Home Blog Page 12

‘அறுவடை’ படப்பிடிப்பு நிறைவு மகிழ்ச்சியில் பிறந்தநாள் கொண்டாடிய தயாரிப்பாளர்!

0

ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் கொண்டாடும்போது மகிழ்ச்சியான மனநிலை வேண்டும்.ஏதோ ஒரு காரியத்தை செய்து முடித்து ஏதோ ஒரு நல்ல செயல் நிறைவு பெற்ற அந்த திருப்தியும் நிறைவும் இருந்தால் அந்த பிறந்தநாள் கொண்டாட்ட மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிடும்.அப்படி இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர் M.கார்த்திகேசன்.

‘லாரா’ திரைப்படத்தைத் தயாரித்த இவர், தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் இரண்டாவது தயாரிப்பாக ‘அறுவடை’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.

ஒரு தயாரிப்பாளராக நடிகராக அறிமுகமான M. கார்த்திகேசன் முதன் முறையில் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கத்தில் உருவாகும் இந்த ‘அறுவடை’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக அவரே நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு
பிரேம்குமார் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகு ஸ்ரவன் குமார் இசையமைத்துள்ளார். கே. கே. விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல்கள் – கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி.நடன இயக்குனர்-ஏஎம்ஜே,கலை இயக்குனர் – ஜோதின் விஷாக்-அனுப்ஷா,ஸ்டண்ட் – டிஆர்.இணை இயக்குனர்-ஜெயன்.

இப்போது நகரம் சார்ந்த டெம்ப்ளேட் திரைப்படங்களே அதிகம் வருகின்றன. அந்த வரிசையில் இடம் பெறாமல் கிராமத்தை நோக்கிச் சென்றுள்ளது படக் குழு.கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ளது இந்த ‘அறுவடை’.

அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாளில் பொங்கல் விழா கொண்டாடி ‘அறுவடை’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தனர் .

படம் நிறைவடைந்த நிலையில் இன்று தனது பிறந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடிய இயக்குநர் M.கார்த்திகேசன் படத்தைப் பற்றிப் பேசுகையில்,

” ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சினை, மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு ‘அறுவடை’ என பெயரிட்டிருக்கிறோம். உலகெங்கும் ஜூலை மாதம் படத்தை வெளியிட உள்ளோம்.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இன்று ஜூன் மாதம் 14ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடுவது எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது.அந்த வகையில் இந்த ஆண்டு எனது பிறந்தநாள் எனக்குப் பெரிய திருப்தியையும் மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது.” என்றார்.

சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

0

தமிழ் சினிமாவின் பொற்காலம் முதல் நவீன காலம் வரை வெற்றியின் முத்திரையை பதித்து வரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான “சீயான் 63” படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம், தற்போது படப்பிடிப்பு கட்டத்திற்குள் நுழைந்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது.

சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். முன்னதாக “இருமுகன்” திரைப்படத்தின் மூலம் வெற்றிகரமான கூட்டணியை வழங்கிய விக்ரம் – ஆனந்த் சங்கர் இணைவு, சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ள நிலையில், இதற்காக விரிவான முன்தயாரிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

“சீயான் 63” அனைவரும் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி திரில்லர் ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளது. விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களையும் கவரும் வகையிலான உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான திரில்லர் திரைக்கதை மற்றும் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இணைந்த முழுமையான விருந்தாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பதும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அவரது இசை, படத்தின் உணர்ச்சி மற்றும் திரில்லர் அம்சங்களை மேலும் உயர்த்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொழில்நுட்பக் குழுவிலும் பல முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் ISC, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், வசன எழுத்தாளராக ஷான் கருப்புசாமி, சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, நடன அமைப்பாளராக பிருந்தா, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, விளம்பர வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா மற்றும் ஸ்டில்ஸ் புகைப்படக் கலைஞராக தேனி முருகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

விக்ரமின் தனித்துவமான திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக உருவாகும் “சீயான் 63”, வலுவான கூட்டணி, தரமான தொழில்நுட்பக் குழு, பெரிய தயாரிப்பு மதிப்பு மற்றும் அனைவரையும் கவரும் ஃபேமிலி திரில்லர் ஆக்சன் கதை ஆகியவற்றால் தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

அறிவிப்பின் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய “சீயான் 63”, தற்போது படப்பிடிப்பு தொடக்கத்துடன் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ள நிலையில், விக்ரம் ரசிகர்களும் திரையுலக வட்டாரங்களும் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஒரே நாளில் இரண்டு ஜானர்கள்… இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய சாம் CS!

0

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி. அந்த வகையில், ஒவ்வொரு படத்திற்கும் அதன் தன்மைக்கு ஏற்ற இசையை வழங்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளவர் இசையமைப்பாளர் சாம் CS.

