Home Blog Page 14

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது!

0

வித்தியாசமான கதைக்களங்களையும், மாஸ் ஆக்ஷன் படங்களையும் வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. இந்த படத்திற்கு “33 Temple Road” என்ற துணைத் தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, படத்தின் டீசர் வரும் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் ஒருவரின் கழுத்தில் ரத்தக்கறை படிந்த அரிவாள் வைக்கப்பட்டிருக்கும் காட்சி, படத்தின் இருண்ட மற்றும் கொடூரமான உலகத்தை உணர்த்துகிறது. இந்த போஸ்டர் படத்தின் மீது மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது.

விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா விஜய் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், “அர்ஜுன் ரெட்டி”, “அனிமல்” போன்ற படங்களில் தனது அதிரடியான இசையால் பாராட்டுகளை பெற்றவர், இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் Puri Connects நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலாவின் JB Motion Pictures நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.

“ஸ்லம் டாக்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது.

நடிகர்கள் : விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத்,சார்மி கௌர் , JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா
வழங்குபவர் : சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனங்கள்: Puri Connects, JB Motion Pictures
CEO : விசு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா

காஜல் அகர்வால் மற்றும்  ஷ்ரேயாஸ் தல்படே   நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

0

Zee Studios வழங்க, MIG Production & Studios இணைந்து தயாரித்துள்ளது.

ஒரு தீவிரமான சமூக – தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  இணைந்து நடித்துள்ளனர்.  இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை  சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

 ‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த விவகாரத்தை இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த நிலைமையைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தேவையென்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது.

இப்படம் உருவானதற்கான காரணத்தைப் பற்றி தயாரிப்பாளர் சாகர் B ஷிண்டே கூறியதாவது..,
“நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”

இயக்குநர் சேட்டன் DK கூறியதாவது..,
“இந்தக் கதைக்கு உண்மைத்தன்மையை கொடுக்க குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் மற்றும்  ஷ்ரேயாஸ்  இருவரும் மிகவும் நுணுக்கமான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் காட்டிய ஈடுபாடு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.”

பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு வகை கதாபாத்திரங்களில் பாராட்டுக்களைக் குவித்த ஷ்ரேயாஸ் தல்படே   முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த புதிய ஜோடி, கதைக்கு உணர்ச்சி ஆழத்தையும் தீவிரத்தையும் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய பார்வையாளர்கள் சிறந்த கருத்துக்களை மையப்படுத்திய திரைப்படங்களை அதிகம் விரும்பும் சூழலில்,  ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு பொருத்தமான மற்றும் சிறப்பான திரை வெளியீடாக திகழ்கிறது. சமூக பொறுப்புணர்வை தூண்டும் இந்த படம், சினிமாவைத் தாண்டி முக்கியமான விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி வினாயக் சைன்டானே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பக்வத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, எடிட்டர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி மற்றும் ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோரின் பங்களிப்பும் இப்படத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

இப்படம் Zee Studios  உலகளாவிய வெளியீடாக வெளியாகிறது.

Actor Sasikumar Releases the Official Teaser of Upcoming Tamil Romantic Drama Paris Cafe starring Guru Somasundaram and Anumol

0

The official teaser of the upcoming Tamil romantic drama Paris Cafe has been unveiled by actor Sasikumar, offering audiences a glimpse into an emotionally driven love story filled with heartfelt moments and compelling performances.

The teaser introduces viewers to an emotional romantic drama that promises to explore love, relationships, and human emotions with depth and sensitivity. The film stars acclaimed actors Guru Somasundaram and Anumol in the lead roles along with Vijai Vishwa, Archana, Sai Vicky, Nayana Sai and is directed by Saraj Seelan.

With its visually appealing presentation and emotionally engaging narrative tone, Paris Cafe aims to strike a chord with audiences and create anticipation for its release.

