இயக்கம் : எஸ்.ஜே.என். அலெக்ஸ்
நடிகர்கள் : கௌஷிக் ராம், பிரதீபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர்
இசை : என் ஆர் ரகுநந்தன்
தயாரிப்பு – ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி
கும்பகோணம் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் ஒருவன் பள்ளி படிப்பு முடித்துவிட்டு வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சிக்கிறார். இதே சமயம் ஊர்க்கோவில் திருவிழாவில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார். இதனையடுத்து அந்தப்பெண்ணை ஒரு தலையாக காதலிக்கிறார். இதனால் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதை கைவிட்டு விட்டு அந்தப் பெண் படிக்கும் கல்லூரியில் சேர்கிறார்.
இந்நிலையில் நாயகன் சக மாணவர் ஒருவருக்கு பதிவு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். இப்போது நாயகனும் நாயகியும் பதிவு திருமணம் செய்யவிருக்கும் நண்பருக்கு உதவி செய்ய வேண்டி கையெழுத்து மற்றும் தங்களது ஆவணங்களை கொடுக்கிறார்
இதே வேளையில் நாயகிக்கு வீட்டில் ஒருவரை பேசி நிச்சயதார்த்தம் செய்து வைக்கிறார்கள். இந்நிலையில் இருவருக்கும் பதிவு திருமணம் நடந்து விட்டதாக சான்றிதழ் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது இரண்டு குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இறுதியில் இந்த சிக்கலில் இருந்து மீண்டு வந்தாதார்களா ? இல்லையா? என்பதே கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் மிதிக்கதை.
கதிர்வேலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கௌஷிக் கிராமத்து இளைஞராக இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல், பாசம், செண்டிமெண்ட் , சண்டை என அனைத்திலும் தன் திறமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக இறுதிக்காட்சியில் இவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது.
கிறிஸ்டினாவாக நடித்திருக்கும் நாயகி பிரதீபா கலோரிக்கு செல்லும் பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். அழுத்தமாக கதாபாத்திரத்தை அழகாக கையாண்டுயிருக்கிறார். பாதிரியாராக வரும் அருள் டி. சங்கர். கௌசிக் நண்பராக வரும் ‘சில்மிஷம்’ சிவா. சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார்.சஞ்சய் படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தன் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது. பிரகத் முனிசாமி ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
படத்தில் இந்து, கிறித்துவ மதங்களை சேர்ந்த இருவருக்குள் ஏற்படும் காதலை மையமாக வைத்துதான் திரைப்டங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்த திரைப்படத்தில் இறுதி காட்சியில் யாரும் யூகிக்க முடியாத விதத்தில் ஒரு சஸ்பென்ஸை கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார் இயக்குனர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் , சமூகத்துக்கு தேவையான கருத்தை திணிக்காமல் அழகாக எடுத்துரைத்துள்ளார்.
மொத்தத்தில் கிறிஸ்டினா கதிர்வேலன்’ ஒரு வித்தியாசமான காதல்