நேற்று வெளியாகியுள்ள இரண்டு வித்தியாசமான திரைப்படங்களான “ஹபிபீ” மற்றும் “டபுள் ஆக்குபன்ஸி” படங்கள், சாம் CS-ன் இசை திறனின் இரண்டு வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்தியுள்ளன.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள “ஹபிபீ”, மனித உணர்வுகள், வலி, நம்பிக்கை மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை இன்னும் ஆழமாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மனதை வருடும் இசையையும் உணர்வுப்பூர்வமான பின்னணி இசையையும் சாம் CS வழங்கியுள்ளார். காட்சிகள் முடிந்த பிறகும் அதன் தாக்கம் மனதில் நீடிக்க காரணமாக அவரது இசை அமைகிறது.

அதே நேரத்தில், முற்றிலும் மாறுபட்ட உலகத்தை கொண்ட “டபுள் ஆக்குபன்ஸி”, ஃபேண்டஸி மற்றும் நவீன பொழுதுபோக்கு அம்சங்களை இணைத்து இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு தேவையான நவீன இசை பாணி, துடிப்பான சவுண்ட் மற்றும் புதிய தலைமுறை ரசிகர்களை ஈர்க்கும் இசை மொழியை சாம் CS திறமையாக உருவாக்கியுள்ளார். படத்தின் கற்பனை உலகத்திற்கு ஏற்ற இசை அனுபவத்தை அவர் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் வெளியான இரண்டு படங்களின் ஜானர், உணர்வு, கதை சொல்லும் முறை என அனைத்தும் முற்றிலும் வேறுபட்டவை. அந்த இரண்டு உலகங்களுக்கும் ஏற்ற இசையை உருவாக்கி, ஒரு இசையமைப்பாளராக தனது பல்துறை திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் சாம் CS.

சமீப காலங்களில் பின்னணி இசை மட்டுமல்லாமல், பாடல்களிலும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் சாம் CS, ஒவ்வொரு படைப்பிலும் புதிய இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். கதையின் தேவையை புரிந்து அதற்கேற்ப தனது இசை மொழியை மாற்றிக்கொள்ளும் திறமையே அவரை இன்றைய இந்திய சினிமாவின் மிகவும் தேடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

தனித்துவமான இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பாலிவுட் தொடங்கி பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தற்போது அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

அதில் முக்கியமாக புஷ்கர் காயத்திரி இயக்கும் அடுத்த திரைப்படம், ரவிமோகனின் “கராத்தே பாபு”, கார்த்தியின் “சர்தார் 2” படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் இயக்குநர் H. வினோத் மற்றும் நடிகர் தனுஷுடன் பணியாற்றவுள்ளார். மேலும் பாலிவுட், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹபீபி – விமர்சனம்

0

இயக்கம் – மீரா கதிரவன்
நடிகர்கள் – கஸ்தூரி ராஜா, நடிகர் ஈஷா , மாளவிகா மானோஜ், தனாஸ்ரீ
இசை – சாம்.சி.எஸ்
தயாரிப்பு – சுரேஷ் காமாட்சி – வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்

குடும்ப தலைவர் ஒருவர் நெசவுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கிறார்,வரும் காலங்களில் நெசவுத் தொழில் நலிவடைந்து வருவதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார். இதனால், அவரது தம்பி வேலைக்காக அரபு நாட்டுக்கு செல்கிறார். தம்பி வெளிநாட்டில் வேலை செய்தாலும், கடைசி வரை நெசவுத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் மட்டும் தான் வாழ வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே அவரது மகன் 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால், அவரையும் வெளிநாட்டுக்கு அனுப்ப உறவினர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால், வெளிநாட்டுக்கு சென்று விட்டால் தனது பள்ளியை சந்திக்க முடியாமல் போய்விடும் என்பதாலும், குடும்பத்தை பிரிய மனம் இல்லாததாலும் வெளிநாட்டுக்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்.நவீன இயந்திரங்களின் வருகையால் கைத்தறி நெசவுத் தொழில் பாதிப்படைய பொருளாதார ரீதியாக கஷ்டப்படுகிறார். அவரது கஷ்ட்டத்தை போக்க மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப உறவினர்கள் வற்புறுத்துகிறார்கள். குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் இருக்கும் சித்தப்பாவின் நிலையை நினைத்து தானும் அப்படி ஒரு வலியை அனுபவிக்க கூடாது என்பதில் மகன் உறுதியாக இருக்கிறார்.இதற்கிடையே, தன் காதலை சொல்வதற்காக இரவு நேரத்தில் அவரது இல்லத்திற்கு செல்லும் அவன் பொதுமக்களிடம் சிக்கிக்கொள்கிறான்.அதன் பிறகு என்ன ஆனது என்பதே உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்வதே ‘ஹபீபி’.