Cast
Guru Somasundaram Anumol
Vijai Vishwa
Archana
Sai Vicky
Nayana Sai

Technical Crew
A Film By: Saraj Seelan
Music Director: K.
DOP: Sathesh G
Editor: V. J. Sabu Joseph
Art Director: Dhamu MFA
Costume Designer: V. Dhanraj
Choreography: Prasanth
Makeup: Karthik & Team
Stills: Sivaraj
VFX Supervisor: V. Rajkumar
VFX: Focus VFX
Lyric Video: Lokesh Mithran (Tanya Talkies)
DI Colorist: R. Nandakumar – Varna Digital Studios
PRO: Riaz K Ahmed, Paras Riyaz
Publicity Design: VM Shivakumar
Executive Producer: Surya Prakash P.
Creative Producers: Ezhil Sathya, Vengal Koteeshvaran
Co-Producer: Vengal M Lingeshwaran
Producer: Kanmani Ranganathan
Directed By: Saraj Seelan
Label: Saregama India Limited, A RPSG Group Company

அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் ” அமைச்சர் ” திரைப்படம்

0

ஸ்ரீ அம்மன் மீடியாஸ் பட நிறுவனம் சார்பில் T ஜெயலட்சுமி கதை திரைக்கதை வசனம் எழுத, இயக்குநர் சலங்கை துரை நிர்வாக தயாரிப்பில் உருவான படம் ” அமைச்சர் “

ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்த இந்த படத்தில் அவருடன் அக்ஷயா , கிகீ ,விஜயகுமார் மற்றும் பிர்லா போஸ் நடித்திருந்தனர்.

தேனிசைத் தென்றல் தேவா இசைக்கு மதன் கார்த்தி கபிலன் சினேகன் கருணாகரன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.

இயக்குனர் சலங்கை துரை மேற்பார்வையில் இந்த படம் உருவானது.

முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படம் தற்போது அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மேலும் ஓடிடி ப்ளஸ், ஜியோ டிவி தளங்களிலும் படம் வெளியாகி உள்ளது.

பரபரப்பாக இயங்கி வரும் இன்றைய தமிழக அரசியலில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றிருக்கும் நிலையில் இந்த அமைச்சர் படம் வெளியாகி இருப்பது மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்!

0

சென்னை, இந்தியா: விரைவில் வெளியாகவுள்ள ‘டெக்சாஸ் டைகர்’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை உலகின் முன்னணி இசை நிறுவனங்களில் ஒன்றான சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளது. படத்தின் வெளியீட்டு பயணத்தில் இது முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

உலகளவில் இசைத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சோனி மியூசிக் மற்றும் ‘டெக்சாஸ் டைகர்’ படத்தின் இளம் குழுவினர் இணைந்துள்ளது இந்த படத்தின் உள்ளடக்கம், இசை மற்றும் வணிக ரீதியான வியாபாரம் என திரையுலகினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சோனி மியூசிக்கின் உலகளாவிய விநியோகம் மற்றும் வலுவான புரோமோஷன்ஸ் மூலம், படம் அதிகளவில் ரசிகர்களை சென்றடையும் என்றும், திரையரங்கு வெளியீட்டிற்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது.

படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்தும் சோனி மியூசிக் இசை உரிமம் குறித்தும் படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் கூறியதாவது, “படப்பிடிப்பு நிறைவடைந்தது மகிழ்ச்சி. இதோடு இரட்டிப்பு மகிழ்ச்சியாக ’டெக்சாஸ் டைகர்’ படத்துடன் சோனி மியூசிக் இணைந்திருப்பது எங்களுக்கு பெருமையான தருணம். இசை உலகில் மறக்க முடியாத பல இசைத் தொகுப்புகள் மற்றும் புகழ்பெற்ற படைப்புகளின் இல்லமாக சோனி மியூசிக் திகழ்கிறது. அத்தகைய மதிப்புமிக்க சர்வதேச நிறுவனத்துடன் எங்கள் படம் இணைந்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்று. எங்கள் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் இந்தப் படத்திற்காக செலுத்திய உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கைக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த கூட்டணியை பார்க்கிறோம். வரும் மாதங்களில் ரசிகர்கள் டெக்சாஸ் டைகரின் இசையையும் அதன் உலகத்தையும் ரசிப்பதை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம்” என்றார்.

பொழுதுபோக்கு, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் விறுவிறுப்பான கதையம்சத்துடன் அனைத்து வயதினரையும் கவரும் வகையில் முழுமையான திரையரங்கு அனுபவமாக ‘டெக்சாஸ் டைகர்’ உருவாகி வருகிறது.

