இயக்குனர் – ஏ.எஸ்.முகுந்தன்
நடிகர்கள் – ஆனந்த்ராஜ், சம்யுக்தா, தீபா, சசிலயா, முனீஷ்காந்த்
இசை – ஸ்ரீகாந்த் தேவா.
தயாரிப்பு – அண்ணா புரடக்ஷன்ஸ் கே வி சுகந்தி அண்ணாதுரை
ஒருவர் மதறாஸ் மாஃபியா கம்பெனி என்றவொரு நிறுவனத்தை நடத்தி வருகிறார், இதன் மூலம் கொலை மற்றும் கடத்தல் தொழிலை செய்து வருகிறார். ஏரியா வாரியாக ஆட்களை வைத்துக் கொண்டு தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யமே நடத்தி வருகிறார் .இவர் மீது எந்த குற்றவழக்குகளும் இல்லை. அப்படியாக மாட்டிக் கொள்ளாமல், தனது ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். இந்த சூழலில், ரெளடிகளின் எழுச்சியை அழிக்கவும் அவரின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யவும் புதிய போலீஸ் அதிகாரியாக வருகிறார் ஒரு பெண்.
அவரின் எண்ணம் பலித்ததா.? அந்த ரவுடியை கைது செய்ய முடிந்ததா. என்பதே படத்தின் மீதிக்கதை.
வில்லனாக படம் முழுக்க ஆக்கிரமித்து வைத்திருக்கிறார் ஆனந்த்ராஜ். தனக்கே உரித்தான காமெடியை ஆங்காங்கே தூவி விட்டுச் சென்றிருக்கிறார். கதையின் நாயகனாகவே வந்து வில்லத்தனத்தில் தனது அனுபவத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். நன்றாகவே கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார் ஆனந்த்ராஜ்.
தனது போலீஸ் அதிகாரி உடையிலும் நடிப்பிலும் மிடுக்காகவே தோன்றுகிறார் சம்யுக்தா. ஆனந்த்ராஜை தொடர்ச்சியாக விரட்டி கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில், நன்றாகவே தனது வேலையை செய்து முடித்திருக்கிறார். ஆனந்த்ராஜுக்கு மனைவி தீபா துணைவி லயா என இருவருமே தங்களது கேரக்டர்களை தெளிவாக செய்து முடித்திருக்கின்றனர். முனீஸ்காந்தின் அட்ராசிட்டி படத்திற்கு சற்று கைகொடுத்திருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் தங்களது வேலைகளை சரியாக செய்திருக்கின்றனர்.
படத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பின்னணி இசை நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
படத்தில் அங்கங்கே சில லாஜிக் மீறல்கள் இருக்கலாம் ஆனாலும் சிரிப்பும் பைட்டும் சேர்ந்த கலவையாக உருவாகியுள்ளது இந்த மதறாஸ் மாஃபியா கம்பெனி
மொத்த இந்த மதறாஸ் மாஃபியா கம்பெனி, காமெடி ரசிகர்களுக்கான ஒரு விருந்து.