இந்தப் படத்தில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா ஒரு ஏழை நெசவாளராக முகமது யூசுப் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் , கதாபாத்திரத்துக்கு தேவையான உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்திருக்கிறார். ஒரு குடும்ப தலைவராக குடும்பத்தின் மீதான அக்கறை, தான் நேசிக்கும் நெசவுத் தொழில் புதைக்கப்படும் போது வெளிப்படுத்தும் ஏமாற்றம், மகனின் நிலையை கண்டு கதறி அழுவது, என அனைத்து இடங்களிலும் அளவான நடிப்பை வெளிப்படுத்தி தன் கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.அதே போல் படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரமாக இளம் நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஈஷா, குழந்தைத்தனமான முகம் மற்றும் புன்னகையுடன் கவனம் ஈர்க்கிறார். மனதுக்குள் வளர்க்கும் காதல், அதை சொல்ல தடுமாறுவது என்று பள்ளி பருவத்திலும், காதல் பருவத்திலும் எதார்த்தமாக நடித்திருப்பவர், தன் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நகர்வில், இறுக்கமான முகத்தோடு இருந்தாலும், காட்சிகளை உணர்வுப்பூர்வமாக கையாண்டு முதிர்ச்சியான நடிப்பின் மூலம் கைதட்டல் பெறுகிறார்.

மாளவிகா மானோஜுக்கு படம் முழுவதும் வசனம் இல்லை என்றாலும், இறுதிக் காட்சியில் அவர் பேசும் அந்த ஒரு சில வசனங்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களின் ஒட்டுமொத்த வலியையும் பார்வையாளர்களிடம் கடத்தி விடுகிறது.கட்டுப்பாடுகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளாகும் இஸ்லாமிய பெண்களில் பெண்ணியம் பேசுபவர்களும், தங்களது உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் போராடுபவர்களும் உண்டு என்பதை உணர்த்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தனாஸ்ரீ .

இந்த முறை சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையான மெலோடியாக பயணிக்கிறது. இஸ்லாமிய பாடல்கள் கதைக்களத்தையும், கதை மாந்தர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் பயணித்திருக்கிறது. பின்னணி இசை கதைப் போல் எந்தவித பதற்றமும், பரபரப்பும் இன்றி அதிகம் சத்தமில்லாமல் பயணித்து காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.அதே போல் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு 80-களில் ஆரம்பிக்கும் கதையை 90, 2000 மற்றும் தற்போதைய காலக்கட்டம் என்று பார்வையாளர்களை கதைக்களத்துடன் பயணிக்க வைத்திருப்பதோடு, இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வியலை கண்டு மனதை ஏங்க வைக்கிறது.

இந்தப் படத்திற்கு மீரா கதிரவன் திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் , மூன்று தலைமுறையை கடந்த ஒரு குடும்பத்தின் வாழ்க்கை சூழலை காட்சி மொழியில் மிக இயல்பாக கொடுத்திருக்கிறார். இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல், அவர்களது நட்பு, காதல், எதிர்பார்ப்பு ஆகியவற்றை மிக சரியான முறையில் பேசியிருந்தாலும், பொருளாதாரம் ஈட்டுவதற்காக குடும்பத்தை பிரிந்து செல்லும் அவர்களது வலி, அவர்களுக்கானது மட்டும் அல்ல, குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் இருக்கும் அனைவருக்குமானது என்பதையும் புரிய வைத்திருக்கிறார். நம் ஊரில் பல இஸ்லாமிய உறவுகள் பொருளாதார பிரச்சினை காரணமாக விருப்பம் இல்லாமல் மற்ற நாடுகளுக்கு பணிக்கு செல்வதால் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் ஏற்கும் இன்னல்களையும் உண்மைக்கு அருகில் நமக்கு காண்பிஹ்ட்துள்ளார்.

மொத்தத்தில், ’ஹபீபி’ மனித உணர்வுகளின் வெளிப்பாடு.

ஆட்டி – விமர்சனம்

0

இயக்கம் – திருமுருகன்
நடிகர்கள் – இசக்கி கார்வண்ணன், அபி நட்சத்திரா , பிரவீன் பழனிசாமி, செல்வகுமார், காதல் சுகுமார்
இசை – தீசன்
தயாரிப்பு – சுரேஷ் காமாட்சி – வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்

மலை கிராமத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு ஒருவர் இன்ஸ்பெக்டராக வருகிறார், அந்த காவல் நிலையத்தில் எந்தவித குற்ற வழக்குகளும் பதிவாகாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையே, அந்த ஊருக்கு ஆசிரியராக வரும் ஒருவர் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் நாயகன், அந்த ஊர் பற்றிய பல திடுக்கிடும் தகவல்களை அறிந்துக் கொள்வதொடு, முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று, பலரை கொடூரமாக கொலை செய்வதையும் கண்டுபிடிக்கிறார். அவர்கள் யார் ?, எதற்காக இப்படி கொலை செய்கிறார்கள் ?, ஆசிரியர் கொலைக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்பதை சஸ்பென்ஸாக சொல்வதே இந்த ‘ஆட்டி’ படத்தின் கதை.