படத்தின் இசை, வெளியீட்டு விவரங்கள் மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

தயாரிப்பு நிறுவனம்: யுகே ஸ்குவாட்,
எழுத்து, இயக்கம்: ‘பேமிலி படம்’ புகழ் செல்வகுமார் திருமாறன்,
நடிகர்கள்: ஹிருது ஹரூன் (டியூட், தக்ஸ், ஆல் வி இமேஜின் அஸ் லைட்) சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் ரோகிணி மொல்லேட்டி

சூர்யா சிவகுமார்,அஜய் தேவ்கன்,நாக சைதன்யா, ராஜ் பி.ஷெட்டி வெளியிட்ட ‘பாலன் தி பாய்’ டிரெய்லர்

0

Trailer Link : https://youtu.be/l3II2wligeA?si=c0_K79WWbFMM547N

கேன்ஸ் திரைப்பட விழாவின் Marche du Film-ல் வெற்றிகரமான திரையிடலுக்குப் பிறகு, “பாலன் தி பாய்” படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் அறிவிப்பு மற்றும் முதல் போஸ்டர் வெளியீட்டில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டிரெய்லர், இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களால் பல மொழிகளில் வெளியிடப்பட்டது.

அஜய் தேவ்கன் (இந்தி), சூர்யா சிவகுமார் (தமிழ்), நாக சைதன்யா (தெலுங்கு), ராஜ் பி.ஷெட்டி (கன்னடம்) ஆகியோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இந்தப் படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்து, படத்திற்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

டிரெய்லர், அடையாளம், பொறுப்புணர்வு மற்றும் உயிர்பிழைப்பு ஆகிய ஆழமான மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட உணர்ச்சிபூர்வமான சினிமா அனுபவத்தை பிரதிபலிக்கிறது. சஸ்பென்ஸ், உணர்ச்சி மற்றும் பரபரப்பு நிறைந்த இந்த டிரெய்லர், பார்வையாளர்களுக்கு சிந்தனையைத் தூண்டும் ஒரு சக்திவாய்ந்த பயண அனுபவத்தை அளிக்கிறது.

சிதம்பரம் இயக்கத்தில், ஜீத்து மாதவன் எழுதிய பாலன் தி பாய் திரைப்படம், தனித்துவமான கதைசொல்லல் பாணியைக் கொண்ட இரு புகழ்பெற்ற படைப்பாளர்களை இணைக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

கே.வி.என். புரொடக்ஷன்ஸ்‌ மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள “பாலன் தி பாய்” ஜூன் 19, 2026 அன்று மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தனுஷின் மருமகன் பவிஷ் மற்றும் குஷ்புவின் மகள் அவந்திகா இணையும் “அட்டாக்கர்”

0

பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் சார்பில் தினேஷ் ராஜ் தயாரித்துள்ளார்.

Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக “அட்டாக்கர்” உருவாகியுள்ளது. வித்தியாசமான மற்றும் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களை உருவாக்கும் தனது பயணத்தை இந்நிறுவனம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம் எழுதி இயக்கியுள்ளார். இவர் முன்னதாக இயக்குநர்
பா. இரஞ்சித் திடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

வாலிபால் விளையாட்டையும் அதனுடன் தொடர்புடைய கலாச்சார அடையாளத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள “அட்டாக்கர்”, தமிழ் சினிமாவில் வாலிபாலை பிரதான கருவாகக் கொண்டு உருவாகும் முதல் திரைப்படமாக தனித்துவம் பெறுகிறது. முழுக்க முழுக்க வாலிபாலை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை, அந்த விளையாட்டுடன் இணைந்துள்ள உணர்வுகள், சமூக பின்னணி மற்றும் கலாச்சார அடையாளங்களை ஆராய்கிறது.

திரைப்படத்திற்கு மேலும் நம்பகத்தன்மை சேர்க்கும் வகையில், இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதாநாயகர்களான பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் உள்ளிட்ட நடிகர்கள், தங்களது கதாபாத்திரங்களுக்காக ஆறு மாதங்களுக்கும் மேலாக தொழில்முறை வாலிபால் வீரர்களுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், நடிகை குஷ்பு சுந்தர் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி ஆகியோரின் மகளான அவந்திகா சுந்தர், இத்திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

“அட்டாக்கர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

“லவ் ஓ லவ்”, “ரீமேட்ச்”, “அட்டாக்கர்” போன்ற திரைப்படங்கள் மூலம் Zinema Media and Entertainment Limited நிறுவனம் தொடர்ந்து பல்வகைமையான மற்றும் தனித்துவமான கதைகளை முன்னிறுத்தி வருகிறது. வளர்ந்து வரும் இயக்குநர்கள், வலுவான உள்ளடக்கமிக்க கதைகள் மற்றும் திறமையான புதிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதில் நிறுவனம் உறுதியாக இருப்பதாக தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

