இயக்கம் – கேந்திரன்
நடிகர்கள் – விமல் , நட்ராஜ் , சனகா ஸ்ரீ , முனிஷ்காந்த்
இசை – இமான்
தயாரிப்பு – மாசாணி பிக்சர்ஸ் – ராஜசேகர்
ஒரு கிராமத்தில் உள்ள ஊர் தலைவர் ஒருஅவ்ர் அந்த ஊரில் அடிமாட்டுக்கு போகும் மாடுகளை காப்பாற்றி அவற்றை தனது சொந்த இடத்தில் வைத்து பராமரிக்கிறார்.அவரது மகனும் அப்பாவை போல் மாடுகள் மீது பாசம் கொண்டவராக இருக்கிறார். அப்படி அடிமாட்டுக்கு அனுப்பப்பட்ட உடல் குறைபாடுள்ள கன்று குட்டியை, கோசாலையில் விடாமல் தனது வீட்டில் வைத்து பராமரித்து அதற்கு பயிற்சியளித்து மஞ்சுவிரட்டு போட்டிக்கான காளையாக தயார்ப்படுத்தி, பல வருடங்களாக யாராலும் அடக்க முடியாத காளை என்ற பெருமையோடு வலம் வருகிறார். இதற்கிடையே, அவரது காளை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, அவனும் கொலை வழக்கு ஒன்றில் ஜாமீன் பெறுகிறார். அப்போது அவரை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிக்கிறது. மறுபக்கம், அவனது வீட்டில் பணியாற்றிய ஒருவர் அவரை கொலை செய்ய திட்டம் போடுகிறார். இப்படி பலரிடம் பகைமை வளர்த்திருக்கும் காரணத்தால் தன் மகிழ்ச்சியான வாழ்க்கையை மறந்து சோகமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் விமல், இழந்த மகிழ்ச்சியை நாயகி சனஷ்கா ஸ்ரீ-யின் காதல் திரும்ப கொடுக்கிறது. காதலால் உள்ளத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி, மீண்டும் மஞ்சுவிரட்டு களத்தில் இறங்க தயாராகும் தன் காளையின் உடல்நிலை முன்னேற்றத்தால் மனதில் ஏற்பட்ட நம்பிக்கை, ஆகியவற்றின் மூலம் அவனது வாழ்க்கை மீண்டும் நல்வழியில் பயணிக்கிறது , இதன் பின் என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
இந்தப் படத்தில் விமல் வெற்றிவேல் என்ற கதாபாத்திரத்தில் மாடுகள் மீது பாசம் கொண்டவராகவும், காளை மாடுகளை மஞ்சுவிரட்டு போட்டிக்கு தயார்ப்படுத்துபவராகவும் அவருக்கே உரித்தான கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், வழக்கம் போல் அலுங்காமல் குலுங்காமல் நடித்திருக்கிறார். பொதுவாக ஹீரோக்கள் காளைகளை அடக்கும் வீரர்களாக நடித்து மாஸ் காட்டுவது தான் வழக்கம். ஆனால், விமல் யாருக்கும் அடங்காத காளையின் உரிமையாளராக நடித்து கெத்து காட்டியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சனஷ்கா ஸ்ரீ, அழகில் ஆபத்தும் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் எதிர்பார்க்காத ஒன்று. தன் கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு சிறப்பாக நடித்துள்ளார்.காளைகள் மற்றும் மஞ்சுவிரட்டு போட்டியை கெளரவமாகவும், பெருமையாகவும் கருதும் நட்டி நட்ராஜ், வெற்றி மட்டுமே வாழ்க்கை, தனக்கு போட்டியாளர்களே இருக்க கூடாது, என்ற மனநிலையில் வாழும் மனிதர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். காமெடி நடிகராக காட்சியளித்து வந்த முனீஷ்காந்த், பல படங்களில் சில குணச்சித்திர வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்தாலும், இதில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது இயல்பான மற்றும் சிறப்பான நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி, திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.மேலும் நரேன் மற்றும் இந்துமதி ஆகியோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
டி.இமானின் கிராமத்து பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்தப் படத்திலும் தை செய்துள்ளார். பிண்ணனி இசையும் நன்றாக இருந்தது. ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார், மஞ்சுவிரட்டு போட்டி களத்தையும், போட்டியையும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்.
தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை மையமாக கொண்டும், அதனை பின்னணியாக கொண்டும் பல தமிழ்ப் படங்கள் வந்திருக்கிறது. ஆனால், முதல் முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் கேந்திரன்,மேலும் மஞ்சு விரட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நாயகனை சுற்றி நடக்கும் பகைமை நாடகத்தையும் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளார்.
மொத்தத்தில், ‘வடம்’ ஒரு நல்ல கமர்ஷுயல் பயணம்.