இந்த படத்தில் காவல் துறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கார் வண்ணன் கம்பீரமான தோற்றம், கூர்மையான பார்வை, தெளிவான சிந்தனை ஆகியவற்றின் மூலம் தன் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். நாயகன் என்றாலும் தனக்கான முக்கியத்துவத்தை குறைத்துக் கொண்டு திரைக்கதைக்கு முக்கியத்துவம் அளித்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.
அதே போல் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபி நட்சத்திரா, தன் முதிர்ச்சியான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். அவரது அறிமுகம் மற்றும் அவருக்கான பில்டப் ஆகியவை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அவரது கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அவற்றுக்கான குறைவான முக்கியத்துவம் பெரும் ஏமாற்றமளிக்கிறது.

ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன் பழனிசாமிக்கு சிறிய வேலை என்றாலும் அதை நிறைவாக செய்து திரைக்கதையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறார். காவலராக நடித்திருக்கும் செல்வகுமார், காதல் சுகுமார், கரண் சக்கரவர்த்தி, சவுந்தர் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களது வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

தீசனின் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, மலைப்பகுதியில் நிலவும் ஓசைகளை துள்ளியமாக கொடுத்து கவனம் ஈர்க்கிறது.சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு இயற்கையின் அழகையும், அங்கு நிறைந்திருக்கும் ஆபத்தையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருப்பதோடு, 1970 காலக்கட்டத்தில் பயணிக்கும் அனுபவத்தை படம் பார்ப்பவர்களுக்கு ஏற்பட வைத்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு திருமுருகன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார், திருமுருகனின் திரைக்கதை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் பயணித்தாலும், அக்காலம் முதலே பெண்களுக்கு எதிராக நடந்த கொடூரங்களை வரலாற்று ரீதியாக விளக்கவும் செய்திருக்கிறது.கதை ஒரு கொலையில் தொடங்கும் அந்த பரபரப்பை கடைசி வரை வைத்துள்ளார். இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில், ‘ஆட்டி’ விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

Apollo Doctors save 73-Year-Old Patient with Tamil Nadu’s First Pulsed Field Ablation for Heart Rhythm Disorder

0

  • PFA, a next-generation treatment for Atrial Fibrillation, a leading cause of stroke and heart failure, uses ultra-short electrical pulses to selectively target abnormal heart tissue while protecting surrounding structures
  • This minimally invasive procedure enables safer treatment, faster recovery, and improved outcomes, particularly for elderly and high-risk patients

Chennai, 11 June 2026: Apollo Hospitals, Greams Road, Chennai, successfully performed a life-saving procedure on a 73-year-old woman suffering from a serious heart rhythm disorder. The procedure was performed by Dr. Karthigesan A.M., Senior Consultant Cardiologist and Electrophysiologist, marking Tamil Nadu’s first Pulsed Field Ablation (PFA) procedure. The patient had been experiencing frequent episodes of rapid heartbeat, breathlessness, and worsening heart failure despite multiple medications.

Following the procedure, her heart rhythm was successfully restored to normal, significantly improving her symptoms and overall quality of life. Pulsed Field Ablation (PFA) is a minimally invasive treatment that uses short electrical pulses to precisely target the heart tissue causing the abnormal rhythm. Unlike conventional ablation procedures that use heat or extreme cold, PFA reduces the risk of damage to nearby structures such as the oesophagus, nerves, and surrounding blood vessels.

The procedure is performed using a thin catheter guided to the heart through a vein in the groin, enabling faster recovery and improved patient safety compared to traditional ablation procedures.

Speaking about the milestone, Dr. Karthigesan A.M., Senior Consultant Cardiologist and Electrophysiologist, Apollo Hospitals, Greams Road, Chennai, said: “Pulsed Field Ablation is one of the most important advances in the treatment of Atrial Fibrillation in recent years. It allows us to treat the abnormal heart rhythm with greater precision while improving safety for patients. This is especially beneficial for elderly patients and those with complex heart conditions. Successfully performing Tamil Nadu’s first PFA procedure is a significant achievement and brings a world-class treatment option closer to patients in our state.”

