Fourth Floor – விமர்சனம்

0

இயக்கம் – எல் ஆர் சுந்தரபாண்டியன்
நடிகர்கள் – ஆரி அர்ஜுனன், தீப்சிகா, பவித்ரா
இசை – தரன் குமார்
தயாரிப்பு – ராஜா

ஒகணினி துறையில் ஒருவன் பணி செய்து வருகிறான், அவனுக்கு பணி மாறுதல் கொடுக்கப்பட்டு மும்பையில் இருந்து சென்னைக்கு வருகிறார். சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், யாரும் வசிக்காத நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தங்குகிறார். அப்போது ஒரு நாள் தன்னை காப்பாற்றும்படி தொலைபேசியில் உதவி கேட்ட தனது முன்னாள் காதலியை தேடும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். அப்போது அந்த வீட்டில் அவரது முன்னாள் காதலியின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைக்கிறார், மேலும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக வரும் அமானுஷ்யம் தொடர்பான கனவுகளால் பாதிக்கப்படுகிறார். இந்த குழப்பமான கேள்விகளுக்கான விடையை திருப்பங்களோடு சொல்வதே இந்த ‘ஃபோர்த் ஃப்ளோர்’.

நாயகன் ஆரி ஒரு சாதாரண கணினி துறையில் பணியாற்றும் இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனினும் , கதையை ஒரு துப்பறிவாளராக நகர்த்தி செல்கிறார், தனது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி திரைக்கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறது.

இந்தப் படத்தில் பவித்ரா மற்றும் தீப்ஷிகா என இரண்டு நாயகிகளும் அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் அளவாக பயணப்பட்டு தங்களது பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். திரையில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. மேலும் வில்லனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா நடிப்பின் மூலம் மிரட்டுகிறார். தலைவாசல் விஜய், ஆரியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

தரண்குமார் இசையில், பாடல்களை விட பின்னணி இசை இன்னும் பலமாக இருக்கிறது, நமக்கு திகில் காட்சியின் பயத்தை கடத்தி சென்றுள்ளது. ஒளிப்பதிவாளர் ஜெ.லக்‌ஷ்மண் ஒரு திகில் படத்துக்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்,

இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டியன், தொலைந்து போன காதலியின் நிலை, அவரது குழந்தை பற்றிய உண்மை, அவர்களை கண்டறியும் நாயகன் என. தொடர் திருப்பங்களுடன் படம் நம்மை ஆட்கொண்டே இருக்கிறது, திரில்லர் சீகுவன்ஷ் இன்னும் நன்றாக இருந்தது

மொத்ததில் இந்த ’ஃபோர்த் ஃப்ளோர்’ படத்தை திரையில் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here