன் காசியில் கங்கை நதியில் முழ்கி மரண படுக்கையில் போராட, டாக்டர்கள் கை விரித்த நிலையில் பாபாவை சரணாகதி அடையும் பாசமுள்ள தாய் சுகாசினி வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது இன்னொரு கதை. அமெரிக்காவில் வசிக்கும் சாய்பாபா பக்தர்களான இரண்டு வெள்ளைக்காரர்கள் வீட்டை சுற்றி காட்டு தீ சூழும் நிலையல், பாபா அருளாள் அவர்கள் எப்படி பிழைக்கிறார்கள் என்பது கடைசி கதை. தன்னை நம்பும், பக்தியுடன் அழைக்கும் ஒரு சிறுமிக்கு சத்யசாபா காட்சி கொடுத்தாரா என்பதுடன் படம் முடிகிறது. தொழில் அதிபராக கடவுள் பக்தியால் மனம் மாறி நல்லது செய்பராக ஜெகபதி பாபு சிறப்பாக நடித்திருக்கிறார். மனைவியை இழந்த சோகத்தில் தவிப்பராக, முதலில் கடவுளை தூற்றி விட்டு பின்னர் நடந்ததை கேள்விப்பட்டு பகவான் பக்தராக மாறுபவராக ஓய்.ஜி. மகேந்திரன் தனி முத்திரை பதித்திருக்கிறார்.
உயிருக்கு போராடும் மகனை காப்பாற்ற தவிப்பராக, கடவுளுடன் சரணாகதி அடைந்து அவரை நம்பும் பல கோடிக்கணக்கான உண்மையான பக்தர்களின் பிரதிநிதியாக சுகாசினி வருகிறார். படத்துக்கு அவரின் போர்ஷன், அவர் நடிப்பு, அவரின் டயலாக் ரொம்பவே பலம். காலில் அடிபட்டதால் டான்ஸ் ஆட முடியாமல் தவிப்பராக உணர்ச்சிகரமாக நடித்து இருக்கிறார் அபிராமி. இவர்களை தவிர அமெரிக்காவில் வசிப்பவரும் பாவின் அருளை எப்படி பெறுகிறார்கள் என்ற கேரக்டரில் இரண்டு வெள்ளைக்கார தம்பதிகள் எளிமையான, உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
படம் முழுக்க கடவுள் நம்பிக்கை, பாசிட்டிவ் சிந்தனை என ஒருவித பரவச நிலை திரைக்கதையாக சென்று இருக்கிறது. கேரக்டர் வடிவமைப்பு, நடிப்பு, சொல்லப்படும் கருத்து, இறை நம்பிக்கை, சத்ய சாய்பாபா பக்தர்கள் மீது காட்டும் பதிவு, பாசம் அருள் என பல சீன்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. ஐந்து பக்தர்களின் வாழ்க்கை நிகழ்ச்சியில் இருந்து அற்புதமான அனுபவத்தை கடவுள் நம்பிக்கை சொல்லும் நல்ல படைப்பை கொடுத்து இருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.
மொத்ததில் இந்த ” அனந்தா ” வாழ்வில் பலருக்கு நம்பிக்கையை அளிக்கிறது.