The patient was considered an ideal candidate for PFA because of her age, existing heart condition, and the need for a treatment option that would minimise the risk of injury to surrounding tissues. The procedure was completed successfully, restoring a normal heart rhythm and helping reduce her risk of future complications. The patient has made a good recovery and is doing well.

Commenting on the achievement, Dr. Ilankumaran Kaliamoorthy, CEO, Apollo Hospitals, Chennai Region, said: “Apollo Hospitals has always been committed to bringing the latest medical advances to patients in India. The introduction of Pulsed Field Ablation at Apollo Hospitals, Greams Road, is another step towards ensuring that patients have access to the best treatment options available without having to travel abroad. This milestone strengthens our commitment to delivering advanced cardiac care and improving patient outcomes.”

With the introduction of Pulsed Field Ablation, Apollo Hospitals, Chennai, continues to strengthen its leadership in advanced cardiac electrophysiology, offering patients access to innovative therapies that improve outcomes, enhance safety, and redefine the future of heart rhythm management.

About Apollo Hospitals: Apollo revolutionized healthcare when Dr. Prathap Reddy opened the first hospital in Chennai in 1983. Today, Apollo is the world’s largest integrated healthcare platform with over 10,400 beds across 76 hospitals, 6,600+ pharmacies, 264 clinics, 2,182 diagnostic centres, and 800+ telemedicine centres. It is one of the world’s leading cardiac centers, having performed over 3,00,000 angioplasties and 2,00,000 surgeries. Apollo continues to invest in research and innovation to bring the most innovative technologies, equipment, and treatment protocols to ensure patients have access to the best care in the world. Apollo’s 1,20,000 family members are dedicated to delivering exceptional care and leaving the world better than we found it.

Media Contact: Apollo Hospitals: Ms. Suganthy @ 98417 14433 | Burson India: Ms. Haripriya Manoharan @ 9790750667

ஸ்டைல், ஸ்வேக் மற்றும் கொண்டாட்டத்துடன் வெளியாகி இருக்கும் ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்தது!

0

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ’சிக்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் இப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகிறது.

திரைத்துறையிலும் வர்த்தகம் வட்டாரத்திலும் இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பேசுபொருளாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் படத்தில் இருந்து வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ பாடல், மிகக் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இசை ரசிகர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளது.

உற்சாகத்துடன் துள்ளலாக உருவாக்கப்பட்டுள்ள சிக்மா ஸ்டைல் பாடல், அதன் வண்ணமயமான காட்சிகள், பின்னணி மற்றும் எண்டர்டெயினிங்கான நட்சத்திரங்களின் திரையிருப்பு காரணமாக ரசிகர்களை உடனடியாக ஈர்த்துள்ளது. சந்தீப் கிஷனின் மாஸான திரையிருப்பு, ஃபரியா அப்துல்லாவின் கிளாசிக்கல், வெஸ்டர்ன் ஃப்யூஷன் நடனம் இதனுடன் பாடலில் ஜேசன் சஞ்சயின் ஸ்டைலான திரையிருப்பு இவையனைத்தும் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது ஜூலை 31 அன்று வெளியாகும் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. கவரும் இசை, ஸ்டைலிஷான உருவாக்கம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களால் நிரம்பியுள்ள இந்த பாடல், இளைஞர்கள் மற்றும் இசை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு உள்ளிட்ட பல முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள்: லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ’சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்க, அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

இசை: தமன் எஸ்.,
ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த்,
படத்தொகுப்பு: பிரவீன் கே.எல்.,
விஎஃப்எக்ஸ் மேற்பார்வை: ஹரிஹரசுதன்,
ஆடியோ உரிமம்:சரிகம

விஷால் அறிமுக இயக்குனராகவும்,நடிப்பில் சிகரமாகவும்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் மகுடங்களை சூடும் மகுடம் டீசர்

0

திரைத்துறையின் மீது தனக்குள்ள காதல், அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் என தனது பங்களிப்பை நடிப்பு மற்றும் இயக்கத்தின் வாயிலாக மகுடம் திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் விஷால்.

ஆக்சன், எமோஷன் மற்றும் நேர்த்தியான திரைக்கதையை கொண்டு உருவாகியுள்ள மகுடம் திரைப்படமானது தமிழ் திரையுலகின் பெருமைமிகு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99 வது திரைப்படமாகவும் நடிகர் விஷாலின் திரைப்பயணத்தில் 35 வது திரைப்படமாகவும் அமையப் பெற்றிருக்கிறது.

தற்போது வெளியாகியிருக்கும் மகுடம் திரைப்படத்தின் டீசர் வாயிலாக மக்களுக்கு ஓர் ஆழமான ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் கலந்த நேர்த்தியான திரைக்கதையுடன் உருவாகி இருக்கும் திரைப்படமாக இது அமையப்பெற்றிருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. ஜூலை மாதத்தில் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கும் இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் MAKUTAM என்ற தலைப்பில் வெளியாகிறது.