தனது வளர்ந்து வரும் திரைப்படப் பட்டியலின் மூலம், புதிய படைப்பாளிகள், புதுமையான கதையம்சங்கள் மற்றும் வளர்ந்து வரும் திறமைகளுக்கு ஒரு தளமாக செயல்படுவதை Zinema Media and Entertainment Limited நோக்கமாகக் கொண்டுள்ளது. தரமான பொழுதுபோக்கை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் வழங்கும் தனது பார்வையை நிறுவனம் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

ஜோய்ஆலுக்காஸ் ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி’

0

தி.நகர், சென்னையில், ஜூன் 5 முதல் 21 வரை.

சென்னை, தமிழ்நாடு – ஜூன் 2026: உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், தனது  சென்னை தி.நகர் ஷோரூமில் ஜூன் 5, 2026 முதல் ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சியை’ நடத்துகிறது.  பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தக் கண்காட்சி, வைர நகை வடிவமைப்பில் தலைசிறந்த கைவினைத்திறன், வடிவமைப்பு நேர்த்தி மற்றும் புதுமையை  கொண்டாடும் ஒரு நிகழ்வாக அமையும்.

பிரம்மாண்டமான மணப்பெண் நகைத் தொகுப்புகள் முதல் தினசரி அணியும் நவீன வைர நகைகள் வரை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். பாரம்பரியத்துடன், காலத்தால் அழியாத அழகையும் நவீன வடிவமைப்பையும் ஒருங்கிணைக்கும் பல்வேறு சிறப்புமிக்க நகைகள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு வடிவமைப்பும் ஒரு கலைப்படைப்பாக திகழ்கிறது, இது கண்காட்சி நடைபெறும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர்.ஜோய்ஆலுக்காஸ் கூறுகையில், ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி’ என்பது வைரங்களின் மீதுள்ள கவர்ச்சிக்கும், நகை வடிவமைப்பில் முழுமையை நோக்கிய எங்கள் அர்ப்பணிப்பிற்கும் சாட்சியாக அமையும். சென்னை எங்கள் இதயத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தக் கண்காட்சி வாடிக்கையாளர்களுக்கு அழகு, தனித்துவம் மற்றும் சிறந்த கைவினைத்திறனை பிரதிபலிக்கும் பிரத்யேக வடிவமைப்புகளைக் கண்டறியும் அரிய வாய்ப்பை வழங்கும்,” என்றார்.

இந்த சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் வகையில், கண்காட்சி காலத்தில் ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தங்க நாணயம் வழங்கப்படும். இது அவர்களின் ஷாப்பிங் அனுபவத்திற்கு மேலும் பிரகாசம் சேர்க்கும்.

‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி’, சென்னை தி.நகரில் உள்ள ஜோய்ஆலுக்காஸ் ஷோரூமில், 2026 ஜூன் 21 வரை நடைபெறும். ஆடம்பரம், அழகு மற்றும் காலத்தால் அழியாத கவர்ச்சியின் கதையைச் சொல்லும் வைர நகைகளின் அற்புத உலகத்திற்கு அனைவரையும் வரவேற்கிறோம்.

காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்: திரைப்பட நடிகர் ஜெ.எம்.பஷீர் வேண்டுகோள்!

0

தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்

உலக அதிசய தலைவா..!
ஒரிஜினல் சிறுபான்மை இன காவலரே
வரும் ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணியில் பழமை வாய்ந்த பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் அமைந்துள்ள
கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் அன்று அவரது சமாதிக்கு வந்து தங்களது பொற்கரங்களால் பொன்னாடை போத்திட வேண்டுகிறோம்

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமைத்து காயிதே மில்லத் தொடங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை ஆட்சியில் பங்குபெற செய்து அமைச்சராக்கி அழகு பார்க்கும் ஒரே தலைவர் நீங்கள்தான்.

நாளுக்கு நாள் தங்களது புகழ் கூடிக்கொண்டே போகின்றது.
உங்களது வாக்கு அப்படியே பலிக்கின்றது.
நடக்கப் போவதை தீர்க்கதரிசனத்துடன் முன்கூட்டியே கூறுகின்ற ஆற்றல் படைத்த தீர்க்கதரிசினி நீங்கள்.

இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்று கூறிய காயிதே மில்லத் அவர்களின் வழியில் தமிழக வெற்றி கழகத்தின் இஸ்லாமிய பெண்ணை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கிய அதிசய தலைவர் நீங்கள்.

சிறுபான்மை நலன் காக்கும் அரசு என்று தங்களின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய தலைவர் நீங்கள்.

சிறுபான்மையினர் மக்களின் பாதுகாவலன் என்று இதுவரை மக்களை ஏமாற்றி வந்தவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி அவர்களின் போலி முகத்திரையை கிழித்த தலைவர் நீங்கள்.

வழி தெரியாமல் இருந்த நாங்கள் இனி உங்களின் பின்னால் என்றென்றும் தொடர்வோம்

முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவியை கொடுத்த முதல் செயலே தங்களை உலக அதிசய தலைவர் ஆக்கியது என தேவர் திரைப்பட நடிகர் ஜெ.எம் பஷீர் அறிக்கை விடுத்துள்ளார்.

பாத்வே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவான ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தை அமேசான் பிரைமில் குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்

0

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற ‘கார்மேனி செல்வம்’ திரைப்படம், ஜூன் 3, 2026 அன்று அமேசான் பிரைம் வீடியோ ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

பாத்வே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் சக்ரி எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படம், நிதி நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக தனது முதலாளியின் காரை யாருக்கும் தெரியாமல் டாக்ஸியாக இயக்கும் ஓட்டுநர் ஒருவரின் வாழ்க்கையை திரையில் காட்டுகிறது. பண மற்றும் மனப் போராட்டங்களுக்கு நடுவே ஒரு மனிதன் எதிர்கொள்ளும் சவால்களை உணர்வுப்பூர்வமாக படம் பிடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் அபிநயா ஆகியோரின் பங்களிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

கார்மேனி செல்வம், படம் முடிந்த பிறகும் பார்வையாளர்களின் மனதில் நீடிக்கும் ஒரு கேள்வியை எழுப்புகிறது: மன அமைதி, நேரம், குடும்பம் ஆகியவற்றை இழந்த பிறகு கிடைக்கும் நிதி சுதந்திரம் உண்மையில் மதிப்புள்ளதா?

“கார்மேனி செல்வம் படத்தை திரையரங்கங்களில் பார்த்த பெரும்பாலானோர் விருதுகளை வெல்வதற்கு தகுதியான படம் என்று புகழ்ந்தனர். மனிதர்களின் உணர்வுகளை மிகச் சரியாக பிரதிபலித்திருப்பதாக பாராட்டுகளை பெற்ற படத்தை தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

“இந்த படம் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் — இப்போது அது சாத்தியமாகிறது.” என்று இயக்குநர் Ram Chakri கூறினார்.

யுவராஜ் தக்ஷனின் ஒளிப்பதிவு, ஜெகன் ஆர்.வி மற்றும் தினேஷ் எஸ் ஆகியோரின் படத்தொகுப்பு, மியூசிகிளவுட் ஸ்டுடியோஸ் மற்றும் டெக்னாலஜிஸ்நிறுவனத்தின் இசை மற்றும் ஒலி வடிவமைப்பு படத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளன.

மொழி மற்றும் கலாச்சார எல்லைகளைக் கடந்து, மக்களின் இதயங்களைத் தொடும் உண்மைக்கு நெருக்கமான மனிதநேயமிக்க கதைகளை உருவாக்குவதில் உறுதியுடன் பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இணையதளம்: https://pathwayproductions.in/

‘கார்மேனி செல்வம்’ திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல்கள் மற்றும் படப்பிடிப்பு தள காட்சிகளை https://movie.carmeniselvam.in/ தளத்தில் காணலாம்.

படக்குழுவினர்:
நடிப்பு: பி. சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, கோதண்டம், கரண் சக்ரவர்த்தி, சங்கர நாராயணன் வி, ஹரிதா பரகோட். கிரியேட்டிவ் புரொடியூசர்: ஸ்ரீ சரவணன் மியூசிக் அஸ் அ சர்வீஸ் (MAAS): மியூசிகிளவுட் ஸ்டுடியோ & டெக்னாலஜி
ஒளிப்பதிவு: யுவராஜ் தக்ஷன்
படத்தொகுப்பு: ஜெகன் ஆர்.வி & தினேஷ் எஸ்
தயாரிப்பு வடிவமைப்பு: சங்கர்
பாடல்கள்: மணி அமுதவன் & உமா தேவி