இயக்கம் : ஜெகதீஷ்
நடிப்பு : அபிநயா, அனுமிதா , அனுஷிதா
இசை : GKV
தயாரிப்பு : Asia Iconic Studios- ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன்
ஒரு பெண் தன் கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் மலைப்பகுதியில் உள்ள வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருக்கிறார். வழியில் எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்தில் தன் கணவரை பறிகொடுக்கிறார். அந்த பெண்ணின் முகம் கடுமையாக சேதமடைகிறது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும் அந்தப் பெண் வீட்டிற்கு கிளம்புகிறார். இன்னிலையில் ஆபரீஷன் செய்த தனது தாயின் நடத்தைகள், குரல் என எல்லாமே வித்தியாசத்தை தர, அவரது இரட்டை குழந்தைகளுக்கு அவர் உண்மையான அம்மாவா என்ற சந்தேகம் எழுகிறது. அம்மாவை மறைத்து வைத்து விட்டு அல்லது கொன்று விட்டு யாரோ ஒருவர் அம்மா போல வேடமிட்டு வந்திருப்பதாக சந்தேகிக்கிறார்கள். இதன் பின் அந்த இரண்டு இரட்டை பெண்கள் வாழ்வில் என்ன ஆனது தாயின் இந்த மாற்றத்தை சரி செய்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
இந்தப் படத்தில் முக்கிய நாயகியாக அபிநயா. இரட்டை குழந்தைகளுக்கு தாயாக ஒரு முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாம் இதுவரை மிக அழகாக மட்டுமே பார்த்து பழக்கப்பட்டவரை இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த முகமாக பார்ப்பது ரொம்பவே வித்தியாசமான அனுபவம்.தன் கதாபாத்திரத்தினை அனைவரும் கவரும் வண்ணம் செய்துள்ளார்.அதே போல் இரட்டை குழந்தைகளாக அனுமிதா , அனுஷிதா மொத்த படத்தையும் தாங்கியுள்ளனர். படம் முழுக்க இந்த இரண்டு சிறுமிகளும் செய்யும் ஒவ்வொரு செயல்களுமே நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதே போல் சுப்ரமணிய சிவா மிக முக்கிய கதாபாத்திரத்தில் னடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் மொஹமது அமீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பல இடங்களில் செயற்கை லைட் இல்லாமல் தனது கேமரா மூலம் அந்த உலகிற்கெ ந்ம்மி கொண்டு சென்றுள்ளார். அதே போல் GKV பின்னணி இசை இந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்துக்கு மேலும் ஒரு வித்தியாசமான உணர்வை தருகிறது.
இந்தப் படத்தில் பெரிய நடிகர் பட்டாளம் இல்லை , மிகப்பெரிய காட்சியமைப்புகள் இல்லை ஒரு ஆறு ஏழு நபர்களை வைத்து மொத்த படத்தியும் ரசிக்கும் வண்ணம் உருவாக்கியுள்ள்ளார் இயக்குனர் ஜெகதீஷ் , படத்தின் சிறப்பு திரைக்கதை தான் , குறைந்த கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு திகிலூட்டும் சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தந்திருக்கிறார். மொத்த படமும் ஒரு வீட்டுக்குள் நடக்கும் சம்பவம் என்றாலும் நம்மை கவர்ந்துள்ளார்.
மொத்தத்தில் இந்த “இரட்டையர்” எதிர்பார்க்காத ஒரு வெற்றி.