இத்திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயபிரகாஷ், அஜய், வம்சி கிருஷ்ணா, அபு சலீம், அர்ஜெய், வி ஜே ஜான்சி, பதம் குமார் மற்றும் சபுமோன் ஆகியோர் தங்களது நேர்த்தியான நடிப்பின் வாயிலாக கதாபாத்திரத்திலேயே வாழ்ந்து, நடித்து இத்திரைப்படத்திற்கு மேலும் மெருகேற்றியிருக்கிறார்கள்.

மேலும் இத்திரைப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ஜிவி பிரகாஷ் குமாரின் இசை அமைந்துள்ளது. மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி ஒளிப்பதிவாளர்களாகிய ரிச்சர்ட் எம் நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் இணைந்து ஒளிப்பதிவில் அசத்தியுள்ளனர். நேர்த்தியான சண்டைக் காட்சிகள் மூலம் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார் திலீப் சுப்பராயன்.

தமிழ் திரை உலகின் மகுடமாக திகழக்கூடிய சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் நினைவில் வாழும் ஆர்பி சவுத்ரி அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள மகுடம் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள டீசர் மூலமாக மேலும் பல மகுடங்களை சூட முன்னேறிக் கொண்டிருக்கிறது.

நடிகர்கள் குழு
விஷால்
அஞ்சலி
துஷாரா விஜயன்
ஜான் விஜய்
ஜெயபிரகாஷ்
அஜய்
வம்சி கிருஷ்ணா
அபு சலீம்
அர்ஜை
பி ஜே ஜான்சி
பதம் குமார்
சபுமோன்

தொழில்நுட்பக் குழு
தயாரிப்பு நிறுவனம்: சூப்பர் குட் ஃபிலிம்ஸ்
தயாரிப்பாளர்: ஆர் பி சவுத்ரி
தயாரிப்பாளர்கள்: B. சுரேஷ், R.B ஜீவன் சவுத்ரி, ஜித்தன் ரமேஷ்,ஜீவா
எழுத்து மற்றும் இயக்கம்: விஷால்
இசை இயக்குனர்: ஜி வி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவாளர்: ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம்
படத்தொகுப்பு: என் பி ஸ்ரீகாந்த்
வசனங்கள்: பொன் பார்த்திபன், விஷால், ஆனந்த் குமரேசன் (தமிழ்) மற்றும் ராஜேஷ் A மூர்த்தி (தெலுங்கு)
கதை: ரவி அரசு
பாடல்கள்: எடகேசி, விவேக், உமாதேவி, கருணாகரன், V7H.
கலை இயக்குனர்: ஜி துரைராஜ்
நடன இயக்குனர்கள்: பிருந்தா, தினேஷ், அசார், அசார்.
ஸ்டண்ட் இயக்குனர்: திலீப் சுப்புராயன்
ஆடை வடிவமைப்பாளர்: வாசுகி பாஸ்கர்
ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ்: எம் வி ரமேஷ்
விஷுவல் எபெக்ட்ஸ் ஸ்டுடியோ: லார்வெண் ஸ்டுடியோ.
சவுண்ட் எபெக்ட்ஸ் அண்டு மிக்ஸ்: T உதயகுமார் (சவுண்ட் வைப் ஸ்டுடியோ).
DI : B2H ஸ்டுடியோஸ்
டைட்டில் டிசைனர்: டியுனே ஜோகன்
பப்ளிசிட்டி டிசைனர்: கண்ணதாசன் DKD
ப்ரோமோ ஸ்டில்ஸ்: சுதர்சன்
ஸ்டில்ஸ்: சாய் சந்தோஷ்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ் (தமிழ்) சாய் சதீஷ் (தெலுங்கு).

ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு – ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்!

0

கதிர், திவ்யா பாரதி, சத்யா மற்றும் பூர்ணிமா ரவி நடித்துள்ள இந்த தமிழ் கிரைம் திரில்லர், இலட்சியம், துரோகம் மற்றும் பழிவாங்கலை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த கதையைச் சொல்கிறது

ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தமிழ் ஒரிஜினல் தொடரான லிங்கம் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. குற்றம், அதிகாரம், துரோகம் மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட ஒரு தீவிரமான உலகத்தை இந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்தத் தொடர் ஜூன் 26 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் மட்டும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
1990களிலும் 2000களின் தொடக்க காலத்திலும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடைபெற்ற நம்பமுடியாத உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட லிங்கம், ஒரு கபடி வீரரின் வாழ்க்கையில் நிகழும் வெடித்துச் சிதறும் மாற்றத்தைச் சொல்லும் விறுவிறுப்பான குற்றம் மற்றும் பழிவாங்கல் கதையாகும். ஒரு கொலைக் குற்றச்சாட்டால் அவரது வாழ்க்கை முற்றிலும் மாறிப்போகிறது. கௌரவம், அடையாளம் மற்றும் சீருடை அணியும் எதிர்காலம் என்ற கனவுகளுடன் தொடங்கும் அவரது பயணம், பின்னர் அநீதி, உயிர் பிழைப்பு மற்றும் பழிவாங்கல் நிறைந்த வன்முறைப் பாதையாக மாறுகிறது.

கபடியின் பரபரப்பான உலகில் தொடங்கும் டிரெய்லர், நாயகனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு முக்கியமான போட்டியைக் காட்டுகிறது. அந்தப் போட்டி, காவல் அதிகாரியாக வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்கும் வாய்ப்பாக அமைகிறது. ஆனால் ஒரு வீரர் கொல்லப்படுவதால் விதி கொடூரமான திருப்பத்தை எடுக்கிறது; அந்தக் கொலைக்குப் பொறுப்பாளியாக அவர் குற்றம் சாட்டப்படுகிறார். தான் செய்யாத குற்றத்திற்காக சிக்கவைக்கப்பட்ட அவர், ஒருபோதும் நுழைய விரும்பாத ஒரு ஆபத்தான உலகிற்குள் தள்ளப்படுகிறார். காலப்போக்கில் அவர் அச்சமூட்டும் பெயராக உருவெடுக்கிறார்.

கதிர், திவ்யா பாரதி, பூர்ணிமா ரவி மற்றும் சத்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள லிங்கம், தமிழ்நாட்டின் கலாச்சார மற்றும் சமூகப் பின்னணியில் வேரூன்றிய உணர்ச்சிப்பூர்வமான நாடகம், அதிரடி மற்றும் குற்றத் திரில்லர் அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. லக்ஷ்மி சரவணகுமார் எழுதி இயக்கியுள்ள இந்தத் தொடரை பிரசாந்த் பாண்டியராஜ் ஷோ ரன்னராக வழிநடத்த, விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ளது. கபடி மைதானத்தின் தீவிரத்திலிருந்து அதிகாரம், வன்முறை மற்றும் பழிவாங்கலின் இருண்ட உலகம் வரை நகரும் இந்தத் தொடர், யதார்த்தமான மற்றும் அதிக பதற்றம் நிறைந்த கதையம்சத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் சக்திவாய்ந்த டிரெய்லர் மூலம், லிங்கம் ஒரு சம்பவம் எவ்வாறு ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாதையை என்றென்றும் மாற்றிவிட முடியும் என்பதை ஆராயும் வலுவான தமிழ் ஒரிஜினல் தொடராக தன்னை நிலைநிறுத்துகிறது. தனித்துவமான கதைகள், வலுவான உள்ளூர் பின்னணிகள் மற்றும் மனதைத் தொடும் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட பிராந்திய ஒரிஜினல் படைப்புகளின் பட்டியலில் இது ஜியோஹாட்ஸ்டாரின் மற்றொரு முக்கிய சேர்க்கையாக அமைகிறது.

லிங்கம், ஜூன் 26 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் மட்டும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
டிரெய்லரை இங்கே காணலாம்:

ஜியோஹாட்ஸ்டார் பற்றி

ஜியோஹாட்ஸ்டார், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும். பல மொழிகள், பல்வேறு வகைகள் மற்றும் பல வடிவங்களில் ஒரிஜினல் படைப்புகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் சர்வதேச உள்ளடக்கங்களை வழங்குகிறது. இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு ஈர்க்கக்கூடிய கதைகளை கொண்டு சேர்ப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ஜியோஹாட்ஸ்டார், நாட்டின் பன்முகத்தன்மை, கலாச்சாரம் மற்றும் கதை சொல்லும் திறனை பிரதிபலிக்கும் பிராந்திய ஒரிஜினல் படைப்புகளின் வரிசையை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது

FIFA World Cup 2026-க்கான இந்தியாவின் இலக்கான ZEE5, கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியாவை இணைத்துள்ளது

0

தனது தளத்தில் தடையற்ற, உயர்தர ஸ்ட்ரீமிங் மூலம் FIFA போட்டிகளின் பரபரப்பை கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சென்று, கால்பந்து பார்வை அனுபவத்தை மேலும் உயர்த்த ZEE5 தயாராக உள்ளது. பரந்த அளவிலான அணுகல் மற்றும் அதிநவீன டிஜிட்டல் திறன்களுடன், ஜூன் 11 முதல் ZEE5 நேரலைப் போட்டிகள், ஹைலைட்ஸ் மற்றும் பிரத்யேக உள்ளடக்கங்களை வழங்கவுள்ளது. இதன் மூலம் பல்வேறு சாதனங்களில் உள்ள பார்வையாளர்கள் உலக கால்பந்து திருவிழாவின் ஒவ்வொரு தருணத்துடனும் தொடர்ந்து இணைந்திருக்க முடியும். இந்த கூட்டாண்மை, FIFA தொடர்களின் பரவலான அளவுக்கும் ரசிகர்களின் ஆர்வத்திற்கும் ஏற்றவாறு, ஆழமான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் பிரீமியம் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதோடு, தனது விளையாட்டு உள்ளடக்கப் பட்டியலை வலுப்படுத்தும் ZEE5-இன் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.

பார்வை அனுபவத்திற்கு மேலும் உற்சாகம் சேர்க்கும் வகையில், இந்திய கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியா, FIFA World Cup 2026-க்கான ZEE5-இன் நிபுணர் குழுவில் இணைகிறார். இந்தியாவின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக பரவலாக மதிக்கப்படும் பூட்டியா, தனது சிறப்பான விளையாட்டு வாழ்க்கை, தலைமைத்துவம் மற்றும் இந்திய கால்பந்திற்கான பங்களிப்புகள் மூலம் நாட்டில் இந்த விளையாட்டை பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர். விளையாட்டைப் பற்றிய அவரது ஆழமான புரிதலும், மிகுந்த அனுபவமும், தொடரைப் பற்றி ஆழமான பார்வைகளைப் பெற விரும்பும் ரசிகர்களுக்கு அவரை மதிப்புமிக்க குரலாக மாற்றுகின்றன.

நிபுணர் குழுவின் ஒரு பகுதியாக இணைவது குறித்து பாய்சுங் பூட்டியா கூறியதாவது:

“இந்தியாவில் பல தலைமுறை கால்பந்து ரசிகர்களுக்கு FIFA World Cup என்பது உத்வேகம், உயர்வான கனவுகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளின் ஆதாரமாக இருந்து வருகிறது. இது விளையாட்டைத் தாண்டி மக்களை ஒரே ஆர்வத்தின் மூலம் ஒன்றிணைக்கும் ஒரு தொடர். நிபுணர் குழுவின் ஒரு பகுதியாக ZEE5 மற்றும் Unite8 Sports உடன் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உலகக் கோப்பையை மிகவும் சிறப்பாக்கும் கதைகள், போட்டி உணர்வுகள் மற்றும் மறக்க முடியாத தருணங்களுடன் ரசிகர்களை மேலும் நெருக்கமாக இணைக்க பங்களிப்பதில் பெருமைப்படுகிறேன். இந்தியா முழுவதும் கால்பந்து ரசிகர்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த நேரத்தில், விளையாட்டிற்கும் அதன் ரசிகர்களுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.”

FIFA World Cup 2026 போட்டிகளை ஜூன் 11 முதல் ZEE5-ல் மட்டும் நேரலையில் காணத் தவறாதீர்கள்!

ZEE5 மற்றும் Unite8-ல் FIFA World Cup 2026 பற்றி

FIFA World Cup 2026™️, இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு உலகின் மிகப் புகழ்பெற்ற கால்பந்து தொடர்களை கொண்டு வருவதற்காக, 2034 வரை நீளும் Zee Entertainment மற்றும் FIFA இடையிலான முக்கியமான நீண்டகால கூட்டாண்மையின் தொடக்கமாக அமைகிறது. தனது இரண்டு தளங்களான ZEE5 மற்றும் Unite8-ஐ பயன்படுத்தி, Zee Entertainment ஒப்பற்ற பார்வை அனுபவத்தை வழங்கவுள்ளது. FIFA World Cup 2026™️ போட்டிகளின் முழுமையான ஒளிபரப்பை ஆங்கிலம், இந்தி, பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வழங்குவதன் மூலம், ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் போட்டியின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க முடியும்.

இந்த கூட்டாண்மை, FIFA World Cup 2030™️, FIFA Women’s World Cup 2027™️ உள்ளிட்ட பல முக்கிய FIFA தொடர்களையும், பிற முன்னணி சர்வதேச போட்டிகளையும் உள்ளடக்கிய விரிவான உரிமைப் பட்டியலை கொண்டுள்ளது. உயர்தர ஸ்ட்ரீமிங், வளமான பிராந்திய மொழி சேவைகள் மற்றும் ரசிகர்களை மையமாகக் கொண்ட ஆழமான அனுபவங்கள் மூலம், ZEE5 மற்றும் Unite8 உலக கால்பந்தை கோடிக்கணக்கான இந்திய பார்வையாளர்களுக்கு மேலும் நெருக்கமாக கொண்டு வருவதையும், நாட்டில் கால்பந்து ரசிகர் வட்டாரத்தின் வளர்ச்சியை வேகப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.